வருகிறது வால் மார்ட்-

சிறு வியாபாரிகள் வாழ்வை குலைக்குமா [ர்ட்]  ?
வெளிநாட்டு நிறுவனங்கள், பல்பொருள் வர்த்தக துறையில் 51 சதவீதம் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுபோல், ஒரு பொருள் சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதமாக இருந்த அன்னிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை 100 சதவீதமாக உயர்த்தியது.
 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி துணை கவர்னர் சக்கரவர்த்தி”சில்லரை வர்த்தக துறையில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டால், இடைத்தரகர்களின் தலையீடு குறைந்து விலைவாசி (பணவீக்கம்) குறையும். குறிப்பாக உற்பத்தியாளரும் நுகர்வோரும் பயனடைவர்” என்றுள்ளார்.
ரிசர் வங்கி கவர்னர்கள் முதலில் ரூபாயின் மதிப்பு உயர்வுக்கும் ,பணவீக்கத்துக்கும் நிவாரணம் தேடட்டும்.அவர்களின் பொருளாதார நிபுணத்துவ [?] முடிவுகளால் இதுவரை நாட்டில் பணவீக்கத்தையும் ,விலை வாசி உயர்வையும் தடுக்க முடியவில்லை.இவர்களின் பொருளாதார முடிவுகளின் லட்சணம்தான் இந்தியா முழுக்க அவலமாக சிரிக்கிறதே.
        அந்நிய முதலீடு என்றால் வால்மார்ட்தான் முதலிடம் பிடித்து முதலில் நுழையும் அதனால் அமெரிக்காவிலே வேலை இழந்தவர்கள்-காணாமல்போன சிறு உற்பத்தியாளர்கள்,சின்ன வியாபாரிகளின் சோகக்கதைகளை முதலில் சொனியா கம்பெனியார்கள் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.[தெரியாமல் இருக்காது]
    முதலில் உற்பத்தியாளர்களிடம் நல்ல லாபத்தில் ஒப்பந்தம் போட்டு அவர்களின் தயாரிப்பை முழுக்க தாங்களே வாங்கிக்கொள்வார்கள்.சில நாட்களில் தயாரிப்பாளர் மற்ற வாடிக்கையாளர்களை எல்லாம் இழந்து தயாரித்து வால்மார்ட்டில் கொடுத்து பணம் பெறும் சோம்பேறி நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்.
அதன் பின் அவரிடம் கொள்முதல் விலையைக்குறைப்பார்கள்  அவரும் வேறு வழியின்றி அவ்வாறே கொடுப்பார்.பின் அதுவே தொடர்கதையாகி ஒரு கட்டத்தில் வால்மார்ட்டிடமே தனது நிறுவனத்தை ஒப்படைத்து விடுவார்.அல்லது கொத்தடிமை நிலைக்கு சென்றுவிடுவார்.
இந்த நடமுறையைத்தான் வால்மார்ட் போன்ற பெரும் விற்பனை பன்னாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.சீனா தவிர மற்ற நாடுகளில் தங்கள் கிளைகளை அதிகம் வைத்துள்ள இவைகள் ஆரம்பித்த கிளைகளையும் சீனாவில் மூடிவருகிறது.
சீனாவில் அந்த நாட்டு அரசு தனது நாட்டில் உள்ள வியாபாரிகளுக்கு ஆதரவாக நடவடீக்கைகளை எடுத்துள்ளது.வால்மார்ட் வாலை சுருட்டிக்கொண்டுள்ளது.ஆனால் இந்தியா ஆளுங்கட்சியினரிடம் இந்திய மக்கள்,வியாபாரிகள் நலனை எதிர்பார்க்க முடியாது.
முன்பு ஜஹாங்கீர் பின் விளைவுகள் தெரியாமல் அனுமதித்ததால்தான் கிழக்கிந்திய கும்பெனியாரின் கையில் இந்தியாவே சென்றுவிட்டது.
இப்போது பின் விலைவுகள் தெரிந்தே இந்தியாவைபன்னாட்டு நிறுவனங்கள் கையில் சோனியா-ராகுல் ஆட்சியாளர்கள் ஒப்படைக்கத்துடிக்கிறார்கள்.
அவர்களிடம் இந்திய நாட்டின் மீதான பாசம் ,பக்தியை எதிர்பார்க்க முடியாது.
இது எல்லாவற்றையும் விட நமது சில்லறை வர்த்தகர்களின் லாபம் இந்தியாவிலேயே சுற்றும்.சுவிஸ் வங்கியில் போடுமளவு காங்கிரசுகாரர்கள் அளவு சம்பாதிக்க மாட்டார்கள்.
ஆனால் வால்மார்ட் லாபத்தின் கடைசி பைசாவரை அமெரிக்கா போன்ற மேனாடுகளுக்கு அனுப்பப்பட்டுவிடும்.நம்நாட்டிற்கு அதில் என்ன லாபம்?
பலகோடிக்கு முதலீடு வரும் என்று ஆசை காட்டுகிறார்கள்.அதில் நாட்டுக்கும்,மக்களுக்கும் என்ன லாபம்.
அவர்கள் கடைகளை திறக்க பணத்தைக்கோடிக் கணக்கில் இங்கு கொட்டுவார்கள் ஆனால் அதை போல் பன்மடங்கு வெளியே போகுமே அதை ஏன் இந்த ஆட்சியாளர்கள் சொல்ல மறந்து விட்டார்கள்.?
கோக்க கோலா,பெப்சி,ஹார்லிக்ஸ்,ஜான்சன்&ஜான்சன்,நெஸ்ட்லே,ஐ.டி.சி,இந்துஸ்தான்லீவர்,பிரிட்டானியா,ப்ரூக்பாண்ட்,மெக்டொனால்ய்ட்,கென்ஸ்ட்லி,ஸ்டார் டி.வி.குழுமம்,20சென்சுரி பாக்ஸ் போன்று இறக்குமதி நிறுவனங்களில் எத்தனை லட்சம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள்?வேலை வாய்ப்பு லட்சக்கணக்கில் பெருகும் என்ற கணக்கு கதைக்குதவாது.காரணம் இந்தியர்களுக்கு அங்கு வேலைவாய்ப்பு குறைவுதான் .எல்லாம் கணினி மயம் .இந்தியர்கள் அங்கு குத்தகை அடிப்படையில்தான்[அவுட்சோர்ஸ்]பணியில் உள்ளனர்.பணி பாதுகாப்பும் இல்லை.வேலை வாய்ப்பு என்பது வெறும் பேச்சுதான்.
எந்தவகையிலும் உதவாத,லாபம் தராத,இருக்கும் வேலை வாய்ப்பைபறிக்கும் அந்நிய சில்லரை விற்பனை கடைகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு கண்டிப்பாக தேவை இல்லை.காங்கிரசு இவ்வளவு மெனெக்கெடுவது நாட்டைக் கெடுக்க மட்டும்தான்.
_____________________________________________________________
”கனடாவிலிருந்து” என்ற வலைத்தளத்தில் முன்பு வந்த கட்டுரையின் சிறு பகுதி--

வால்மார்ட் அநியாய பிஸினஸ் செய்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் பல குழந்தை தொழிலாளர்களினால் குறைந்த விலையில் தயாரிக்க்பட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்கிறது என்பார். வால்மார்ட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களை அடிமையாக நடத்துவார்கள் என்றார். உதாரணத்திற்கு. திங்களன்று ஒருவரை மானேஜர் ஒரு தொழிலாளியை அழைத்து இன்று 10 மணிநேரம் வேலை செய் என்பார். அந்த தொழிலாளியும் ஓவர் டைம் கிடைக்கிறது என்று சந்தோஷமாக வேலை செய்வார். ஆனால் வெள்ளி கிழமை அந்த தொழிலாளியை அழைத்து இன்று 6 மணிநேரம் வேலை செய்தால் போதும் என்பார். அந்த வாரம் அவர் 40 மணிநேரம் வேலை செய்த மாதிரி ஆகிவிடும் ஆகையால் ஓவர் டைம் வழங்க தேவையில்லை. மேலும் தொழிலாளிகளின் கூலியை எப்போதும் ஏற்றுவது இல்லை. சம்பள உயர்வு கேட்டால் வேலை காலியாகிவிடும் இன்னும் இவ்வாறு பல குற்றசாட்டுகளை அடுக்கினார்.

அவர் அடுக்கியதில் அர்த்த முள்ள குற்றசாட்டு இதுதான்: வால்மார்ட் அசுர வளர்ச்சிக்கு அடைவதற்கு முன் ஆங்காங்கே சிறு சிறு கடைகள் இருந்தன. சில கடைகளில் சில பிரத்யேக பொருடகள் கிடைக்கும். அங்கே வாடிக்கையாளராகி அந்த கடைகளை ஊக்குவிப்பதில் அலாதி இன்பம். ஆனால் வால்மார்ட் வந்தவுடன் அந்த சின்ன கடைகள் காணாமல் போய்விட்டன. சின்ன சின்ன முதலாளிகள் இல்லாமல் போய்விட்டனர். இப்படி சின்ன மீன்களை விழுங்கிய பெரும் திமிங்கிலம் தான் இந்த வால்மார்ட் இங்கே பிசினஸ் செய்வது நல்லதில்லை என்பார். மேலும் இவர் சுவிட்சர்லாந்தை அதிகமாக வெறுப்பவர். சுவிட்சர்லாண்ட்டில் மூன்றாம் உலக ஊழல்வாதிகள் ஏழை மக்களை ஏமாற்றி அங்கே பணத்தை போடுகிறார்கள். அந்த பாவபட்ட பணத்தில் கிடைக்கும் வட்டியில் வாழ்கிறது இந்த நாடு. இதெல்லாம் ஒரு நாடு. இந்த நாட்டின் பொருளை நான் ஏன் வாங்க வேண்டுமென்றார். இந்தியாவில் தயாராக்கும் டைடன் வாட்ச்களை வாங்க தயாராய் இருக்கிறார். அடுத்த முறை இந்தியாவிற்கு போகும் போது ஒரு டைடன் வாட்ச் ஒன்றை வாங்கி இவருக்கு தரவேண்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்.
   -இது 2009இல் வந்த கட்டுரை.
வால்மார்ட் -பற்றிய முழுத்தகவல்களுக்கு;-
_______________________________________________________________________________


’அப்பாடா,ஒரு வழியா வந்தியா?
மேலுள்ளது மகள் கனிமொழியைப்பார்த்து தான் கேட்கும்-பேசும் முதல் வார்த்தை என கருணாநிதி கூறியவை.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையிலுள்ள திமுக தலைவர் மு கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு ஜாமீன் வழங்கி தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
   
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி ஏறத்தாழ ஆறு மாதங்கள் கழித்து அவருக்கு ஜாமீன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் இன்று கனிமொழியைத் தவிர கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டி, ஒரு தனியார் நிறுவன நிர்வாகிகள் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால் மற்றும் இந்தி திரைப்பட்த் தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆக்ய நால்வருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன்வழங்கி உத்திரவிட்ட்து.
கைதான் பிறகு ஐந்தாம் முறையாக ஜாமீன் கோரும்போதுதான் கனிமொழியின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது. கனிமொழி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் உள்ளார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் வேறு ஐவருக்கு ஜாமீன் வழங்கும்போது, உச்சநீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் முறைப்படி பதிவாகி, வழக்கு விசாரணையே தொடங்கிவிட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்ய மறுப்பது தவறு எனக்கூறியதன் பின்னணியிலேயே கனிமொழிக்கும் மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்திருக்கிறது.
___________________________________________________________________________________________________





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?