இடுகைகள்

ஜூன், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செயல்படாத பிரதமரா,,,?

படம்
  பிரதமர் அறியாத பெரிய ஊழல்கள்!   “நாங்கள் ஊழலுக்கு எதிரிகள்; லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க அவ தாரமெடுத்திருப்பவர்கள்” என்று அடிக் கடி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா பேசுகிறார். ஏற்கெனவே போபர்ஸ் ஊழ லைப் பந்தாடியவர். தனது உறவினரான குவாத்ரோச்சியை ஊழல் வழக்கிலிருந்து ஓட ஓட விரட்டியடித்தவர். பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அதிச யப்பிறவி. எத்தனை பெரிய ஊழலானா லும் ‘எனக்குத் தெரியாது’ என்று ஒரே போடாய் போடுவார். 1.76 லட்சம் கோடி ரூபாய் அலைக்கற்றை ஊழல் பற்றி அது நடந்த போதே, பிரதமருக்குத் தெரிந்தே நடந்தது என்ற உண்மை வெளிவந்து விட்டது. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா வுக்கும் பிரதமருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட் டிக்கு அநியாயமாக ரூ.76 ஆயிரம் கோடி செலவுக்கணக்கு எழுதப்பட்டது. இதில் நேரடியாய் ஈடுபட்ட காங்கிரஸ் நாடா ளுமன்ற உறுப்பினர் சுரேஷ் கல்மாடி தற்போது திகார் சிறையில் உள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஊழல் பற்றியும் முதலிலேயே பிரதமர் எச் சரிக்கப்பட்டார் என்ற செய்தியும் தற் போது வெளியாகி

நடிகர்கள்,,,,,

படம்
கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற சட்டப் பேரவை தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடிகர், நடிகையர் சார்பில் விரைவில் பேரணி நடைபெறும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். சரத்குமார் தலைமையில் நடிகர் சங்க நிர்வாகிகள் ராதாரவி, மனோரமா,சத்யராஜ், மயில்சாமி, குயிலி, கே.ஆர். செல்வராஜ் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியது: மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம். இலங்கை மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், கச்சத் தீவை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்காக முதல்வருக்கு நடிகர் சங்கம் சார்பில் நன்றியைத் தெரிவித்தோம். இந்தத் தீர்மானங்களை நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்ற வலியுறுத்தி நடிகர், நடிகையர் பேரணியாக சென்று தமிழக ஆளுநரிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம். நடிகர், நடிகைகளிடம் கலந்து ஆலோசித்த பிறகு இதற்கான தேதி அறிவி

விடுவிப்புகள் ,,,,,,,,

படம்
   $    1993-94-ம் ஆண்டுக்கான செல்வ வரிக் கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித் துறை சார்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, பொருளாதார குற்றங்களுக்கான எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில், வருமான வரித் துறை சார்பில் 1997-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, 8.7.2010-ல் முதன்மைப் பெருநகர நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று நான் வேண்டுமென்றே எந்தத் தவறும் செய்யவில்லை. குறிப்பிட்ட தேதிக்குள் நான் செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், எனக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பி, என் தரப்பு கருத்தை தெரிவிக்க உரிய வாய்ப்பு தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வருமான வரித் துறை சார்பில் அத்தகைய விளக்க நோட்டீஸ் எதுவும் எனக்கு அனுப்பப்படவில்லை. எனவே, வேண்டுமென்றே நான் எந்தத் தவறும் செய்யாததால், இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிக்க

நீதிபதிகள்+பிரதமர்கள்=புனிதர்கள்?

படம்
Read more about என்ற by Administrat uthors: Administrator Read more about என்ற by Administrato   # தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா பேசியது: லோக்பால் சட்டத்தின் கீழ் பிரதமர் மற்றும் நீதிபதிகளை கொண்டுவர வேண்டும் என்ற ஹசாரேயின் கோரிக்கையை ஏற்கமுடியாது. அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நீதிபதிகளை லோக்பால் அமைப்புக்குள் கொண்டு வந்தால், அது நாட்டின் ஜனநாயக முறையில் பாதிப்பை ஏற்படுத்தும். தன்னாட்சி உள்ள நீதித்துறை தேவை. அதை லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர விரும்புவது தவறானது. நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து லோக்பால் உறுப்பினர்களால் கேள்வி கேட்க முடியும். இந்நிலை ஏற்படாமல் தவிர்க்கப்படவேண்டும். தவறிழைக்கும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடவடிக்கை தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரத்தை அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ளது. ஹசாரே உத்தேசித்துள்ள உண்ணாவிரதம் ஜனநாயகத்துக்கு எதிரானது. இவ்வாறு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா கூறினார்.  சரிதான்  வர்மா ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறார்.

போர் விசாரணை ஆணையம்

படம்
இ லங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது அரச படையினர் போர் குற்றங்களை புரிந்ததாக சானல் 4 தொலைக்காட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.   பிரிட்டனிலிருந்து ஒளிபரப்பாகும் சானல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம்,இலங்கையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த போரின் இறுதி மாதங்களில், ராணுவத்தினர், சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களையும் சுட்டுக்கொல்லுமாறு மூத்த அதிகாரிகளிடமிருந்து தங்களுக்கு உத்தரவு வந்தது என்று பெயர் குறிப்பிடப்படாத ராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பி, பரபரப்பை ஏற்படுத்தியது. சானல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், மேற்கோள் காட்டப்பட்ட இந்த ராணுவ அதிகாரியின் உண்மையான குரல் ஒலிபரப்பப்பபடவில்லை, அவரது உருவமும் தெளிவாகக் காட்டப்படவில்லை. இந்த நிகழ்ச்சியில் அவரது குரலுக்கு பதிலாக வேறு ஒரு குரல் ஒலிக்கவைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறும் இந்த

மாதம் மும்மாரி,,,,,

படம்
பெட்ரோல் விலை உயர்வு: மோசடி ,     இன்றைய பொழுதும் பெட்ரொலியப் பொருள் விலை ஏற்றத்துடந்தான் புலர்ந்துள்ளது, மாதம் மும்மாரி பொழிந்ததா எல்லாம் இப்போது கிடையாது. மாதம் மும்முறை உயர்ந்ததா? என்றாகிப்போச்சு.    ஆனால் இவ்விலைஉயர்வு தேவையின்றி நம் மேல் ஏற்றப்படுகிறது. மக்கள் சேவைக்குதான் அமைச்சு. ஆனால் இன்றோ  சேவைக்கும் சேவை வரி விதிக்கும் பொருளாதாரப் புலிகள் ஆட்சி நடத்துகிறார்கள். பெட்ரோலியநிறுவனங்கள் அரசு கூறுவது போல் நெருக்கடியில் உள்ளதா? இதோ சி விபரங்கள்; நீங்களே கூட்டிக் கழித்துப்பாருங்கள் .  # 1980இல் பெட்ரோலியக் கூழின் (கச்சா எண்ணெய்) விலை பேரலுக்கு 25 டாலரில் இருந்தது. 2003வரை இது தான் விலையாக இருந்தது. 2003லிருந்து 2005இல் 60 டாலரை தொட்டது, 2008இல் 147 டாலரை தொட் டது 2010க்குள் அது கீழே விழுந்து 60 டாலரை தொட்டு மீண்டும் 90 டாலரில் ஊசலாடுகிறது. ஆனால் இந்திய அரசு மானியத்தை நிறுத்தி பெட் ரோலியப் பொருட்களின் விலையை ஊசலாடா மல் ஏறுமுகமாகவே வைத்து வருகிறது. சர்வதேச விலை உயர்விற்கு காரணம் ஏகாதிபத்திய நாடு களில், டாலர் வடிவில் நிதி மூலதனம் உருவாக்கிய நெருக்கடியிலிருந்து மீள கையாண்ட
படம்
  திருடன் -போலீஸ் விளையாட்டு,,,,,, தமிழகம் முழுவதும் 2-வது நாளாக நேற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஆபரேஷன் ஹம்லா என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 22 பேர் சிக்கினர். சர்வதேச தீவிரவாதி பின்லேடன் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பல நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டன. இந்நிலையில், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆபரேஷன் ஹம்லா என்ற பெயரில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு அதிரடி சோதனையை தொடங்கினர். மும்பையைப் போன்று தமிழகத்திலும் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 கடலோர மாவட்ட பாதுகா