இந்து மாக்கடல் யாருக்கு?

20 ஆம் நூற்றாண்டின் முதற்கொண்டே இந்தமாக்கடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவந்திருக்கின்றது. இருப்பினும் 21 ஆம் நூற்றாண்டில் அதன் முக்கியத்துவம் பன்மடங்காக அதிகரித்து வருகின்றது. 



இதன் காரணமாக இந்தியாவும், சீனாவும் இந்து மாக்கடலில் ஆதிக்கம் செலுத்தி, தம் நலன் சார்ந்த போட்டியிலீடுபடுகின்றன. இந்து சமுத்திரத்தில் உள்ள பல நாடுகளில், சீனா தன் துறைமுகங்களை மிகத் தீவிரமாக அமைத்து வருகின்றது. அதன் மூலம் அதன் கடற்படை இந்தப்பகுதியில் படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது.
இந்தியா, சீனாவை இந்து மாக்கடலில் தோற்கடித்து அதன் கடற்படைவராமல் செய்ய முயல்கின்றது. இதற்கு இந்தியாவிற்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பும் உள்ளது. இருப்பினும் சீனாவின் செல்வாக்கை இரு நாடுகளாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 

உலகில் மூன்றாவது பெரியகடல்பகுதியான இந்துமாக்கடல் 47 கடற்கரையோரங்களைக் கொண்ட நாடுகளை உள்ளடக்கியுள்ளது. வங்களா விரிகுடா, அராபியக் கடல், மலாக்கா தொடுகடல் என்பன இந்து மாக்கடலின் முக்கிய கடற்பகுதிகளாகும். 
டிக்கோயா காசியோ, இலங்கை, அந்தமான் தீவுகள், மொரிசீயஸ் என்பன இந்துமாக்கடலின் தீவுப் பகுதிகளாக காணப்படுகின்றன.இந்தத் தீவுகள் புவிசார் அரசியலில் முக்கியத்துவமிக்கவைகளாகவே எப்போதும் இருந்து வருகின்றன.
சீனா மற்றும் இந்தியா ஆகிய ஆசிய வல் லரசுகளின் பார்வையில் இந்தக் கடல் பிராந் தியமும் அதனைச் சூழ்ந்த நாடுகளும் வணிக ரீதியில் முக்கியமானவை. அதற்கடுத்ததாகவே தம் பாதுகாப்புக்கு இந்தக் கடலைப் பயன்படுத்துவது பற்றி இரு நாடுகளும் சிந்திக்கின்றன. 
சீனா பாரசீக வளைகுடாவிலிருந்து போர்முஸ் நீரினையினூடாக 80% எண்ணெயினை கப்பல் மூலம் தனது நாட்டுக்கு எடுத்துச் செல்கின்றது. அத்தோடு தனது 85% மான உற்பத்திகளைசீனா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றது.
மறுபுறம் இந்தியா தனது 60% மான எண்ணெய்த் தேவையை இதன் வழியாகவே கப்பல் மூலம் பெற்றுக்கொள்கின்றது.

மேலும் 55% ஆன தனது உற்பத்திகளை மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றது.  
இராணுவ ரீதியிலும் இந்தியம,சீனஅரசுகள் இந்துமாக்கடலின்  முக்கியத்துவத்தினை உணர்ந்த வகையிலும் செயற்பட்டு வருகின்றன. 
உலக வல்லரசு என்ற இடத்தை பெற முயலும் இந்த இரு அரசுகளும் தமது கடல் பலத்தினை இந்துமாக்கடலில் அதிகரிக்க முயன்று வருகின்றன. சீனா தமக்கு பலமான எதிரியாக இந்தியாவைக் கருதுகின்றது. 
இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகின்றது. இதனால் இப்பகுதியில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து இந்துமாக்கடல் ப்பகுதியில் சீனாவைத் தலை தூக்கவிடாமல் செய்வதைஇலக்காகக் கொண்டு இயங்குகின்றது. இந்த விடயத்தில் சீனாவும் இந்தியாவினை தோற்கடிப்பதன் ஊடாக அமெரிக்காவின் செல்வாக்கினை இந்தப்பகுதியில் இல்லாமல்  செய்யும் நோக்கிலேயே தீவிரமாகச் செயற்படுகின்றது.

உலகில் எண்ணெய் நுகரும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. சீனா நாள்தோறும் 7.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய் பரல்களை பாரசீக வளைகுடாவிலிருந்து, இந்து மாக்கடல் வழியேகிழக்கு சீனாவிற்கு எடுத்து வருகின்றது. மேலும் அடுத்து வருகின்ற 25 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான எண்ணெயினை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்துஎடுத்துவர சீனா திட்ட மிட்டுள்ளது. 
இதனை நோக்கமாகக் கொண்டே அது மியான்மர்(பர்மா), சிட்டக்காங் (பங்களாதேசம்), அம்பாந்தோட்டை (இலங்கை), காபாடர் (பாகிஸ்தான்) போன்ற துறைமுகங்களை மிகத் தீவிரமாக அமைத்து வருகின்றது. இவற்றை அமைப்பதன் ஆரம்ப கட்டம் வர்த்தக நோக்கமாகவே காணப்படுகின்றது. இருப்பினும் இவற்றைப் பாதுகாப்பது என்ற ரீதியில் ஆங்காங்கே இந்த துறைமுகங்களுக்கு அண்மையில் சில இடங்களில் கண்காணிப்பு மையங்களை சீனா அமைத்து வருகின்றது. 

இது சீனாவின் நீண்ட கால இராணுவ வியூகமே உலகில் நான்காவது எண்ணெய் நுகரும் நாடான இந்தியா அடுத்து வருகின்ற 10 ஆண்டுகளில் தனக்குத் தேவையான 90% ஆன எண்ணெயை ஈரானிடம் இருந்து பெற எண்ணியுள்ளது. இதற்கான உடன்படிக்கையினை 2009 இன் பிற்பகுதியிலே இரு நாடுகளும் கைச்சாத்திட்டுக்கொண்டன.
இந்த எண்ணெயை இந்தியாவிற்கு கொண்டு வர இந்துமாக்கடல் முக்கியத்துவத்தினை முன்கூட்டியே அறிந்து கொண்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே 2005 ஆம் ஆண்டிலிருந்து சேது சமுத்திரத் திட்டத்தின் பணிகளை நிறைவேற்றுவதில் இந்தியா தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.

மேலும் ஐரோப்பிய, மத்திய, கிழக்கு நாடுகளில் வர்த்தகத்தில் கணிசமான அளவு சந்தையைக் கைப்பற்றி உள்ள இந்தியா அந்த நாடுகளுக்குத் தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கு கப்பல் போக்குவரத்தினையே நம்பியுள்ளது. இதன் அடிப்படையிலும் சீனாவின் கப்பல் போக்குவரத்தினைக் கண்காணிப்பதற்குமான அந்தமான், நிக்கோபார் தீவுகள், மாலே தீவுகளில், கரக்கா கொக்கோ போன்ற தீவுகளில் கடற்படை கண்காணிப்பு முகாம்களை அமைத்து வருகின்றன.
மேலும் அண்மைக் காலத்தில் தமது கடற்படையினை விஸ்தரிப்பதிலும், நவீனமயப்படுத்துவதிலும் இந்தியா ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுரன்

பல காலமாக அமெரிக்காவின் ஆதிக்கத்தில் காணப்பட்ட இந்து மாக்கடல்தற்போது இந்தியா, சீனா ஆதிக்கத்திற்கு உட்பட ஆரம்பித்து விட்டது. இந்த இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் பலம் பெற ஆரம்பித்ததனால், தனது கட்டுப்பாட்டில் இந்து மாக்கடலைவைத்திருக்க முயல்கின்றன. இதன் வெளிப்பாடாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி மிகவும் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது.
சீனா இதற்காகவே இந்து மாக்கடலில் அமைந்துள்ள நாடுகளுக்குப் பெரியளவில் பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றது. குறிப்பாக பர்மா, பங்களாதேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்றவற்றில் தனது துறை முகங்களை அமைத்துள்ளது. இந்த நாடுகளில் தனது பலத்தினை தக்க வைக்க முயல் கின்றது. இந்தியா, சீனாவின் இந்த முயற்சி களை முறியடிக்க பல வழிகளிலும் முயன்று வருகின்றது. இதனால் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து தனது கடற்படைத் தளத்தினைப் பன்மடங்காக பெருக்கி வருகின்றது. சீனாவுக்கு எதிராக இந்தியாவை கொம்பு சீவி விடுகிற வேலையை அமெரிக்காசெய்து வருகின்றது.
சுரன்

எனவே இனி வரும் காலங்களில்இந்தியா-சீனா இடையிலான போட்டி உச்சமடைந்து போர் போன்றஆபத்தான நிலை இந்து மாக்கடலால் உருவாகலாம்.
சீனாவின் பக்கம் நிற்கும் ரஷ்யாவும் இந்தியாவின் பக்கம் நிற்கும் அமெரிக்காவும் அளிக்க இருக்கின்ற ஆதரவு பலத்திலேயே இந்தக் கடல்யார் கையில் என்ற எதிர்காலம் இருக்கிறது.
ஆக இது இந்திய-சீனா மோதலாக இல்லாமல் அமெரிக்க-ரஷ்யா மோதலாகவும் அதன் மூலம் உலகப்போர் கட்டத்தையும் அடையும் ஆபத்துள்ளது.
போர் விளைவிக்கும் ஆபத்தை உணர்ந்து இரு நாடுகளும் இணைந்து தங்களுக்குள் ஒப்பந்ந்தம் செய்து கொள்வதே அனைவருக்கும் நல்லது.அமெரிக்க கொம்பு சீவலுக்கு மயங்கிவிடக்கூடாது.
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?