சிதம்பர ரகசியம்


   
                     
 2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சைனி முன் நடந்து வந்தாலும்... அந்த வழக்கின் வெளி விவகாரங்கள் அதிகமாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்தான் இந்த வழக்கின் தட்ப வெப்ப நிலையைத் தீர்மானித்து வருகிறது. வழக்கின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். 'ஏலம் எடுக்கும் முறை வேண்டாம், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற விதிமுறையைத் தொலைத் தொடர்புத் துறை பின்பற்றியபோது, நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் நினைத்து இருந்தால் அதனைத் தடுத்திருக்க முடியும்!’ என்று நிதி அமைச்சகத்தின் ரகசியக் கடிதம் ஒன்றைத் தனது மனுவுக்கான ஆதாரமாக சுவாமி கொண்டுவந்தார். ''மத்திய நிதி அமைச்சக அதிகாரியே ஒப்புக்கொண்டதைவைத்துப் பார்த்தால்... சிதம்பரத்துக்குத் தெரியாமல் எதுவும் நடந்து இருக்க வாய்ப்பு இல்லை. எனவே, இந்த வழக்கில் சிதம்பரத்தையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்!'' என்று சுவாமி சொன்னார். இதை மத்திய அரசு வழக்கறிஞர் பி.பி.ராவ் கடுமையாக எதிர்த்தார். ''எப்போது பாட்டியாலா கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கிவிட்டதோ... அப்போதே சுப்ரீம் கோர்ட்டுக்கு இது தொடர்பாக மேற்கொண்டு விசாரிக்க உரிமை இல்லை!'' என்று அவர் வாதிட்டார். ஆனால், இதை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை. எனவே, மேற்கொண்டு அனல்பறக்கும் விவாதங்கள் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடந்தன.
இதில் சிதம்பரம், தயாநிதி மாறன் ஆகிய இருவரது தலைகளும் அதிகமாக உருட்டப்பட்டன. சுவாமியின் மனுவுடன் தனது மனுவையும் இணைத்துக் கொண்டார் பிரசாந்த் பூஷண். ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான வழக்குகளைத் தொடர்ந்து போட்டு வருபவர் இவர்தான். ''முறையான பாதையில் சி.பி.ஐ. விசாரணை செல்லவில்லை. குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டிய பலரிடம் இன்னமும் விசாரணையே செய்யப்படவில்லை. இதில் இருந்து சி.பி.ஐ. விசாரணையில் நேர்மை இல்லை என்று தெரிகிறது. இந்த ஊழல் நடந்த காலகட்டத்தில் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறையை கவனித்து வந்தார். அவர் தனக்கு வசதியாக எந்தெந்த விதிமுறைகளை மாற்றினாரோ, அதை நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஏற்றுக்கொண்டுள்ளார். இது உண்மைதான் என்பது நிதி அமைச்சகத்தின் குறிப்பில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. இன்னொரு முக்கியமான தவறையும் சிதம்பரம் செய்துள்ளார்.
உரிமம் பெற்ற நிறுவனங்கள் தங்களது சேவையைத் தொடங்குவதற்கு முன்பே, தங்களது பங்குகளை விற்பனை செய்வதற்கு சிதம்பரம் அனுமதி வழங்கி உள்ளார். ஆனாலும் அவர் மீது சி.பி.ஐ. இன்னமும் விசாரணையைத் தொடங்கவில்லை. அவரது சாட்சியம்கூடப் பதிவு செய்யப்படவில்லை. சி.பி.ஐ. அமைப்பின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் இதற்குக் காரணம்!'' என்று பொரிந்து தள்ளினார் பிரசாந்த் பூஷண்.
இதை கவனமாகக் கேட்டுக்கொண்டு இருந்த சி.பி.ஐ. வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மெது வாக எழுந்து சீல் இட்ட ஒரு கவரை நீதிபதியிடம் கொடுத்தார். தயாநிதி மாறனின் தலைவிதி அதில் இருந்தது.
அதை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வீ, ஏ.கே. கங்குலி ஆகிய இருவரும் படித்துக் கொண்டு இருக்கும்போதே வக்கீல் வேணுகோபால் தனது வாதங்களை வைக்கத் தொடங்கினார்.
''இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு உள்ள தொடர்பு குறித்த முதல் நிலை விசாரணை முடிந்துவிட்டது. அடுத்த சில நாட்களில் வழக்கு பதிவு செய்யப்படும். இதே வழக்கில் எஸ்ஸார் நிறுவனத்தின் மீது விசாரணை நடந்து வருகிறது. இது முடிய இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும். வழக்கில் தொடர்புடைய ஒவ்வொருவர் மீதும் வரிசையாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வோம்...'' என்று சொன்னார். இது புதன்கிழமை நடந்த அதிரடித் திருப்பமாக ஆகிப் போனது.
சிதம்பரம் கதை என்ன ஆகும் என்று தீராத படபடப்பில் இருந்த மீடியாக்களுக்கு தயாநிதி மாறன் இரையை எடுத்துப் போட்டது சி.பி.ஐ...
''பிரசாந்த் பூஷண், சி.பி.ஐ-யின் நடவடிக்கைகள் தொடர்பாக பலத்த சந்தேகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்ததும், தங்களது நடவடிக்கையில் எந்த விதமான ஒளிவு மறைவும் இல்லை என்பதை விளக்கியாக வேண்டிய நெருக்கடி சி.பி.ஐ-க்கு வந்தது. தயாநிதி மாறன் மீது விரைவிலேயே எஃப்.ஐ.ஆர். போடப் போகிறோம் என்பதைச் சொல்வதன் மூலமாக, சுப்ரீம் கோர்ட் கோபத்தைக் கொஞ்சம் தணிக்கலாம் என்றும் சி.பி.ஐ. நினைத்து இருக்கலாம்...'' என்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் இன்னும் நான்கைந்து நாட்களுக்குள் தயாநிதி மாறன் மீது முழுமையான எஃப்.ஐ.ஆரை சி.பி.ஐ. பதிவு செய்துவிடும் என்றே டெல்லியில் பேசப்படுகிறது.
ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு கைமாற்றிவிடுவதில் தயாநிதி மாறனின் பங்கு என்ன என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சம். ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த சிவசங்கரன், மேக்ஸிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வாக்குமூலங்களை வாங்கிவிட்டது. தயாநிதி மாறனிடமும் முதல் கட்ட விசாரணை நடந்து முடிந்துவிட்டது. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த பிறகு அதிகாரப்பூர்வமாக தயாநிதி மாறனிடம் வாக்குமூலங்களை சி.பி.ஐ. வாங்கப்போகிறது. எனவே, அடுத்த பத்து நாட்களில் கிடுகிடு திருப்பங்கள் அரங்கேறலாம் என்பதே டெல்லி வட்டாரம் தரும் தகவல்!
இந்த விவாதங்கள் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கும் போது டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானத்தில் ஆறு பேரைக் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழு வந்தது. 'எப்போதும் தயார் நிலையில் இருங்கள்’ என்று அவர்களுக்கு சி.பி.ஐ. மேலிடம் உத்தரவு இட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தயாநிதி மாறன் விஷயத்தில் சி.பி.ஐ. இப்போது திடீர் வேகம் எடுத்திருப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ப.சிதம்பரத்தைக் குறிவைத்து எதிர்க் கட்சிகளும் மீடியாக்களும் தாக்குதலைத் தொடங்கி உள்ளன. இது சோனியா, பிரதமர் மற்றும் மத்திய ஆட்சிக்கே பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது. இதைத் திசை திருப்புவதற்கு தயாநிதி அஸ்திரத்தை சி.பி.ஐ. விட்டிருக்கலாம் என்கிறார்கள். தயாநிதி மீது எஃப்.ஐ.ஆர்., விசாரணை, கைது என்று காட்சிகள் மாறினால், பிரதமர், சிதம்பரம் ஆகியோரைப்பற்றிப் பேசுவது குறையும் என்று நினைக்கிறார்கள்.
 ஆனால் இவர்களின் அலைவரிசை ஒதுக்கீடு குழப்பத்தில் கனிமொழி போன்றோர் தேவையின்றிதான் சிறையில் இருக்கிறார்கள்.அவர்களுக்கு பிணை கொடுக்கக்கூட மறுப்பது நியாயம் இல்லை என்று இப்போது 2ஜி அலைவரிசை வழக்கினை நோக்குபவர்கள் கருர்ஹுகிறார்கள். சி.பி.ஐ.யும் நீதிபதி ஷைனியும் பிணை கொடுக்கமறுப்பதில் பெரிய இட வற்புறுத்த்லே காரணம் எனவும் பேச்சு எழுந்துள்ளது.குண்டு வைத்து பலரிக் கொன்ற்வர்கள்,போபால் குற்ற வாளிகள் எல்லாம் வெளியே சுதந்திரமாகத்திரியும் போது இவ்வளவு ஊழல் நடண்டிருக்கலாம்,இவ்வளவு இழப்பாகியிருக்கலாம் என்ற கணிப்பால் மட்டுமே நடக்கும் வழக்கில் ஒதுக்கீட்டில் சம்பந்தமே இல்லாம் இருக்கும் கனிமொழி சிறையில் இருப்பதும் ,வெளியில் விடக்கூட மறுப்பதும் எந்தவகையில் நியாய மாக இருக்கக்கூடும் என்பதே இன்றைய தில்லி வட்டார் பேச்சாக உள்ளது.
                    
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தன் மீது சிபிஐ தொடுத்துள்ள புதிய குற்றச்சாட்டுக்கு, திமுக எம்.பி. கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அரசு பதவியில் இருந்து கொண்டு நம்பிக்கை மோசடி செய்தார் என முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ புதிய குற்றச்சாட்டை முன்வைத்தது. 


2ஜி வழக்கு முடியும் வரை ஜாமீன் வழங்கப்படாது என்பதும், இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்கக் கூடும் என்பது கவனத்துக்குரியது.
 

இதன் தொடர்ச்சியாக, தன் மீதான புதிய குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்க ஆ.ராசா மறுத்தார். 


இந்த நிலையில், கனிமொழி மீதான குற்றச்சாட்டுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று எதிர்ப்பு தெரிவித்துள்ள அவரது வழக்கறிஞர் "சிபிஐ கூற்றுப்படியே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சதியில் கனிமொழி இல்லை," என்று குறிப்பிட்டார். 


மேலும், திமுக எம்.பி. கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிறுவன நிர்வாக அதிகாரி சரத்குமார் ஆகியோருக்கு எதிரான புதிய குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.

___________________________________________________________________________


               மேலே உள்ளது கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளையிட்ட மைக்கேல் ஜாக்சனின் இறுதி கட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். 
_____________________________________________________________________________



700 கோடி மக்கள்.
          
"இந்த மாதத்தில், உலகின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை, 700 கோடியாகி விடும். 2100ம் ஆண்டிற்குள், இத்தொகை, ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்' என, ஐ.நா.,வின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 1804ம் ஆண்டு வரை, உலகின் மொத்த மக்கள் தொகை 100 கோடியாக இருந்தது. 1960களில், 300 கோடியாக அதிகரித்தது.
இன்னும் ஒரு நூற்றாண்டில், ஆயிரம் கோடியாக உயர்ந்து விடும். மக்கள் தொகை அதிகரிப்பு, வளர்ந்து வரும் நாடுகளில் தான் காணப்படுகிறது. உலகில், மக்கள் தொகை அதிகரிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 நாடுகளில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய, மூன்று வளர்ந்த நாடுகள் மட்டும் தான் இடம் பெற்றுள்ளன.
இந்த அதிகரிப்புக்கு பொருளாதார வளர்ச்சி, பிறப்பு விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு ஆகிய காரணங்களை, நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதேநேரம், கருத்தடை வசதிகளை அதிகளவில் மக்கள் உபயோகப்படுத்தும் போது தான், பிறப்பு விகிதம் குறைய வாய்ப்பு என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
________________________________________________________________-
இன்று விழுந்த கலசம் !
அன்று இடிந்த கோபுரம்!!


* ஆந்திர மாநிலம் காள ஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலின் கோபுரம் மே மாதம் இடிந்து விழுந் தது - இப்பொழுது கல சமும் இடிந்து விழுந்தது - இதுதான் கடவுளின் சக்தி. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில், உள்ளது. இந்த கோவில் வாயு ஸ்தலமாகவும், ராகு-கேது சர்ப்பதோஷ நிவாரண பரிகார ஸ்தல மாகவும் விளங்கி வரு கிறது. சிறப்பு மிக்க இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வதுடன் ராகு-கேது பரிகார பூஜை செய்தும் வழிபட்டு வருகின்றனர்.
15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை யான சிறப்புபெற்ற இந்த கோவிலின் ராஜகோ புரம் கடந்த ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி இரவு திடீரென இடிந்து விழுந்து தரைமட்ட மானது.
இந்த நிலையில் காள ஹஸ்தி சிவன் கோவிலின் பிரதான நுழைவாயில் கோபுரத்தின் மேல் இருந்த 7 கலசங்களில் வலதுபுறத்தில் இருந்த முதல் கலசம் நேற்று காலை 8 மணி அளவில் திடீரென இடிந்து கீழே விழுந்தது.
இதை சற்றும் எதிர் பாராத அங்கிருந்த பக் தர்கள் அதிர்ச்சிய டைந்து அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இத னால் அங்கு பதற்றமும், பரபரப்பான சூழலும் நிலவியது. நல்ல வேளை யாக அந்த கலசம் அங்கு நின்றுகொண்டிருந்த பக்தர்கள் மீது விழ வில்லை. கோபுர கலசம் இடிந்து விழுந்த தகவல் அறிந்ததும் கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
அத்துடன் இடிந்து விழுந்த கோபுர கல சத்தை அகற்றிவிட்டு உடனடியாக புதிய கலசம் அமைத்து பரி கார பூஜைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த கோவிலுக்கு கடந்த 2000-ஆம் ஆண்டு கடைசியாக குட முழுக்கு நடந்தது. அதை தொடர்ந்து வருகிற 2012-ஆம் ஆண்டு    குட முழுக்கு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட் டது. அதற்கிடையே கோவில் கோபுர கலசம் இடிந்து விழுந்தது பக்தர் களிடையே பல்வேறு அச்சங்களை ஏற்படுத்தி உள்ளதாம்.
அதெல்லாம் சரி.இங்கே ஜெயலலிதா கலசம் விழுந்ததில் இருந்து கலக்கமாக இருக்கிறாராம்.
அது தனக்கு ஆகாது எனவும் நினைக்கிறாராம்.
அது பற்றி தனது அபிமான் கேரள ஜோதிடரிடம் கேட்ட போது ஆட்சிக்கு கவிழும் அளவு ஆபத்தில்லை.ஆனாலும் இப்போது சில தோல்விகளை சந்திக்க நேரிடலாம் .பரிகாரம் செய்யவேண்டும் என்றாராம்
ஜெயலலிதா மனதில் உள்ளாட்சித்தேர்தலும்,திருச்சி இடைத்தேர்தலும் ஓட பரிகாரத்திற்கு பரிகாரம் தேடுகிறாராம்..
   மேலே பச்சையான எழுத்தில் உள்ளவை எல்லாம் பச்சை பொய்ங்க.ஜூ.வி,பாணியில் எழுதினால் எப்படி இருக்கும் என்ற ஆசையில்தான் அவை எழுதப்பட்டுள்ளது.
ஆனால்  உண்மையாகக் கூட மாறினாலும் மாறி விடலாம்.யார் கண்டது?
             
                                       
                        

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?