உளவு புத்த பிட்சுகள்

தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை பக்சே அரசு இப்போது மற்றொரு கேடுவிளைவிகும் செயலில் இறங்கி உள்ளது.
                                                                                                                       
அது மதத்தை வளர்ப்பதோடு, மக்களை,குறிப்பாகத் தம                                                       தமிழர்களை உளவு பார்க்க புத்த துறவிகளை களம்  இறக்கியிருக்கிறது.
 
இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகளின் முகவர்களாக, உளவாளிகளாக புத்த துறவிகளும் களமிறக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்புகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன.
அவர்கள் புத்த துறவிகளின் வேடம் தரித்தபடி உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடவுள்ளார்கள். தமக்குக் கிடைக்கும் தகவல்களை புலனாய்வு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு இடப்பட்டுள்ள பணியாகும்.
பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ள புத்த துறவிகளே  இனம் காணப்பட்டு அவ்வாறு புலனாய்வு நடவடிக்கைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களுடன் சிலகாவல் துறையினரும்புத்த துறவி வேடம் தரித்து புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக் கொண்டவர்கள் குறித்து தகவல்களைத் திரட்டுதல், எதிர்க்கட்சிகளுடன் இணைந்துள்ள செல்வந்தர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் குறித்த தகவல்களைத் திரட்டி உளவுத்துறையிடம்
அளித்தல், பொதுமக்கள் மத்தியில் புத்த மதத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்துக்கு ஆதரவான பிரச்சாரத்தை மேற்கொள்ளல் என்பன அவர்களுக்கு இடப்பட்டிருக்கும் பணிகளாகும்.
அவ்வாறு போலியாக புத்த துறவி வேடம் தரிப்பவர்களை வழிநடத்துவதும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும்புத்த துறவிகளின்மற்றொரு பணியாகும்.
அவ்வாறாக புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் துறவிகள் மற்றும் போலித் துறவிகளுக்கு மாதமொன்றுக்கு பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் வரையானசம்பளம் வழங்கப்படுவதா
கவும் தகவல்.புத்தம் சரணம்,கச்[போலி]சாமி,,,,,,,,
                                                                                                                      -தகவல்;நியு இந்தியா நியுஸ்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?