ஊழல் மகாயுத்தம்,,,



ஊழல் மகாயுத்தம் என்றதும்,சங்கித மகாயுத்தம்,மானாட போன்ற ஒரு இலவசதொலைக்காட்சி நிகழ்ச்சி என எண்ணி விடாதீர்கள்.மேலே நகருங்கள்,,,,
 சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்.
  




பிரதமர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, லோக்சபாவில் சட்டம் இயற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு தற்போது ஈடுபட்டுள்ளது. இதற்காக, மத்திய அமைச்சரவை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க, வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம், தற்போது உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வரும், சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

"ஊழலை ஒழிக்க சட்டம் இயற்றும்போதே, அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளிலேயே கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தார் ஹசாரே. இந்த விவகாரத்தில், ஹசாரே அவசரப்படுவதாகவும், அவர் கூறுவதை அரசு அப்படியே செயல்படுத்த வேண்டும் என, ஹசாரே வற்புறுத்துவதாகவும் அரசு தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஹசாரே தன் போராட்டத்தை துவக்கி விட்டார்.

""சாவை கண்டு நான் பயப்படவில்லை. நான் இறந்து விட்டால், எனக்காக அழுவதற்கு, குடும்பம் என்று யாரும் இல்லை. நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே, போராடி வருகிறேன். ஊழலுக்கு எதிராக இரண்டாவது சுதந்திர போராட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். அரசு துறைகளில் வெளிப்படையான அணுகுமுறை அவசியம். நேர்மையான அதிகாரிகளை, அடிக்கடி இடமாற்றம் செய்வது தடுக்கப்பட வேண்டும். இந்த நோக்கங்கள் நிறைவேறும் வரை, என் போராட்டத்தை தொடர்வேன்!'' -  அன்னா ஹசாரே கூறியது.

* அன்னா ஹசாரே, மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், 1940ல் பிறந்தவர்.

# இந்திய ராணுவத்தில் டிரைவராக பணிபுரிந்தவர். தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போது எல்லாம், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, ஆச்சார்யா வினோபா பாவே போன்றோரின் புத்தகங்களை படித்தார். இதனால், இவருக்கு சமூக சேவை செய்வதிலும், அஹிம்சையிலும் ஆர்வம் ஏற்பட்டது.

 1978ல், ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, முழு நேர சமூக சேவகரானார்.

# ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராட்டங்களை நடத்தினார். இவரின் போராட்டங்கள்” ஊழல் அரசியல்வாதிகளுக்கு” எதிரானதாக அமைந்தது.

+ இவரின் தீவிரமான போராட்டம் காரணமாக, 1995-96ல், அப்போதைய மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியாக இருந்த சிவசேனா - பா.ஜ., அரசை சேர்ந்த ஊழல் அமைச்சர்கள் இரண்டு பேர் நீக்கப்பட்டனர்.

# 2003ல், ஹசாரேயின் போராட்டம் காரணமாக, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த நான்கு பேருக்கு எதிராக, மகாராஷ்டிரா அரசு, விசாரணை கமிஷன் அமைத்தது.

 இவரின் போராட்டங்களால் கடும் அதிருப்தியடைந்த சரத் பவார், பால் தாக்கரே போன்ற அரசியல்வாதிகள், அவரை "பிளாக் மெயில் மனிதர்' என கடுமையாக விமர்சித்தனர்.

# தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்.

                       ஹசாரேயின் பெரும்பாலான போராட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்களாகவே இருந்தன.

* ஊழலுக்கு எதிரான இவரின் போராட்டங்களுக்கு மேதா பட்கர், கிரண் பேடி, ஆன்மிக தலைவர்கள் சுவாமி ராம்தேவ், சுவாமி அக்னிவேஷ் போன்றோர், தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

* இவருக்கு எந்த வித சொத்தும் இல்லை; வங்கியில் சேமிப்பும் இல்லை .

* அகமது நகர் மாவட்டம், சித்தி நகர் கிராமத்தில் யாதவபாபா கோவில் அருகே உள்ள, பத்துக்கு பத்து சதுரடி கொண்ட ஒரு சிறிய அறை தான் இவரது வசிப்பிடம்.
      அதனால்தான் இவர் ஊழல்களுக்கு எதிராக உரக்கக் குரல் முடிகிறது.அக்குரல் மக்கள் சக்தியையும் ஒருங்கினைக்கிறது.
 இவர் போராட்டம் நமது மதிப்புமிகு”எனக்கு ஒன்றும் தெரியாது”புகழ் பிரதமரிடம் எடுபடுமா?அல்லது இப்படி ஒரு போராட்டம் நடந்ததே எனக்குத்தெரியாது என மன்மோகன் குறிவிடுவாரோ,,,,,,,,.
       பல்வேறு ஊழல் புகழ் அரசு உருவாக்கும் ஊழலுக்கு எதிரான[?]சட்டம் வரைவு எப்படி இருக்கும்.அதைத்தான் ஓட்டுபோடும் வயதுக்கு வராத சிறு குழந்தை கூட சொல்லிவிடுமே...... 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?