ஹிட்லரிசம்?

ஜெர்மனியின் அரசுதலைவராக உருவாகி, சர்வாதிகாரி என்று பெயரெடுத்து இன வெறியுடன் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்துஉலகையே வெல்ல போரில் பெரும் அழிவு ஏற்படுத்தியஅடால்ஃப் ஹிட்லர் எழுதிய மெயின் கேம்ப் என்ற நூலிலிருந்து சில பகுதிகளை வெளிட  தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஹிட்லருடைய நினைவலைகளைத் தொகுப்பாகக் கொண்ட மெயின் கேம்ப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளைத் தன்னுடை வாரப் பத்திரிகையில் சிறிது சிறிதாக வெளியிட பீட்டர் மெக் கீ என்பவர் திட்டமிட்டார்.


ஆனால் ஹிட்லர் பிறந்த பவேரியா மாநில அரசு இந்த நூலின் பதிப்புரிமையை வைத்திருக்கிறது. தன்னுடைய அனுமதி இல்லாமல் யாரும் இதை பதிப்பிக்கக் கூடாது என்று அது கூறிவிட்டது. ஹிட்லர் நினைத்தத- பேசியது சொல்வதால் நாசிசம் மீண்டும் எழ வாய்ப்பாகலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இத்தனை காலத்துக்குப்பின் நாசிசம் உயிர்த்தெழுமா? இந்த பயம் தேவையா? என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இப்போதே ஜெர்மனியில் சில இடத்தில் மறைமுகமாக நாஜி இயக்கம் என்ற பெயரில் சிலர் கூடி ஆலோசித்துவருகிறார்கள்.இது போன்றா செய்திகளால் அவர்கள் வலுப்பெற்று மீண்டும் ஆர்ய இனவாதம் தலைதூக்கிவிடக்கூடாதில்லையா? வரும் முன் தடுப்பது நல்லதுதானே.ஹிட்லரின் கொள்கைகள் நல்லவையாக இருந்தால் இந்தப்பயமே தேவையில்லையே?
________________________________________________________________________________________________


ஊழலுக்கு "தடை "போட்டால் போதுமா?

எஸ் - பேண்ட் ஒதுக்கீடு தொடர்பாக இஸ்ரோவின் துணை நிறுவனமான ஆன்டிரிக்ஸ் மற்றும் தனியார் நிறுவனமான தேவாஸ் ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு காரணமான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் மற்றும் 3 விஞ்ஞானிகளை, இனிவரும் காலங்களில் அரசின் எந்தவொரு திட்டத்திலும் நியமிக்கப்போவதில்லை என்ற முடிவை மத்திய அரசு அறிவித்தது.




பிரதமருக்கான அறிவியல் ஆலோசனைக் குழு தலைவரும், பெங்களூரில் உள்ள ஜவாஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கௌரவத் தலைவருமான சி.என்.ஆர்.ராவ்:
 "இஸ்ரோவில் பணியாற்றி நாட்டுக்கு நீண்ட காலமாக சேவை செய்தவர்களை அரசு நடத்துகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் மீதான விமர்சனம் தவறானது. குப்பையைத் தூக்கி வீசுவதுபோல, விஞ்ஞானிகளை இந்த அரசு நடத்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறீயுள்ளார்.


அவர் அரசியல்வாதிகளுக்கு ஏன் இந்த நடவடிக்கை.இல்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராவ் கேள்வி நியாயமாக இருந்தது போல் தெரிந்தாலும் சரியான வாதமாக இல்லை.விஞ்ஞானிகள் லஞ்சம் பெற்றால் அது தவறில்லையா?  அவர்கள் என்ன நாட்டுக்காக தியாகம் செய்து வருகிறார்களா/ மாதாதாம் கொள்ளையான சம்பளம்-சலுகைகள் பெற்றுக்கொண்டுதான் வேலை பார்க்கிறார்கள்.இதில் நாட்டுக்கான சேவை எனன வந்தது.
இப்போதைய அரசு ஒட்டு மொத்தமாகப்பார்த்தால் ஊழலின் மறுவடிவம்தான் .ஆனால் இதிலும் தப்ப இயலாத அரசியல்வாதிகள் ஆ.ராசா,கனிமொழி,கல்மாடி போன்றோர் சிறை தண்டனை அடைந்தது ஊழலுக்காத்தான்.

விஞ்ஞானி என்பதற்காக அவர்கள் செய்யும் ஊழல்களை மன்னிக்கலாம் என்கிறாரா ராவ்/?
அரசு வேலயில் இனிநியமனம் கூடாது என்பதெல்லாம் ஒரு ஊழலுக்கு துணை போனவருக்கு தண்டனை என்பது மிகத்தவறு.அவர்  மாதவன் நாயர் மீது விசாரணை நடத்தி உண்மை எனில் சிறையில் அடைக்க வேண்டும்.இல்லை என்றால் ஊழலுக்கு தண்டனை என்று ஆ.ராசாவை இனி அமைச்சராக நியமிக்க தடை விதித்து அவரை திகாரில் இருந்து விடுவிக்க வேண்டும்.இதற்கு ராவ் என்ன சொல்கிறார்?
ஆ.ராசாவும் அமைச்சராக இருந்து நாட்டுக்கு சேவை ஆற்றியுள்ளார அல்லவா?


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?