ஆண்டவன் காப்பாற்றிவிட்டான்,,,

               # தமிழக  அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:” சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கிருந்து நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார். தற்போதுதான், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என, முடிவு செய்து, தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "உங்களின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்' என்றார். அத்துடன் ரஜினி குணமடைந்து, விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார். அதற்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், "நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, ஜெயலலிதாவிடம் கூறினார். வெற்றி பெற்றதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, இன்னும் ஒன்றரை மாதங்களில் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறினார்.”
     -இது தமிழக அரசின் அறிக்கை.
                                                            
 நடிகர் ரஜினிகாந்த் நடிப்புத்திறமை இந்த அளவு சுடர்விடும் என தெரியாமல்
 போய்விட்டதே.
     இதுவரை கருணாநிதி ரஜினி,ரஜினி என்று அலைந்தது../? பாவம் கருணாநிதி.ரஜினியின் மூன்றுமுகம் பற்றி அறியாமல் இருந்துள்ளார்.[பிறர் அவர் சக்கர நாற்காலியை] தள்ளுகிற வயதிலும் மருத்துவமனைக்கு முதல் ஆளாக போய் நலன் விசாரிக்கப்போய் வாசலுடன் திருப்பியனுப்பப்பட்டபோதே தனது நிலையை புரிந்திருக்க வேண்டும்.அவர் ரஜினிக்கு கொடுத்த அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் தவறு என இப்போது உணர்ந்திருப்பார்.
     முதன் ,முதலில் தனக்காக கிறுக்குப்ப்டித்தாற்போல் சமய சடங்குகளை செய்துவரும் ரசிகனுக்கு அலலவா அறிக்கை -நன்றி கூற வேண்டும்.எப்போதுமே பலந்தரும் மரம் பக்கமே ரஜினி கல் எறிவார்.
     ஆனால் இந்த வாய்ஸ்”ஆண்டவன் வந்தால்கூட காப்பாற்ற முடியாது”உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அதைக்கூறிய  வாயாலேயே” இப்போது உங்களால் தமிழகம் காப்பாற்றப்பட்டுவிட்டது.”
என்று கூற வைத்து விட்டது ஜெயலலிதாவின் வெற்றியா? கருணாநிதி உங்களை தூக்கிவைத்துக்கொண்டாடிய முட்டாள்தனதுக்கு தரும் பரிசா?
 அல்லது உங்களின் நடிப்புத்திறமைக்கான வெளிப்பாடா?
        எப்படியோ நீங்கள் நல்ல குணமாகிவிட்டீர்கள் என்பது உங்களின் இப்போதைய “வாய்ஸ்’ மூலம் தெரிகிறது.
 வாழ்த்துகள்,,,,
                                                                                                                                                                        “ஆண்டவன் காப்பாற்றி விட்டான்,,,,,உங்களைமட்டும்தான்,,”

==========================================================================
போர்க்குற்றங்கள் அழிக்கப்படுகிறது.

போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை அழிப்பது அல்லது அதனை வலுவிழக்கச்செய்வதற்கு தேவையான பணிகளை முன்னெடுப்பதற்காக அரசு சிறப்பு இராணுவப் பிரிவு ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவே இதனை உருவாக்கியுள்ளார். இந்த சிறப்பு இராணுவப் பிரிவு பனாங்கொட இராணுவ முகாமில் தளம் அமைத்துள்ளது.

புலம்பெயர் தமிழர்கள், மனித உரிமை அமைப்புக்களிடமுள்ள போர்க்குற்ற ஆதாரங்களை வலுவிழக்கச் செய்யும் முகமாகவே போலியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தயாரிப்பதற்கு இராணுவத்தினரின் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்த இந்த படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள், மலேசியா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு உதவும் முகமாக தனியார் நிறுவன நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கணணிகளின் உதவியுடன் புதிதாக உருவாக்கப்படும் புகைப்படங்களையும் காணொளிகளையும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் விநியோகம் செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் உளவாளிகளை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால் உண்மையான ஆதாரங்களையும் அதிகாரிகள் புறக்கணிக்கும் நிலை ஏற்படலாம் என அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அரசின் உளவாளிகள் இந்த போலியான ஆவணங்களை கனடா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு யு.எஸ்.பி சேமிப்பு கருவிகள், செல்லிடத் தொலைபேசிகளின் மூலம் எடுத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையில் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பெல் பொற்றிஞ்சர் நிறுவனமும் இயங்கி வருகின்றது. அதன் அதிகாரிகள் அண்மையில் பல தடவைகள் இலங்கைக்கு இரகசியப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

அரசின் மனித உரிமை மீறல்களை மறைத்து அதற்கு நற்பெயரை ஏற்படுத்த முனைந்துவரும் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பெல் பொற்றிஞ்சர் நிறுவனம் விடுதலைப்புலிகளுடன் இணைந்து முன்னர் பணியாற்றிய நிறுவனம் என மத்திய வங்கி வட்டாரங்கள் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?