கைதான [கனி] மொழி



ஸ்பெக்ட்ரம்: கனிமொழி திகார் சிறை செல்லும் வரை
-----------------------------------------------
2011 பிப்ரவரி- "2ஜி' வழக்கு தொடர்பாக ராஜா, அவரது முன்னாள் தனி செயலாளர் சந்தோலியா மற்றும் முன்னாள் தகவல் தொடர்பு துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோர் சி.பி.ஐ.,யால் கைது. அனைவரும் சி.பி.ஐ., காவலில் அடைப்பு.
2011 பிப். 8: ராஜாவுக்கு மேலும் 2 நாள் சி.பி.ஐ., காவல் நீட்டிப்பு. பெகுரா, சந்தோலியா கோர்ட் காவலில் சிறையில் அடைப்பு.
பிப். 8: ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர், சாகித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ.,யால் கைது.
பிப். 10: ராஜாவின் சி.பி.ஐ., காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு.
பிப். 14: ராஜா சி.பி.ஐ., காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு, உஸ்மான் பல்வாவுக்கு சி.பி.ஐ., காவல் 4 நாட்கள் நீட்டிப்பு.
பிப். 17: ராஜா, திகார் சிறையில் அடைப்பு.
பிப். 18: பல்வா, சிறையில் அடைப்பு.
பிப். 24: பல்வா, "கலைஞர் டிவி' க்கு சலுகைகாட்டினார் என டில்லி கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்.
பிப். 28: வீடியோ கான்பரன்சிங் விசாரணைக்கு அனுமதிக்குமாறு ராஜா கோரிக்கை.
மார்ச் 1: 63 பேர் விசாரணை வளையத்தில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல். ராஜா வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராவதற்கு சி.பி.ஐ., கோர்ட் அனுமதி.
மார்ச் 14: டில்லி ஐகோர்ட், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிப்பதற்கு ஸ்பெஷல் கோர்ட் ஒன்றை அமைத்தது. பல்வாவும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராவதற்கு டில்லி கோர்ட் அனுமதி.
மார்ச் 29: முதல் குற்றப்பத்திரிக்கையை மார்ச் 31க்கு பதிலாக, ஏப்., 2ல் தாக்கல் செய்கிறோம் என்ற சி.பி.ஐ., யின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்றது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகிய மேலும் இருவர் கைது.
ஏப். 2: சி.பி.ஐ., சார்பில் ஸ்பெக்ட்ரம் வழக்கு சம்பந்தமாக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்.
ஏப். 25: இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது. தி.மு.க., வைச் சேர்ந்த கனிமொழி "கூட்டுச்சதியாளர்' என சேர்ப்பு.
மே 6: கனிமொழி கோர்ட்டில் ஆஜர்.
மே 20: கனிமொழி ஜாமீன் மனுவை கோர்ட் நிராகரித்தது. அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
----------------------------------------------------------------------------------------------------
’ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது’ என்ற நீதிபதியின் முடிவை அடுத்து தி.மு.க., தலைவரும். தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று கைது செய்யப்பட்டார். இவருக்கு ஜாமின் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு பாட்டியாலா கோர்ட்டில் முன்னதாக வைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் பலத்த போலீஸ பாதுகாப்புடன் திகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஜெயில் எண் 6 ல் அடைக்கப்பட்டார். இவரை மீண்டு் நாளை காலை 10 மணிக்கு வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஓ.பி.,சைனி கூறியுள்ளார். தமிழக ஆட்சி மாற்றம் காரணமாக கோட்டையை இழந்த தி.மு.க.,வுக்கு கனிமொழி ரிமாண்ட் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் தந்திருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் சிக்கிய மாஜி அமைச்சர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் ஆதாயம் அடைந்த டி.பி., ரியாலிட்டி குழுமத்தின் சினியுக் என்ற நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறியது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, டி.வி.,யின் இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். கனிமொழி கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக கடந்த 6 ம் தேதி சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் படி ஆஜராகி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி மூலம் வாதாடினார். இந்த மனு மீதான உத்தரவை வரும் 14 ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார் ஆனால் அன்று உத்தரவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து 20 ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இருப்பினும் கோர்ட்டில் தினமும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கனிமொழியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
கனிமொழியின் தாயார் ராஜாத்தி 

  நீதிபதி ஓ.பி.,சைனி ஜாமின் மனு மீதான தீர்ப்பை அறிவித்தார். கூட்டுச்சதியாளராக கருதப்படும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என கைவிரித்து விட்டார். இதனையடுத்து கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
தை இத்துடன் முடியுமா?தயாளு ,தயாநிதி எனத்தொடருமா?
ஆமாம்.அலைக்கற்றையில் எல்லாமே தி.மு.க.வினர் மட்டுமே நடவடிக்கையில் உள்ளார்களே அதற்கும் மேலே அதிகாரத்தில் உள்ள காங்கிரசுக்காரர்கள்குறிப்பாக சோனியா ,ராகுல்,மன்மோகன்சிங் இவர்களுக்கு ஒரு பங்குமே கிடையாதா?
முதலில் எதிர்த்த மன்மோகன் பிறகு யாரிடமோ பேசிய பின் அடங்கிப்போனதாக செய்திகள் முன்பு கசிந்ததே அந்தப் பெரிய இடம் ஆதாயம் இல்லாமலா அடங்கிப் போகக் கூறியது?
அந்தப் பெரிய இடம் யார்?அவர்கள் இதில் ஆதாயம் அடைந்தார்களா? இப்படி பல கேள்விகள் எழுகிறது.இவைகளையும் சி.பி.ஐ, கண்டுபிடிக்குமா?
கண்டு பிடிக்க நீதிமன்றம் ஆணையிட வேண்டும்.
கருணாநிதி உங்கள் மகளை சிறையில் அடைத்தால் எப்படியிருக்கும் என புலம்புவது சரியல்ல.யார் மகளாக இருந்தாலும் ,தலித்தாக இருந்தாலும் லஞ்ச-ஊழலில் கை வைக்காமல் இருக்க வேண்டும்.அது ஆணாகவோ ,பெண்ணாகவோ,அல்லது ராஜாபோல் தலித்தாகக்கூட இருக்கலாம்.ஆனால் யோக்கியமாக இருப்பது தான் முக்கியம்.
இனி கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வந்த கதையைப்பார்ப்போம்.
2008ல் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சராக ராஜா இருந்தபோது, ஷாகித் உஸ்மான் பல்வா பங்குதாரராக இருக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு 1,537 கோடி ரூபாய்க்கு "2ஜி' லைசென்ஸ் வழங்கினார். ஒரு மாதத்துக்குள் 40 சதவீத பங்கை பல்வா, 4,500 கோடி ரூபாய்க்கு துபாய் நிறுவனத்துக்கு விற்று லாபம் அடைந்துள்ளார். "டிபி ரியாலிட்டி' என்ற நிறுவனத்தின் நிர்வாக மேலாளராகவும் பல்வா இருக்கிறார். இந்நிறுவனத்திலிருந்து கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ளது என சி.பி.ஐ., தெரிவித்தது. லைசென்ஸ் வழங்குவதில் ராஜா சலுகை காட்டியதற்காக பல்வா, இந்த தொகையை கலைஞர் "டிவி'க்கு அளித்தாக கூறப்படுகிறது. 214 கோடி ரூபாய் கடனாக தான் பெறப்பட்டது. அதையும் வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டோம் என்று கலைஞர் "டிவி' தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
---------------------------------------------------------------------------------------------------------------

கின்னஸ் உலகின் மிகப்பெரிய மோதிரம்!

துபாயில் உள்ள டெய்ரா தங்க வணிக நிறுவனத்தில் வாடிக்கையார்களின் பார்வைக்காக இவை வைக்கப்பட்டுள்ளது.



இதுவரை உலக தங்க கவுன்சில் 5.1 கிலோ எடையில் தயாரித்த கம்மல் தான் உலக சாதனையாக கருதப்பட்டு வந்தது. இந்த மிகப்பெரிய மோதிரத்தின் மதிப்பு குறித்து சவுதி அரேபியாவை சேர்ந்த கான்ஸ் நகைகடையின் இயக்குனர் அனில் தனக் கூறுகையில்,"கடந்த 2000 ஆண்டில் ஒரு அவுன்சின் தங்கம் விலை 250 டாலராக இருந்தது.



அதே அளவு  தங்கத்தின்  விலை இப்போது ஆயிரத்து ஐநூறுடாலராக உள்ளது. மோதிரத்தின் மதிப்பை கணக்கிட்டு கொள்ளவும் என்று" தெரிவித்தார்.


45 நாட்கள் தொடர்ச்சியாக 55 தொழிலாளர்கள் தினமும் 10 நேரம் இதற்கென உழைத்துள்ளனர் என்று மோதிரம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த மோதிரத்தின் சர்வதேச மதிப்பு சுமார் 3 மில்லியன்டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
============================================================================


 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?