சில்லறை வர்த்தகம்;



அரசின் நயவஞ்சக நடவடிக்கைகள்
                                                                                                         -    கே.வரதராசன்
‘‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு

போகவோ? நாங் கள் சாகவோ?’’

என்று நாட்டிற்குச் சுதந்திரம் கிடைப் பதற்கு முன்னாடியே பாடினார் பாரதியார்.

இன்றைக்கு நாட்டில் உள்ள நிலைமை என்ன? விவசாயிகள் தற்கொலை, விவ சாயத் தொழிலாளர்கள் பட்டினிச் சாவு கள், குழந்தைகள் போதிய சத்துணவு இன்றி வாடி, மடியும் கொடுமை உலகி லேயே அதிக அளவில் நம் நாட்டில்தான் உள்ளது. நாட்டின் நிலைமைகள் குறித்து மிகவும் மோசமாக செய்திகள் வந்து கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், நாட்டின் ஐந்து மாநிலங்களில் தேர்தல் கள் நடந்து முடிந்த பின்னர், எப்படியாவது நாட்டிற்குள் சில்லரை வர்த்தகத்துறை யில் வால்மார்ட் போன்ற அந்நிய கார்ப்ப ரேட் நிறுவனங்களை இறக்கிவிட ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கம் திட்டங்கள் தீட் டிக்கொண்டிருப்பது தெரிய வந்திருக் கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதா னால், வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கையில் சில்லரை வர்த் தகத்தை ஒப்படைக்க - அதாவது இந்தி யாவை அந்நியனிடம் ஒப்படைக்க - ஐ.மு. கூட்டணி அரசாங்கம் தயாராகிக் கொண் டிருக்கிறது.


சில்லரை வர்த்தகத்தில் முதலில் 51 விழுக்காடு மட்டும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திட அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதன் பொருள், சில்லரை வர்த்தகத்துறை யானது அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கத்தின் கீழ் செல்லும்.

அடுத்து, பத்து லட்சத்திற்கும் மேற் பட்ட மக்கள்தொகையுடன், 10 கிலோ மீட் டர் பரப்பளவு கொண்ட மாநகர்களில் மட் டுமே அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கடை பரப்பிட அனுமதிக்கப்படும் என் றும் அரசுத்தரப்பில் சொல்லப்பட்டு வரு கிறது. இதன் பொருள், நாட்டில் சுமார் 53 மாநகர்களில் வார்மார்ட் போன்ற கார்ப் பரேட் நிறுவனங்களின் கடைகள் திறக்கப் படும். நாட்டின் வருமானத்தில் பாதிக்கும் மேல் இந்நகரங்களிலிருந்துதான் வரு கின்றன. இந்நகரங்களில் தற்போது இயங்கி வரும் உள்ளூர் சந்தைகளை அடி யோடு ஒழித்துக்கட்ட, அந்த இடங்கள் வால்மார்ட் வகையறாக்கள் ஆதிக்கத்தின் கீழ் வரும்.

அந்நிய நேரடி முதலீட்டாளர் கொண்டு வந்து முதலீடு செய்யும் தொகையின் குறைந்தபட்ச அளவு என்ன தெரியுமா? சுமார் 100 மில்லியன் டாலர்கள். (ஒரு டாலர் இன்றைய மதிப்பில் 50 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், சுமார் 500 கோடி ரூபாய்கள்). இத்தகையவர்களுடன் உள்ளூர் வர்த்தகர்கள் போட்டி போட முடியுமா?

அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்தபின், மாநில அரசுகள் விரும்பி னால் அவற்றிற்கு உரிமங்கள் தராமல் மறுக்க முடியும் என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங் கள் ஏற்கனவே நீதிமன்றங்களின் மூல மாக வர்த்தக உரிமங்களைப் பெற்று விட் டன. ஏதேனும் ஒரு மாநில அரசு, கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க மறுத்தால், வர்த்தகம் செய்வது அடிப் படை உரிமை என்று கூறி அவை நீதிமன் றங்களின் மூலம் அதனைப் பெற்றுவிடும்.

சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் பயனடைவார்கள் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இதுநாள்வரை அனைத்துக் கார்ப்பரேட் நிறுவனங்களும் பெரிய பணக்கார விவசாயிகளுடன்தான் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டிருக் கின்றனவே யொழிய, சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக வரலாறில்லை.

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு கோடி வேலை வாய்ப்பை உருவாக்கும் என்றும் கதையளக்கப்படுகிறது. இதற்கு எந்தவித அடிப்படையும் கிடையாது.

அடுத்து, அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது சிறிய விவசாயிகளுக்குப் பயன் விளைவிக்கும் என்று கூறுகிறார் கள். ஆனால் இவர்கள் சொல்லும் சிறிய விவசாயி யார் தெரியுமா? குறைந்தபட்சம் அவர் 10 ஹெக்டேர் (25 ஏக்கர்) நிலம் வைத்திருக்க வேண்டும். அந்நிய நேரடி முதலீட்டாளர்களை நம் நாட்டில் சூப்பர் மார்க்கெட்டுகளைத் திறக்க அனுமதிப் பதன் மூலம் அவர்களுடன் போட்டிபோட முடியாமல், நம் நாட்டில் உள்ள சில்லரை வர்த்தகர்கள் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். 
அந்நிய நேரடி முதலீட்டால் உருவாக் கப்படும் சூப்பர் மார்க்கெட்டுகளின் பொருள்களின் விலைகள் குறைவாக இருக்கும் என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது. இதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது. உலகில் எந்தவொரு நாட்டி லும் இதுபோல் விலை குறைந்ததாக வர லாறில்லை.

அதேபோன்று சூப்பர் மார்க்கெட் வேலைவாய்ப்பையும் கடுமையாகக் குறைத்திடும். தெருக்களில் கூவி விற் போர் 18 பேர் விற்கும் பொருள்களுக்கு ஈடாக, 10 சிறிய கடை வைத்திருப்போர் விற்பார்கள் என்றும், இதுவே பெரிய கடை யாக இருந்தால் 8 பேர் வேலையி லிருப்பார்கள் என்றும் இதே அளவிற் குள்ள பொருள்களை சூப்பர் மார்க் கெட்டில் விற்க 4 பேர் மட்டும் போதும் என்றும் வியட்நாமில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

எல்லாவற்றையும் விட அரசுத் தரப்பில் வைக்கப்படும் மாபெரும் பொய் என்ன தெரியுமா? இவை ஒரு கோடி பேர் களுக்கான வேலைவாய்ப்புகளை உரு வாக்குமாம். இது எப்படி என்று மட்டும் இவர்களால் சொல்ல முடியவில்லை. அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் நிறு வனத்தில் விற்கப்பட்ட சரக்குகளின் விலைமதிப்பு  400 பில்லியன் டாலர்களாகும். இதற்கு இவர்கள் நியமித் திருக்கும் நபர் களின் எண்ணிக்கை 2.1 மில்லியன் (21 லட்சம் பேர்). ஆனால் தற்போது இந்தியாவில் இந்த அளவிற் கான சரக்குகளை விற்றிட இங்கே

இருக்கும் 12 மில்லியன் ( 1 கோடியே 20 லட்சம்) கடைகளில் 44 மில்லியன் (4 கோடியே 40 லட்சம்) பேர் வேலைபார்த் துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு சில்லரை வர்த்தகத்துறை யில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கையில், இதனை அழித்திடும் வகையில் இவர்கள் வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங் களை இந்தியாவிற்குள் அனுமதிக்க துடித் துக் கொண்டிருக்கிறார்கள்.

இதேபோல் ஐரோப்பாவில், இங்கிலாந் தில் இயங்கிடும் இரு பெரிய சில்லரை வர்த்தக ஜாம்பவான்களான டெஸ்கோ மற்றும் சைன்ஸ்பரி  கடந்த இரண்டு ஆண்டுகளில் 24 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உரு வாக்கித் தருவதாக உறுதி அளித்தன. ஆனால் இவர்கள் அவ்வாறு வேலை வாய்ப்பை உருவாக்காதது மட்டுமல்ல, வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் களிலும் 850 பேரை வேலையிலிருந்து தூக்கி எறிந்திருக்கிறார்கள். இவ்வாறு தங்கள் நாடுகளிலேயே வேலை உத்தர வாதம் தராத இந்நிறுவனங்கள் இந்தியா வில் கூடுதலாக வேலை வாய்ப்பை அளித்திடும் என்று நம்ப முடியுமா?

மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, அந் நிய நேரடி முதலீட்டை சில்லரை வர்த்த கத்தில் அனுமதிப்பதன் மூலம், விவசாயி களின் வருமானம் 30 விழுக்காடு அதி கரிக்கும் என்று திருவாய் மலர்ந்திருக் கிறார். இதைவிடப் பெரிய பொய் வேறெ துவும் இருக்க முடியாது.

உதாரணமாக, அமெரிக்காவில், வால் மார்ட் நிறுவனம் கொள்முதல் செய்யும் விவ சாயிகள் அபரிமிதமான அளவிற்கு வரு மானம் ஈட்டினால், பின் எதற்கு அமெரிக்க அரசாங்கம் அந்த விவசாயிகளுக்கு, 2008ஆம் ஆண்டு அமெரிக்க பண்ணை சட்டமுன்வடிவின்கீழ் 307 பில்லியன் டாலர்கள் மானியமாக அளித்திட வேண் டும்? இவ்வாறு அடுத்த ஐந்தாண்டு களுக்கு அது கொடுத்திருக்கிறது.
இந்த மானியங்கள் நிறுத்தப்படும் எனில், அமெரிக்க விவசாயமே நிர்மூல மாகிவிடும் என்று கூறுகிறார்கள். இவ் வாறு அமெரிக்காவின் விவசாயமே, அர சாங்கம் அளித்திடும் மானியத்தால் உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.
எல்லாவற்றையும்விட மிகவும் அதிர்ச் சியளிக்கும் ஓர் ஆய்வு என்னவெனில், பென்சில்வேனியா மாநில பல்கலைக் கழகம், ‘‘வால்மார்ட்டும் வறுமையும்’’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வினை மேற் கொண்டிருக்கிறது. இதன்படி 1987களில் அமெரிக்காவில் எங்கெல்லாம் வால் மார்ட் ஸ்டோர்கள் இருந்தனவோ அங் கெல்லாம் 1999வாக்கில் மற்ற இடங் களைவிட வறுமையின் கொடுமை அதிக மாக இருந்ததாகக் கண்டறிந்திருக்கிறது.
எப்படி எந்த விதத்தில் பார்த்தாலும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை விளைவிக்காத இந்த முடிவைத்தான் அரசாங்கம் கொண்டு வர முயசித்துக் கொண்டிருக்கிறது.                                                                                      

                                                                                     நன்றி:தீக்கதிர்,

____________________________________________________________________

ஐன்ஸ்டீன் -ஒரு நினைவு.
1879ம் ஆண்டு மார்ச் 14ல் ஜெர்மனியில் பிறந்தவர் ஆல்பிரட் ஐன்ஸ்டீன், இயற்பியல் மீது ஏற்பட்ட காதலால் இயற்பியல் வல்லுனரானார். உலகை மாற்றி அமைத்த சார்புக் கோட்பாடு, பிரவுனியன் இயக்கம், ஒளி மின் விளைவை கண்டுபிடித்து அறிவியல் உலகை புது வழியில் செலுத்தியது ஐன்ஸ்டீன் தான். இதற்காக, 1921ம் ஆண்டு கோட்பாட்டு இயற்பியலில் நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
"E=mc2" ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்புகளில் இந்த ஆற்றல் சமன்பாடு தலையானது. எந்த ஒரு பொருளும் ஓய்வு நிலையிலோ அல்லது இயங்கு நிலையிலோ இருக்கும் போது, அது குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டிருக்கும் என்பதுதான் இந்த சமன்பாடு சுருக்கம். E=mc2 சமன்பாட்டை 1905ம் ஆன்டு ஐன்ஸ்டீன் வெளியிட்டார். 1905ம் ஆண்டு ஐன்ஸ்டீன் வெளியிட்ட இந்தமூன்று ஆய்வு முடிவுகள் நூறாண்டை சமன் செய்ததன் நிறைவை குறிக்கும் வகையில் 2005ம் ஆண்டு சர்வதேச இயற்பியல் ஆண்டாக கொண்டாடப்பட்டது.
ஐன்ஸ்டீன் சிறந்த பேச்சாளர், அவரது பேச்சு பல தரப்பினரிடையே விவாதத்தை உருவாக்கும் வகையில் இருக்கும். ""பிரபஞ்சத்தை படைத்ததில் கடவுளுக்கு மாற்று ஏதேனும் உண்டா?'',இதுவரை கடவுள் உணரப்படவில்லை.
 ""மூன்றாம் உலகப் போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என எனக்கு தெரியாது. ஆனால் நான்காம் உலகப் போரில் மக்கள்கம்புகளையும், கற்களையும் தான் பயன்படுத்துவார்கள்'' என இவர் கூறிய வாக்கியங்கள் அக்கால ஆட்சியில் அதிகாரம் செலுத்திய மத குருக்கள், கடவுள் நம்பிக்கையை வைத்து பிழைப்பு நடத்தியவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பை கிளப்பியது.
ஐன்ஸ்டீன், மரணப்படுக்கையில் இருக்கும் போதும்கூட,  ஏதாவது கணிதம் - இயற்பியல் தொடர்பான புதிய கருத்துக்களைப் பற்றிஆராய்ந்து கொண்டே இருந்தார். இவரது மரணத்திற்கு பின், தாமஸ் ஹார்வி என்ற ஆய்வாளர் இவருடைய மூளையை ஆய்விற்காக எடுத்து வைத்துக் கொண்டதாகவும், அது இன்று வரை அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் மருத்துவமனை பாத்தாலஜி (நோயியல்) பிரிவில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. இயற்பியல் மட்டுமல்லாமல், அறிவியலில் இவர் ஆற்றிய பங்கை சிறப்பிக்கும் வகையில் சென்ற நூற்றாண்டின் சிறந்த மனிதர் என "டைம்ஸ்' நாளிதழ் இவருக்கு பட்டம் அளித்தது. ஐன்ஸ்டீன் 1955ம் ஆண்டு ஏப்ரல் 18ல் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டனில் தனது உலக வாழ்வை முடித்துக்கொண்டார்.
______________________________________________________________________


விண்டோஸ்-8

 மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பின் சோதனைத் தொகுப்பான விண்டோஸ் 8-ஐ,  வெளியிட்டுள்ளது.இது வெளியான முதல் நாளே, பத்து லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில்  தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனைப் பெற விரும்புபவர்கள் http://windows.microsoft.com/ enUS/windows8/download என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இச் சோதனைப் பதிப்பினைப் பதிந்து இயக்கம் பற்றி அறிந்துகொள்ள http://news.cnet.com/830110805_35738793375/canmypcrunthewindows8betatestbuild/ ஐ பார்க்கலாம்.
இந்த சோதனை பதிப்பு, விண்டோஸ் இயக்கத்திற்கென அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரிப்பவர்களுக்கென தரப்பட்டது. இருப்பினும், விரும்பும் யார் வேண்டுமானாலும், இறக்கிக் கொள்ளும் வகையில் இந்த பதிப்பு கிடைத்தது. 


விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் புதிய வசதிகள் எவை என இங்கு பார்க்கலாம்.
ஒரு முற்றிலும் புதிய கம்ப்யூட்டிங் அனுபவத்தினைத் தருவதாக விண்டோஸ் 8 இருக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது போலவே அனைத்தும் புதிய, எதிர்பாராத அனுபவங்களே இந்த சிஸ்டம் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் விண்டோஸ் சிஸ்டத்தில் நாம் கற்பனையில் கூட பார்க்க இயலாத விஷயங்கள் இப்போது கிடைக்கின்றன. ஸ்டார்ட் பட்டனுடன் ஸ்கிரீன், வால் பேப்பர், பைல்களுக்கான ஐகான் என இருந்து வரும் டெஸ்க்டாப் முற்றிலும் மாற்றம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதனை மெட்ரோ (Metro) என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. சிறிய ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டது போல தோற்றத்திரை கிடைக்கிறது. இதனை கீ போர்ட், மவுஸ் வழியாக மட்டுமின்றி, தொடுதிரையாகவும் இயக்கலாம். இதனால் இந்த இன்டர்பேஸ் வகையை, டெஸ்க்டாப் பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்தலாம். இதுவரை கீ போர்ட், மவுஸ் இயக்கியவர்கள், இனி படிப்படியாக தொடுதிரைக்கு மாறிவிடு வார்கள். ஸ்டார்ட் பட்டனுக்குப் பதிலாக, ஸ்டார்ட் ஸ்கிரீன் கிடைக்கிறது. இடது கீழாக முன்பு ஸ்டார்ட் பட்டன் இருந்த இடத்தில், மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய ஸ்டார்ட் ஸ்கிரீன் பாப் அப் ஆகிறது. அல்லது அந்த இடத்தில் ரைட் கிளிக் செய்தால், ஏற்கனவே நாம் பழகிப் போன Programs and Features, Network Connections, Device Manager, Command Prompt, Task Manager, Control Panel, Windows Explorer, Search, மற்றும் Run ஆகிய பிரிவுகள் கிடைக்கின்றன. 
விண்டோஸ் 8 இயக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் ஒன்று சார்ம்ஸ். சிஸ்டம் கமாண்ட்ஸ் மற்றும் செட்டிங்ஸ் அண்ட் சர்ச் (Settings, Search, Devices) என முக்கிய கட்டளைப் பெட்டிகள் இங்கு கிடைக்கின்றன. உங்கள் விரலை அல்லது மவுஸ் கர்சரை, திரையின் மேல் வலது மூலைக்குக் கொண்டு சென்றால், சர்ச் மற்றும் ஷேர் வசதியுடன், மற்ற சாதனங்கள் மற்றும் செட்டிங்ஸ் மேற்கொள்ள வழி கிடைக்கிறது. இவை உங்கள் அப்ளிகேஷன்களை இணைத்தும் இயக்குகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் இணையத்தில் உலா வந்து கொண்டி ருந்தால், அதில் கிடைக்கும் லிங்க் ஒன்றை உங்கள் நண்பர்களுக்குத் தெரிவிக்க எண்ணினால், இந்த சார்ம்ஸ் மீது தடவினால் போதும். உடனே உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராம் திறக்கப்படும். அல்லது பேஸ்புக், ட்விட்டர் போன்ற புரோகிராம்கள் இயக்கப்படும். வழக்கமான இடது புறம் கீழாக உள்ள ஸ்டார்ட் பட்டன் இல்லை.
இதில்அதிக எண்ணிக்கையில் நமக்கு பலவகை யான செட்டிங்ஸ் வழிகள் கிடைக்கின்றன. குறிப்பாக டேப்ளட் பிசிக்களில் கிடைப்பது போல இவை தரப்பட்டுள்ளன. 


 இரண்டு கேம்ஸ் இணைந்து தரப்படுகின்றன. பின்பால் (Pinball FX 2) மற்றும் சாலிடேர் கிடைக்கின்றன. சாலிடேர் விளையாட்டை திரையைத் தொட்டு விளையாட முடிகிறது.  சில எக்ஸ்பாக்ஸ் கேம்ஸ், லைவ் ஹப் என நம்மை இழுக்கும் விஷயங்கள் இதில் கிடைக்கின்றன. முழுமையாக வெளியிடப்படுகையில் இன்னும் அதிகமாக இதில் கிடைக்கும் என தெரிகிறது.
அன்றைய பருவநிலை காட்டும் வசதி, கிடைக்கிறது. பருவநிலைக்கான மேப் ஆகியவையும் அழகாகக் காட்டப்படுகின்றன. இதே போல மேப்ஸ் வசதியும் தரப்பட்டுள்ளது. பி.டி.எப். மற்றும் எக்ஸ்.பி.எஸ். பைல்களைக் கையாள, இதனுடன் ஒரு ரீடர் தரப்படுகிறது. சில அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டி ருந்தாலும், சிஸ்டத்தில் இணைத்துத் தரப்படுவது குறிப்பிடத்தக்கது.
அப்ளிகேஷன்களுக்கான டைல்ஸ் திரையை ஆக்ரமித்துக் கொண்டிருந்தால், நாம் இயக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களை எங்கு பார்ப்பது? ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம் களை இயக்குகிறீர்களா! அவற்றைப் பார்க்க வேண்டுமா? சிலவற்றின் இயக்கத்தினை நிறுத்த வேண்டுமா? உங்கள் விரலை அல்லது கர்சரை திரையின் இடது மேல் மூலைக்குக் கொண்டு செல்லுங்கள். கிளிக் செய்தவுடன், அப்போது நீங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம் கள் காட்டப்படும். எந்த புரோகிராமினை நிறுத்த வேண்டுமோ, அதனை இழுத்து வந்து கீழாக விட்டுவிட்டால் போதும். நிறுத்தப்படும். 
நாம் இயக்கும் புரோகிராம்கள் குறித்து இன்னும் அறிய கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு, மவுஸ் வீலைச் சுழற்றுங்கள். உங்களுக்கு செமாண்டிக் ஸூம் கிடைக்கும். உங்கள் அனைத்து அப்ளிகேஷன்கள் குறித்தும் ஒரு மேம்போக்கான தோற்றம் கிடைக்கும். இவற்றைக் குழுவாக அமைக்கலாம்; அவற்றின் பெயரை மாற்றலாம். 
உங்களுடைய அப்ளிகேஷன்கள் குறித்த அண்மைக் காலத்திய மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் Toast notifications எனத் தரப்படுகின்றன. இதில் கிளிக் செய்தால், நேரடியாக அவற்றிற்குச் செல்லலாம். அல்லது கவனிக்காமல் விட்டுவிட்டால், சிறிது நேரத்தில் தானாகவே மறைந்துவிடும்.
போட்டோ லைப்ரேரி: போட்டோஸ் அப்ளிகேஷனில் கிளிக் செய்தால், பிரபலமான பேஸ்புக் மற்றும் பிளிக்கர் (Facebook and Flickr) தொடர்பு ஏற்படுகிறது. ஸ்கை ட்ரைவும் இதில் காட்டப்படுகிறது. எங்கு உங்கள் போட்டோக்கள் இருக்கின்றன வோ, அங்கு சென்று தொட்டு தடவி, அல்லது மவுஸ் கிளிக் செய்து, தேவைப்பட்ட மாற்றஙக்ளை மேற்கொள்ளலாம். 
விண்டோஸ் 8 சிஸ்டம் காட்டும் பைல் ட்ரான்ஸ்பர் டயலாக் பாக்ஸ் சிறப்பான மாற்றங்களைக் கொண்டுள்ளது. பைல் மாற்றப்படும் வேகம், மாற்றுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம் எனக் காட்டுவதோடு, டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிய சிறப்பான வசதிகளையும் கொண்டுள்ளது. 
விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் கிடைக்கும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10, முற்றிலும் புதிய தோற்றம் மற்றும் பயன்பாட்டுடன் உள்ளது. திரையின் முழு இடமும் நம் இணைய தளப் பக்கங்களுக்கே தரப்பட்டுள்ளது. டேப்களும் மற்ற கண்ட்ரோல் ஸ்விட்ச்களும் நமக்குத் தேவைப்படும் போது தலையைக் காட்டிப் பின்னர், பின்னணியில் சென்று விடுகின்றன. பிரவுசரின் இயங்கும் வேகம் இதுவரை இல்லாத அளவில் உள்ளது. புதிய பிரவுசர்களுக்கான தரம் மற்றும் வரையறைகளுடன், எச்.டி.எம்.எல்.5 சப்போர்ட் செய்திடும் வகையில், இது இயங்குகிறது. 




கணினிஇயக்கத்தில் பிரச்னை ஏற்பட்டு, விண்டோஸ் புதியதாகப் பதிந்து இயக்கப்பட வேண்டும் என்றால், சிஸ்டம் சிடி தேடி அலைய வேண்டியதில்லை. எந்த பைலையும் இழக்காமல், மீண்டும் இன்ஸ்டால் செய்திட, இதிலேயே வசதி தரப்பட்டுள்ளது. 
விண்டோஸ் டிபன்டர் (Windows Defender) கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் எது நுழைந்தாலும், உடனே அதனை அறிந்து நீக்கிடும் வேலையை மேற்கொள்கிறது. நம்மிடம் வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இருந்து, நாம் அதனை இயக்கினால், விண்டோஸ் டிபன்டர் பின்னணிக்குச் சென்று அமைதியாக இருந்து விடுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் விண்டோஸ் 8  ஒரு வெள்ளோட்ட பதிப்புதான். மேம்பட்ட பதிப்பு விரைவில் வெளியாகும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
__________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?