இந்தியனை நம்பக்கூடாதா?

  கணணியில் இணைய இணைப்பைப் பயன்படுத்த நாம் மொபைல், தரைவழி பிராண்ட்பேண்ட், வயர்லெஸ், டேட்டா கார்டுகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறோம்.

பெரும்பாலும் ஒரு இணைப்பில் ஒரே கணணியை மட்டுமே பயன்படுத்துவோம். இரண்டு கணணிகளில் இணைத்துப் பெற வேண்டுமெனில் நெட்வொர்க் கேபிளை பயன்படுத்துவர்.

இதை விட எளிமையான வழியில் எந்தவொரு இணைய இணைப்பையும் பல கணணிகளில் பயன்படுத்த வழிவகுக்கிறது ஒரு அற்புத மென்பொருள்.

Connectify என்ற இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணணியில் நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு இணைய இணைப்பையும் வயர்கள் அல்லது கேபிள்கள் இல்லாமல் பல கணணிகளில் பகிர்ந்து கொண்டு பயன்படுத்தலாம்.

இதற்கு உங்கள் கணணியில் விண்டோஸ் 7 நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும் கணணியில் வயர்லெஸ் சேவையைத் தரும் வயர்லெஸ் அடாப்டர் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

இதற்கு முதலில்

1.கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.

http://download.cnet.com/Connectify/3000-18508_4-75024171.html?part=dl-10061477&subj=dl&tag=button

2. நிறுவியதும் உங்கள் கணணியின் டாஸ்க்பாரின் வலதுபுறத்தில் மென்பொருள் ஐகானாக தோன்றும். அதை கிளிக் செய்தால் அதன் மெயின் விண்டோ திறக்கப்படும்.

3. Wi-fi Name: உங்கள் வயர்லெஸ் இணைப்பிற்கான பெயரைக் கொடுக்கவும். மற்ற கணணிகளில் அல்லது கருவிகளில் இந்த பெயர் தான் தெரியும்.

4. Password: மற்ற கணணிகள் உங்கள் இணையத்தை அணுக பாதுகாப்பான கடவுச்சொல்லைக் கொடுக்கவும். குறைந்தது 8 எழுத்துகள் இருக்க வேண்டும்.

5. Internet: இதில் எந்த இணைய இணைப்பைப் பகிரப் போகிறீர்களோ அதைத் தேர்வு செய்யவும்.

6. Wi-Fi: இதில் உங்கள் கணணியின் வயர்லெஸ் அடாப்டரைத் தேர்வு செய்யவும்.

7. பின்னர் Start Hotspot என்பதைக் கிளிக் செய்தால் போதும்.

இந்த மென்பொருளே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ளும். இதில் எத்தனை பேர் நமது இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை Connected Clients இல் பார்க்க முடியும்.

இதில் ஏற்கனவே நீங்கள் எங்கிருந்தாவது பயன்படுத்தும் வயர்லெஸ் இணைப்பையும் கூட பகிரமுடியும். இந்த மென்பொருளை வீடு, கல்லூரிகள், கடைகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் வயர்லெஸ் கிடைக்கும் சுற்றளவுக்குள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.
==========================================================================
முன்னேறிய பக்சே 
உலகெங்குமுள்ள செல்வாக்கு மிக்க 100 பேரை தெரிவு செய்வதற்கு உலகின் பிரபலமான டைம் இதழின் வாசகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மஹிந்தர் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், மதத்தலைவர்கள் போன்றவர்கள் மத்தியில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களைத் தெரிவு செய்வதற்காகவே இந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

டைம்ஸின் இலட்சக்கணக்கான வாசகர்கள் அளித்த வாக்குகளின் படியே இந்த செல்வாக்கு மிக்க முக்கியஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அந்த வரிசையில் மஹிந்த ராஜபக்ஸ 1,46,212 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதேநேரம் 46 இடத்தில் இருந்த பராக் ஒபாமா அதே இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதேவேளை 95 ஆவது இடத்தில் இருந்த சோனியா காந்தி 100 ஆவது இடத்துக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
==========================================================================

இந்தியனை நம்பியோர் கைவிடப்படுவார்

வரலாறு எனது வழிகாட்டி என்று சொன்னவரின் வழிவந்த நாம் கடந்த கால வரலாற்றை மறந்து செயற்படக் கூடாது. இப்பொழுது வரலாற்றுப் பாடத்தை மிகவும் இறுக்கப் பற்ற வேண்டிய காலம்.

நம்ப வைத்துக் கழுத்தை அறுக்கும் வழமையான தனது நடைமுறையை ஈழத் தமிழர்கள் தொடர்பாக இந்தியா மீண்டும் கையாளத் தொடங்கியுள்ளது. சிங்களவனை நம்பாதீர்கள் அவன் உங்களைக் கட்டாயம் ஏமாற்றுவான் என்று புது டில்லிக்குச் சொன்னோம்.

கேட்டால் தானே ஈழத் தமிழினத்தை சிங்களவனுக்கு சார்பாக ஏற்பட்ட இந்திய தேசம் அழித்து, இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டது. சிங்களவன் நாம் சொன்னது போல் இந்திய அரசை ஏமாற்றி விட்டான்.

மீண்டும் ஈழத் தமிழனைப் பயன் படுத்தி சிங்களவனை மிரட்டத்திட்டமிட்ட இந்தியா அதற்கான நகர்வுகளைத் தொடங்கிவிட்டது. சிங்களவனோடு இணைந்து மீண்டும் தமிழனை இந்தியன் அழிக்க மாட்டான் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

ஜவகர் லால் நேரு இந்தியப் பிரதமராக இருந்த காலத்தில் நேபாளத்தின் மன்னர் மகேந்திராவை மடக்குவதற்கு ஒரு சாணாக்கிய நடைமுறையை பயன் படுத்தினார். நேபாளத்தின் இளைஞர்களை மன்னருக்கு எதிராக தூண்டிவிட்டார்.

மன்னர் மகேந்திரா நேரு சொன்னபடி கேட்பதற்குத் தயாரானவுடன் அதே நேபாள இளைஞர்களை இந்தியா கொண்றொழித்துவிட்டது. சிறிலங்கா, மாலைதீவு தொடர்பாக இதே உத்தியை இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பயன் படுத்தினார்கள்.

சிங்கள அரசு இந்தியாவுக்கு நல்ல பாடம் கற்பித்துள்ளது. பழைய உத்தியைக் கையில் எடுக்கும் இந்தியா ஈழத் தமிழனின் நட்பு நாடாக நடிக்கத் தொடங்கியுள்ளது. நாடு கடந்த அரசு என்ற பசுத் தோல் போத்திய ஆட்டுக் குட்டிகள் இந்திய வலையில் வீழ்ந்துள்ளனர்.

தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் அனைத்துலகத் தமிழ் அபிமானிகள், லண்டன், அமெரிக்கா, போன்ற வெளிநாட்டுத் தமிழ் அமைப்பினர் அனைவரையும். எச்சரிக்கிறோம். இந்தியனின் சூழ்ச்சிக்குப் பலியாகாதீர்கள். நல்ல மாட்டிற்கு ஒரு சூடு போதும்.

”விட்டில் பூச்சிகளே விளக்கை நாடாதீர்கள்’ ‘இந்தியாவை நம்பியோர் கைவிடப்ப படுவார்”
இது ”பதிவு” தளத்தில் வெளியான ஒரு கட்டுரை.பாவம் இலங்கைத்தமிழர் அனுபவித்த துயரம்,இந்திய அரசு செய்த நம்பிக்கை மோசடி இப்படி ஒரு கட்டுரையின் மூலமாக வெளிப்பட்டுள்ளது.
       இதை இந்தியனை நம்பியவர்கள் என்றும்,இந்தியனின் சூழ்ச்சி என்றும் இருக்கும் வார்த்தைகள் இந்தியர்கள் அனைவரையும் -தமிழன் உட்பட  மக்களை குறிப்பது சரியான கருத்தல்ல. இந்திய அரசு அல்லது சோனியா குடும்ப சூழ்ச்சி என்றுதான் இருக்க வேண்டும்.
        இந்திய மக்கள் ,குறிப்பாக தமிழர்கள் மனதளவிலும்,போராட்டங்கள் மூலமும் எவ்வளவோ முயற்சித்தும் இயலாமையில் நொந்து போனதும்.சோனியா அரசு செய்த துரோகமும் உலகமே அறிந்ததுதானே.இதில் இந்தியன்,தமிழனை பழி கூறுவது என்னைப்பொறுத்தவரை சரியல்ல.
========================================================================== 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?