மக்கள் மனங்கவர் தலைவர்.

வடகொரியாவை ஆட்சி செய்து வந்த அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. வடகொரியா உருவான போது ஆட்சி பொறுப்பேற்றவர் கிம் இல் சங். அவருக்கு பின், 1994ல் அவரது மகன் கிம் ஜாங் இல் ஆட்சி பொறுப்பேற்றார். அது முதல் 17 ஆண்டுகளாக ராணுவத்துக்கும், அரசுக்கும் தலைமை பொறுப்பேற்று,  ஆட்சி நடத்தி வந்தார்.


 உலகில் அதிக ராணுவ படைகளை கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக வடகொரியாவை உருவாக்கினார். கடந்த 2003ல் சர்வதேச அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 2005ல் தங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளதாக அவர் மிரட்டினார். இதன் மூலம், உலக நாடுகளிடம் கடும் எதிர்ப்பை சந்தித்தார். ஆனால் வட கொரிய மக்களால் மிகவும் மதிக்க-விரும்பப்பட்ட தலைவராக இருந்தார் கிம் ஜாங்.
கடந்த 2008ல் கிம் ஜாங்குக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அது முதல் அவர் இருதய நோயாலும், நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டு வந்தார். அவர் கடந்த 17ம் தேதி மரணமடைந்தார். எனினும், அந்நாட்டு அரசு நேற்றுதான் அதிகாரப்பூர்வமாக தொலைக்காட்சியில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, கிம் ஜாங்கின் 3வது மகன் ஜாங் அன் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். 



_________________________________________________________________________________________________________
ஓயாத இணையம்

அயனாவரம், எஸ்பிஐ காலனியை சேர்ந்தவர் யாதிக் அகமது. தோல்வியாபாரி (50). இவரது மகன் முகமது உமர்செரிப் (22). தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. எலக்டரானிக் இன்ஜினியரிங் படிக்கிறார். இரவு பகல் பாராமல் எப்பொழுதும் இணையதளத்திலேயே மூழ்கிக்கிடப்பார். இதனால் 15 பாடங்களில் தோல்வியடைந்தார். இந்நிலையில் உமர் செரிப், ஜனாதிபதிக்கு 36 முறை இமெயில் மூலம் புகார் அனுப்பினார்.


அதில், ‘‘நான் இ மெயிலுக்கு அடிமையாகிவிட்டேன். அதனால் என்னுடைய ஞாபகசக்தி முழுவதும் இழந்துவிட்டது. இதனால் கல்லூரியில் சரியாக படிக்க முடியவில்லை. என்னை காப்பாற்றுங்கள் கூறியிருந்தார்.  36 முறை இமெயிலில் புகார் வந்ததால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சருக்கு உத்தரவுவந்தது. 

அதை தொடர்ந்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கு தகவல் கொடுக்கப்பட்டு அந்த வாலிபரை விசாரித்து முகமது உமர்செரிப்பை மனோதத்துவ சிகிச்சைபெற அழைத்து செல்லும்படி அவரது பெற்றோரிடம் கூறினர்.
________________________________________________________________________________
வாழைப்பழ விவகாரம்.. 
அதாங்க இது.வாழைப்பழம் சாப்பிட்டால் எடைகூடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் (ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போ ஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.

ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.

ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள்சமம். ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம். வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம். இவ்வாறு ஒருஆய்வில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?