இடுகைகள்

பிப்ரவரி, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இளங்கோவன் கனவு

படம்
திருவாரூரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது,   ‘’தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை கொடுத்தாலும் காங்கிரஸ்காரர்கள் நிற்பார்கள் என்று கலைஞர் சொல்லிவருகிறார்.   எங்களுக்கு 234 தொகுதிகள் வேண்டாம்.   திமுகவினர் மத்தியில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள்.   மாநில அமைச்சரவையில் காங்கிரஸ் அங்கம் வகிக்கக்கூடாதா? மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்று கலைஞர் சொல்லிவருகிறார்.  இது போல தமிழில் எங்களுக்கு பேசத்தெரியாது.   ஆனால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று சொல்லுவோம். ஐவர் குழு பேசிக்கொண்டிருக்கிறது.   நல்லபடியாக முடியும்  என்று நம்புகிறோம்.  தமிழக வேலைவாய்ப்புகளில் ஒருவர் கூட காங்கிரஸ்காரர் கிடையாது.   ஓட்டுக்கு மட்டுமே காங்கிரஸ்காரர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.   இதற்கு காரணம் காங்கிரஸ் காரனே காங்கிரஸை கண்டுகொள்ளாததுதான். எலும்புதுண்டால் போட்டால் வாலாட்டும் காங்கிரஸூக்குள் இருக்கிறார்கள்.  தன்மானம் காக்கப்படும் அளவில்சீட்டுகள் வழங்கப்படவேண்டும்’’என்று கூறினார்.         அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னாலும் சொன்னார். ஆளாளுக்கு

கசாப் எம்.பி,

படம்
சிறை பதிவேட்டின்படி அஜ்மல் கசாபுக்கு 23 வயதாகிறது. அவரது சொந்த ஊர் பாகிஸ்தானில் உள்ள ஃபரித்கோட். கல்வித் தகுதி 4 ம் வகுப்பு. "கசாப் குறித்து சிறையில் எங்களிடம் உள்ள தகவலையும், அவரிடம் நேரில் பேசி பெற்றத் தகவலையும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரியிடம் அளித்துள்ளோம் என்று ஆர்தர் சிறை அதிகாரி ஒருவர் கூறினார்.                       தூக்கில் போட வேண்டியவனை வைத்து அரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறது. மக்கள்தொகையில் பாகிஸ்தான்காரனைக் கணெக்கெடுக்க வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது.அதுவும் நம்நாட்டில் தீவிரவாதம் செய்யவந்தவன். நூற்றுக்குமேற்பட்டவர்களை கொன்று குவித்தவன் .அவனை நம் நாட்டு மக்கள் தொகையில் சேர்த்து கணக்கெடுக்க இவர்களுக்கு பைத்தியமா பிடித்துள்ளது. தீவிரவாதிகள் பட்டியல் கணக்கில் அல்லவோ அவனை சேர்க்க வேண்டும்.                    நம்மவர்கள் அவனுக்கு போகிறபோக்கில் குடும்ப அட்டை,வாக்களர் அட்டையும் தந்துவிடுவார்கள்.                  கசாப் வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டிகூட போடுவான். அவனுக்கு ஓட்டு போட வும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.வாழ்க இந்திய இறையாண்மை.

இரு நாட்டு அரசுகளின் சதி வலையில் வீழ்ந்து விடாதீர்கள் -

படம்
இலங்கைப்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது,சிறைபிடிக்கப் படுவதில் சில உண்மைகள் மறைந்திருக்கிறது.தமிழக,ஈழ மீனவர்கள்இடையில்மோதலையும், அதன் மூலம் இருநாட்டுத் தமிழர்களிடையேயும் சண்டையும் ,வெறுப்பையும் உருவாக்கவே இதை இந்திய,இலங்கை அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக செய்திகள் உலவ ஆரம்பித்துள்ளது. தமிழகமீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்படும் போது கோபமடையாத கனிமொழிக்கு அத்துமீறிய மீனவர்கள் மக்களால் பிடிக்கப்படும் போது ஆவேசம் வருவது காரணமில்லாமல் இருக்க முடியுமா? கடந்த வாரம் பருத்தித்துறை முனைப் பகுதியில் கடற்கரைக்கு மிக அண்மையில் இழுவைப் படகுகளில் (ட்ரோலர்) வந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 112 இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களால் சுற்றி வளைக்கப்பட்டுப் பிடிக்கப்பட்டு இலங்கைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஓரிரு நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். அடுத்த நாளில் மாதகல் கடற்பரப்பில் வைத்துப் பிடிக்கப்பட்ட 24 மீனவர்களுக்கும் அவர்களின் படகுகளுக்கும் கூட இதுவே நடந்தது. தமிழ் நாட்டில் கொந்தளிப்பு மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக இந்தியாவின் தம

ராம்[ஜேத்மலானி] கணை

படம்
சோனியா குடும்பத்திற்கு சுவிஸ் வங்கியில் கணக்கு உள்ளது சொன்னவர் ராம்ஜெத்மலானி.இவர் பிரபல வழக்குரைஞர் மட்டுமல்ல,அரசியல்வாதியும்கூட.பா.ஜ.கட்சியில் ஒருவர்.அவ்வப்போது பரபரப்பை உருவாக்குவதில் சுப்பிரமணியசாமிக்கு சளைத்தவர் அல்ல.ஆனால் சு.சாமியைவிடக் கொஞ்சம் ஆதாரத்துடன் பேசுபவர் இவர். சோனியா, ராகுல் ஆகியோரின் பெயரில் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் போட்டு வைக்கப்பட்டுள்ளது என்று பிரபல வழக்குரைஞரும், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் ஜேத்மலானி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் நிதி நிலை அறிக்கை தொடரின் முதல் நாளான இன்று, நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜேத்மலானி, “சுவிஸ் வங்கிகளில் காந்தி குடும்பத்தார் பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்றே கருதுகிறேன்” என்று கூறியுள்ளார். “இவர்கள் பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்பதை சுவிஸ் பத்திரிக்கைகள் எழுதியுள்ளன. கெண்ட் புத்தகம் அந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கியிலிருந்து ராகுல் காந்திக்கு பணம் வந்துகொண்டிருக்கிறது நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் விளம்பரமே வந்துள்ளது” என்றும் ஜேத்மலானி உறுதிபடக் கூறியுள்ளார

கொக்கோ கோலாவுக்கு ஒரு கடிவாளம்

படம்
மென்பான தயாரிப்பாளர்களான கொக்கோ கோலா நிறுவனத்திடம் மக்கள் நட்ட ஈடு கோருவதற்கு அனுமதிக்கும் வகையிலான சட்டம் ஒன்றை கேரள மாநில அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. கோயம்புத்தூருக்கு மேற்கே இந்த நிறுவனத்துக்கு மென்பானத்தை பாட்டிலில் அடைக்கும் ஆலை ஒன்று உள்ளது. அந்த ஆலை, அங்கு சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பெரும் குடிநீர் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்தப் புதிய சட்டத்தை வரவேற்றுள்ள மனித உரிமை அமைப்புக்கள், இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் என்று அதனை வரவேற்றுள்ளன. கொக்கோ கோலா நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளதுடன், இந்தச் சட்டத்தால் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. முன்னதாக இந்தச் ''சுற்றுச்சூழல் பாதிப்பு'' 50 லட்சம் டாலர்களுக்கும் குறைவானது என்று ஒரு குழு மதிப்பிட்டிருந்தது. கொக்கோ கோலா நிறுவனத்திடம் நட்ட ஈடு கோர வழிஏற்படித்தியுள்ளது கேரளா.தமிழ்நாடும் தனது மண்ணில் கொக்கொ கோலா, பெப்சி வகைறாக்கள்  கணக்கின்றி
படம்
"அபரிமிதமான உற்பத்தி, போதுமான அளவில் கையிருப்பு இருப்பதால், கோதுமை, அரிசி மற்றும் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது பற்றி, அரசு தீவிரமாக யோசித்து கொண்டுள்ளது' என, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறினார். டில்லியில், நிருபர்களிடம் நேற்று பேசிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறியதாவது: கோதுமை உற்பத்தி, இந்தாண்டு, எதிர்பார்த்ததை விட, அமோகமாக உள்ளது. சிறந்த சீதோஷ்ண நிலை காரணமாக, இதுவரை, 8 கோடியே 40 லட்சம் டன் கோதுமை உற்பத்தியாகி உள்ளது. இது, இந்தாண்டு மதிப்பிடப்பட்டதை விட, 25 லட்சம் டன் அதிகம். இது போன்று, அரிசி மற்றும் சர்க்கரை உற்பத்தியும் அதிகமாக உள்ளது. எனவே, இந்த சூழ்நிலையில், சில உணவு தானியப் பொருட்கள் ஏற்றுமதி பற்றி, அரசு தீவிரமாக யோசித்து வருகிறது."அபரிமிதமான உற்பத்தி, போதுமான அளவில் கையிருப்பு இருப்பதால், கோதுமை, அரிசி மற்றும் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது பற்றி, அரசு தீவிரமாக யோசித்து கொண்டுள்ளது' என, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறினார். டில்லியில், நிருபர்களிடம் நேற்று பேசிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் ச

பார்வதி அம்மாளுக்கு சிங்களனின் அஞ்சலி

படம்
நேற்றைய தினம் மாலை தகனம் செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தாயார் பார்வதி அம்மாளின் சாம்பல்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தோடு சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று நாய்களின் பிணங்களும் அந்தச் சாம்பலில் போடப்பட்டுள்ளன . இந்தத் தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தத் தொடர்பில் மேலும் தெரியவருவது:’ நேற்றைய தினம் மாலை 5மணிக்கு திருமதி பார்வதி அம்மாளின் திருவுடல் தகனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடத்தில் இரவு பத்துமணிவரை எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அங்கு அம்மாளை தகனம் செய்ய பற்றாளர்கள் சிலர் நின்றுள்ளனர். குறித்த பற்றாளர்கள் மயானத்தை விட்டு வந்த பின்னரே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் பொழுது அம்மாளின் சாம்பலை காட்டு மிராண்டித்தனமாக கிளறி அவற்றை அள்ளிக் கொண்டு கடலில் எறிந்துள்ளனர். அத்தோடு அந்தப் பகுதியில் நின்ற மூன்று நாய்கள் சுட்டுக்கொல்லப்பட்டு பார்வதி அம்மாள் தகனம் செய்யப்பட்ட இடத்தில் போடப்பட்டிருந்தன. இது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில் மர்மமான முறையில் இந்த விடயம் ந

வந்தது நாடாளுமன்றக் கூட்டுக்குழு

படம்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான கூட்டு நாடாளுமன்றக் கமிட்டி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று இன்று லோக்சபாவில் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். இதன் மூலம் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்துள்ள எதிர்க்கட்சிகளின் போராட்டம் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து ஜேபிசி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக கடந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முற்றிலும் முடங்கிப் போனது. தங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரையும் நடத்த விட மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் மிரட்டல் விடுத்தன. இதையடுத்து லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது ஜேபிசி விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டது இதுகுறித்த அறிவிப்பை இன்று பிரதமர் மன்மோகன் சிங் லோக்சபாவில

ஏறும் விலைவாசி இறங்கவைக்க முடியாதா?

படம்
உணவுப் பொருள்களின் விலை உயர்வு மக்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. விலைவாசி உயர்வுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மை நிலை வேறு மாதிரியாக உள்ளது. உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்து வருவது, பெட்ரோலிய பொருள்கள் விலையேற்றம், முன்பேர வர்த்தகம் மற்றும் தேவையில்லா ஏற்றுமதி போன்றவற்றால் தான் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.உணவு தானியங்கள் உற்பத்தி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பல மடங்கு குறைவாகவே உள்ளது. இந்தியாவில், ஒரு எக்டரில் நெல் உற்பத்தி, 2.20 டன் என்ற அளவில் தான் உள்ளது. அதேசமயம், ஜப்பான் நாட்டில் ஒரு எக்டரில், 6.50 டன்னும், சீனாவில் 6.70 டன்னும், எகிப்தில் 7.50 டன்னும், இஸ்ரேலில் 5.50 டன் என்ற அளவிலும் நெல் உற்பத்தியாகிறது, இத்தனைக்கும் மேலே குறிப்பிட்டுள்ள நாடுகள் அனைத்தும், முழு அளவில் விவசாயத்தை மேற்கொள்ளும் நாடுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், அங்கு மேற்கொள்ளப்படும் நவீன தொழில்நுட்பங்கள், விவசாயிகளுக்கு அந்நாட்டு அரசு தரும் ஆலோசனைகளால் தான் அந்நாடுகளால் அதிக உற்பத்தி செய்ய முடிகிறது.தமிழகத்தைப் பொறுத்தமட்டில், 6

இன்னும் எத்தனை காலம் ஆகும்?

படம்
2008.ல் மு ம்பை தாக்குதலில் கிட்டதட்ட 110 பேர்களைக்  கொன்று குவித்தனர் கசாப்பும்,அவனது தீவிரவாதநண்பர்களும் .நமது இந்திய விசாரணை முறைப்படி 2011 ஆகியும் இன்னமும் விசாரிக்கிறார்கள். விசாரித்தார்கள்,விசாரிக்கிறார்கள்,விசாரிப்பார்கள்.         மும்பை நீதிமன்றம் இப்போது தூக்குத்தண்டனையை உறுதி செய்துள்ளது.கூடவே மேல்முறையீடுக்கு உச்சநீதி மன்றத்தை அனுக ஆலோசனையையும் வழங்கியுள்ளது.அது இன்னமும் சில ஆண்டுகள் காலத்தை பின்னுக்கு இழுக்கும். கிட்டத்தட்ட வழக்கு முடிவதற்குள் கசாப் தன்னாலே வயசாகி செத்தும் போய் விடுவான்.            இதுபோன்ற நமது நீதித்துறை நடவடிக்கைகளால் தான் இந்தியாவில் அதிகமாக தீவிரவாதம் தளைத்தோங்குகிறது. அதுதான் விசாரித்துக்கொண்டே  இருப்போம் .அவர்களும் பிணையில் வெளியேவந்து சாட்சிகளை கலைக்க வாய்ப்பும் கிடைக்கும். அதன் பின்னும் நாம் சாரித்துக்கொண்டே இருப்போம் அவர்களும் குண்டுகளை வெடித்துக்கொண்டே இருப்பார்கள்.          மக்களவைக் கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்து தீபாவளி கொண்டாடியவர்கள் மீது நாம் என்ன
படம்
பார்வதியம்மாள் காலமானார்   பிரபாகரன் தாயார் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதியம்மாள் ஞாயிற்றுக்கிழமை காலமானார். வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் பார்வதியம்மாள் காலமானதாக வைத்தியசாலைக்குப் பொறுப்பான மருத்துவர் மயிலேறும் பெருமாள் தெரிவித்தார். கடந்த பத்து வருடங்களாக பாரிசவாதம், சர்க்கரை நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பலநாட்களாக சுயநினைவு இழந்த நிலையில் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவர் மயிலேறும் பெருமாள் தெரிவித்துள்ளார். 81 வயதான பார்வதியம்மாளுக்கு சில காலம் மலேசியாவில் சிகிச்சையளிக்கப்பட்டது. அவருக்கு அங்கு சிகிச்சையளிப்பதில் எழுந்த நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, மேலதிக சிகிச்சைகளுக்காக இந்தியா அழைத்துச்

தமிழர் வாழ்ந்த அடையாளம் இருக்காது,

படம்
   தியாகச்செம்மல்  தமிழீழ கோரிக்கையை அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் முன்னெடுக்க, ஒரு புதிய முயற்சியாக புலம்பெயர்ந்த தமிழர்களால் நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது உருவாக உள்ள தெற்கு சூடான் நாட்டின் விடுதலைக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவும் இதன் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடப்பட்டிருப்பது ஓர் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. இந்த அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் தமிழகத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் பெரியாரியப் பற்றாளருமான பேராசிரியை சரசுவதியிடம் பேசியதிலிருந்து... இன்றைய உலகமய தாராளமயச் சூழலில், நாடு கடந்த தமிழீழ அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் ?  ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பது ஈழ மண்ணில் தோல்வியடைந்துவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் எதற்காக அந்தப் போராட்டம் தொடங்கப்பட்டதோ, அதன் தேவை இன்னும் அப்ப

மீனவர்களை பாதுகாக்க,,,,

படம்
மீனவர்கள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டு விட்டனர். இந்திய,தமிழக அரசுக்கு தற்காலிக நிம்மதி. ஆனால் மீனவர்கள் தாக்கப்படுவதும்,கொல்லப்படுவதும்,சிறை பிடிக்கப்படுவதும் அடிக்கடி நடை பெறும் செயலாக மாறியுள்ளது சரியானதல்ல.இடையே இலங்கை அரசு தனது மீனவர்களை “இங்கு தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லைதாண்டி வந்து தங்களது வலைகளை நாசம் செய்வதாகவும், மீன்களைக் கொள்ளையடிதுவிட்டு செல்வதாகவும்” அறிக்கைகளை விடச்செய்து தனது செயள்களை நியாயப்படுத்துகிறது.இச்செயல் சரியான சகுனித்தனம்.                         தமிழகமீனவர்கள் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இந்திய அரசு செய்ய வேண்டிய கடமைகள் அதிகம் உள்ளது. நமது மீனவர்களுக்கு இந்திய எல்லைக்கட்டுப்பாட்டை வரையறையை சரிவரக் காண்பிக்கவேண்டும். கடலோரக் காவல்படை என்ற தண்டச்சம்பளப்படையினரை கொஞ்சம் அவ்வப்போது வேலை பார்க்கக் கூறவேண்டும். நமது மீனவர்கள் எல்லை தாண்டும் போது அறிவுறுத்தி டவும், நமது எல்லையில் வந்தே வாலாட்டும் இலங்கைப்படையினரை அப்புறப்படுத்தவும்  செய்யவேண்டும். இதைக் கூட செய்யாத கடலோரக்காவல் படையினர் எதற்கு? தீவிரவாதிகளையும் கடல் வழியே விட்டு விடுகின்றனர்.போ

2-ஜி அலைக்கற்றை மீண்டும் சில சந்தேகங்கள்,

படம்
-ஆர்.பத்ரி   2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீடு தொடர்பான விவாதங்கள் பரபரப்பாக ஒவ் வோர் நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் தங்கள் கோணங் களில் கருத்துக்களை வாத, பிரதிவாதங்க ளாக எடுத்து வைத்துக்கொண்டிருக்கின்ற னர். மக்கள் அனைத்தையும் மவுனமாக உள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் எழுந்துள்ள இந்த முக்கியப்பிரச்சனை, பொது வெளியில் அனைத்துத் தரப்பினராலும் விருப்புவெறுப்பின்றி நடுநிலையோடு விவா திக்கப்படவேண்டும். கடந்த ஆட்சியில் பின்பற்றப்பட்ட ‘முத லில் வருபவருக்கு முன்னுரிமை’ என்கிற நடைமுறையைத்தான் பின்பற்றினேன். நான் தவறேதும் இழைக்கவில்லை என சொல் கிறார் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா. முதலில் வருபவர்க்கு எடுத்துக்கொடுக்க இது என்ன முத்துமாரி அம்மன் கோவில் பிரசாதமா என கேள்வி எழுப்புகின்றனர் எதிர்தரப்பினர். ஆ.ராசா பின்பற்றிய நடைமுறையின் மூலம் அரசிற்கு ரூ.1,76,379 கோடி நஷ்டம் என்கிறார் மத்திய அரசின் தலைமை தணிக்கை அதி காரி. ‘அவர் சொல்வதில் உண்மையில்லை. இது வெறும் யூகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டுதான்’ என

ராஜாவே பொறுப்பு

படம்
தொலைக்காட்சி செய்தி சேனல்களின் செய்தி ஆசிரியர்களை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மன்மோகன் சிங் கூறியது”கடந்த 2007 நவம்பர் 2ம் தேதி அமைச்சராக இருந்த ராஜாவுக்கு கடிதம் எழுதினேன். அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து வந்திருந்த புகார்களை மையமாக வைத்து, சில சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியிருந்தேன். சட்ட ரீதியிலும், சரியான முறையிலும் வெளிப்படையாகவும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்று இருக்க வேண்டுமென்றும் கூறியிருந்தேன்.அந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற அதே நாளில், ராஜாவிடம் இருந்து எனக்கு பதில் வந்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வெளிப்படையான முறையிலேயே நடப்பதாகவும், எந்தத் தவறுக்கும் இடம் இல்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. மேலும், "டிராய் அமைப்பும், தொலைத்தொடர்பு கமிஷனும், ஏலமுறையை பின்பற்ற வேண்டுமென்று கூறவில்லை. ஏல முறையை பின்பற்றினால், ஏற்கனவே உள்ளவர்கள் மட்டுமே வர முடியும், புதிய ஆட்கள் வர முடியாது. கடந்த காலங்களில் ஏலம் இல்லாமல் ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை

பார்த்தாலே ,,,,,,,,,,,,

படம்
  ஒருவர் தன்னுடைய உடலில் எந்தப் பாகத்தில் வலிக்கிறதோ அந்தப் பாகத்தை அத்தருணத்தில் பார்த்துக்கொண்டிருந்தால், அவர் உணருகின்ற வலியின் அளவு குறைகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மருத்துவர் ஊசி போடும் தருணம் என்பது சிறுவர்களுக்கும் சரி, வெளியே சொல்லாவிட்டாலும் பெரியவர்களுக்கும் சரி சற்று சங்கடமான நேரம்தான். ஊசி குத்துவதால் ஏற்படும் வலியைவிட வலிக்குமே என்ற பயம்தான் அதிகமாக இருக்கும். கண்ணை மூடிக் கொள்வது, மருத்துவர் ஊசியைக் குத்துவதைப் பார்க்காமல் தலையைத் திருப்பிக் கொண்டு வேறு எதையாவது பார்ப்பது போன்றவற்றைச் செய்து அதிகம் வலி தெரியாமல் இருக்க பலர் முயலுவார்கள். ஆனால் தற்போது இது சம்பந்தமாக பிரிட்டனில் நடத்தப்பட்டுள்ள ஒரு ஆராய்ச்சியில், அந்த பாகத்தையே மேலும் பெரிதுபடுத்தி பார்த்துக்கொண்டிரு

உளவு புத்த பிட்சுகள்

படம்
தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை பக்சே அரசு இப்போது மற்றொரு கேடுவிளைவிகும் செயலில் இறங்கி உள்ளது.                                                                                                                         அது மதத்தை வளர்ப்பதோடு, மக்களை,குறிப்பாகத் தம                                                       தமிழர்களை உளவு பார்க்க புத்த துறவிகளை களம்  இறக்கியிருக்கிறது.   இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகளின் முகவர்களாக, உளவாளிகளாக புத்த துறவிகளும் களமிறக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்புகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன. அவர்கள் புத்த துறவிகளின் வேடம் தரித்தபடி உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடவுள்ளார்கள். தமக்குக் கிடைக்கும் தகவல்களை புலனாய்வு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு இடப்பட்டுள்ள பணியாகும். பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ள புத்த துறவிகளே  இனம் காணப்பட்டு அவ்வாறு புலனாய்வு நடவடிக்கைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களுடன் சிலகாவல் துறையினரும்புத்த துறவி வேடம் தரித்து புலனாய்வு நடவடிக்கைகளில்

விக்கிலீக்ஸ் ஏற்படுத்திய புரட்சி,.

படம்
மத்திய கிழக்கில் தற்போது கிளர்ச்சிகள் வெடித்திருப்பதற்கும் டுனீசியத் தலைவர் அபிடின் பென் அலியின் வீழ்ச்சிக்கும் தனது இணையத்தளமான விக்கிலீக்ஸ் கணிசமான அளவு செல்வாக்கைச் செலுத்தியதாக அதன் ஸ்தாபகர் ஜூலியன் அசெஞ் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறார். டுனீசியத் தலைவருக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவு தொடர்பாக விக்கிலீக்ஸ் கேள்வி எழுப்பியிருந்ததாகவும்.அது எழுச்சிக்கான நம்பிக்கையை மக்கள் மத்தியில் எழுப்பியிருந்ததாகவும் அதேபோன்று சூழவுள்ள நாடுகளிலும் இந்த விவகாரங்கள் செல்வாக்குச் செலுத்தியிருப்பதாகவும் அசெஞ் கூறியுள்ளார்.பத்திரிகை ஊடாக அந்த விடயங்களை நாங்கள்  வெளியிட்டிருந்தோம். அல் அக்பர் என்ற அந்தப் பத்திரிகை டுனீசியாவில் என்ன நடந்தது என்பதற்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கை ஏற்படுத்தியிருந்தது என்று எஸ்.பி.எஸ்.நிகழ்ச்சியில் அசெஞ் கூறியுள்ளார். எகிப்து, யேமன், ஜோர்தான் மற்றும் ஏனைய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு டுனீசியா உதாரணமாகத் திகழ்ந்தது என்பது குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்திருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம் டுனீசியா

உலக[ஊழல்]மயம்

-அசோகன் முத்துசாமி 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழலுக் கும் பிரதமருக்கும் சம்பந்தமில்லை என் றார்கள். ஆம், சம்பந்தமில்லைதான். ஏனெனில் அவர் இவ்வளவு சின்னத் தொகையிலெல்லாம் கை வைக்க மாட் டார். எதுவாக இருந்தாலும் 2 லட்சம் கோடிக்கு மேல் இருக்க வேண்டும். அது தான் எஸ்- பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஊழல். (எஸ்- பேண்ட் என்பது மிக உயர்ந்த வகை அதிவேக அலைக்கற்றை). நேரடியாக மன்மோகன் சிங்கின் கட் டுப்பாட்டின் கீழ் வரும் விண்வெளித் துறையின் கீழ் இந்திய வானியல் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஎஸ்ஆர்ஓ) வரு கின்றது. அதன் வர்த்தகப் பிரிவு ‘ஆன்ட் ரிக்ஸ் கார்ப்பரேஷன்’ எனும் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கும் தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்கிற தனி யார் நிறுவனத்திற்கும் இடையில் 2005ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்படுகின் றது. அதன்படி அந்த தனியார் நிறுவனத் திற்கு 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற் றையை வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அளிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் காரணமாக அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட லாம் என்று மத்திய தணிக்கைத் துறை மதிப்பி
படம்
   முதியவர் போல வேடமிட்டு கனடாவிற்குள் நுழைந்த சீன இளைஞர் விடுவிக்கப்படவுள்ளார் P கொக்கேசியாவினைச் சேர்ந்த முதிவயர் போல தன்னை உருமாற்றிக்கொண்ட கனடாவிற்குள் நுழைந்த சீன இளைஞனை விடுவிக்குமாறு உத்திரவிடப்பட்டிருக்கிறது.  வாராந்தம் கனேடிய எல்லைச் சேவைகள் நிறுவனத்திடம் வந்து பதிவுகளை மேற்கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் 5,000 டொலர் பிணையில் இந்த இளைஞனை விடுவிக்குமாறு குடிவரவு மற்றும் அகதிகள் சபையினைச் சேர்ந்த நீதியாளர் அனிற்றா மேராய் ஸ்வேட்ஸ் வியாழனன்று உத்திரவிட்டிருக்கிறார்.  தனது பெற்றோர்களிடமிருந்து கிடைத்த பணத்தினைப் பயன்படுத்தியே இந்தச் சீன இளைஞர் கனடாவிற்குள் நுழைந்திருக்கிறார். குறிப்பிட்ட இந்த இளைஞனைக் கனடாவிற்குள் உருமாற்றி அனுப்புவதற்குத் துணைபோன குற்றத்திற்காக கொங்கொங்கினைச் சேர்ந்த எட்டுப்பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.  கனடாவில் வசித்து வரும் சீனர்கள் இந்த இளைஞனுக்கு ரொறன்ரோவில் தங்குமிடத்தினை வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக இந்த இளைஞனின
படம்
  கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்  இந்தியா, சீனா, ரஸ்யா கடும்போட்டி.      மன்னார் கடற்பகுதியில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்ளவதில் இந்தியா, சீனா, ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கடையில் கடும் போட்டி ஆரம்பமாகியுள்ளது. மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளை சிறிலங்கா அரசாங்கம் எட்டுத் துண்டங்களாகப் பிரித்துள்ளது. இவற்றில் இரண்டு துண்டங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்திய அரச நிறுவனமான ‘கெய்ன் இந்தியா‘ என்ற நிறுவனத்துக்கே இந்த துண்டம் ஒன்று வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் சீனாவுக்கும் ஒரு துண்டம் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது வெளியாகும் செய்திகள் கூறுகின்றன. ஏனைய ஐந்து துண்டங்களையும் விரைவில் அனைத்துலக மட்டத்தில் ஏலத்தில் விற்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ரஸ்யா சென்றிருந்த போது நடத்தப்பட்ட பேச்சுக்களில்

வாரிசு இலங்கையிலும்

படம்
மக்களுடன் நாமல் ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷவுக்கு சிறு வயதிலேயே செல்வாக்கு அதிகமாக இருக்கிறது இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்தாரின் குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும் மேலோங்கி வருவதாகத் தெரிகிறது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஜனாதிபதியின் மூத்த மகன், ஜனாதிபதியின் சகோதரர்கள் இருவர், ஜனாதிபதியின் சகோதரி ஆகியோரும் இத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர். ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவுக்கு 23 வயதுதான் ஆகிறது என்றாலும், பெரிய அரசியல் பொறுப்புகளுக்காக அவர் தயார் செய்யப்படுகிறார் போலத் தெரிகிறது. தன் மகனைக் காட்டி 'இவர்தான் எதிர்காலம்' என்று கூறுவது போல கட்டவுட்டாக நிற்கிறார் ஜனாதிபதி மஹிந்த. கடந்த அரசாங்கத்திலேயே கூட ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர்கள் அதி முக்கிய அரசு பதவிகளில் வீற்றிருந்தனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் சென்ற வருடம் கிடைத்த வெற்றியின் விளைவாக ராஜபக்ஷ குடும்பத்தார், அதிலும் குறிப்பாக ஜனாதிபதியும் அவரது சகோதரரான பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷவும், இலங்கையில் பெரும் செல்வாக்கு பெற்றுள