கழித்தல்கள்

திட்டக்குழு கட்டிடத்தில் உள்ள கழிவறைகள் புதுப்பிக்க ரூ. 35லட்சம் செலவு செய்துள்ளனர்.இந்த கழிப்பறை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
நாள் ஒன்றுக்கு 28 ரூபாயுக்கு மேல் செலவிட்டால் அவர்கள் ஏழையல்ல என்று கண்டுபிடித்த திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா இக்கழிப்பறை பற்றி
மழுப்பி வருகிறார்.
சுரன்


நாடு முழுவதும் பெரும் நாற்றத்தை[ சர்ச்சையை ]ஏற்படுத்திய இந்த விவகாரம் திட்டக்குழுக்கு தலைவராக உள்ள மன்மோகனுக்கு மேலும் சிக்கலகூருவாக்கியுள்ளது.
கழிவறைகளை புதுப்பிக்க 30 லட்ச ரூபாயும், கழிவறைகளில் நவீன முறையிலான கதவு அமைக்க ரூ.5.19 லட்ச ரூபாயும் செலவழித்துள்ளது. இந்த கழிப்பறையின் கதவுகளை ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி தான் பயன்படுத்த முடியும். 
சுரன்
இரண்டு கழிவறைகளை புதுப்பிக்க 35 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட தகவலுக்கு, ஆணையம் அளித்த பதிலில் இரண்டு கழிவறைகளுக்கு நவீன கதவு பொருத்த ரூ.5,19,426 ரூபாயும், அந்த கழிவறைகளை புதுப்பிக்க ரூ. 30,00,305 செலவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்த கழிவறைகளை பயன்படுத்த திட்டக்குழுவில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு கதவுகளை திறக்க 60 ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கழிவறை புதுப்பிக்க ஆன செலவு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா கூறுகையில், இத்திட்டம் குறித்து நான் எடுத்த முடிவு அல்ல. நிர்வாக ரீதியான முடிவு.திட்டமதிப்பீட்டிற்கு உட்பட்டுதான் செயல்படுத்தப்பட்டுள்ளது.என்று விளக்கம் சொல்லுகிறார்.




ஜெயலலிதாதிட்டக்குழுவிறகு கொடுத்தபூசை சரிதான்.
நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்
பெயர் கெட்டுப்போயுள்ள நேரம் அவர் தலைவராக இருக்கும் திட்டக்குழு கழிப்பறை செலவு மேலும் அவர் பெயரை நாறடிக்கிறது.
________________________________________________________________________


கட்சியை கரைப்பது எப்படி?




ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ,இறந்து போனமுன்னாள் ச.ம.உ.முத்துக்குமரன் மனைவி ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை திடீரென சந்தித்துப் பேசியுள்ளனர்.
நேற்றுதான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர்க்கு தெரியும்.அப்படி,இப்படி என்றார் தா.பாண்டியன் இன்று முத்துக்குமரன் மனைவியுடன் ஜெயலலிதாவை பார்த்து என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.
சுரன்

2011 பேரவைத் தேர்தல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. புதுக்கோட்டை தொகுதிó எம்.எல்.ஏ.வாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எஸ்.பி. முத்துக்குமரன் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சாலை விபத்தில் காலமானார். அதனைத் தொடர்ந்து அங்கு ஜூன் 12-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

சங்கரன்கோவில் ச.ம.உ.இறந்த கருப்பசாமி குடும்பத்தினரை இப்படித்தான் தேர்தல் நெருங்கு வேளையில் சந்தித்து அடக்கி வைத்தார்.அதே நிலைதான் இப்போதும் என்று தெரிகிறது.இடைத்தரகர்களாக தா.பா,வும் ,பெரியவர் ந.கண்ணுவும் இருப்பது தெரிகிறது.கட்சிக்காக உழைத்து தியாகம் செய்த பெரியவரை தா.பா.இடைத்தரகர் நிலைக்கு ஆக்கி விட்டார்.
சுரன்

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாகவே இவர்கள் பேசியதாகத் தெரிகிறது என்று கூறப்படுகிறது.பின்னே பெட்ரோல் விலையை வரியை குறைப்பது சம்பந்தமாகவா பேசியிருப்பார்கள்?
தா.பாண்டியனின் ஜெ " கண்மூடித்தனமான ஆதரவால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே தனது தன்மையை இழந்து வருகிறது.தொண்டர்களான தோழர்கள் கருத்துக்கு எதிரான எப்போது ஜெ ஆதரவால் பலர் கட்சியை விட்டு ஒதுங்கி விட்டனர்.பலர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
சுரன்

இங்கிருந்து வரும் தோழர்களை அங்கு சேர்க்காதீர்கள் அது நம் தோழமையை கெடுத்து விடும் என்று மார்க்சிஸ்ட் கட்சிக்கு கடிதம் எழுதும் தா.பா க்கு இந்நிலமைக்கு தனது செயல்பாடுகள்தான் காரணம் என்று தெரியாமல் போனதுதான் வருத்தம் தருகிறது.
அதிமுக வுக்கு இரண்டு பினாமிக் கட்சிகள் உள்ளது. ஒன்று ச.ம.க.எனப்படும் சரத்குமார் மங்குணி கட்சி,இரண்டாவது தா.பாண்டியனின் இ.க.கட்சி.
ஜீவா போன்றோர் உயிர் கொடுத்து வளர்த்த கட்சியை போயஸ்தோட்டத்தில் காணாமலாக்கிக்கொண்டிருக்கிறார் தா.பாண்டியன்.அதற்கு பெரியவர் நல்ல கண்ணுவும் துணை போகிறாரே.இவர்கள் இருவரையும்பார்க்கையில் நித்தி,அருணகிரி யாரும்தான் ஞாபகத்தில் தோன்றுகிறார்கள்.

சுரன்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?