மின் அதிர்ச்சி


 பாகிஸ்தானில் நிலவும் கடுமையான மின் பற்றாக்குறையையும், இதன் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பையும் மன் மோகன்சிங்கிடம் கூறிய கிலானி, இதை சமாளிக்க இந்தியா உதவ வேண்டும் என்று வேண்டினார்.
கிலானியின் கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தானுக்கு 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உடனடியாக வழங்க, மன்மோகன்சிங் ஒப்புக் கொண்டார். அவசர கால தேவை அடிப்படையில் இந்த மின்சாரம் வழங்குவதாகவும் அந்த மின்சாரம் பஞ்சாப் மின்பாதை வழியாக, பாகிஸ்தானுக்கு விரைவில்அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக , கிலானி நன்றி தெரிவித்துக் கொண்டார். 
இங்கு தமிழ்நாடு இருளில் கிடக்கிறது.அதற்கு ஒரு மத்திய அமைச்சர் மின்சாரம் தர வாய்ப்பில்லை என்கிறார்.
அண்டை நாடு அதுவும் நம் மீது வன்மம் மனதில் கொண்ட நாடுக்கெல்லாம் மின்சாரம்.சொந்த நாட்டில் ஒரு மாநிலத்துக்கு மின்சாரம் கிடையாதா/
இதில் இன்னொரு உண்மையும் இருக்கிறது.

மின் தட்டுப்பாட்டை விலக்கி கிலானி கெஞ்சும் குரலில் கேட்டு பெற்றுக்கொண்டார்.நமது முதல்வரோ வாயை திறந்து கேட்டதாகவே தெரியவில்லை.விட்டால் மத்திய அரசு ஒதுக்குகிறது என்கிறார்.
ஆனால் கருணாநிதி ஆட்சி காலத்தில் மத்திய அரசிடம் இருந்தும் மற்றைய மாநில அரசுகளிடமிருந்தும் மின் சாரத்தைப் பெற்று இரண்டு மணி நேரம் தடை மட்டுமே.அதுவும் காலையில் மட்டும் என்றும் சென்னையில் அதுவும் இல்லாத நிலையை வைத்திருந்தார்.
ஆனால் இவ்வம்மையாரோ மத்திய அரசிடம் கேட்பதே கவுரவத்திற்கு இழுக்கு என்ற எண்ணத்தில் இருக்கிறார்.மற்றைய மாநிலங்களிலும் வாங்க மறுக்கிறார்.

அது ஏன் ? மின் தடை என்று தமிழ் நாடு முழுக்க அலறுகிறார்களே.அப்படி என்றால் என்ன என்பதுபோல் அதைப்பற்றியே கண்டு கொள்ளாமல்.வாயை திறக்காமல் அல்லவா இருக்கிறார் முதல்வர்,வாயைத்திறந்தால் அடுத்த தலைவர்களை கருணாநிதி,நடிகர் விஜய்காந்து போன்றவர்களை தாக்கவும்-சவால் விடவும்தானே.
அவரை குறை கூறுவது கூட தவறு.இவ்வளவு மின் தடை,,பேருந்து கட்டண உயர்வு,பால் விலை உயர்வு,வரிகள்,விலைவாசி உயர்வு போன்றவை இருந்தும் ஒரு இடைத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக வாக்கு பொத்தானை இரட்டை இலைக்கே போட்டு மற்ற கட்சியினரை காப்புத்தொகையை இழக்க வைத்த மக்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் தினமும் கேப்பையில்  நெய்யும் வடியும்- பணியார மழையும் பெய்யத்தானே செய்யும்.?
மின் கட்டண உயர்வு வரும் மாதம் முதல் இருக்கும்.
ஆனால் மின்சாரம் மட்டும் இராது.

ஏப்ரல் 1 - ம் தேதி ஞாயிற்றுக் கிழமை
 [முட்டாள்கள் தினத்தில் இருந்து]
 முதல் தமிழகத்தில் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் என்ற பெயரில்அறிவித்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு இரண்டு மாதத்துக்குமாக, 
• 100 யூனிட் வரை ரூ. 2.60 .
(அரசு மானியம் ரூ.1.60 - நுகர்வோர் கட்டணம் ரூ.1.10). {தற்போது 1 யூனிட் 85 பைசா.} 
• 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை ரூ. 2.80
(அரசு மானியம் ரூ.1.00 - நுகர்வோர் கட்டணம் ரூ.1.80) 
• 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை ரூ.4.00
(அரசு மானியம் 50 பைசா - நுகர்வோர் கட்டணம் ரூ.3.50). இதில், முதல் 200 யூனிட்களுக்கு ரூ. 3-ம், 201 வது யூனிட்டிலிருந்து 500 யூனிட் வரை ரூ. 4-ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

• 500 யூனிட்டுகளுக்கு மேல்- ரூ.5.75 (இதில் அரசு மானியம் கிடையாது). 



• ஒவ்வொரு நுகர்வோரும் 2 மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் சார்ஜ் என்ற முறையில் ரூ. 20 கூடுதலாக அரசுக்கு தண்டம் செலுத்த வேண்டும். 


• வாடகை வீட்டில் குடியிருப்போரின் சப் மீட்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் வாடகை வீட்டில் குடியிருப்போர் அதிகளவு கட்டணம் செலுத்தும் கட்டாயத்துக்கு ஆளாவார்கள்.
தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டணம் 37 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு வரும், ஏப்ரல் 1- முதல் அமலுக்கு வருகிறது.

இந்த மின் கட்டண உயர்வு மக்களை பாதிக்காது.அவர்கள் முன்பு செலுத்தியதை விட குறைவாகவே கட்ட வேண்டிய நிலைதான் வரும். மக்கள் இக்கட்டண உயர்வால் பாதிப்படையக்கூடாது என்பதால்.ஏப்ரல் முதல் மின் தடை 12 மணி நேரமாக்கப்படும்.இதனால் மக்கள் மின் கட்டணம் அதிகமாக அழவேண்டிய நிலை ஏற்படாது என தாயுள்ளத்துடன் முதல்வர் புரச்சித்தலைவி தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இந்த மின் கட்டண உயர்வு மூலம் தமிழ் நாடு அரசுக்கு ஆண்டிற்கு ரூ.7874 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் அரசுக்கு கிடைக்கும் ,

 இதில் இன்னொரு கொடுமை.மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஆண்டுக்கு ரூ.9742 கோடி வருமானம் கிடைக்கும் அளவிற்கு மின் கட்டண உயர்வு இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. 
_____________________________________________________________________________________________
டாலரை கை கழுவ  முடிவு-                                          பிரேசில்-ரஷ்யா-இந்தியா-சீனா-தென் ஆப்பிரிக்கா இணைந்து புதிதாகவளர்ச்சி வங்கி உருவாக்க திட்டம் 
அமெரிக்காவில் மையங் கொண்ட முதலாளித்துவ பொருளா தார நெருக்கடி மேலும் மேலும் ஆழமாக தீவிரமடைந்துவரும் நிலையில், தங்களது பொருளாதா ரங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முகமாக தங்கள் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பரிவர்த்த னையில் டாலரை கைவிடுவது என ‘பிரிக்ஸ்’ நாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவி னை எட்டியிருக்கின்றன. 


உலகின் மக்கள்தொகையில் 40 சதவீதம் பேரை கொண்டிருக் கிற பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்ட மைப்பான ‘பிரிக்ஸ்’ மேற்கொண் டுள்ள இந்த முடிவு உலக அரங் கில் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தியுள்ளது.

டாலரை கைவிடுவது மட்டு மின்றி, புவிக்கோளத்தின் தெற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள மேற் கண்ட ஐந்து நாடுகளும் இணைந்து ‘பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி’ அல்லது ‘தெற்கு வளர்ச்சி வங்கி’ என்ற புதியதொரு வங்கி கட்டமைப்பை உருவாக்குவது என்றும் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பாக அனைத்து சாத்தியக்கூறுகளை யும் உடனடியாக ஆய்வு செய்து பணிகளைத் துவக்குமாறு தங்க ளது நிதியமைச்சகங்களுக்கு உத் தரவிடுவது என்றும் முடிவெடுத் துள்ளன.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள், உலகெங்கிலும் உள்ள வளர்முக நாடுகள் மீது தங்களது பொருளாதார நெருக்கடியை மடை மாற்றம் செய்துவிட்டு, தாங்கள் மட்டும் தப்பித்துக்கொள்ள தீவிர மான முயற்சிகளில் ஈடுபட்டுள் ளன. மேலும் நெருக்கடியால் துரத் தப்படும் அமெரிக்க ஏகாதிபத்திய மும் அதன் மேற்கத்திய கூட்டாளி களும், அதிலிருந்து மீள்வதற்கு உலகம் முழுவதிலும் உள்ள எண் ணெய் வளத்தை கபளீகரம் செய்வ தற்கு கடும் முயற்சி மேற்கொண் டுள்ளன. இதற்காக லிபியா, சிரியா, ஈரான் என வரிசையாக போர் முழக் கம் செய்துகொண்டிருக்கின்றன. இதனால் உலக எண்ணெய் வளம் கடும் அச்சுறுத்தலின் பிடியில் சிக்கியுள்ளது.

இந்தப்பின்னணியில் லத்தீன் அமெரிக்க நாடுகள் தங்களுக்கி டையே கூட்டமைப்பை உருவாக்கி தங்களது சொந்த நாணய மதிப் பின்அடிப்படையிலேயே வர்த்த கத்தை மேற்கொள்வது உள்ளிட்ட பல முடிவுகளை அமலாக்கி வரு கின்றன.


பிரிக்ஸ் உச்சி மாநாடு
, கடந்த சில ஆண்டுகளாக வளர்முக நாடுக ளின் நலன் காக்கும் நோக்கில் சர்வதேச அரங்கில் முனைப் போடு செயலாற்றி வரும் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 4வது உச்சி மாநாடு புதுதில்லியில் வியாழ னன்று நடைபெற்றது.

பிரேசில் ஜனாதிபதி டில்மா ரூஸெப், ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சீன ஜனாதிபதி ஹூ ஜிண்டாவோ மற்றும் தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா ஆகிய தலைவர்கள் பங் கேற்றனர்.

இம்மாநாட்டில் உலகப் பொரு ளாதார நிலைமை குறித்து தீவிர மாக பரிசீலித்த அவர்கள், தங்களது நாடுகளுக்கிடையே நடக்கும் வர்த் தகம் உள்ளிட்ட அனைத்து ஒத் துழைப்புகளையும் மேம்படுத்துவது என்றும், கடனுதவி, வர்த்தகம் உள்பட தங்களுக்குள் நடக்கும் பரிவர்த்தனைகளில் இதுவரை இடம்பெற்றுவரும் நாணயமான டாலர் என்பதை கைவிடவும், தங்களது சொந்த நாணயத்தின் அடிப்படையிலேயே வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் முடிவு செய்தனர்.சர்வதேச வளர்ச்சி வங்கியாக செயல்படும் உலக வங்கி, கடந்த பல ஆண்டுகளில் வளரும் நாடுகளின் தேவைக்கு பொருந்தியதாக இல்லை. வளரும் நாடுகளுக்கு அளித்த நாணய நிதியுதவி போதுமானதாக இல்லை. விவாதிக்கப்படுகின்ற பிரிக்ஸ் புதியதொரு வளர்ச்சி வங்கி, இந்த குறைவை நிறைவு செய்யும். இந்த புதிய வங்கி, பிரிக்ஸ் நாடுகளின் நாணய மூலவளங்களைப் பயன்படுத்தி, பிரிக்ஸ் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் வளர்ச்சியை முன்னேற்றும். வளர்ச்சி வங்கி உருவாக்குவது உள்ளிட்ட இந்த முடிவுகளை மாநாட்டின் நிறைவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.
சுகுமாரன்

______________________________________________________________________________________________உடலுக்கு நன்மைதரும் கஞ்சிகள்.

சீன முறை,


சீனா பெரிய நெல் உற்பத்தி நாடாகும். இந்தியாவைப் போல வடக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் கோதுமை உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுகின்றனர். தென் பகுதி மக்கள் முக்கியமாக சோற்றைச் சாப்பிடுகின்றனர். ஆனால், வட பகுதியிலும் தென் பகுதியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் கஞ்சியை(conjee) உட்கொள்ள விரும்புகின்றோம். சீனாவில் கஞ்சி உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் உணவு வகையாகக் கருதப்படுகிறது. பண்டை காலம் தொட்டு, சீன மக்கள் கஞ்சியின் மருத்துவப் பயனை அறிந்து கொள்ள துவங்கினர். நோய் தடுப்பு, உடல் நலத்தை வலுப்படுத்துதல், ஆயுள் நீடிப்பு முதலிய பயன்களை கஞ்சி பெற்றுள்ளது என்று சீன மக்கள் கருதுகிறனர். உடல் நலத்துக்கு நன்மை தருவது பற்றிய சீனப் பாரம்பரிய கருத்தின் படி, வெவ்வேறான பருவங்களில் வெவேறான வகை கஞ்சிகளை உட்கொள்ள வேண்டும். இன்றைய நிகழ்ச்சியில் இது பற்றிய விபரத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன்.
சீனப் பாரம்பரிய மருத்துவ இயல் கருத்தின் படி, ஓராண்டின் 4 பருவங்களின் மாற்றம், மனிதரின் உடல் நல மாற்றத்துடன் நெருக்கமான தொடர்புடையது. வானிலையின் மாற்றத்துக்கிணங்க, உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும். இதில், வயிறு மற்றும் மண்ணீரலை பாதுகாப்பது முக்கியமானது என்று சீனப் பாரம்பரிய மருத்துவவியல் கருதுகிறது. மருத்துவர் su feng zhe கூறியதாவது
வாழ்க்கையில் வயிறு மற்றும் மண்ணீரல் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தற்காலத்தில், மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து வருகிறது. உணவு வகைகளின் காரணமாக நோய்கள் ஏற்படுகின்றன. உணவு வகைகள் முதலில் வயிறு மற்றும் மண்ணீரலுக்குள் நுழைகின்றன. சத்துணவு வகைகள் உடம்பின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. தேவையற்றப் பொருட்கள் கழிவுப் பொருட்களாக உடம்பிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. ஆகையால், வயிறு மற்றும் மண்ணீரல் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று கருதுகின்றோம். உடம்பில் வளர்சிதை மாற்றம் சீராக இயங்காவிட்டால், பல நோய்கள் ஏற்படும். ஆகவே, வயிறு மற்றும் மண்ணீரல் மக்களின் உடல் நலத்துக்கு மிக முக்கியமானது என்று அவர் கூறினார்.
வயிறு மற்றும் மண்ணீரலின் நலம், உடல் நலத்துக்கான முன் நிபந்தனையாகும். இவற்றின் நலத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்? வாழ்க்கையில் உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சில கஞ்சி வகைகளைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் சூ முன்மொழிந்தார். வயது, உடல் நிலைமை, பருவம் முதலியவற்றின் படி, வேறுப்பட்ட கஞ்சி வகைகளைத் தேர்ந்தெடுப்பது, உடல் நலத்தைப் பாதுகாக்கும் மிக எளிதான வழிமுறையாகும். சந்தையில் அதிகமான காணப்படும் உணவு மூலப்பொருட்களை வாங்கி, வீட்டில் கஞ்சியைச் சமைக்கலாம். சரியான உணவு வகைகளைப் பயன்படுத்தினால், நல்ல பயன் பெறும்.
வசந்தகாலத்தில் இனிப்புப் பொருட்களை அதிகமாகவும் புளிப்புப் பொருட்களை குறைவாகவும் சாப்பிட வேண்டும் என்று சீனப் பாரம்பரிய மருத்துவவியல் கருதுகிறது. Lily பழம், நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் நல்லது. அதைச் சாப்பிட்டால், உடல் வெப்பத்தை தணிக்க முடியும். 20 கிராம் lily பழம், 100 கிராம் அரிசி, உரிய அளவிலான கற்கண்டு ஆகியவற்றைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். முதலில் Lily பழத்தை தண்ணீரில் போட்டு வேகவிடுங்கள், பிறகு, அரிசியையும் இதில் சோர்க்கலாம். வேகவிடுக்கப்பட்டப் பிறகு, கற்கண்டை இதில் போடுங்கள். மிகவும் எளிதான தயாரிப்பு முறை தான்.
கோடைக்காலத்தில் கசப்பு சுவை கொண்ட பொருட்களைக் குறைவாகவும் கார்ப்பு சுவை கொண்ட பொருட்களை கொஞ்சம் கூடுதலாகவும் சாப்பிடலாம். மாசிப்பறுப்பு, தாமரை தண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி கஞ்சியைத் தயாரித்து சாப்பிடுங்கள். இவ்விரண்டும் உடலின் வெப்பத்தைக் குறைக்கும் பயனுள்ளன. முதலில் பாசிப்பறுப்பை வேகவிடுங்கள். சுமார் 30 நிமிடங்களுக்குப் பின், சுத்தம் செய்யப்பட்ட அரிசியை வாணலியில் போடுங்கள். மேலும் 15 நிமிடங்களுக்குப் பின், சிறிய துண்டுகளாக வெட்டிய தாமரை தண்டை வாணலியில் சேர்க்கலாம். மிதமான சூட்டில் தொடர்ந்து வேகவிடுங்கள். சுமார் 10 நிமிட்டங்களுக்குப் பின், இந்த தாமரை தண்டு கஞ்சி தயார்.

இலையுதிர்காலத்தில் எந்த வகை கஞ்சியைச் சாப்பிடலாம்? மருத்துவர் சூ கூறியதாவது
இலையுதிர்காலத்தில் கசப்புச் சுவை கொண்ட உணவு வகைகளைக் குறைவாகவும், புளிப்புச் சுவை கொண்ட உணவு வகைகளை கூடுதலாகவும் சாப்பிடுங்கள். காரணம் இலையுதிர்காலத்தில் மழை குறைவு, வானிலை அவ்வளவு வெப்பமானதல்ல. கசப்பு மற்றும் கார்ப்பு உணவு வகைகளைச் சாப்பிட்டால் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். புளிப்புச் சுவை கொண்ட பழ வகைகளில் காரிம அமிலம், நார்ச்சத்து ஆகியவை நிறைந்திருக்கும். அவை செரிமானத்தை முன்னேற்றி, வயிறு மற்றும் gutஇன் செயல்களை அதிகரிக்கசெ செய்யும். ஆகவே, இக்காலத்தில் ஆப்பிள் ஆரஞ்சு முதலிய பழ வகைகளை அதிகமாக சாப்பிடுங்கள் என்று அவர் கூறினார்.
நன்றி:cri


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?