அல்கொய்தாவின் புதிய ” தல”

பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டின் மீது அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதலின் போது அங்கிருந்த பின்லேடனின் மகன்மாரில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்லேடனின் கடைசி மகனான 19 வயதான ஹம்ஸா என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இவர் பயங்கரவாதத்தின் இளவரசர் என்று வர்ணிக்கப்படுபவர்.

அமெரிக்கத் தாக்குதலின் பின்லேடனின் மூன்று மனைவிமாரும் பல பிள்ளைகளும் தற்போது பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ளனர்.

ஆனால் அந்த வீட்டில் இருந்த பின்லேடன் குடும்பத்தின் முக்கிய நபரான ஹம்ஸா அங்கிருந்து தப்பியுள்ளார் என்பது இப்போது தான் தெரியவந்துள்ளது.

ஹம்ஸாவுக்கு 14 வயதாக இருக்கும்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

நீங்கள் இங்கு காண்பதும் அதே படம் தான். பின்லேடனின் மனைவிமாரை பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரித்த போது தான் ஹம்ஸா பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன. பின்லேடனின் 22 வயதான காலித் என்ற மகன் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

=========================================================================

அல்குவைதா இயக்கத்தின் அடுத்த தலைவர் 


பின்லேடன் மரணமடைந்த பிறகு அல்குவைதா இயக்கத்தின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி இப்போது பரவலாக எழுந்துள்ளது.

அடுத்த தலைமைத்துவத்துக்காக அய்மான் அல் சவாஹிரி, அபூயஹ்யா அல் லிபி, சைப் அல் ஆதல், அன்வர் அல் அவ்லாக்கி, காத் பின் லாதன், நாஸர் அல் வஹைஸி, இல்யாஸ் காஷ்மீரி, ஆகிய ஏழு பேருக்கிடையில் போட்டி நிலவுகின்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 பாகிஸ்தான் இராணுவத்தின் கமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த முன்னாள் வீரர் இல்யாஸ் காஷ்மீரியே இந்தப் போட்டியில் முன்னணியில் இருப்பதாகவும் அல்குவைதா தகவல்கள் தெரிவிக்கின்றன.




மும்பாய் பாணியிலான பல தாக்குதல்களை ஐரோப்பிய நகரங்கள் பலவற்றில் நடத்துவதற்கு இவர் ஏற்கனவே திட்டமிட்டுள்ளதால் இவரின் செல்வாக்கு அல்குவைதா அமைப்புக்குள் ஓங்கியுள்ளது. இதுவரை ஐரோப்பிய நகரங்களில் இடம்பெற்றுள்ள அல்குவைதா தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியும் இவரேயாவார்.

அல்குவைதா அமைப்புக்குள் பின் லாடனுக்கு அடுத்தபடியாக இருந்தவர் அய்மான் அல் சவாஹிரி. பின்லாடன் உயிருடன் இருந்தபோதே இவர் இரண்டாம் நிலையில் இருந்தாலும் அநேகமான அல்குவைதா உறுப்பினர்கள் மத்தியில் இவருக்குப் போதிய செல்வாக்கு இல்லையென்றே தெரியவந்துள்ளது.


=
அமெரிக்காவின் ஆளில்லா தாக்குதல் விமானங்கள் பாகிஸ்தானில் பல தடவைகள் காஷ்மீரியை இலக்கு வைத்த போதிலும் அவர் தப்பியுள்ளார். பாகிஸ்தானில் அடுத்தவாரம் ஆரம்பமாகும் மிகப்பெரிய பயங்கரவாத வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவுடன் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போராடிய முஜாஹிதீன் கொரில்லாக்களுக்கு பயிற்சிகளை வழங்கிய பாகிஸ்தானின் விஷேட கமாண்டோ படையின் முன்னாள் வீரர் இவர்.
======================================================================
கேரளாவில், எண்டோ சல்பான் என்ற பூச்சி கொல்லி மருந்தை, பயிர்களுக்கு அடித்த விவசாயிகள் பலர் உயிர் இழந்து இருக்கிறார்கள். எனவே இந்த மருந்தை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு, கேரள அரசு கோரிக்கை விடுத்து இருக்கிறது. இந்த நிலையில் கொச்சி அருகே ஏலூர் என்ற இடத்தில் இருக் கும் எண்டோ சல்பான் பூச்சிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை மூட கேரள அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதற்கான உத்தரவை கேரள அரசின் சுற்றுச் சூழல்துறை பிறப்பித்து இருக்கிறது. இந்த தொழிற்சாலை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவ தாகவும், இந்த தொழிற் சாலையில் பாதுகாப்புக் கான முன்னெச்சரிக்கை விதிமுறைகள் செயல் படுத்தப்படவில்லை என்றும் கூறி, இந்த தடை உத்தரவை கேரள அரசு பிறப்பித்து இருக் கிறது.
கேரளாவில், எண்டோ சல்பான் என்ற பூச்சி கொல்லி மருந்தை, பயிர்களுக்கு அடித்த விவசாயிகள் பலர் உயிர் இழந்து இருக்கிறார்கள். எனவே இந்த மருந்தை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு, கேரள அரசு கோரிக்கை விடுத்து இருக்கிறது. இந்த நிலையில் கொச்சி அருகே ஏலூர் என்ற இடத்தில் இருக் கும் எண்டோ சல்பான் பூச்சிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை மூட கேரள அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதற்கான உத்தரவை கேரள அரசின் சுற்றுச் சூழல்துறை பிறப்பித்து இருக்கிறது. இந்த தொழிற்சாலை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவ தாகவும், இந்த தொழிற் சாலையில் பாதுகாப்புக் கான முன்னெச்சரிக்கை விதிமுறைகள் செயல் படுத்தப்படவில்லை என்றும் கூறி, இந்த தடை உத்தரவை கேரள அரசு பிறப்பித்து இருக் கிறது.

கோடீஸ்வர முதலமைச்சர்கள்

இந்தியாவில் உள்ள 30 முதலமைச் சர்களில், 24 முதலமைச்சர்கள் கோடீஸ் வரர்கள் என தகவல்கள் வெளியாகி யுள்ளது. 30 முதலமைச்சர்களின் சொத்து மதிப்பீடு அவர்கள் தேர்தலில் போட்டி யிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அளித்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 236 கோடி ரூபாய் ஆகும். மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமையில், மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா மாநிலங் களில் உள்ள இடதுசாரி அரசுகளின் முத லமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் பட்டிய லில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில நாளேடு ஒன்றில் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கோடீஸ்வர முதலமைச் சர்களின் பட்டியலில் முதல் இடத்தை உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் மாயாவதி பிடித்துள்ளார். பள்ளி ஆசிரி யையாக இருந்த மாயாவதி இன்று 2010ல் ரூ.87 கோடிக்கு அதிபதியாக உயர்ந்துள் ளார். 2007-ல் இவரது சொத்து மதிப்பு ரூ.52 கோடி என இவர் கணக்கு காட்டி யுள்ளார். இந்த மூன்று ஆண்டு காலத்தில் 67 விழுக்காடு இவரது சொத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது. 2007-2008 வரி விதிப்பு ஆண்டில் இவர் ரூ.26 கோடி வரி செலுத்தி இந்தியாவில் அதிக மான வரி செலுத்துவோர் பட்டியலில் முதல் இருபது இடத்தில் உள்ளார்.

 இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளவர் தமிழ்நாட்டின் முதலமைச் சர் கருணாநிதியாவார். இவரின் சொத் தின் மதிப்பு ரூ.44 கோடி ஆகும்.

மூன்றாவது இடத் தைப் பிடித்துள்ளவர், காங்கிரஸ் கட்சி யை சேர்ந்த சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த, அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு ஆவார். இவர் 2009ம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையின்படி இவருக்கு ரூ.23 கோடி சொத்து உள்ளது. 

அடுத்து எடியூரப்பா2008-ம் ஆண்டில் அவர் காட்டிய சொத்து மதிப்பு ரூ.2 கோடியாக இருந்தாலும், தற்போது அவரின் சொத்து இந்த வருடம் ரூ.11 கோடியாக உயர்ந் துள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தனது தொகுதியில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு ஒன்றும் உள்ளது.

சிரோன் மணி அகாலிதள தலை வரும், பஞ்சாப் முதலமைச்சருமான பிர காஷ் சிங் பாதலுக்கு உள்ள சொத்தின் மதிப்பு ரூ.9.20 கோடியாகும். (2007) ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் பஞ் சாப் முழுவதும் ஹெலிகாப்டரில் சென்று வந்ததற்குமட்டும் ரூ.33 கோடி செலவிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் கர்கோன் நகரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள டிரிடென்ட் ‘ஹில்டன் என்ற ஹோட்டலில் இவ ருக்கு 85 விழுக்காடு பங்கு உள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என்.கிரண்குமார் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் உள்ள சொத்தின் மதிப்பு ரூ.8.11கோடி 

ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ரூ. 7.89 கோடி, நாகலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ ரூ.7.23 கோடி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மகாராஷ்டிர முதல்வர் பிரித்வி சவாண் ரூ.6.81 கோடியும், பாண்டிச்சேரி முதலமைச்சர் வி.வைத் தியலிங்கத்திற்கு ரூ.5.70 கோடியும், அசாம் முதலமைச்சருக்கு ரூ.4.94 கோடியும், சிக்கிம் முதலமைச்சர் பாவன் சாம்லிங்கிற்கு ரூ.3.82 கோடியும், ஹரியானா முதலமைச்சர் பி.எஸ். ஹமூடாவிற்கு ரூ.3.74 கோடியும், ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு ரூ.3.49 கோடியும், மேகாலயா முதல்வர் முகுல் சங்மாவிற்கு ரூ.3.42 கோடியும், கோவா முதலமைச்சர் திகம்பர் காமத் திற்கு ரூ.3.23 கோடியும், மிசோராம் முதல் வர் பு லல்தன் வாலாவிற்கு ரூ.2.29 கோடியும்,

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ரூ.1.5 கோடியும், ஜார்கண்ட் முதல்வர் அர்ஜூன் முன்டாவிற்கு ரூ.1.33 கோடியும், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகானுக்கு ரூ.1.23 கோடியும், தில்லி முதலமைச்சர் ஷீலாதீட்ஷித்திற்கு ரூ.1.18 கோடியும், இமாச்சலப் பிரதேச முதல்வர் பி.கே.துமாலுக்கு ரூ.1.18 கோடியும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் டிற்கு ரூ.1.04 கோடியும், சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங்கிற்கு ரூ.1 கோடியும் சொத்துக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. 
மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் புத்ததேவின் சொத்து மதிப்பு ரூ.46.20 இலட்சம், கேரள முதல்வர், அச்சுதானந்தன் சொத்து மதிப்பு ரூ.16.09 லட்சம், திரிபுரா முதல மைச்சர் மாணிக் சர்க்கார் சொத்து மதிப்பு ரூ.8.11 லட்சம் எனவும் தகவல்கள் வெளி யிடப்பட்டுள்ளன. பட்டியலில் கடைசி மூன்று இடத்தில் இரண்டு இடம் கம்யூ னிஸ்டு முதலமைச்சர்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது. 35 ஆண்டுகாலம் மேற்குவங்கத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் வர் கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெறவில்லை.
==========================================================================
============================================================================= 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?