ஊழலை ஒழிக்கும் பா.ஜ.க,
பாமக- பாஜக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது: பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் . தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி நடக்கிறது. குறிப்பாக தென் மாநிலங்களுக்கான தேர்தல் முதல் 2 கட்டத்தில் முடிகிறது. இதையொட்டி, கடந்த சில வாரங்களாகவே தென் மாநிலங்களை சுற்றி சுற்றி வருகிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே 5வது முறை அடுத்தடுத்து விசிட் அடித்து உள்ளார் பிரதமர் மோடி. கடந்த 15ம் தேதி கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக கோவையில் ரோடு ஷோவில் நேற்று பங்கேற்றார். இதற்காக நேற்று மாலை 5.45 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பாஜ கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ரோடு ஷோ நடக்கும் சாய்பாபா காலனி பகுதிக்கு மாலை 6.10 மணியளவில் வந்தார். அங்கிருந்து ரோடு ஷோ தொடங்கியது. திறந்த வாகனத்தில் நின்றுகொண்டு பிரதமர் மோடி பொதுமக்களை பார்த்து கைகளை அசைத்தபடி வந்தார். அந்த வாகனத்தில் மோடியுடன் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்,