உலக[ஊழல்]மயம்





-அசோகன் முத்துசாமி
1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழலுக் கும் பிரதமருக்கும் சம்பந்தமில்லை என் றார்கள். ஆம், சம்பந்தமில்லைதான். ஏனெனில் அவர் இவ்வளவு சின்னத் தொகையிலெல்லாம் கை வைக்க மாட் டார். எதுவாக இருந்தாலும் 2 லட்சம் கோடிக்கு மேல் இருக்க வேண்டும். அது தான் எஸ்- பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஊழல். (எஸ்- பேண்ட் என்பது மிக உயர்ந்த வகை அதிவேக அலைக்கற்றை).

நேரடியாக மன்மோகன் சிங்கின் கட் டுப்பாட்டின் கீழ் வரும் விண்வெளித் துறையின் கீழ் இந்திய வானியல் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஎஸ்ஆர்ஓ) வரு கின்றது. அதன் வர்த்தகப் பிரிவு ‘ஆன்ட் ரிக்ஸ் கார்ப்பரேஷன்’ எனும் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கும் தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்கிற தனி யார் நிறுவனத்திற்கும் இடையில் 2005ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்படுகின் றது. அதன்படி அந்த தனியார் நிறுவனத் திற்கு 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற் றையை வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அளிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் காரணமாக அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட லாம் என்று மத்திய தணிக்கைத் துறை மதிப்பிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின் றன. எப்படி?

வெறும் 15 மெகா ஹெர்ட்ஸ் அலைக் கற்றை மட்டுமே 3ஜி ஏலத்தில் விற்கப்பட் டது. அதன் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் சுமார் 67,719 கோடி ரூபாய். தேவாஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட விருந்ததோ 70 மெகா ஹெர்ட்ஸ். நான்கு மடங்குக்கும் மேல். ஆனால், வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு.

மேலும், இதே வகை அலைக்கற்றை 20 மெகா ஹெர்ட்ஸ் அளவு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் பயன்படுத்த அனு மதிக்கப்பட்டது. அதற்கு வாங்கப்பட்ட கட்டணம் வெறும் 12,847 கோடி ரூபாய். மன்மோகன் சிங்கின் கொள்கைகள் எப்போதும் மக்களுக்கும், பொதுத்துறைக் கும் எதிரானவையாக இருக்கின்றன என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. மக்களின் சுருக்குப் பைகளிலிருந்து கொள்ளையடித்து, முதலாளித்துவ திமிங் கலங்களுக்கு தீனி போடுவார்.

இந்த செய்தி ‘தி ஹிந்து’ குழும நாளி தழ்களில் வெளிவந்தவுடன் பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒரு மறுப்பு வெளி யிடப்படுகின்றது. மேற்கண்ட நிறுவனத் திற்கு எஸ்-பேண்ட் அறைக்கற்றை ஒதுக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆதலால், அர சுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்ற கேள் வியே இல்லை என்பது அந்த மறுப்பின் சாராம்சம்.

ஆனால், ஒப்பந்தம் போட்டிருக்கின் றீர்களே திருவாளர் பரிசுத்தம் அவர் களே? ஏன், ஒப்பந்தம் போட்டீர்கள்? இப் படி ஒரு விவகாரம் நடந்திருப்பதே இது நாள் வரை மக்களுக்குத் தெரியாது. இப் போது அந்த பத்திரிகைகள் அம்பலப் படுத்தவில்லை என்றால் நீங்கள் அந்த நிறுவனத்திற்கு இதே பிச்சைக் காசுக்கு நாட்டின் இயற்கை வளத்தை விற்றிருப்பீர் கள் இல்லையா? விற்றிருக்க மாட்டோம் என்று நீங்கள் சொன்னால் யாரும் நம்பப் போவதில்லை. ஏனெனில், 2007லிருந்தே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்த மாக புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன. அதாவது அலைக்கற்றைகள் ஒதுக்கப் படுவதற்கு முன்பாகவே புகார்கள். ஆனால், அந்த புகார்கள் எதையும் பொருட்படுத்தாமல், நீங்கள் முடிவு செய்தபடியே அலைக்கற்றைகள் ஒதுக்கி னீர்கள். எதிர்ப்பு வந்தபோதே அப்படிச் செய்த நீங்கள், விஷயமே வெளியில் தெரி யாமல் இருந்திருந்தால் இந்த ஊழலை யும் செய்யாமலா இருந்திருப்பீர்கள்?

பொதுத் தணிக்கைக் குழு இந்த ஒப் பந்தத்தை இன்னும் ஆராய்ந்து கொண் டிருப்பதாகக் கூறுகின்றது. அது இழப்பு குறித்து இன்னும் முடிவிற்கு வரவில்லை. ஆனால், வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்றது உண்மைதானே? அப்படி விற்க ஒப்புக் கொண்டதே ஊழல்தானே? பிஎஸ்என்எல்லிடமும் எம்டிஎன்எல் லிடமும் வாங்கப்பட்ட கட்டணத்தைக் கணக்கிட்டாலே ரூ.40,000 கோடிக்கு மேல் வருகின்றது.

பொய்களுக்கு அளவேயில்லை. அலைக்கற்றை எதுவும் ஒதுக்கப்பட வில்லை என்கிறார் பிரதமர் (அலுவலகம்). ஆனால், அந்த தனியார் நிறுவனம் தன் னுடைய அகண்ட அலை வரிசை சேவையை பரிசோதித்துப் பார்ப்பதற்கு தொலைத்தொடர்புத் துறை அலைக் கற்றை ஒதுக்கியிருக்கின்றது. அதை இப்போது அந்த துறை திரும்பப் பெறப் போவதாக செய்திகள் கூறுகின்றன. அதாவது, தேவாஸ் நிறுவனத்திற்கு விற் பது என்பதை திட்டவட்டமாக முடிவு செய்து விட்டார்கள். இல்லை என்றால், எதற்கு அந்நிறுவனம் தன்னுடைய சேவையை பரிசோதித்துப் பார்ப்பதற்கு அலைக்கற்றை வழங்க வேண்டும்?

இந்த ஒதுக்கீட்டுக்கு முன்னர் அதற் கான பொது அறிவிப்போ, ஏலமோ, டெண் டரோ விடப்படவில்லை. 2ஜி ஒதுக்கீட் டிற்கு ஏலம் விடுங்கள் என்று மன்மோகன் சிங் அமைச்சர் ராசாவுக்கு ஆலோசனை வழங்கியதாகவும், ராசா அதையும் மீறி தன்னிஷ்டம் போல் ஒதுக்கீடு செய்தார் என்று சிலர் எழுதி வருகின்றனர். அதா வது, பிரதமர் நல்லவர், ராசா மட்டும்தான் குற்றவாளி என்பதைப் போல. ஆனால், இந்த ஒதுக்கீட்டில் ‘முதலில் வந்தவ ருக்கு முன்னுரிமை’ என்பது கூட கடைப்பிடிக்கப்படவில்லை. அப்படியா னால் மன்மோகன் சிங்கை என்ன செய்ய வேண்டும்?

ஏன் ஏலமோ டெண்டரோ விடப்பட வில்லை என்கிற கேள்விக்கு இஸ்ரோ வின் இந்நாள் தலைவர் ராதாகிருஷ்ண னும், முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்க னும், ‘2003ல் தேவாஸ் மல்டிமீடியாவு டன் பேச்சு வார்த்தை துவங்கியபோது... வேறு நிறுவனங்கள் எதுவும் இருக்க வில்லை’ என்று பதிலளித்திருக்கின்ற னர். வேறு நிறுவனங்கள் இருக்கின்றதா இல்லையா என்பது பொது அறிவிப்பு வெளியிட்டால்தானே தெரியும்? அதைச் செய்யாமலேயே வேறு யாரும் இல்லை என்று முடிவிற்கு வருவது எப்படி சரி யாகும்?

இந்த ஒப்பந்தம் பற்றி பிரதமருக்கே தெரியாது என்கிறார்கள். நாங்கள் அரசாங் கத்திற்கே தெரிவிக்கவில்லை என்கிறார் கள். அவர்களது கூற்றுப்படியே இந்த விஷயம் விண்வெளி ஆணையம் வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தில் அமைச்சரவைச் செய லாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை யின் ராஜாங்க அமைச்சர் (இத்துறைக்கு பிரதமர்தான் காபினட் அமைச்சர்) ஆகி யோர் உறுப்பினர்கள். இணை அமைச் சருக்கும், அமைச்சரவைச் செயலாளருக் கும் தெரிந்த விஷயம் பிரதமருக்குத் தெரி யாது என்றால் யாராவது நம்புவார்களா? கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் பொய் சொல்கிறார்கள்.

மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

“2005ல் மத்திய அமைச்சரவையும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள் ளது. ஆகவே, ஒவ்வொரு கட்டத்திலும் இஸ்ரோவுடனான எங்களது ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பின்னர்தான் செயற்கைக்கோள் மூலமாக இணையதள சேவை வழங்கும் எங்களது திட்டத்தை வளர்க்கத் துவங்கினோம்’’ என்று தேவாஸ் நிறுவனத்தின் தலைவர் ராமச்சந்திரன் விஸ்வநாதன் ‘எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழுக்கு (ஆகஸ்ட் 23, 2010) பேட்டியளித்துள்ளார். (தி ஹிந்து. 9.2.11). அப்படியெனில், பிரதமருக்குத் தெரியாது என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் அல்லவா?

ஊழல் மேல் ஊழல் நடந்து கொண்டி ருக்கின்றது. அடுத்தடுத்து ஒவ்வொன் றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்திய வரலாற்றில் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் போல் வேறெப்போதும் இவ்வளவு ஊழல்கள் நடந்ததில்லை. ஆனால், மன்மோகன்சிங் மீது குற்றம் எதுவும் இல்லை என்று சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்ட சிலர் தொடர்ந்து பிதற்றி வருகின்றார்கள். நற்சான்றிதழ் கொடுப்ப வர்களின் யோக்கியதையைப் பார்த்தாலே மன்மோகன் சிங்கின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம்.

இறுதியாக, 1980களில் நிதி வருவாய் தொடர்பான ஊழல்கள் வெறும் எட்டு மட்டுமே நடந்திருந்தன. மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்த 1991-96 கால கட்டத்தில் மட்டும் 26 ஊழல்கள் நடந் தன. அவர் பிரதமராக இருக்கும் இந்த ஆறரை ஆண்டு காலத்தில் சிறுநாடு களின் பட்ஜெட்டையே மிஞ்சுகின்ற அள விற்கு ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. (சபா நக்வி, அவுட்லுக், நவம்பர் 29, 2010).

இன்னும் எத்தனை ஊழல் நடந்திருக் கின்றதோ நமக்கு இப்போது தெரியாது. ஆனால், இவை அனைத்தும் உலகமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பின்னர் தான் இவ்வளவு பெரிதாகவும், இவ்வளவு அடிக்கடியும் நடந்து கொண்டிருக்கின் றன என்பது மட்டும் நிச்சயம்
                                                                                                                      நன்றி;தீக்கதிர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?