தாங்க முடியல்ல,,,

இப்போ நம்ம நடிகர் தப்பு.தலைவர்களில் ஒருவரான விஜயகாந்த் பேச்சுக்கள் 
ரொம்ப உணர்ச்சியாக உள்ளது. 
முதலில் ஆண்டவனுடன் கூட்டணி,பிறகு மக்களுடன் கூட்டணி,கடைசியாக
இப்போ மக்களை சிரிக்கவைப்பவர்களுடன் கூட்டணி என்று உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.
அப்படி பார்த்தால் இவரைவிட மக்களை இந்த விலைவாசி உயர்வுகளையும்
மறந்து சிரிக்கவைத்தவர் வேறு யாரும் இல்லை.பின் யாருடன் கூட்டணி வைப்பார். அ.தி.மு.க,வுடன் பணம்,தொகுதி பற்றி இவர் பேசி வருவது ஊர்
அறிந்த பரம ரகசியம்.ஆனால் சுத்த சுயம்புவாக காட்டிக்கொள்ள இவர் விடும்
அறிக்கைகள் இவரை வெறும் காமெடி பீசாகக்காட்டி வருகிறது.
          நடமுறைப்படுத்த இயலாதவைகளை இவர் தனது கொள்கைகளகக்
காட்டுவது மிக தவறு.வீடு,வீடாக ரேசன் பொருட்களை வழங்குவது எந்த
முறையில் சாத்தியம்.இவர் பொருளைக் கொண்டு போகும் போது அந்த
கூலித்தொழிலாளி வேலைக்கு போய்விட்டால்,அல்லது இப்போது பொருள்
வாங்கப்பணம் இல்லை என்றால்,,,,இப்படி நடைமுறை சாத்தியமற்ற

காரணங்கள் ஏராளம்.அதை எப்படி செய்வார் இவர்.

    இவர் தொல்லைத்தாங்க முடியல.யாராச்சும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை இவர்தான் காலால் உதைச்சே போட்டுத்தள்ளினார்[படத்திலே]னு  அண்ணன் பின்லேடன்கிட்டே சொல்லுங்களேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?