வாதமும் -பிடிவாதமும்


குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான சங்மா மற்றொரு வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை பொருளாதாரம் பற்றி விவாதம் நடத்த கூப்பிட்டுள்ளார்.இந்த விவாதத்தை பிரணாப் நிதியமைச்சர் ஆகும் முன்பு நடத்தியிருக்க வேண்டும்.
சுரன்
இது ரொம்பதாமதம்.இந்திய பொருளாதாரம் குழிக்குள் போன பின் தேவையா?அதன் பின் சங்மா கூறியது மிக முக்கியமான தகவல்.அவர் இதுவரை எந்ததேர்தலிலும் தோற்ற தாக சரித்திரம்-பூகோளம் எதுவும் கிடையாதாம்.அதற்காக கவலை வேண்டாம் .குடியரசுத்தேர்தலில் அதற்கு ஒரு முடிவு கிடைத்து விடும் என்று தெரிகிறது.மனசாட்சி படிதானே வாக்களிப்பார்கள் நான் வென்று விடுவேன் என்றும் சங்மா கூறியுள்ளார்.ஒரு அரசியல்வாதியாக இருந்து கொண்டு மனசாட்சியை எல்லாம் இன்னமும் நம்புகிறார்.இவர் இதற்கு சரிபட்டு வரமாட்டார்.பிரனாப்புடன் விவாதம் செய்வதை விட குடியரசுத்தலைவர் போட்டியில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று பிடிவாதம் செய்யாமல் இருந்தால் நல்லது.
____________________________________________________________________________________________________

ஜெர்ரி சான்டஸ்கி ன்னாள் கால்பந்து பயிற்றுவிப்பாளர் .இவர் 45 க்கும் மேற்பட்ட பாலின முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.

இப்போது குற்றம் நிருபனமாகி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.மொத்தம் 440ஆண்டுகள் அவர் சிறையில் காலந்தள்ள விதிக்கப்பட்டுள்ளார். அவர் சரியாக 440 ஆண்டுகள் சிறையில் இருந்தாரா என்று பார்க்க ஆள் நியமித்தாகி விட்டதா?
_____________________________________________________________________________________________________

தங்கம் வந்தது எப்படி?
=====================
தங்கம் போன்ற அதிக விலைமதிப்பு வாய்ந்த கனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.

இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது. 
சுரன்

இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அனுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
இப்போதைய தங்கம் விலை அதிகரிப்புக்கு இன்னொரு மோதல் வந்தால்தான் விலை குறையும் என்று தெரிகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?