பாலமும் -பாதுகாப்பும்


சுரன்
பாரதீய ஜனதா கட்சியின்  தலைவர் வி.கே. மல்கோத்ரா, "ராமர் பாலம் என்பது விலை மதிப்பில்லா தேசிய பாரம்பரியச் சின்னம் ஆகும். அதை எந்த விலை கொடுத்தாகிலும் பாதுகாக்க வேண்டும். ராமர் பாலத்தை தகர்க்காமல், மாற்றுப்பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியம் இல்லை என்ற ஆர்.கே.பச்சவுரியின் அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரிக்க வேண்டும். 
ராமர் பாலத்தை மத்திய அரசு பாதுகாக்க தவறினால், நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம்."என்று கூறியுள்ளார்.

18-2-12_findyour_INNER_468x60.gif
ஆக மொத்தத்தில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற விடாமல் செய்வதில்ல் இலங்கை அரசை விட பாஜக தான் முன்னணியில் இருக்கிறது.
ராமர் பாலம் என்பதே இயற்கையாக அமைந்த கடலடியிலான மனல்திட்டு.
அது இன்னமும் கொஞ்சம் உயரமாகயிருந்தால் ஒரு தொடர் தீவாகத்தான் தென்பட்டிருக்கும்.
இது போன்ற மணல் திட்டுகள் உலக மெங்கிலும் கடற் பகுதிகளில் பரவலாக ஆங்காங்கே காணப்படுகிறது.
சுரன்

இந்திய பகுதியில் காணப்படும் அந்த திட்டு ராமர் கட்டிய பாலமாக பெயர் சூட்டப்பட்டதுதான் நம் நாட்டின் வளர்ச்சிப் பணிக்கு ஏற்பட்ட சோகம்.
ராமர் பாலம் விலை மதிப்பில்லா தேசிய பாரம்பரிய சின்னமாம்.
இதுவரை அப்படி அந்த மணற்திட்டு சின்னமாக அறிவிக்கப்படவில்லை.
இன்னமும் அறிவிக்கப்படக்கூடாது.
பாஜக ஆட்சி காலத்தில் சேது சமுத்திர திட்டம் செயல் பாடுகள் ஆரம்பமாகின.
அப்போது ராமரும் அவர் கட்டிய பாலமும் பாஜக கண்ணில் படாமல் போனது ஏன்?
இப்போது என்ன அந்த ராமர் பாலத்தில் தினசரி ஆறுகால பூசைகள் நடை பெறுவது போல் பாதுகாக்க போராடுவார்களாம்.
சுரன்

பாரம்பரிய சின்னங்களை பாது காக்கும் பாஜக அக்கறையைத்தான் அயோத்தி பாபர் மசூதி இடிப்பிலேயே இந்திய மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்களே.
இப்போது விவசாயம் செய்யும் நிலங்கள்=கட்டப்பட்ட வீடுகள் கூட வளர்ச்சிப்பணிக்காக அரசால் எடுக்கப்பட்டுஅழிக்கப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றுப்படுகின்றன.
ஆனால் ஏதோ போக்குவரத்து நெரிசலை தீர்த்துக்கொண்டிருக்கும் பாலத்தை இடிக்கப்போவதை எதிர்ப்பது போல் பாஜக செய்யும் மதவாத அரசியல் கொஞ்சம் அசிங்கமாக இருக்கிறது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?