கலை மாமணிகளே வருக,,,,

 தமிழகஅரசு தனது கலைமாமணிகள் பட்டியலை அறிவித்துள்ளது.பட்டியலில் நடிகை
தமன்னா வரை இடம் பெற்றுள்ளதை பார்க்க,படிக்க புல்லரித்துப்போய்விட்டது. அவர் 
இதுவரை ஆற்றியுள்ள கலைச்சேவைக்கு இந்தவிருது மிக தாமதமாக கொடுத்துள்ளதாக
மக்கள் ஆங்காங்கே பேசிக்கொள்வதைப் பார்க்க முடிகிறது.
           ஒருபுறம் அக்கா தமன்னாவுக்கு கொடுத்துள்ள தமிழக அரசு மன்மதன் அம்புவில்
மிக நன்றாக நடித்த சிறுவன்,சிறிமிக்குக் கொடுக்காதது மிக வருத்தத்தைத் தருகிறது.
சரி அவர்களுக்கு இன்னமும் காலம் இருக்கு.அடுத்த முறையா வது கொடுத்துவிடுங்க.
           தமிழேத்தெரியாத [ நடிக்கவும்] நடிகைக்கு நடிக்கவந்து ஒரு ஆண்டுக்குள் அரசு
கலைமாமணி பட்டம் கொடுப்பதைப் பார்த்தால் ,பட்டத்தை தலையில் கட்ட ஆளை
எதிர்பார்த்திருந்ததுபோல் இருக்கிறது.
            அப்படி கட்டாயம் கொடுத்தாகவேண்டிய அவசியம் என்ன உள்ளது? விருதுகள்
கொடுப்பவர்களுக்கும்,அதைவிட  வாங்கிய வர்களுக்கும்  பெருமையாக இருக்க
வெண்டும். பட்டியலைப் பார்த்து சிரிப்பதுபோல் இருக்கக்கூடாது.
          நடிகர்கள் விடயத்தில் கலைஞர் [அரசு] நடந்துகொள்வது கொஞ்சம் அதிகமாகத்
தான் உள்ளது.தமிழக அரசு சிறந்தநடிகர் தேர்வும் இந்த ஆக்கம்தான்.
கமல்
 சிறந்த நடிகர் என்றால் சிறப்புப்பரிசு நடிகர் ரஜினிக்கு.ரஜினி சிறந்த நடிகர் என்றால்
சிற்ப்புப்பரிசு கமலுக்கு. இவர்கள் படம் வெளியாகாவிட்டாலும் ஏதாவது பரிசு.
இதுபோன்ற விருதுகள் வாங்கிக்கொள்வது மட்டுமின்றி கொடுப்பதும் கூட
வெட்கப்பட வேண்டிய  பரிசுகுலுக்கல்.
        இது அய்யா ஆட்சியில் மட்டுமின்றி அம்மாஆட்சியிலும் நடந்த,இனி நடக்கப்
போகும் கொடுமைதான். என்ன செய்ய இவைகளைப் பார்த்து ரசிக்கும் நம்மையும்
அடுத்த கலைமாமணி ஆக்காமல் இருந்தா சரிதான். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?