மீளும் கம்யூனிஸ்ட்-?

என் கேள்விக்கென்ன பதில்?
 தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சிறுதாவூரிலும், கோடநாட்டிலும் ஜெயலலிதா தனது பினாமிகள் பெயரால் நிலத்தை அபகரித்துக்கொண்டிருக்கிறாரே, அதன் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேட்டதற்கு, சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டியிருக்கிறார்.சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி மீது டாக்டர் ராணி என்பவர் புகார் கொடுத்த போது போலீசார் அதனை வாங்க மறுத்ததால், டாக்டர் ராணி நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்து, நீதிபதி உடனடியாக காவல்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என்றும், அதற்கான அறிக்கையை 9ஆ‌ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் கூறியிருக்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாத அமைச்சர்தான் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக சொல்லியிருக்கிறார். அதனைச் சட்டப்படியே சந்திக்க தயாராக நான் இருக்கிறேன்.நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் உள்ள தேயிலை எஸ்டேட் அருகே உள்ள அண்ணா நகர், காமராஜர் நகர் பகுதி மக்கள் எஸ்டேட் வழியாகச் செல்லும் சாலையைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் ஜெயலலிதா அங்கே வந்து தங்க ஆரம்பித்த பிறகு, அந்த சாலையை மூடி விட்டதால், அதை எதிர்த்துவழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுக்குட்பட்டு, சாலையைத் திறந்து விட உத்தரவிட்டும், அதனை ஏற்காததால், 19.3.2011 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குந்தகம் சர்மா, அனில் தவே ஆகியோர் 900 ஏக்கர் பரப்பளவிலான எஸ்டேட்டில், இரண்டரை கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலையை கிராம மக்கள் பயன்பாட்டிற்காக 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதைத் தான் நான் சுருக்கமாக நில அபகரிப்பு என்ற பெயரால் கழகத்தினர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் அ.தி.மு.க. அரசு, இந்த நில அபகரிப்புகளுக்கும் நடவடிக்கை எடுக்குமா? என்று எனது பேட்டியில் கேட்டிருந்தேன். 
இதற்கு பதில் அமைச்சர் பரஞ்சோதி தான் சொல்லியிருக்கிறார். தற்போது நான் கேட்டுள்ள இந்த விளக்கங்களின் மீது அந்த அமைச்சரோ, முதலமைச்சரோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறார்களா? என்பது தான் இப்போதும் என் கேள்வி எ‌ன்றுமு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்,.
சட்டத்தின் முன் குற்றவாளிகளாக  இருக்கும் பரஞ்சோதியும் அவரின் புரட்சித்தலைவியும்  மற்றவர்களை குற்றம் சொல்லுவது கைது செய்யத்துடிப்பதும் சரியா?என்பதுதான் ஸ்டாலின் கேள்வி.இதற்கு அம்மா பதில் இதுவரை சொல்ல வில்லையே?
______________________________________________________________________________________________
)______________________________________________________________________________________________
ரஷ்யாவில் மீண்டும் கம்யூனிச பூதம்?


ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் விளாடிமிர் புதினின் ஐக்கிய ரஷ்ய கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. 
.
அக்கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்தது.ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய ரஷ்ய கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, லிபரல் டெமாக்கிரிடிக் கட்சி ஆகியவை போட்டியிட்டன.


இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 88 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் ஆளும் கட்சியான ஐக்கிய ரஷ்ய கட்சி 50.2 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. 


கம்யூனிஸ்ட் கட்சி 19.12 சதவீத வாக்குகளையும், லிபரல் டெமாக்கிரிடிக் கட்சி 13 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. பிரதமர் விளாடிமிர் புதினின் கட்சியான ஐக்கிய ரஷ்ய கட்சி 50 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்று முதலிடத்தை பெற்றாலும் அந்த கட்சி பெரும்பான்மையை இழந்து பின்னடைவை சந்தித்துள்ளது.

கடந்த தேர்தலில் அக்கட்சி 64 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் புதின் மார்ச் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருடைய செல்வாக்குக்கான பரிசோதனையாக நாடாளுமன்ற தேர்தல் அமையும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் புதினின் கட்சி இந்த தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது.
சென்ற தேர்தலில் இரண்டாம் இடம் பெற்ற லிபரல் கட்சி இம்முறை மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.பின்னாள் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறி வந்துள்ளது.அதன் வெற்றியே புடின் கட்சியின் வாக்குகளை சிதற அடித்துதுள்ளது.
 ரஷ்யாவில் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி புத்துயிர் பெற்று வருகிறது.
__________________________________________________________________________________________________________


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?