நான் அடித்தால் தாங்க மாட்ட -விஜய்[அமைச்சர்]


                       
வேலூர் மேயர் தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று முன் தினம் மாலை, 5 மணிக்கு வெளியிடப்பட்டது. அதில், அகர வரிசைப்படி முதலாவதாக, தி.மு.க., வேட்பாளர் ராஜேஸ்வரி, இரண்டாவது, ஈஸ்வரி (ம.தி.மு.க.,), மூன்றாவது, கார்த்தியாயினி (அ.தி.மு.க.,), நான்காவது, சுகந்தி (இந்திய குடியரசு கட்சி), ஐந்தாவது, சுசிலா (இ.ஜ.க.,), ஆறாவது, தேவி (காங்.,), ஏழாவது, அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி (ஐசக் பிரிவு) வேட்பாளர் பூங்காவனம், எட்டாவது, பூவழகி (வி.சி.,), ஒன்பதாவது லதா (கம்யூ.,), 10வது வெண்ணிலா (பா.ம.க.,) ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தது.மாநகராட்சியில் வேட்பாளர் பட்டியல் மாலை, 6 மணிக்கு ஒட்டப்பட்டது. இதில், அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்தியாயினி பெயர் மூன்றாவது இடத்தில் இருப்பதை அறிந்த, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆவேசமடைந்து, அமைச்சர் விஜயிடம் தகவல் தெரிவித்தனர்.
                உதவி தேர்தல் அதிகாரி சீமோன் முத்துராஜை மொபைலில் தொடர்பு கொண்ட அமைச்சர் விஜய், மேயர் வேட்பாளர் இறுதி பட்டியலில், அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்தியாயினி பெயர் முதலிடத்தில் வரும்படி பட்டியலை மாற்றி வெளியிடும்படி கூறியதாக, பேசப்படுகிறது.இதற்கு பதிலளித்த உதவி தேர்தல் அதிகாரி, ""தி.மு.க., வேட்பாளர் பெயர் அகர வரிசைப்படி, "இ' என்ற எழுத்தில் துவங்குவதால் அவரது பெயர் முதலிடத்தில் வெளியிடப்பட்டதாகவும், இதை மாற்ற தன்னால் முடியாது,'' என, கூறி விட்டார்.இதை ஏற்றுக் கொள்ளாத அமைச்சர் விஜய், கார்த்தியாயினி பெயருக்கு முன்னால் நீங்களே, "இ' என்ற எழுத்தை சேர்த்துக் கொண்டு முதலிடத்தில் வரும்படி செய்ய உத்தரவிட்டுள்ளதாக, கூறப்படுகிறது. இதை மீண்டும் உதவி தேர்தல் அதிகாரி மறுத்தார்.இதனால், 10 நிமிடங்கள் மொபைலில் அமைச்சருக்கும், உதவி தேர்தல் அதிகாரிக்கும் விவாதம் நடந்தது. சிறிது நேரத்தில், அமைச்சரின் உதவியாளர் தாஸ், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலர் மாறன் ஆகியோர், தேர்தல் அதிகாரியின் அறைக்குச் சென்று பேசினர்.அமைச்சரிடம் கூறிய அதே விளக்கத்தை தான், அவர்களிடத்திலும் உதவி தேர்தல் அதிகாரி கூறினார். இதை ஏற்காத அ.தி.மு.க.,வினர், தேர்தல் விதிகள் குறித்து எங்களுக்கு கவலையில்லை. தேர்தல் விதியை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள வேண்டும்.அமைச்சர் கட்டளைபடி செய்து தான் ஆக வேண்டும் என கூறி வாக்கு வாதம் செய்தனர். அப்போது, அந்த அறையில் செய்திகள் சேகரிக்க வந்த நிருபர்கள், இதை அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.
இதை பற்றி கவலைப்படாமல் அமைச்சரின் பி.ஏ., தேர்தல் அதிகாரியை மிரட்டிக் கொண்டே இருந்தார். தேர்தல் விதிமுறைப்படி தான் பட்டியல் வெளியிடப்பட்டுள்
ளது. இதை மாற்ற எனக்கு அதிகாரம் இல்லை என உதவி தேர்தல் அதிகாரி எவ்வளவோ எடுத்துக் கூறியும் அமைச்சரின் பி.ஏ., தாஸ் கேட்கவில்லை.

ஆத்திரமடைந்த பி.ஏ., தாஸ், அங்கிருந்த படியே மொபைலில் அமைச்சர் விஜயிடம் தகவல் தெரிவித்தார். இதை பார்த்த தேர்தல் அதிகாரி, இந்த அறையில் இருந்து யாரும் மொபைலில் பேசக்கூடாது என, உத்தரவிட்டார்.அதை பற்றி கவலைப்படாத பி.ஏ., தாஸ் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இந்நிலையில் மீண்டும் அதிகாரியின் மொபைலில் பேசிய அமைச்சர், நான் கூறிய படி தான் நடக்க வேண்டும், அதற்காக நான் சென்னையில் பேசி முடிவெடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அப்படியே பேசிக் கொள்ளுங்கள். என்னால் ஒன்றும் செய்ய முடியாது என, அதிகாரியும் கறாராக சொல்லி இணைப்பை துண்டித்துக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவங்கள் அனைத்தும் இரவு, 10 மணி வரை நடந்துள்ளது.பி.ஏ., தாஸ் மிரட்டிய சம்பவத்தை அங்கிருந்த போலீசார், வீடியோவில் பதிவு செய்தனர். அமைச்சர் மிரட்டியதை அதிகாரி தனது கைபேசியில் பதிவு செய்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் அமைச்சரின் பரிந்துரை இல்லாமல் கார்த்தியாயினி சீட் வாங்கி வந்து விட்டார். இதனால், அமைச்சர் கடும் கோபமடைந்துகார்தியாயினி தோல்வியடைய மறைமுகமாக வேலை செய்தார். இது அ.தி.மு.க. மேலிடத்திற்கு தகவல் தெரிந்ததும், அமைச்சருக்கு சில அறிவுரைகள்? கிடைத்தது.இதனால், சில நாட்களாக கார்த்தியாயினியுடன் அமைச்சர் சென்று பிரசாரம் செய்கிறார். அமைச்சர் பிரசாரம் செய்கின்றார் என்பதை காட்டத்தான் இப்படி மிரட்டல்செய்வதாக தெரிகிறது. நடந்த சம்பவம் குறித்து தேர்தல் ஆணையத்திடமும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் அலுவலர் புகார் செய்துள்ளார்.இது குறித்து, சென்னையில் இருந்து வந்துள்ள தேர்தல் அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். 
அதில் ஒன்றும் நடக்கப் போவதில்லை.என்பதுதான் நமக்கு தெரியுமே?                                                                         
     
                                                       ((((((((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))))00000000000000000
பேட் மேன்+ஜேம்ஸ்பாண்ட்= குடியரசுத்தலைவர்.
குடியரசுத்தலைவருக்கு ரூ6கோடியில் அதிநவீன கார் வாங்கிய விவகாரம் தற்போது கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
ஏற்கனவே பலத்த பாதுகாப்புக்குள் இருக்கும் அவருக்கு இது போன்ற கார் என்ன கூடுதலான பாதுகாப்பை தந்து விடப்போகிறது.
மக்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மட்டுமே செய்துவருவதே ஒரு குடியரசுத்தலைவரின் பணி என்ற அளவில் மட்டுமே பிரதீபா பட்டேல் இருக்கிறார்.அவருக்கு இது போன்ற நவீன ,அதிக விலை கார் தேவைதானா?என்ற கேள்வியும் எழுந்துள்ளது.கார் வாங்கியது இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் விபரங்கள் வேகமாக பரவி வருகிறது.
குடியரசுத்தலைவருக்கு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் காரின் மாடல் எண்: மெர்சிடீஸ் பென்ஸ் S 600 L புல்மேன். ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் காரைப் போல, இந்தக் காரில் ஆங்காங்கே அதிநவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளனவாம். புல்லட் புரூப் வசதி, சிறிய தானியங்கி துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் சிற்சில வெடிபொருட்கள் எல்லாம் காரிலேயே பொருத்தப்பட்டுள்ளன. ஏதாவது பாதுகாப்பு நெருக்கடி ஏற்படும் போது சமாளிக்கத்தான் இத்தனை வசதிகள் என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்ல பிளாட் டயர் வசதி, தீயணைப்புக் கருவிகள் என இன்னும் பல வசதிகளும் இருக்கின்றனவாம்.
                            
கடந்த ஜூன் மாதம் இந்தக் கார் வாங்கப்பட்டதாகவும், அதன் பின் தேவைக்கேற்ப நிபுணர் குழு பரிந்துரையின் படி பாதுகாப்பு உபகரணங்கள் ஃபிட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. பாதுகாப்பு மட்டுமல்ல சொகுசு அம்சங்களும் தாராளமாக புகுத்தப்பட்டுள்ளன இந்தக் காரில். 517 ஹார்ஸ் பவர் கொண்ட r 12 சிலிண்டர் பயோ டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டு எத்தகைய அபாயகரமான சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மினி மீட்டிங் நடத்தும் அளவுக்கு ஸ்பேஸ் இருக்கிறதாம். வழக்கமாக எல்லா சொகுசு கார்களிலும் இருக்கும் டி.வி., தவிர அதிநவீன தொலைதொடர்பு சாதனங்களும் இருக்கிறதாம்.
கடந்த 2010ம் ஆண்டு டில்லியில் நடத்தப்பட்ட மெர்சிடீஸ் பென்ஸ் எக்ஸ்போவில் தான் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காருக்குள் விஷ வாயுவை செலுத்தினால் கூட அதை சுத்திகரித்து நல்ல சுத்தமான காற்றை அளிக்கும் படிக்கு, ஏர் கண்டிஷனரும் பொருத்தப்பட்டுள்ளதாம். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 550 சிறப்பு உபகரணஙகள் காரில் பொறுத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி, சூப்பர் சோனிக் விமானத்தில் பயணித்த முதல் பெண் ஆகிய பல பெருமைகளுடன், சூப்பர்சோனிக் காரிலும் பயணப்பட இருக்கிறார் பிரதிபா பாட்டீல்.
இத்தகைய ஸ்பெஷல் கார் குறித்த செய்தி கசிந்ததில் இருந்து பல்வேறு தரப்பினர், 6 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட கார் அனாவசியமானது என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிலிபிட் தொகுதி மக்களவை உறுப்பினர், வருண் காந்தி தனது சமூக வலைதளத்தில் " 6 கோடி ரூபாய் செலவில் அதிநவீன கார் வாங்கப்பட்டுள்ளதாம், அதில் இருக்கும் வசதிகளைப் பார்த்தால், அது ஜனாதிபதிக்கா இல்லை பேட்மேனுக்கா என தெரியவில்லை" என கூறியுள்ளார்.
தினமும் ரூ.32 செலவு செய்ய முடிந்தவர்கள் ஏழைகள் அல்ல. அவர்கள் வறுமைக்கோட்டுக் கீழ் வர மட்டார்கள் என திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா அளித்த அறிக்கையால் நாடு வெகுண்டெழுந்திருக்கிற இந்த நேரத்தில், குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு ரூ.6 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட, அதிநவீன, ஹைடெக் பென்ஸ் கார் வாங்கப்பட்டுள்ளதுபற்றிகுடியரசுத்தலைவர் அலுவலகமோ, மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனமோ அது பற்றி ஏதும் தகவல்களை வெளியிடவில்லை.
______________________________________________________________________________________________________

எந்திர மனிதர்களின் குத்துச்சண்டை படம்.
எந்திர மனிதன் செய்யும் பாக்சிங் விளையாட்டை மை யமாக வைத்து உருவாக்கப்பட படம் ‘ரியல் ஸ்டீல்’. இந்த எந்திர பாக்சிங் போட்டி பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்தவை. நிஜ பாக்சர்களின் கனவுகளை துவம்சம் செய்யும் அளவுக்கு இந்த சண்டைகாட்சிகளை வடிவமைத்திருக்கிறார்களாம்.
முழு நிள ஆக்ஷ்ன் படமான இதில் மற்றொரு பக்கம் அப்பா-மகன் நேசம் ,தேடல் ,பிரிவு, பாசப் போராட்டம் என்று இதயம் துடிக்கும் செண்டிமென்ட் பரபரப்பும் இருக்குமாம்.
2005ல் உருவான இக்கதை படமாக்க ஐந்து வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு கதை சிந்திக்க வைத்து திட்டமிடப்பட்டுள்ளது. 
சண்டை காட்சிகளில் 35 சதவிதம் ரோபோ சம்பந்தப்படவை தான். வரும் வெள்ளி முதல் திரை அரங்கில் வெளியாகவிருக்கும் இப்படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது
1956ல் ரிச்சர்ட் மெத்திசன் எழுதிய ஸ்டேல் என்ற சிறுகதைதான் திரைப்படமாகையுள்ளது.
மேலே அதன் முன்னோட்டத்தைப் பாருங்கள்.பின் படம் பார்க்கலாமா என முடிவெடுங்கள்.
ஷான் லெவி இயக்கிய இப்படத்தின் நாயகன் ஹக் ஜேக்மேன். ட்ரீம் ஒர்க்ஸ்தயாரித்துள்ளது.

_______________________________________________________________________________________________________

தயாநிதியின் 300 தொலைபேசிகள்.
              
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டுக்கு 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பான ஆவணங்களைத் தருமாறு தொலைத் தொடர்புத் துறையிடம் சிபிஐ கோரியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு மே மாதம் வரை, மத்திய தொலைத்தொடர்புத் துறை மந்திரியாக இருந்தார். அப்போது, சென்னை போட்கிளப்பில் உள்ள அவரது வீட்டுக்கு, சட்டவிரோதமாக 323 ஐ.எஸ்.டி.என்.
தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டதாகவும், அவை தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி.யின் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. கடந்த 2007-ம் ஆண்டிலேயே இதுதொடர்பாக சி.பி.ஐ.க்கு புகார் வந்தது.
                                   
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய தொலைத்தொடர்பு துறை செயலாளருக்கு சி.பி.ஐ. சிபாரிசு செய்தது. ஆனால் நடவடிக்கை எடுக்க தொலைத்தொடர்புத் துறை ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து, சமீபத்தில், இவ்விவகாரம் தொடர்பாக, பூர்வாங்க விசாரணையை சி.பி.ஐ. பதிவு செய்தது. கடந்த வாரம், விசாரணையை தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக, தயாநிதி மாறன் வீட்டுக்கு தொலைபேசி இணைப்புகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை தங்களிடம் அளிக்குமாறு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் சி.பி.ஐ. கேட்டுள்ளது.
இந்த தொலைபேசி இணைப்பகம், சன் டி.வி.க்கு எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பான தொழில்நுட்ப விவரங்களையும் அளிக்குமாறு கேட்டுள்ளது. இந்த புகார் குறித்து சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுவதாவது:-
தயாநிதி மாறன் வீட்டுக்கு கொடுக்கப்பட்ட 323 தொலைபேசி இணைப்புகளும் பி.எஸ்.என்.எல். பொது மேலாளரின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. இவை, வீடியோ கான்பரன்சிங், அதிக சக்திவாய்ந்த டிஜிட்டல் ஒளிபரப்பு போன்றவற்றுக்காக பெரிய வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடியவை ஆகும். இவற்றுக்கான கட்டணமும் அதிகம். ஆனால், ஏறத்தாழ இலவசமாகவே சன் டி.வி.க்காக இந்த இணைப்புகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
தயாநிதி மாறன் வீட்டில் இருந்து சன் டி.வி. அலுவலகத்துக்கு பூமிக்கு அடியில் கேபிள் பதிக்கப்பட்டு, இந்த இணைப்புகள் சன் டி.வி.க்காக பயன்படுத்தப்பட்டு உள்ளன. பி.எஸ்.என்.எல்.லில் குறிப்பிட்ட நபரைத் தவிர, வேறு யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில், தயாநிதி மாறன் வீடு, ஒரு தொலைபேசி இணைப்பகம் போலவே செயல்பட்டது.
இவ்வாறு சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
                      
இப்படியொரு தொலைபேசி எக்சேஞ்ச் செயல்படுவது பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சில உயரதிகாரிகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமலேயே இருந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அளவுக்குத் திறன் கொண்ட கட்டமைப்பு நிறுவுவதற்கு பெரும் பணம் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் கிட்டத்தட்ட இலவசமாகவே இதை தயாநிதி மாறன் பயன்படுத்தினார் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?