மேல் முறையீடு,,,,,,


 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியே தொடரும் என்று சமச்சீர் கல்வி பாடத்திட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அனைத்து வகுப்புகளிலும் நடப்பாண்டில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த வேண்டும். வரும் 22ந் தேதிக்கு சமச்சீர் கல்வி பாடநூல்களை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 3 மாதங்களில் புதிய குழுவை அமைத்து குறைகளை களைய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சமச்சீர் கல்விக்கான தமிழக அரசின் சட்டத்திருத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பழைய பாடத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எப்படியோ ஒருவழியாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவார்கள் என எதிர்பார்த்தால் ஜெயலலிதா மேல்முறையீடு செய்ய முயற்சிக்கிறாராம்.
 கருணாநிதி கொண்டுவந்தது சமச்சீர் கல்வி என்பதைவிட அவருக்கு வேறு உள்நோக்கம் அதைதடுக்க இருக்கிறதோ எனத் தெரிகிறது.
   காரணம் இப்போதைய அரசின் ராஜகுரு துக்ளக் சோ எழுதிய  சமச்சீர் கல்வி தொடர்பான கட்டுரைகள்தான்.
ஒரு இனத்தின் மேம்பாட்டை அழிக்கவே கருணாநிதி சமச்சீர் கல்வியைக் கொண்டுவருவதாக சோ  கருதுகிறார்.
 இதை ஒரு உயர் சாதி என கருதும் இனத்துக்கு எதிரான கல்வித்திட்டமாகவே அவர்கள் கருதுகிறார்கள்.
 எனவே சமச்சீர்கல்வியை எல்லோரும் கல்வி கற்க அவர்கள் விடுவதாக இல்லை.
‘குல கல்வி’யை கற்கக் கூறியவர்களின் வாரிசுகளிடம் சமச்சீர் கல்வியை எதிர்பார்ப்பது தவறு.
இன்னும் எத்தனை நீதிமன்றம் ஏறினாலும் அவர்கள் சமச்சீரை ஒத்திப்போட்டு மூடிவைக்கவே செய்வார்கள்.
=============================================================================================================
இது ஏன் -தேவையா?
ஈழமக்கள் கொன்றுகுவித்த பக்‌ஷேக்கு ஆதரவாக  சானல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள் எனும் தலைப்பிலான ஆவணப்படத்திற்கு எதிராக நேற்று லண்டன் நகரில் இலங்கையை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு மணிநேரம் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3 ஆயிரம் இலங்கையர்கள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இவர்கள் அந்த படுகொலை காணொளியைப் பார்த்தார்களா? பார்த்திருந்தால் இவர்களின் போராட்டம் ராஜபக்‌ஷேக்கு எதிராகவே இருந்திருக்கும்.
பார்த்தும் அதை புறக்கணித்து பக்‌ஷேக்கு ஆதரவாகவும்-சானல் -4க்கு எதிராகவும் இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் என்றால்  இவர்கள் மனிதைனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்க மாட்டார்கள்.ஈழப்புலிகளும்-ஈழத்தமிழர்களும் வேண்டப்படாதவர்களாக இருந்தாலும்.சானல்-4 காட்டிய காட்சிகள் மனித இதயத்தை கசக்கி சோகத்தில் ஆழ்த்திவிடும் நிகழ்வுகளாகவே இருந்தது.அதைப் பார்த்துவிட்டு சும்மாவாவது இருக்கலாம்.
 இப்படி போராடுவது சிங்களன் மனிதத்தன்மையற்றவன்.அனைவருமே பக்‌ஷே இயல்பினர்தான் என காட்டிக்கொடுக்கிறதே.
இவர்கள் புத்தனை வணங்குவதுதான் கொடுமையிலும் மிகக் கொடுமை.
இந்தப் போராட்டத்தில் சுமார் 3000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ள போதும் சில நூறு பேர் வரையே கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போராட்டத்தில் இலங்கை முஸ்லீகள் [தமிழர்கள்?] சிலர் இலங்கைத் தமிழர்கள் என்ற பெயரில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் மதம் முஸ்லீமாக இருக்கலாம் .ஆனால் தானும் ஒரு தமிழன் என்ற உணர்வு இல்லாமல் இலங்கை அரசு கூறியதற்காக போராட்டத்தில் தலையைக்காட்டியது வேதனையானது.
இந்தப் போராட்டத்தை லண்டனில் உள்ள சிறிலங்காவின் பதில் தூதுவர் அம்சாவே ஒழுங்கு செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?