தமிழ் வாழ்க,,,,,,

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு இன்று அவசரமாக கூடுகிறது2ஜீ அலைக்கற்றை இரண்டாவது குற்றப்பத்திரிக்கையில் தயாளூ அம்மாள் விடுபட காரணம் தயாளு அம்மாள் முன்பு எழுதிய கடிதம் தானாம்.
கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமாருக்கு தொலைக்காட்சி ஆரம்பித்தபோது ”தனக்கு தமிழைத்தவிர ஆங்கிலம் போன்றவைத்தெரியாது எனவே நிவாகத்தை அவரே நல்லமுறையில் கவனித்துக்க்ள்ள வேண்டும்”என எழுதிய கடிதம் கூட்டப்பதிவுகள் சி.பி.அய் வசம் கிடைத்ததுதான் காரணம்.இதன் மூலம் அவருக்கு கடனாகப்பெற்ற விபரம் எதுவும் தெரியாது.விசாரிப்பது தேவையற்ற வேலை என சி.பி.அய் ,முடிவெடுத்ததாம்.
தமிழ் கலைஞரை மட்டுமல்ல அவரது மனைவியையும் காப்பாற்றியுள்ளது.  
================================================================================================
கறுப்புப் பணப்பட்டியல் விக்கி லீக்ஸ் வெளியிடப்போகிறதாம்
ஸ்விஸ் வங்கிகளில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க 10 பேர் கொண்ட குழுவை  மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில், ஸ்விஸ் வங்கிகளில் போடப்பட்டிருக்கும் பணத்தில், இந்தியர்களின் பணம்தான் அதிகம் என்கிற திடுக்கிடும் தகவலை விக்கி லீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள விக்கி லீக்ஸ் இணையதள தலைவர் ஜூலியன் அசாங்கே, இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
ஸ்விஸ் வங்கிகள் மட்டுமின்றி, அவற்றின் கட்டுப்பாட்டில், இதர நாடுகளில் இயங்கும்  வங்கிகளில்  போடப்பட்டிருக்கும் பணத்தின் பெரும்பகுதி இந்தியர்களுடையதுதான் என்றும் ஜூலியன் அசாங்கே கூறியுள்ளார்.
அந்த இந்தியர்கள் யார் என்பது பற்றிய தகவல்களை பெறுவதற்கான வழிமுறைகள் தமக்கு தெரியும் என்று அவர் கூறினார்.
இந்தியர்கள், பெருமளவு பணத்தை ஸ்விஸ் வங்கிகளில் போட்டு வைத்திருப்பதால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதாக அசாங்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விக்கி லீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல்கள் பற்றி, இந்திய அரசு காட்டி வரும் அக்கறை உலகிலேயே மிகவும் மோசமானது என்று ஜூலியன் அசாங்கே  சாடியுள்ளார்.
இந்தியர்களின் பணத்தை மீட்டு கொண்டு வருவதற்கு, ஸ்விஸ் அதிகாரிகளுடன் செய்து கொண்டிருக்கும்   இரட்டை வரிவிதிப்பு முறை இடையூறாக இருப்பதாக இந்திய அரசு கூறி வரும் காரணத்தை ஜூலியன் அசாங்கே  நிராகரித்தார்.
இந்த விஷயத்தில் இந்திய அரசு, தன் நாட்டு மக்களை தவறாக வழி நடத்த முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் அறிந்தவரை, இந்திய  பிரதமர் மன்மோகன் சிங் ஊழலற்றவர் என்றபோதிலும், கருப்பு பண விசயத்தில் அவரது நடவடிக்கை ஏமாற்றம் அளிப்பதாக ஜூலியன் அசாங்கே கூறியுள்ளார்.
ஸ்விஸ் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்களை விக்கி லீக்ஸ் இணையதளத்திற்கு கசியவிட்ட ,ஸ்விஸ் ஜூலியஸ் பேயர் வங்கியின் முன்னாள் ஊழியர் ருடோல்ஃப் எல்மர் பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டதை ஜூலியன் அசாங்கே சுட்டிக்காட்டினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?