சி.பி.ஐ.யா? தமிழகக் காவல்துறையா?


எது விசுவாசமானது?


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்படுள்ளது. ராசா உள்பட மூவரும் அரசு பதவியில் இருந்து கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாக சிபிஐ புதிய வழக்கு தொடர்ந்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வரும் டெல்லி பாட்டியாலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவை சிபிஐ இன்று தாக்கல் செய்தது. சிபிஐ வழக்கறிஞர் லலித் அந்த மனுவை, நீதிபதி ஓ.பி.சைனி முன்பு தாக்கல் செய்தார்.

                                 

பிரிவு 409-ன் கீழ் அரசு பதவியில் இருந்து கொண்டு நம்பிக்கை மோசடி செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஆ.ராசாவிடம் உதவியாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் மீது அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

அத்துடன், இந்த வழக்கு முடியும் வரை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிபிஐ இந்த புதிய வழக்கை தாக்கல் செய்திருப்பதால், ஆ.ராசா உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கான உத்தரவு தாமதப்படும் என்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி உள்பட ஏனைய 14 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 409 உடன் குற்றச் சதி புரிந்ததற்கான 120பி-யும் சேர்க்கப்பட வேண்டும் என சிபிஐ தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு குறைந்தபட்சம் 7 வருட சிறையும், அதிகபட்சமாக ஆயுள் சிறையும் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
யாரௌக்குநம்பிக்கை மோசடி ராசா செய்தார்.?பிரதமருக்கா? சிதம்பரத்துக்கா/அல்லது சொனியா-ராகுலுக்கா?
சி.பி.ஐ ,ரொம்ப குழப்பத்திலும்-ராசா ,கனிமொழியை வெளியவே விடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருப்பதாகத்தெரிகிறது.
அதிலும் யாரையோ காப்பாற்றவே இவை எல்லாம் செய்வதாகவும் தெரிகிறது.
அதற்கு நீதி மன்றங்களும் துணை போவதுதான் வேதனையானது.
இதுவரை வழக்கின் போக்கை கண்டுவரும் உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ ,நீதிமன்றத்தின் போக்கைக் கண்டிக்க வேண்டும் வழக்கு என்று வரும் போது சந்தேகத்திற்கு இடமானவர்களை எல்லாம் விசாரிக்க வேண்டும்.
சிதம்பரத்தை விசாரிக்க மாட்டேன்.அம்பான்யை விசாரிக்க மாட்டென்.
மாட்டிக்கொண்ட ஆ.ராசா,கனிமொழி யை வெளியே விடாமல் மாற்றி ,மாற்றி வழக்குகளைப்போட்டு உள்ளேயே [ஜெயலலிதா தி.மு.க,முன்னாள்களை செய்வதுபோல்]வைத்டிருப்பேன் என சி.பி.ஐ.பிடிவாதமாக இருப்பதுடன் பகிரங்கமாகவும் தெரிவிப்பது இந்த விசாரனை-வழக்கை சிறுபிள்ளைத்தனமாக சட்டங்களுக்கு அப்பால் கொண்டு போய் விட்டதாகத் தெரிகிறது.
தி.மு.க.வினரை மட்டுமே விசாரிப்பதும்,காங்கிரசினரை விசாரிக்க மறுப்பதும் எந்தவிதத்திலும் நியாயமாகாது.சி.பி.ஐ,தன் மேல் ஏற்படஉள்ள கரும் புள்ளியை அழிப்பதற்குப் பதில் மேலும் அதிகமாக்கிக் கொள்வதாகவேப் படுகிறது.
சிதம்பரம் ,பிரதமர் மன்மோகன்சிங் போன்றோரையும் விசாரணை வட்டத்தில் கொண்டுவர வேண்டும்.
தனக்கு ஒன்றுமே தெரியாது என பொய் கூறியவருக்கு கடிதங்கள் மூலம் எல்லாமே தெரிந்திருக்கிறது.ஏலம் விடாததினால்தான் இழப்பு என்றால் அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஏதோ பலன் கிடைக்கப் போய்தானே சும்மாவும் -ஒத்துழைப்புடனும் இருந்துள்ளனர்?
________________________________________________________________________________

ஆஸ்கார் தேர்வாகாதது ஏன்?
                          
2011-ம் ஆண்டிற்கான மாநிலமொழி படங்களுக்குரிய ஆஸ்கார் விருது தேர்வுக்கு, 16 இந்‌திய மொழிபடங்களைத் தேர்வு செய்து, திரையிட்டு பார்த்தது ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா. அதில் ஆறு இந்தி படங்களும், ஐந்து தமிழ் படங்களும், இரண்டு மலையாள படங்களும், ஒரு தெலுங்கு, ஒரு மராத்தி, ஒரு பெங்காலி படமும் அடக்கம்.
இதில் முதல் இரண்டு இடங்களையும் மலையாள படங்கள் இரண்டும் பிடித்தன. ”அ‌தாமின்டே மகன் அபு”,” உருமி ”இந்த இரண்டு படங்களில் ஆதாமின்டே மகன் அபு படம்தான் இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. எந்திரன், தெய்வத்திருமகள், முரண், ஆடுகளம் உள்ளிட்ட ஐந்து தமிழ் படங்களிலும், ஹாலிவுட் படங்களில் இருந்து நிறைய சீன்களும், அதில் சில படங்களின் கதைகளமும் உருவப்பட்டிருந்தது அப்பட்டமாக தெரிந்ததால், அந்த 5 படங்களும்  தள்ளுபடி ஆகிவிட்டதாம்.
                                 
 இது போன்ற நகல் படங்களுக்கு என்று ஆஸ்கர் போல் நகல் போஸ்கர் என்று விருது ஒன்றை ஏற்படுத்தக்கூடாதா?
________________________________________________________
     @இனி ஆட்டையை போட்டு படம் எடுப்பவர்கள் எச்சரிக்கையாக இருங்க,,,,,, @               

 =================================================
                    

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?