மின் தடை. உண்மை நிலை?

தினசரி 8 மணிநேரம், 10 மணி நேரம் மின்வெட்டால் தமிழகம் கதிகலங்கி நிற்கிறது. திடீரென இவ்வளவு மின்வெட்டு ஏன் என எல்லோரும் கேட்கிறார்கள்.


உண்மை நிலவரத்தை அரசு சொல்வதில்லை. சொன்னால் அர சின் ‘ஓரவஞ்சகம்’ மக்களுக்குப் புரிந்து விடும் என்பதால் மூடி மறைக்கிறது. 
பிப். 16ஆம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதற்குமான மின் தேவை 11,522 மெகாவாட். உற்பத்தி 8,792 மெகாவாட். ஏறத்தாழ 25 விழுக்காட்டுக்கும் குறைவாகவே மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது (மின் உற்பத்தி நிலவரம் பட்டியலில் உள்ளது). அப்படியா னால், மொட்டையாகக் கணக்குப் போட்டாலும் சராசரி 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே எல் லோருக்கும் (பெரும் தொழிற் சாலைகள் உட்பட) மின்வெட்டு இருக்கவேண்டும். ஆனால் சென்னையில் ஒரு மணிநேரமும் பிற மாவட்டங்களில் 8 மணி முதல் 11 மணிநேரமும் மின்வெட்டு அநியாயம் ஏன்?
சிறு மற்றும் குறுந்தொழில், பஞ்சாலை முத லாளிகள் ஒரு விளம் பரத்தை அளித்துள்ளனர்.

அவர்கள் அதில் நியாயமான சில கேள்விகள் எழுப்பி உள்ளனர்.


“தமிழகத்தின் உயர்மின் அழுத்த மின்சாரப் பயன்பாடு 3800 மெகாவாட் ஆக இருந்தபோதி லும், குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு, சிமெண்ட் தொழிற்சாலைகள், இரும்பு தொழிற்சாலைகள், மாவு அரைக்கும் ஆலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலான தொழிற்சாலைகளுக்கு உண் டான பயன்பாடு 1800 மெகாவாட் ஆக உள்ளது. இவர்கள் தங் களுடைய பலத்தினை அரசாங் கத்திடம் காண்பித்து, இந்த மின்சார வெட்டிலிருந்து விலக்கு பெற்றதன் காரணமாக இவர்க ளின் சுமை தென் மற்றும் மேற்கு தமிழகத்திலுள்ள சிறு, குறு மற்றும் இதரத்தொழில்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த விதி விலக்கு பெற்ற பெரிய தொழிற் சாலைகள் அவர்களுக்கென்று உள்ள தனிப்பட்ட மின்கடத்தி யினை (னுநுனுஐஊஹகூநுனு குநுநுனுநுசு) பயன்படுத்தி அவர்கள் தங்க ளுக்கு தேவையான மின்சாரத்தை வெளியிலிருந்து பெற்று பயன் பெற வாய்ப்பு இருந்தும் அரசாங் கத்திடமிருந்து தங்களது செல் வாக்கால் குறைந்த செலவில் தடையில்லா மின்சாரம் பெற்று வருகிறார்கள். இந்த நிலை நியாயமா? ”

இப்போது நமது கேள்வியும் அதுதான்.

முதலாவதாக, வெளியில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வசதி வாய்ப்பிருக்கிற பன்னாட்டு முதலாளிகள் மற்றும் பெரும் முதலாளிகளுக்கு 1800 மெகாவாட் தடையில்லா மின் சாரம் வழங்கவேண்டுமா? அவர் களுக்கும் எல்லோரையும் போல் சம அளவு மின்வெட்டு அமல் படுத்த எது தடை? யார் தடை? உள்ளே பொதிந்திருக்கும் ரகசியம் என்ன?


இரண்டாவதாக, 3600 மெகா வாட் மின்சாரத்தை தினசரி உற் பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் தமிழக தொழிற்சாலை முதலாளிக ளிடம் உண்டு. அவற்றை இயக்கச் செய்வதில் தமிழக அரசு ஏன் கவனம் செலுத்தவில்லை? டீசலுக்கு மானியமோ அல்லது குறைந்த விலையில் டீசலோ வழங்க தமி ழக அரசு முயற்சித்தால் கணிச மான அளவு மின் வெட்டை இதன் மூலம் ஈடு செய்ய முடியும் அல் லவா? இதை செய்ய எது தடை? யார் தடை? உள்ளே பொதிந்தி ருக்கும் ரகசியம் என்ன?

வடசென்னை, மேட்டூர், தூத் துக்குடி, நெய்வேலி மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள பழுதை விரைந்து சீர்செய்ய தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? தானே புயலை விட வேகமாக செயல்பட்டதாக சட்டமன்றத் தில் சவால் விட்டு பேசிய முதல் வர், இந்த விஷயத்தில் குறட்டை விடுவது ஏன்? எது தடை? யார் தடை? உள்ளே பொதிந்திருக்கும் ரகசியம் என்ன?

25 விழுக்காடு மின் உற்பத்தி பாதிப்பை ஈடு செய்ய வழியும் வாசலும் மேலே சொல்லப்பட் டுள்ளது. இவற்றை உடனடியாக செய்தால் சொற்ப அளவு மின் வெட்டோடு தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விடுமே! இதைச் செய்ய எது தடை? யார் தடை? உள்ளே பொதிந்திருக்கும் ரகசியம் என்ன?


மின்வெட்டால் யார்யாரெல் லாம் எப்படியெல்லாம் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் மாணவர்களுக்கு வந்த சோதனை தான் கொடுமையானது. ‘சமச்சீர் கல்வியில்’ முதல்வர் ஜெயலலிதா அர்த்தமற்ற வீம்புகாட்டியதால் கிட்டத்தட்ட 2 மாதம் மாணவர் கள் படிப்பு பாழானது. இப்போது தேர்வு நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தி மீண்டும் மாணவர்களை பழிவாங்குவது நியாயமா? அது மட்டுமல்ல. வேலைக்கு மற்றும் சில தேவைகளுக்கு கணினி மூலம் விண்ணப்பிக்கச் சொல்கிறார்கள். அவர்கள் மின்சாரம் இல்லாத தால் பெரும் பாதிப்புக்குள்ளா கிறார்கள். பலருக்கு பதிவுமூப்பு கூட பறிபோகிறது. இப்படி சொல் லிக்கொண்டே போகலாம்.

நிர்வாகப் புலி என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் முதல்வர்; சங்கரன்கோயில் இடைத்தேர்தலுக்கு 26 அமைச்சர்களையும் லாரி லாரி யாக மிக்ஸி, கிரைண்டர்களையும் அனுப்பும் முதல்வர் மின்வெட் டால் மக்களின் துயர் களைய எப்போது விழிப்பார்?

                                                                                                                                              - மின் பாலு
_________________________________________________________________________________
கூகுள் +

சமூகவலைத்தளங்களின் போட்டியினால் கூகுள் பிளஸ் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் Hangout எனும் வீடியோ அழைப்பை ஏற்படுத்தக்கூடிய புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதலில் நேரடியாக Google+ Hangout மூலம் உங்கள் கூகுள் பிளஸ் வட்டத்திலுள்ளவர்களுடன் மட்டும் வீடியோ சட்டிங் செய்ய முடியாது. எனினும் இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள இனந்தெரியாத 12 வரையானவர்களுடன் வீடியோ சட்டிங்கில் ஈடுபட முடியும்.
உங்கள் நண்பர்களுடன் Google+ Hangout ஐ பயன்படுத்தி வீடியோ சட்டிங்கில் ஈடுபட வேண்டுமாயின் Hangout நீட்சியை குரோமில் நிறுவ வேண்டும்.
அவ்வாறு நிறுவியதும் addressbarல் நீல நிற icon ஒன்று தோன்றும். அதில் கிளிக் செய்வதன் மூலம் Google+ Hangout ஐ இயங்க செய்து அந்த நேரத்தில் ஓன்லைனில் உள்ளவர்களை இனங்கண்டு அவர்களுடன் சட்டிங்கில் இணைந்து கொள்ள முடியும்.
Google+ Hangout இன் நன்மைகள்
1. விரைவாக சட்டிங்கில் இணைந்து கொள்ள முடிதல்.
2. அவசியமானவர்களின் வரிசையில் நண்பர்களை ஒழுங்குபடுத்த முடிதல்.
3. வரையறை அற்ற, வரையறைக்கு உட்பட்ட ஓன்லைன் சட்டிங் நடவடிக்கைகளை அறியக்கூடியதாக இருத்தல்.
4. பாதுகாப்பானதாக காணப்படுதல்.
_____________________________________________________________________________________________
கணினி விற்பனை 6.5 சதவிகிதம் சரிவு
இந்தியாவில் 2011 ஆம் ஆண்டின் அக் டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான் காவது காலாண்டில் கம்ப்யூட்டர்கள் விற் பனை முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட 6.5 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக கார்ட்னர் நிறுவனம் மேற்கொண்ட ஆய் வின் வாயிலாக தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு நான்காவது காலாண்டில் கணினி விற்பனை 25 லட்சமாக குறைந்துள்ளது.


இதில் டெஸ்க்டாப்கம்ப்யூட்டர்கள்விற் பனை மட்டும் 18 சதவிகிதம் சரிவடைந்துள் ளது என கார்ட்னர் நிறுவனத்தின் முதன் மை ஆய்வாளர் விஷால் திரிபாதி தெரி வித்துள்ளார். இதற்கு முக்கியக் காரணம், தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட வெள்ளத் தால் ஹார்டு டிஸ்க்குகள் போது மான அள வில் கிடைக்காததேஎனஅவர்மேலும் கூறியுள்ளார். அதே சமயம் நினைத்த இடத் திற்கு எடுத்துச் செல்லும் போர்ட்ட பிள் கம்ப்யூட்டர்கள் விற்பனை 12 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் கணினி விற்ப னையில் ஏற்பட்டிருக்க வேண்டிய அதிக சரிவு குறைந்துள்ளது.இந்தியாவில்கம்ப்யூட் டர்கள் விற்பனை யில் பன்னாட்டு நிறுவனங் கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் டெல், லினோவா, எச்.பி. மற்றும் ஏசர் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு மட் டும் 53.1 சதவீதமாக உள்ளது. அதே சமயம் நம் நாட்டைச் சேர்ந்த எச்.சி. எல். நிறுவனத் தின் பங்களிப்பு 5.5 சதவீத மாக மட்டுமே உள்ளது.
______________________________________________________________







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?