நீரின்றி அமையா உலகு,,,,,,,,,,,

தண்ணீர் போர்,,

விரைவிலேயே தண்ணீருக்காகவும்,பெட்ரொலுக்காகவும் போர்கள் ஏற்படும் அபாயம் காத்துள்ளது.
பெட்ரோலை இப்போது நாம் தினம் ,தினம் லட்சக்கணக்கான பீப்பாய்கள் எடுத்து பூமியை
வெற்றுரு்ண்டையாக்கி வருகிறோம்.
அதேபோல் லாரி,லாரியாக தண்ணீரை எடுத்து நிலத்தடி நீர்சேமிப்பையே இல்லாமல் ஆக்கிவருகிறோம்.பெட்ரோலை நாம் மீண்டும் பூமியில் ச்ந்கரிக்க முடியாது.அது இயற்கை பல்லாண்டுகளாக பல்வேறு நிலைகளில் உருவாக்கியது.
ஆனால் தண்ணீரை நாம் சேகரிக்க இயலும். ஆங்காங்கே குளம் ,குட்டைகள் போன்றவைகள் மூலம்.அப்படி நாம் சேகரிக்க முடிந்தாலும் நாம் அப்படி சேகரிக்கிறோமா? நிச்சயமாக இல்லை.
இருக்கின்ற குளம்,குட்டை போன்ற நீர்சேமிப்பு ஆதாரங்களையும் பட்ட போட்டு கான்கீரிட் காடுகளாக ,குடியிருப்பு மேடுகளாக ஆக்கிவருகிறோம். விவசாய நிலங்களைக்கூட விட்டு வைக்காமல் வேளாண்பரப்பையே சுருக்கி விட்டோம்.
முன்ப வீடுகளைச் சுற்றி மரங்கள்,செடிகள் வளர்ப்பார்கள். மணல் இருப்பதால் மழை நீர் சேகரிக்கப் படும்.
இப்போதோ கொஞ்சம் இடம் இருந்தால் கடை,வீடு அல்லது வீட்டைச் சுற்றி கான்கிரீட் போட்டு மெழுகி விடுகிறார்கள்.ஒரு சொட்டு மழை நீர் கூட கீழே பூமிக்குச் செல்லவிடாமல் செய்து விடுகிறார்கள்.பின் எப்படி மழை நீர் சேகரிப்பு ஏற்படும்.
மழை சேகரிப்பு மய்யங்களான குளம் ,குட்டை ,ஏரி போன்றவற்றை பட்டா போடும் அரசு அலுவலர்கள் மீதும்,ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் அரசுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகள் உடனே அகற்றப்பட வேண்டும். பெய்யும் மழையில் குறைவில்லை. வானிலை மய்யம் கூறுகிறது.அவை சேகரிக்கப்படாமல் மழைநீர் வெள்ளம் அனைத்தும் கடலுக்கு சென்று விடுவதாலேயே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
பின் மக்கள் குடிநீருக்கு பாட்டில் மினரல் வாட்டருக்கு செல்கின்றனர்.இது தேவைதானா?
அரசு குடிநீர் சேகரிப்பு அதாவது மழை நீர் சேகரிப்பில் இப்போது கொஞ்சம் கூட அக்கறை எடுக்கவில்லை.மிகப் பெரிய தவறை செய்து வருகிறது. குடிநீருக்காக இன்னும் சிறிது நாட்களில் தமிழக மக்கள் அலையப்போகிறார்கள்.
அதற்கு முன் மகக்ள் தேவைக்கான நீர் சேகரிப்பில் அரசு இறங்க வேண்டும்.
மழைநீர்சேரும் நீர் வரத்து,சேமிப்பு இடங்களில் உள்ள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.அது பாமர மக்களானாலும் ஆக்கிரமிப்பாளர்கள் பாரபட்சமின்றி அகற்றப்படவேண்டும்.
பட்டா போடும் அலுவலர் பணி நீக்கம் செய்ய வேண்டும் ,.
மணற்கொள்ளை மட்டுப்படுத்த வேண்டும்.
வீடுகள்,அலுவலகங்களைச் சுற்றி மணல் தெரியாமல் சிமிண்டால் பூசுவதை தடை செய்ய வேண்டும்.கண்டிப்பாக அனைத்துக் கட்டிடங்களிலும் கிணறு அமைக்கப்பட்டு மேற்கூரை போன்ற இடங்களில் விழுந்து வரும் மழை நீர் குழாய் கள் மூலம் கிணற்றில் விழவைத்து சேகரிக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.அது நடை முறை பற்றி கண்காணிக்கவும் வேண்டும்.
மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்டிட அனுமதியையும் நீக்க வேண்டும்.
இப்படி எறும்பு போன்று சிறுக,சிறுக சேர்த்தால் கொஞ்சம் நிலத்தடி நீரை சேர்க்கலாம்.
குறிப்பாக அந்நிய முதலீட்டாளர்களை வரவேற்கிறோம் என்று தாமிரபரணியை கோக கோலா ஆக்கிரமித்து பாட்டில் நீர் வியாபாரம் செய்வது போல்.ஸ்டெர்லைட் தனிக்குழய் மூலம் விவசாயத்திற்கு நீர் இல்லாமல் தனது தாமிர நச்சு ஆலைக்கு எடுக்க அனுமதித்திருப்பதுபோல் இனி வருங்காலத்தில் நடை பெறாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
நம் மக்கள் நலனைக்காவு கொள்ளும் தொழிற்வளர்ச்சி நமக்குத்தேவையா? மக்கள் குடிநீர்த் தேவையால் மாண்டு போகும் நிலையில் இந்த காகித அம்பு வளர்ச்சி யாருக்காக?
விவசாயம்,தண்ணீர் இரண்டையும் காக்கும் அரசுதானே மக்களுக்குத் தேவை.
உலக ஆய்வுகள் கூறுவது போல் இனிவரும் காலம் உருவாகும் போர்கள் பெட்ரோல்.தண்ணீர் இரண்டையும் முன்னிறுத்திதான்.ஏற்கனவே வளை குடாநாடுகளில் அமெரிக்கா பனிப்போரை பெட்ரொலுக்காக ஆரம்பித்து விட்டது.
நாம் நம்மிடம் உள்ள இயற்கை வளங்களை பாது காத்துக் கொள்வோம்.
வல்லரசாகி என்ன செய்ய குடிக்கவும்,...கழுவவும் தண்ணி இல்லாமல்,,,,,,
==============================================================================
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆடைக்கண்காட்சியில் இந்துக்கடவுளான மஹா லக்ஷ்மியின் உருவம் வரையப்பட்ட நீச்சல் உடை அணிந்து வந்ததைப் பாருங்கள்.

இந்துக் கடவுள்நீச்சல் உடையை பெண் அணிந்துகொண்டதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்துக்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


ஆயுதத் தரகர் கசோகியுடன் ஹஸன் அலிக்கு நெருங்கிய தொடர்பு: அமலாக்கத்துறை அறிவிப்பு
[
சர்வதேச ஆயுதத் தரகர் அட்னன் கசோகியுடன், ஹஸன் அலிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
மேலும், சுவிஸ் நாட்டில் உள்ள யுபிஎஸ் வங்கியில் கணக்கு தொடங்க ஹஸன் அலிக்கு, கசோகி உதவியுள்ளார் என்றும், அந்த கணக்கில் கசோகியின் பணம் முதலீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கை கையாள்வதற்கு "பிளாக் பிரின்ஸ்" என்ற குறியீடு ஹஸன் அலிக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹஸன் அலி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

==========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?