யுனிசெப் அறிக்கை தவறு


'போரிலிருந்து மீண்ட வட-கிழக்கில் இளைஞர் அபிவிருத்தி அவசியம்'
'போரிலிருந்து மீண்ட வட-கிழக்கில் இளைஞர் அபிவிருத்தி அவசியம்'
ஐநாவின் சிறார்களுக்கான நிதியமான யுனிசெஃப் உலகளாவிய ரீதியில் சிறார்களின் நிலை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கை குறித்த யுனிசெஃப் அறிக்கையில், இலங்கையில் மொத்தமாக உள்ள 30 லட்சத்துக்கும் அதிகமான விடலைப் பருவத்தினருக்காக சுகாதாரம், கல்வி, குடிநீர் மற்றும் பொதுச்சுகாதார சேவை ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் அவர்களுக்கு நல்ல பலனைத் தரத்தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால்,அனைத்து இலங்கைக்குமான இந்த தகவல்கள், அண்மையில் போரிலிருந்து விடுபட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொருந்தாது என இலங்கை மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவியும் மகளிர் விவகார அமைச்சின் மகளிர் ஆலோசனைக்குழுவின் உறுப்பினருமான சரோஜா சிவச்சந்திரன் கூறுகிறார்.
அடிப்படை வசதிகளுக்கான நிலைமைகள் வடக்கு கிழக்கில் போருக்குப் பின்னர் இன்னமும் முன்னேற்றம் அடையவில்லை என்றும் அவர்  குறிப்பிட்டார்.
         அவர் குறிப்பிட்டதுபோல் ஈழ இளையோர் சமுதாயம் பக்சே அரசால் முழுக்க ஒதுக்கப்பட்ட சமூதாயமாக மாறிவிட்டது,
 யுனிசெப் அறிக்கை தமிழர்பகுதியில் ஆய்வுசெய்தது போல் தெரியவில்லை. அது ஆளும் பக்சேவை மகிழூட்டவே தயாரிக்கப்பட்டது போல் உள்ளது. ஒருபுறம் முகாம்களில் சிறார்கள் தட்டை ஏந்தி,கொஞ்சமும் சுகாதாரம் இல்லாத இடத்தில் இருக்கையில் முன்னேற்ற அறிக்கை எப்படி சாத்தியம்.
    அய்.நா,சபை,யுனெஸ்கோ,யுனிசெப் உலகவங்கி,உலகசுகாதார நிறுவனம்
 அனைத்துமே நம்பிக்கைத்தனத்தை இழந்து சில நாட்களாகி விட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?