ஜப்பான் அணு உலைகள் ஒரு பாடம்


-பேராசிரியர் கே. ராஜு
நிலநடுக்கங்கள், சுனாமிகள், எரி மலைக் குழம்புகளின் சீற்றங்கள் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஜப்பானுக்குப் புதி யவை அல்ல. சுனாமி என்ற வார்த்தையே ஜப்பானிய மொழிச் சொல்தான். ஜப்பா னிய மக்கள் காலம் காலமாக பேரிடர் களுக்கிடையே வாழப் பழகிக் கொண் டவர்கள். விதியே என்று அவற்றை அமைதியாக ஏற்றுக் கொள்ளாமல், அவற்றிலிருந்து தப்பிக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டவர்கள். அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளான தால் மரம், பேப்பர் போன்ற எடை குறைந்த பொருட்களைக் கொண்டு வீடுகளைக் கட்டி வாழ்பவர்கள். ஆனாலும் இவ்வரு டம் மார்ச் 11 அன்று அந்நாட்டைத் தாக் கிய 9.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம், அதன் விளைவாக எழுந்த ஆழிப் பேரலைகள், இவை இரண்டின் காரணமாக ஃபுகு ஷிமா அணு உலைகளில் ஏற்பட்ட விபத்து கள் எல்லாமாகச் சேர்ந்து ஜப்பானியர் களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளன.

1979-ல் அமெரிக்காவின் த்ரீ மைல் ஐலண்ட், 1986-ல் ரஷ்யாவின் செர்னோ பில் ஆகிய இரு அணு உலை விபத்து களுக்குப் பிறகு நடந்த மிகப் பெரிய விபத் தாக ஃபுகுஷிமா விபத்து வரலாற்றில் குறிக்கப்படும். ஜப்பானைப் பொறுத்த அளவில் 1945 ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சுக்குப் பிறகு நடந்த கோர விபத்தாக இதை எடுத்துக் கொள் ளலாம். பல ஊர்கள் தரைமட்டமாகின. கட்டடங்களும் பாலங்களும் இடிந்து விழுந்தன. பல இடங்களில் தீப்பிடித் துப் பரவியது. இதுவரை சுமார் 16000 பேர் பலியாகியுள்ளனர். 7,00,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

மின்உற்பத்திக்கு அணு ஆற்றலைப் பயன்படுத்தும் நாடுகளில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜப்பா னில் மொத்தம் 55 அணு உலைகள் உள் ளன. தன்னுடைய மின்தேவையில் மூன் றில் ஒரு பகுதியை அணு ஆற்றல் மூலமே அந்நாடு நிறைவேற்றிக் கொள்கிறது. மார்ச் 11 அன்று சுனாமி தாக்கிய ஜப் பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 14 அணு உலைகளும் (ஃபுகுஷிமாவில் உள்ள 6 உட்பட) கொதிநீர் அணு உலை களே இத்தகைய உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொ ருளான யுரேனியம் ஆக்சைடிலிருந்து வெளிப்படும் வெப்பம் நீரைக் கொதிக்க வைத்து ஆவியாக்கி, அந்த நீராவியின் சக்தியைக் கொண்டு சக்கரங்களைச் சுழலவைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியவை. சிறு கம்புகள் (சடினள) வடிவத்தில் மாற்றப்பட்ட எரிபொருள், கட்டுகளாக ஆக்கப்பட்டு உலையின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும். இந்த மையப் பகுதி  உயர் வெப்பநிலையைத் தாங்கக் கூடியது. ஆனால் அந்த வெப்பநிலையை 2200 டிகிரி சென்டிகிரேடுக்குள் இருக்குமாறு கட்டுப்படுத்தவில்லையெனில், எரிபொ ருள் உருகி அதன் காரணமாக கதிர்வீச்சு அபாயம் ஏற்படும். எனவே வெப்பநிலை யைக் கட்டுக்குள் வைக்க குளிர்விப்பா னாக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஃபுகுஷிமா அணுஉலை குளிர்விப்பான்களுக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனே இயங்கத் தொடங்கிய டீசல் ஜெனரேட்டர்கள் குளிர்விப்பான் இயந் திரங்களை செயல்பாட்டில் வைத்திருந் தன. ஆனால் சிறிது நேரத்திலேயே மணிக்கு 800 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய 10 மீட்டர் உயர சுனாமி அலை கள் ஜெனரேட்டர்களைச் செயலிழக்க வைத்துவிட்டன. (ஃபுகுஷிமா ஜெனரேட் டர்கள் 6.5 மீட்டர் உயர அலைகளை மட் டுமே தாங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டவை). ஜெனரேட்டர்கள் செயலிழந் ததும் செயல்பாட்டுக்கு வந்த பாட்டரிகள் 8 மணி நேரம் தாக்குப் பிடித்தன. மொபைல் ஜெனரேட்டர்களைக் கொண்டு வந்து மின்விநியோகத்தைத் தொடரச் செய்யப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்க வில்லை. இப்படி அடுக்கடுக்கான தோல் விகளின் காரணமாக அணு உலைகளி லிருந்து வெளியேறும் கதிர்வீச்சினைத் தடுக்க இயலாமல் போனது. அங்கிருந்து வெளிப்படும் கதிரியக்கம் ஜப்பான் நாட் டை மட்டுமல்லாது அருகில் உள்ள பல நாடுகளையும் பாதிக்கும். அங்கு விளை யும் எல்லாப் பயிர்களும் விஷமாகிவிடும். ஆனாலும் ஜப்பானிய தொழில்நுட்ப வல் லுநர்களும் பிற நாடுகளிலிருந்து உத விக்கு வந்திருக்கும் வல்லுநர்களும் சேர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொணர கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

ஜப்பானில் நடந்த விபத்து உலகளா விய அளவில், குறிப்பாக ஐரோப்பிய நாடு களில், அணு உலைகளுக்குஎதிரான எதிர்ப்பலைகளைக் கிளப்பியுள்ளது. ஜெர் மனியில் 1980-க்கு முன்னர் தொடங்கப் பட்ட 7 உலைகள் மூடப்பட்டு விட்டன. இந் தியாவில் ஏற்கனவே உள்ள அணு உலை களோடு, இறக்குமதி செய்யப்படும் 36 அணு உலைகளைக் கொண்டு 40,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நமது அரசு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக் கும் உலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி சுயேச்சையான, விரிவான, வெளிப் படையான ஆய்வுகள் இன்றி புதிய அணு உலைகள் பற்றி முடிவுகள் எடுக்க வேண் டாம் என நம் நாட்டு விஞ்ஞானிகள் எச் சரித்துள்ளனர். அரசு இந்த எச்சரிக் கையை உடனே கவனிக்க வேண்டும்.
                                                                                                                                                               நன்றி:தீக்கதிர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ந்த அணு உலைகள் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும் அரசுகள் கூறுவது
“மின் உற்பத்திக்காகத்தான்” என்று.

  மேலைநாடுகள் எப்படியோ.ஆனால் இந்தியா போன்ற வெப்பநாடுகளில் சூரியன் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 11 மணிநேரம் வஞ்சம் இல்லாமல் காய்கிறது.[காலை6 மணி முதல்மாலை6 மணி வரை] 
இதுபோன்ற இடங்களில் சூரிய வெப்பத்தில் மின்சாரம் பைசா செலவின்றி தயாரித்து மின்தடையா என்ன என கேட்கும் அளவு செய்யலாமே.அதை பற்றி இந்த அரசுகள் ஏன் யோசிக்கக்கூட மாட்டேன் என்கிறது.
கிராமம் தோறும்  சூரிய மின்  உற்பத்தி ,சேமிப்பு கலங்களை நிறுவி செலவின்றி மக்களுக்கும்,விவசாயத்திற்கும் தடையின்றி மின்சாரம் வழங்கலாம்.முதல் கட்டுமான செலவு மட்டும்தானே.பின் உற்பத்தி இலவசமாகத்தானே மின்சக்தி கிடைக்கும்.
பெரிய கட்டடங்களில் மொட்டை மாடிகளிலும் கலங்களை நிறுவி கட்டிடத்தேவைகளை பூர்த்தி செய்யலாமே.
        தானே இலவசமாகக் கிடைக்கும் சூரியசக்தி மின்சாரம் வேண்டாம் என்றும் ,அதை பற்றிய சிந்தனைகளும் நம் ஆட்சியாளர்களுக்கு இல்லாததற்குக் காரணம்.இவைகள் செயல் பட்டால் பல அனல்.அணு மின்நிலையங்கள் கட்ட முடியாது .அதன் மூலம் கிடைக்கும் பலன் கள்[?] நமக்குக் கிடைக்காது என்ற எண்ணமாகக் கூட இருக்கும் .என  இதை படிக்கும் நீங்கள் எண்ணினால் அதை மாற்றிக்கொள்ளுங்கள்.வெறும் 2ஜி,3ஜி,காமன் வெல்த்,கார்கில் அடுக்குமாடி , மோசடிகளை வைத்து நம் ஆட்சியாளர்களையும்,அரசியல் வியாதிகளையும் பற்றி அப்படி ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள்.
வேறு நல்ல காரணம் சொல்வார்கள்.அதுவரை காத்திருப்போம்.மின்சாரம் வரும் வரையும்தான்,,,,,,
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?