இன்னும் எத்தனை காலம் ஆகும்?


தாக்குதலின்போது கஸாப்


2008.ல் மும்பை தாக்குதலில் கிட்டதட்ட 110 பேர்களைக் 
கொன்று குவித்தனர் கசாப்பும்,அவனது தீவிரவாதநண்பர்களும் .நமது இந்திய விசாரணை முறைப்படி 2011 ஆகியும் இன்னமும் விசாரிக்கிறார்கள்.
விசாரித்தார்கள்,விசாரிக்கிறார்கள்,விசாரிப்பார்கள்.
        மும்பை நீதிமன்றம் இப்போது தூக்குத்தண்டனையை உறுதி செய்துள்ளது.கூடவே மேல்முறையீடுக்கு உச்சநீதி மன்றத்தை அனுக ஆலோசனையையும் வழங்கியுள்ளது.அது இன்னமும் சில ஆண்டுகள் காலத்தை பின்னுக்கு இழுக்கும். கிட்டத்தட்ட வழக்கு முடிவதற்குள் கசாப் தன்னாலே வயசாகி செத்தும் போய் விடுவான். 
          இதுபோன்ற நமது நீதித்துறை நடவடிக்கைகளால் தான் இந்தியாவில் அதிகமாக தீவிரவாதம் தளைத்தோங்குகிறது. அதுதான் விசாரித்துக்கொண்டே 
இருப்போம் .அவர்களும் பிணையில் வெளியேவந்து சாட்சிகளை கலைக்க வாய்ப்பும் கிடைக்கும். அதன் பின்னும் நாம் சாரித்துக்கொண்டே இருப்போம் அவர்களும் குண்டுகளை வெடித்துக்கொண்டே இருப்பார்கள். 
        மக்களவைக் கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்து தீபாவளி கொண்டாடியவர்கள் மீது நாம் என்ன நடவடிக்கை எடுத்தோம்.தாவுத் இப்ராகிமை என்ன செய்தோம். போகிறப்போக்கைப்பார்த்தால் நேரம் போகவில்லை என்றால் இந்தியாவில் குண்டுவெடித்து தலைமறைவாகி விளையாட விசா கேட்டு விண்ணப்பிப்பார்கள் போலிருக்கிறது. 
        கடுமையான நடவடிக்கைகள் மூலமே திவிரவாத செயல்களை தடுக்க முடியும் ஆதாரத்துடன் கிடைத்தவனை வைத்து பிரியாணிபோட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அரசு தீவிரவாதத்தை வளர்ப்பதாக அல்லவாத்
தோன்றுகிறது
         காலிஸ்தா ன் பிந்திரன்வாலே என்னவானான்,இந்திரா கொலை தீவிரவாதத்தால் சீக்கியர்கள் என்ன வானார்கள்,ராஜிவ் கொலையால் விடுதலைப்புலிகளே அழித்தொளிக்கப்பட்டனரே, அதுபோல் எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை.?
        மத்திய அரசும் ,உச்சநீதிமன்றமும் விரைவாக நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும்.அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கவும் வேண்டும். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?