இன்று போய் நாளை வா !


வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகில் உள்ள ஏலகிரி மலை அத்தனாவூரில் சில நாட்களுக்கு முன்,ஒரு ரத்த காட்டேரி வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ளவர்களின் ரத்தத்தை குடித்து விட்டு சென்று விடுவதாக வதந்தி வேகமாக பரவியது. இவ்வதந்தியில் பயந்த, ஏலகிரி மலையடிவாரமக்கள் அருகில் உள்ள காளி கோவிலில்,  இரவு குறி கேட்டனராம். காளியிடம் யோசனைகேட்ட,  கோவில் பூசாரி முனியப்பன், ""வீடுகளுக்கு முன், "இன்று போய் நாளை வா' என சிகப்பு கலரில் எழுதி விட்டால், நள்ளிரவில் வரும் ரத்த காட்டேரி அதை படித்து விட்டு [?]வீட்டுக்குள் வராமல் போய் விடும்,'' என்று கூறினார்.
இதையடுத்து ஏலகிரி மலையில் உள்ள அத்னாவூர், நிலாவூர், மலைக்கு கீழே உள்ள ஏலகிரி, கோடியூர், ஜோலார்பேட்டை, நாட்டறாம்பள்ளி, முகமதுபுரம் உள்பட, 20 கிராமங்களில் உள்ள மக்கள் வீடுகளுக்கு முன், "இன்று போய் நாளை வா' என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளனர். ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் கிராமத்தில் உள்ள, 1,200 வீடுகளில், இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதற்காக, திருப்பத்தூரில் இருந்து பெயிண்டர்களை வரவழைத்து, சிகப்பு கலரில் வீட்டின் முன், வாசகத்தை எழுதியுள்ளனர். அவர்கள், ஒரு வீட்டின் முன் வாசகம் எழுத, 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.காட்டேரியை விட அதிக கொடுமை இந்த கட்டணம்.
 
இது குறித்து கோட்டியூர் கிராம நாட்டாண்மை கணேசமூர்த்தி, ""ரத்த காட்டேரி இருப்பது உண்மைதான். அதனால், 250 ரூபாய் செலவு செய்வு இந்த வாசகத்தை எழுதி வைத்து விட்டேன்,'' என்றார்.
ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள காளி கோவிலில், ரத்த காட்டேரியை விரட்ட சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. இதில், கலந்து கொள்பவர்கள் கோழியை பலி கொடுத்து காளிக்கு படைக்க வேண்டுமாம். இதனால் கோழிகளை பலர் பலி கொடுத்துவருகின்றனர். இதனால், ஏலகிரி மலை, ஜோலார்பேட்டை பகுதிகளில் கோழி விலையும் பயங்கரமாக ஏறிவிட்டது.கிடைப்பதும் அரிதாகிவிட்டது.
,இப்போது அப்பகுதியில் உள்ள20 கிராமங்களில் உள்ள மக்கள் வீட்டின் முன், "இன்று போய் நாளை வா' என்று வாசகம் எழுதி வைத்து விட்டு, தூங்காமல் முழித்துக்கொண்டிருக்கின்றனர். 



சரி இந்த 20 கிராமங்களிலும் இப்படி எழுதியிருப்பதை படித்து விட்டு 21 வது கிராமம் போய் விட்டதா காட்டேரி.அதுவும் சரி காட்டேரிக்கு எழுதபடிக்க தெரியுமா-தமிழ் தெரியுமா என்று யாராவது குறி கேட்டார்களா?
இடையிடையே தமிழக மக்களிடையே அவர்களின் அறியாமையையும் -பயத்தையும் தூண்டிவிட்டு இப்படியான வதந்திகளை கிளப்பி பணம் செய்வது சிலரின் வியாபார நுணுக்கமாகி விட்டது.
பச்சை சேலை கட்டாவிட்டால் கணவனுக்கு நல்லதல்ல,சிகப்பு சேலை கட்டாவிட்டால் மகனுக்கு நல்லதல்ல.மஞ்சள் சேலை கட்டாவிட்டால் உடன் பிறப்புக்கு நல்லதல்ல என்று வதந்திகள் கிளம்புவதும் ஊரெல்லாம் ஒரே வண்ணத்தில் பெண்கள் சேலையைக்கட்டிக்கொண்டு திரிவதும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை போல் நடக்கிறது.
இப்படி வததியை கிளப்புவது அந்த கலர் சேலையை விரும்பும் பெண்களா,அல்லது அந்த கலர் சேலை விற்காமல் முடங்கியுள்ள கடைக்காரரா என்றுதான் தெரிய வில்லை.அதை கட்டாத தால் யாரும் இறந்த தாகவோ,விளங்காமல் போனதாகவோ தெரிய வில்லை.
தலை இல்லாமுண்டம்,வீடுக்கு,வீடு தாவும் மனிதன்,இரவில் கையில் குழந்தையுடன் தலையை விரித்து போட்டு திரியும் இளம் பெண் இது போன்ற கதைகள் அவ்வப்போது உலா வரும்.
இப்போது ரத்தக்காட்டேரி.

இந்த ரத்தக்காட்டேரியை உருவாக்கியது அநேகமாக அந்த மலைப்பகுதியில் மரம் கடத்தும் காட்டேரி கும்பல்களாகக் கூட இருக்கலாம்.
அல்லது மற்ற மலைப்பகுதியில் சட்ட விரோத செயல்கள செய்யும் கும்பல்களாகத்தான் இருக்கும்.
வனத்துறையினரும்,காவல்துறையினரும் அலுவலகத்தில்'இன்று போய் நாளை வா"எழுதிக்கொண்டு உள்ளே முடங்காமல் காவல் சென்றால் பல காட்டேரிகள் கையும் களவுமாக சிக்க வாய்ப்பிருக்கிறது.
மற்ற பகுதி 'டல்" அடிக்கும் ஓவியர்களும்-கோழிக்கடைக்காரர்களும் தங்கள் பகுதிக்கும் இந்த வதந்தியை இறக்குமதி செய்தால் தொழிலை அதிகரிக்கலாம்.
------------------------------------------------------------------------------------------------------------

மன்னிப்பு கடிதமா?


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தாக்கல் செய்த இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தில் ‘சமநிலையான அம்சங்களை’ அறிமுகப்படுத்துவதற்கு இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதமொன்றிலேயே மன்மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா -தமிழர்கள் நெருக்கடியில் ஆதரவு தெரிவித்து விட்டு இப்போது எதற்காக பக்‌ஷேக்கு கடிதம் எழுத வேண்டும்.மன்னிப்பு கோரும்முகமாகவா? அல்லது இன்னும் நாங்கள் உங்கள் ஆதரவான நிலையில்தான் உள்ளோம்.இந்த தீர்மான ஆதரவெல்லாம் சும்மா தில்லாலங்கடிக்காக என்ற சுய விளக்கமா?

_________________________________________________________________________________

ஆஸ்பிரின் -புற்று நோயைத்தடுக்கும்

குடல் ரத்த கசிவை உண்டாக்கும்.

மருத்துவ இதழான த லான்சட் இல் வெளியாகியுள்ள ஆய்வுஅறிக்கை, ஆஸ்பிரின் மருந்து புற்றுநோய்க்கு எதிரான சில இயல்புகளைக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆஸ்பிரின்

மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்காக பலர் தினந்தோறும் ஆஸ்பிரின்
எடுத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளது.ஆஸ்பிரின்  புற்றுநோயையும் அதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளையும் தடுக்கக்கூடியது என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லையெனவும், அதனால் வயிற்றில் இரத்தப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் அதிகரிக்கலாம் என்றும் ஏற்கனவே நிபுணர்கள் எச்சரித்தனர்.

3-5 ஆண்டுகளில் முன்னேற்றம்

ஆனால் தற்போதைய புதிய ஆய்வை நடத்திய ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் ரொத்வேல், அஸ்பிரினால் சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று முன்னரே தெரிவித்திருந்தார்.- 10 ஆண்டுகள் போன்ற நீண்டகாலப்போக்கிலேயே ஆஸ்பிரின் மருந்தினால் நல்ல பலன்களைக் காணமுடியும் என்றும் அப்போது கூறப்பட்டது.
ஆனால் தற்போது 77 ஆயிரம் பேருக்கும் அதிகமான நோயாளிகளிடத்தில் நடத்தப்பட்ட 51 பரீட்சார்த்த ஆய்வுகளின்போது ஆஸ்பிரின் மருந்தினால் 3 இலிருந்து 5 ஆண்டுகள் வரையான காலப்பகுதிக்குள் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று பேராசியர் பீட்டர் ரொத்வேல் தலைமையிலான விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பல்வேறுபட்ட புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களை ஆஸ்பிரின் குறைப்பது மட்டுமன்றி, புற்றுநோய்கள் உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதையும் அதனால் தடுக்கமுடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைப்பேர், உயிரிழந்தவர்கள் எத்தனைப்பேர் என்பதற்கும் அவர்களின் ஆஸ்பிரின் உபயோகத்துக்கும் இடையே தொடர்பு இருக்கின்றமையே இந்த ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
75 முதல் 300 மைக்ரோ கிராம் வரை தினந்தோறும் அஸ்பிரின் உட்கொண்டவர்களிடத்தில் நடத்திய ஆய்வில் புற்றுநோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் கால்வாசிப் பங்களவு குறைந்திருந்தது.
புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் 5 ஆண்டு காலப்போக்கில் 15 வீதத்தால் குறைந்திருப்பதாகவும் அவ்வாறே ஐந்தாண்டுகளுக்குப் பின்னரும் அவர்கள் ஆஸ்பிரினை தொடர்ந்தும் எடுத்துக்கொண்டால் உயிரிழப்புகளின் வீதத்தை மேலும் 37 வீதத்தால் குறைக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆனால் வயிற்றுக்குள் இரத்தக் கசிவுகள் ஏற்பட இந்த நீண்டநாள் ஆஸ்பிரின்உபயோகம் ஒரு காரணமாவதாக காட்டப்படுகிறதையும் நாம்இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
 ஆரோக்கியமான மனிதர்கள் புகையிலைஎவ்விததிலும் உபயோகிப்பதை கைவிடுதல், உடற்பயிற்சி செய்தல் போன்ற வழிமுறைகள் மூலம் புற்றுநோய் ஆபத்துக்களை தடுக்க முடியும் என்பதுதான் எளிதில் புற்று நோயை தடுக்கும் வழிகள் ஆகும்.
சுவிட்சர்லாந்தில் வேட்டையாடிய நரிகளுடன் திரும்புவர்கள்.இந்நரிகளுக்கு கிழக்கு ஐரோப்பிய,சீன நாடுகளின் சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.பாவம் இந்த நரிகள் யார் முகத்தில் விழித்ததோ?
ஒரு புகைப்படம் வரை படமாகியுள்ளது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?