இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால்



அமெரிக்காவின் முன்னணி மீடியா நிறுவனமான போர்ப்ஸ் நிறுவனம், சர்வதேச அளவில், பணக்காரர்கள் பட்டியல்களை அவ்வப்போது  வெளியிட்டுவருகிறது. அதன்படி, தற்போது, இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், 5ம் இடம் பெற்றுள்ள சாவித்ரி ஜிண்டால், இந்தியாவின் பணக்கார பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய பணக்காரர்கள் பட்டியலில், தொடர்ந்து முகேஷ் அம்பானி    முதலிடத்திலேயே இருக்கிறார். 

                        
அனில் அம்பானி, 10ம் இடத்தில் இருந்த இவர் 13ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போதைய இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் லட்சுமி மிட்டல் 2ம் இடத்திலும், விப்ரோ நிறுவனர் அஜிம் பிரேம்ஜி 3ம் இடத்திலும் உள்ளனர். இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி ராகுல் பாட்டியா, ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட 14 புதிய முகங்கள் இந்த பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக இடம் பிடித்துள்ளனர். ராகுல் பாட்டியா 51வது இடம்    
பிடித்துள்ளார்.

உலகின் பணக்கார அம்மாக்கள் பட்டியலில் நான்காவது இடத்திலும் ஆசிய அளவில் முதலிடத்தையும் சாவித்ரி ஜின்டால் பிடித்துள்ளார். ஓ.பி. ஜின்டால் குழுமத்தை உருவாக்கிய ஓம் பிரகாஷ் ஜின்டாலின் மனைவியான சாவித்ரி ஜின்டாலின் நிகர சொத்து மதிப்பு 1,220 கோடி டாலராகும் (ரூ. 55 ஆயிரம் கோடி). 60 வயதாகும் சாவித்ரிக்கு 9 குழந்தைகள் உள்ளனர்.

பணக்கார அம்மாக்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது. இதில் 70 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். தாய்மார்கள் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதை ஒட்டி பணக்கார அம்மாக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஓ.பி. ஜின்டால் குழுமம் ஸ்டீல் மற்றும் மின்னுற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தை ஓ.பி. ஜின்டால் 1952-ல் உருவாக்கினார். 2005-ம் ஆண்டு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஓம் பிரகாஷ் ஜின்டால் உயிரிழந்ததைத் தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குநர் குழுமத்தில் பொறுப்புகள் அற்ற இயக்குநராக பதவியேற்றார். ஏனெனில் ஜின்டால் உயிருடன் இருந்தபோதே தனது நிறுவனப் பொறுப்புகளை நான்கு மகன்கள் பிருத்விராஜ், சஜன், ரத்தன், நவீன் ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார். தற்போது இவர்கள் நால்வரும் தனித்தனி பிரிவுகளுக்கு தலைமை ஏற்று நடத்துகின்றனர்.

பணக்கார அம்மாக்கள் பட்டியலில் 70 பேர் இடம்பெற்றிருந்தபோதிலும் 2 பேர் மட்டுமே தங்களது சொந்த வருவாய் மூலம் கோடீஸ்வர அம்மாக்களாக திகழ்கின்றனர். இதில் ஹாரி பாட்டர் கதையை எழுதி கோடீஸ்வரியான ஜே.கே. ரோலிங்கும் ஒருவர். மற்றொருவர் எம்இஜி விட்மன்.

பணக்கார அம்மாக்கள் பட்டியலில், கணவர் மூலம் கோடீஸ்வரிகளான விதவைத் தாய்மார்களே அதிகம். சில கோடீஸ்வர குடும்பத்தின் வாரிசுகளும் இதில் உள்ளனர்.

வால்மார்ட் சங்கிலித் தொடர் நிறுவனத்தை உருவாக்கிய சாம் வால்டனின் மருமகள் கிறிஸ்டி வால்டன் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 2,250  கோடி டாலராகும்.

உலகம் முழுவதும் பிரபலமான அழகு சாதன தயாரிப்பு நிறுவனமான லோ ரியல் குழுமத்தின் லிலியேன் பெடன்கோர்ட் (87) இரண்டாவது இடத்திலும், பேக்கேஜிங் துறையின் பிரபலமான டெட்ரா லேவல் குழுமத்தைச் சேர்ந்த பிர்கிட்  ராஸிங் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக சாவித்ரி ஜின்டால் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் ஹரியாணா மாநிலம் ஹிஸôரில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 
________________________________________________________________________________________________________
கிரண் பேடி ' அறக்கட்டளை நிர்வாகி விலகியுள்ளார்.
                                 
      0 கிரண் பேடி நடத்தி வரும் "இந்தியா விஷன் ஃபவுண்டேஷன்' அறக்கட்டளையில் அதன் முக்கிய நிர்வாகி அனில் பால் விலகியுள்ளார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கிரண் பேடி கூடுதலாகப் பயணக் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அறக்கட்டளையில் இருந்து விலகுவதாக அனில் பால் தெரிவித்துள்ளார்.

"இந்த விவகாரத்தால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அறக்கட்டளை நிர்வாகி பொறுப்பை உடனடியாக ராஜிநாமா செய்கிறேன். கிரண் பேடியின் பயணத் திட்டங்களுக்கு வேறு நிறுவனத்தை நியமித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அறக்கட்டளைக்கு செலுத்த வேண்டிய தொகையை எவ்வித பாக்கியும் இன்றி காசோலையாக அளித்து விட்டேன். அறக்கட்டளைக்கும், எனக்கும் இனிமேல் தொடர்பு இல்லை' என்று அவர் கூறியுள்ளார்.

          கிரண் பேடிக்கு எதிராக மத்திய அமைச்சர்கள் 4 பேர் அவதூறு பிரசாரம் செய்வதாக அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார். ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரான முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடி மீது முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன. தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெளியூருக்கு விமானங்களில் பயணம் செய்யும் போது, எகானமி கிளாசில் பயணம் செய்துவிட்டு பிசினஸ் கிளாசுக்கான கட்டணத்தை அவர் விழா அமைப்பாளர்களிடம் இருந்து பெற்றிருக்கிறார். அதிலும், ஏர் விமானத்தில் பயணம் செய்யும்போது குறைந்த வகுப்பு கட்டணத்திலும், 

வீரதீர செயல்களுக்கான விருது பெற்றதால் கிடைக்கும் 75 சதவீத கட்டண சலுகையையும் பெற்றிருக்கிறார். அந்த பணத்தை தான் நடத்தும் சேவை அமைப்புக்கு கொடுத்ததாக முதலில் விளக்கம் அளித்த கிரண் பேடி, பின்னர் கூடுதலாக பெற்ற தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி தருவதாக அறிவித்தார். இந்நிலையில், அன்னா ஹசாரே தனது இணைய தளத்தில் எழுதியிருப்பதாவது:

ஜன் லோக்பால் மசோதாவுக்காக போராட்டம் நடத்திய என் ஆதரவாளர்கள் மீது வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. விமானப் பயணத்துக்காக கூடுதலாக பெற்ற தொகையை கிரண்பேடி தனக்காக பயன்படுத்தவில்லை. அப்படி அவர் பயன்படுத்தி இருந்தால், அது பற்றி விசாரணை நடத்தி கிரண் பேடி மீது அரசு நடவடிக்கை எடுக்கட்டும். 

ஆனால், என் குழுவினரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு லோக்பால் மசோதா தயாரிப்பு குழுவில் இடம்பெற்றிருந்த 4 மத்திய அமைச்சர்கள் செயல்படுகின்றனர். அந்த கும்பல்தான் இப்போது, கிரண்பேடிக்கு எதிராக நடக்கும் அவதூறு பிரசாரத்துக்கு பின்னணியில் இருக்கின்றனர். ஜன்லோக்பால் அமைந்தால் தங்கள் அதிகாரம் பறிக்கப்பட்டுவிடும் என்று அந்த அமைச்சர்கள் அஞ்சுகின்றனர். மத்திய அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் ஜன் லோக்பாலை ஆதரிக்கின்றனர்.

இதுபோன்ற சிலர் மட்டும் எதிர்க்கின்றனர். ஒன்றிரண்டு குண்டர்கள் இருந்து கொண்டு, கிராம மக்களை மிரட்டுவதுபோல், ஒரு சில முரட்டு அமைச்சர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக மற்ற அமைச்சர்கள் வாய் திறக்கமுடியவில்லை. தீய செயலில் ஈடுபட்டுள்ள இந்த அமைச்சர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். 
இவ்வாறு அன்னா ஹசாரே எழுதியுள்ளார்.
இது பற்றி, டுவிட்டர் இணைய தளத்தில் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், கிரண் பேடிக்கு ஆதரவாக அன்னா ஹசாரே குரல் கொடுத்துள்ளார். 4 பேர் கும்பல் என்று குறிப்பிட்டு சாடியுள்ளார். யார் அந்த அதிர்ஷ்டகாரர்கள் என்ற விவரத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்Õ என்று கூறியுள்ளார். 

"பிளைவெல் டிராவல்ஸ்' உரிமையாளரான அனில் பால், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடியின் பயணத் திட்டங்களை கவனித்து வந்தார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் நெருங்கிய நண்பராக இருந்தார்.

"கூடுதல் கட்டணத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் திருப்பித் தரும்படி எனது பயணத்துக்கு ஏற்பாடு செய்த டிராவல் ஏஜெண்டுக்கு அறக்கட்டளை நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்' என்று கிரண்பேடி தெரிவித்திருந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததைத் தொடர்ந்து அனில் பால் அறக்கட்டளையிலிருந்து விலகியுள்ளார்.

___________________________________________________________

 பாகிஸ்தான்_தலிபான் உறவு,,,!

தலிபான் கிளர்ச்சியாளர்கள்
தலிபான் கிளர்ச்சியாளர்கள்

பாகிஸ்தான், தன் எல்லைக்குள் இருந்து கொண்டு இயங்கும் தீவிரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்த இன்னும் அதிகம் தன்னால் செய்ய முடியும் என்று கடந்த வாரம்தான் ஒப்புக்கொண்டது.

"தாலிபானுக்குப் பணம், பயிற்சி தந்த பாகிஸ்தான்"
வெளிப்படையாக அமெரிக்காவின் கூட்டாளி போல நடித்துகொண்டு , உண்மையில் பாகிஸ்தான் தாலிபானை ரகசியமாக ஆதரித்து வருகிறது என்ற இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறது என்று கூறுகிறார் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் உளவுப்பிரிவு ஆற்றிய பங்கு குறித்து ஆராய அமெரிக்க அதிபர் ஒபாமாவால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற சி.ஐ.ஏ அதிகாரி ப்ரூஸ் ரெய்டல்.
“ எங்களுக்கு கிடைத்த உளவுத்தகவல்கள் குழப்பமற்றதாகவே இருந்தன. ஆப்கானிஸ்தானில் நடந்த கிளர்ச்சிக்கு பாகிஸ்தானிய ராணுவமும் , பாகிஸ்தானின் உளவுப்பிரிவான, ஐ.எஸ்.ஐயும் தீவிர ஆதரவளித்ததை நாங்கள் கண்டோம். பாகிஸ்தான் தாலிபானுக்காகப் பணம் திரட்டியது, தாலிபானுக்கு பயிற்சி தந்தது, நேட்டோ படைகள் மீது தாக்குதல்களை நடத்த தாலிபான் கிளர்ச்சியாளர்களுடன் வல்லுநர்களையும் அனுப்பியது” என்றார் ரெய்டல்
'பாகிஸ்தானே தலிபான்களுக்கு உதவுகிறது'
'பாகிஸ்தானே தலிபான்களுக்கு உதவுகிறது'
2008ம் ஆண்டில், இந்தியாவின் மும்பை மாநகரில் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் துவம்சத் தாக்குதல் நடத்தியபோது,அவர்கள் பாகிஸ்தானின் உத்தரவுப்படிதான் இந்த செயலில் ஈடுபட்டார்கள் என்பதை அமெரிக்கா உணர்ந்தது. மேலும் அதற்கடுத்த ஆண்டு, அமெரிக்கா பாகிஸ்தானின் ஆப்கன் எல்லைக் கிராமங்களில் நடத்தப்போகும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தகவல் தருவதை நிறுத்திய பின்னர்தான், இந்த ஆளில்லா விமானத் தாக்குதல்கள் வெற்றிகரமாக நடந்தன.
“ முதலில் இந்த ட்ரொன் விமான நடவடிக்கைகள் குறித்து நாங்கள் முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தகவல்கள் தெரிவிப்போம். அப்போதெல்லாம் ஒவ்வொருமுறையும் , நாங்கள் தாக்கவிருந்த இலக்கு தப்பிவிடும். இதற்கு காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க நீங்கள் ஒன்றும் பெரிய துப்பறியும் ஷெர்லாக் ஹோம்ஸாக இருக்கவேண்டியதில்லை” என்றார் ப்ரூஸ் ரெய்டல்
தாலிபான் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவுவதை தடுக்க அமெரிக்கப் படைகள் எடுத்த முயற்சிகளை எல்லாம் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தடுத்து வந்தது என்கிறார் அமெரிக்க ராணுவ அதிகாரி மேஜர் மைக் வால்ட்ஸ்.
“ பாகிஸ்தான ராணுவச் சாவடிகளுக்கு அருகே நாங்கள் நடவடிக்கைகள் எடுத்த போதெல்லம்,ராணுவத்தினர், டார்ச் விளக்குகளை அணைத்தும், ஒளிர வைத்தும் சமிக்ஞைகள் கொடுப்பதை பார்த்தோம். ஒரு தொடர் விளக்கு சமிக்ஞை போல, ஒரு முகட்டிலிருந்து மற்றொரு முகட்டுக்கு இந்த சமிக்ஞைகள் தொடரும் . பிறகு இந்த சமிக்ஞைகளால், எங்களது இலக்குகள் எல்லாம் ஓடிப்போனதைக் கண்டோம்”, என்றார் வால்ட்ஸ்.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பாகிஸ்தான் ராணுவம் மறுக்கிறது. அவர்களது எல்லைப்புறத்தில் பாகிஸ்தான் ராணுவமே கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ஒரு போரை நடத்தி வருவதாக அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். தாலிபானை தாங்கள் ஆதரிப்பதாக வரும் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் ராணுவத்துக்காகப் பேசவல்ல ஜெனரல் அத்தர் அப்பாஸ் மறுக்கிறார்.
ஆனால் பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் தலைவர் ஹமித் குல், பாகிஸ்தான் தனது நீண்ட காலப் பாதுகாப்புக்கு ஆப்கானிஸ்தானில் அதற்குள்ள தொடர்புகளைப் பேணுவது அவசியம் என்கிறார்.
“ எங்கள் கொல்லைப்புறத்தில் ஒரு விரோதப்போக்குடைய ஆப்கானிஸ்தானை நாங்கள் வைத்திருக்கமுடியுமா ? முடியாது. நாட்டின் ஒட்டுமொத்த விவேகமும், தாலிபானுடன் நல்ல தொடர்புகளை நாங்கள் தொடர்ந்து வைத்திருப்பது அவசியம் என்றுதான் கூறுகிறது. அதுதான் பாகிஸ்தானின் தேசிய நலன் சார்ந்த விஷயம் என்று எல்லோருக்கும் தெரியும்”,என்றார் குல்
 இந்த தகவல்கள் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசுகளுக்கு மேலும் சிக்கலான கேள்விகளை எழுப்புகின்றன. இந்த இரு நாடுகளுமே, பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்யும் நாடுகள். பாகிஸ்தானை இரு நாடுகளுமே ஒரு கூட்டாளியாகத்தான் இதுவரை பார்த்து வருகின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?