வெற்றி கதைகள்,,,,,,,.

முஸ்லீம்கள் ஹஜ் பயண்த்துக்கு அரசு உதவியை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ள நிலையில் இந்துக்கள் மானசரோவர்,பத்ரிநாத் செல்ல அரசு பணத்தை நிதி உதவியாக கொடுக்கப்போவதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது அவரது முதலாண்டு முடிவு அன்பளிப்பு.இரு இடங்களுக்கும் செல்லும் தலா 250 பேர்களுக்கு ரூ40 ஆயிரம்,ரூ10 ஆயிரம் என்று வழங்குமாம்.அவர்கள் புண்ணியம் சேர்த்துகொள்ள மக்கள் வரிப்பணமா?அதுவும் ஆண்டுக்கு 2கோடி வெட்டி செலவா?
சுரன்

இந்துத்துவா மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் கூட இப்படி கிடையாதே.
அடுத்து கிறிஸ்தவர்கள் ஜெருசலேம்,பெத்தலகேம் செல்லவும் மக்கள் பணத்தை வாரி இறையுங்கள்.இலவசம்,ஆட்சி சாதனை விளம்பரம்,மத பயணங்களுக்கு நிதி என்று வரிப்பண வருவாயை எல்லாம் செலவழித்து விட்டு மத்திய அரசு நிதி கேட்டதை தர மாட்டென்கிறது.கருணாநிதி கருவூலத்தை துடைத்து விட்டார் என்று சொல்வதும்..விலை வாசிகளை கூட்டுவது,வரியை போட்டு மக்களை வதைப்பதும் சரியாகுமா?
இனி ஜெயலலிதா நிதி நெருக்கடி என்று சொல்லவே கூடாது.இருக்கும்  பணத்தை எல்லாம் இப்படி வெட்டியில் செலவிட்டு விட்டு மற்றவரை குறை சொல்ல இவருக்கு உரிமை இல்லை.
சரி.இருக்கட்டும்.முஸ்லீகளுக்கு ஹஜ்,இந்துக்களுக்கு மானசரோவர்,கிறித்தவர்களுக்கு ஜெருசலேம் பயணத்துக்கு நிதி.நாத்திகவாதிகளுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்.குறைந்த பட்சம் சென்னை பெரியார் திடலுக்காவது பேருந்து கட்டணம் கொடுப்பீர்களா? 
%

விடுதலைப்புலிகளை "ஒழித்துக்கட்டிய கோத்தபய" என்று எழுதப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழா இலங்கையில் மிக சிறப்பாக
 வெளியிடப்பட்டது.விழாவில் தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டு அரசு விழாவாக நடத்த்ப்பட்டது,ஆனால்ராஜ பக்‌ஷேவையும்.கோத்தபய பக்‌ஷேவையும் புகழும் விழாவாக போற்றிப் பாடும் ஒரு நிகழ்வாகவே இருந்தது.
விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டிய கோத்தாவின் யுத்தம் என்று வெளியாகியுள்ள இப்புத்தகத்தில், கோத்தாபய ராஜபக்ஷ 1980 களில் ஒரு இராணுவ வீரராக இருந்தது முதல் அவர் இப்போது பாதுகாப்புச் செயலராக உயர்ந்துள்ளது வரை அவரது புகழையே விவரித்துள்ளது.
சுரன்

வெளியீட்டு விழாவில் பேசியஅமைச்சர் சரத் அமுனகம "வெளிநாட்டில் இருந்த ஒருவர் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தாய்நாட்டுக்கு திரும்பி வந்து தனது மக்களுக்காக பணியாற்றிய ஒரு போர் நாயகனை பற்றிய புத்தகம் இது" என்று கூறியுள்ளார்.
%
பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டேட்டாவிண்ட் நிறுவனம், உலகிலேயே விலை குறைந்த டேப்ளட் பிசிக்களை "ஆகாஷ்' என்ற பெயரில் தயாரித்து வழங்க அறிவிப்பு வெளியிட்டது. இதனை இரண்டு வகைகளில் மாணவர்களுக்கு வழங்க, மத்திய அரசின் மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் துறைகளில் இருந்தும் ஆர்டரைப் பெற்றிருந்தது. சென்ற வாரம் இவற்றை வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வெளியிட்டது. விலை ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
ஏற்கனவே 30 லட்சம் டேப்ளட் பிசிக்களுக்கு மேல் ஆர்டர்களைப் பெற்றுள்ளதாகவும், அவற்றை வழங்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
சுரன்

இதுவரை வெளியிடப்பட்டுள்ள இரு மாடல் டேப்ளட் பிசிக்களிலும் ஜி.பி.ஆர்.எஸ். மோடம் இணைக்கப்பட்டு வை-பி இணைப்பு வசதி தரப்பட்டுள்ளது. இவற்றின் திரை 7 அங்குல அகலம் உடையது. இதில் ஆண்ட்ராய்ட் 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் ப்ராசசர் 800 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்டது. ராம் நினைவகம் 256 எம்.பி.
ரூ. 2,276 என்ற விலையில் அரசுக்கு டேட்டாவிண்ட் இவற்றை கொடுக்கிறது. அரசு மேலும் விலையை குறைத்து ரூ.1,100அல்லது ரூ.1,200க்கு மாணவர்களுக்கு விற்கப்படும். 
சுரன்

தற்போது வடிவமைக்கப்பட்டிருக்கும் டேப்ளட் பிசி அரசிடம் சோதனைக்கு அனுப்பப் பட்டு, அரசு இதன் தரம் குறித்து திருப்தி தெரிவித்தப் பின்னரே லட்சக்கணக்கான டேப்ளட் பிசிக்கள் தயாரித்து அரசிடம் ஒப்படைக்கப்படும்.
_________________________________________________________________________________
சுரன்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?