சாத்தான் வேதம்

"உலகம் முழுவதும் அகிம்சை, சமாதானம், இரக்கக் குணத்தை பரப்ப வேண்டும்" என்று மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் ராஜபட்சே அருள் வாக்கு அருளியுள்ளார்.
சாத்தான் வேதம் ஓதுவது என்றால் என்னவென்று தெரியாதவர்கள் இப்போது அர்த்தம் விளங்கிக்கொண்டிருப்பார்கள் என்று எண்ணுகிறோம். 
எப்படிங்க இப்படியெல்லாம் கூச்ச மின்றி ,வெட்கமின்றி பேசுகிறாரோ .அதை விட இவரை மனசாட்சியியே இல்லாமல் கூ ப்பிட்டு விருந்து வைத்த நம் இந்திய அரசை த்தான் சொல்ல வேண்டும் .
சாத்தானை சிகப்பு கம்பளம் விரித்து கூப்பிட்ட மனிதாபிமானம் அற்ற அரக்கர்கள் அவர்கள்தானே . 
________________________________________________________________________________________________
சிரித்தார் ,வேலை இழந்தார்.
 ------------------------------------------
சீனாவில் வாகன விபத்தொன்றில் 36பேர்கள்  கொல்லப்பட்டனர் .
அந்த  வாகன விபத்தின் பொது மீட்புபணிக்காக இருந்த  பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சிரித்துக்கொண்டிருக்கும் படங்கள் சீன ஊடகங்களில் வெளியானது.

 அந்த சிரிப்பு சம்பவம் சீனாவில் பொதுமக்கள் மத்தியில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியிருந்தது.
சீனாவின் இணையதளங்கள் எங்கும் பரவியிருந்த யாங் டகாய் என்ற அந்த அதிகாரியின் படங்கள் மக்கள் மத்தியில் ஆத்திரம் கலந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

விலையுயர்ந்த கைக்கடிகாரம், கைச்சங்கிலி, கண்ணாடி போன்றவற்றை அணிந்திருந்த அந்த அதிகாரியின் சம்பளம் எவ்வளவாக இருக்கும் ?என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் எழுப்பியது.

விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை அணிந்திருந்தமை மற்றும் பொது ஒழுங்கை கடுமையாக மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை அடுத்து குறித்த அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சீனாவின் அரசு செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இதை பார்க்கையில் வேதனைதான் வருகிறது .
ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜ பக்சேவை அழைத்து பட்டமளிப்பு விழாவை நடத்துகிறார்கள்.
போபாலில் மக்களை கொன்று குவித்தவனை  அரசு விமானம் மூலம் பாதுகாப்பாக அனுப்பிவைக்கிறார்கள்.

மக்கள் உயிருக்கு என்றைக்கும் ஆபத்து என்று தெரிந்தும் கூட ங்குள த்தை  திறக்க முயற்சிக்கிறார்கள்.

நம் நாட்டை கெடுத்து விடும் என்று தெரிந்தே சில்லறை வணிகத்தில் அன்னியரை வரவைக்கிறார்கள்.

மும்பை தாக்குதலில் அநியாயமாக  அப்பாவிகளை அத்து மீறி வந்து கொன்று குவித்த கசாப்புக்கு இன்னமும் பிரியாணி வழங்கி வளர்த்து வருகிறோம் .

--------------------------------------------------------------------------------------------------------------------------------
அமைதி தேவை ,
 -------------------------

இது போன்ற செய்திகளையே படித்து கொதித்து போயிருக்கும் நமக்கு மனதை அமைதி படுத்த உதவுவது யோகா தான்.
அதை எப்படி செய்யலாம்,எப்போது செய்யலாம் என்பதை இனி பார்ப்போம் :

• சாப்பிட்டு குறைந்தது 4 மணி நேரம் சென்ற பிறகும். காபி, டீ, குடித்தால் 1 மணி நேரம் கழிந்த பின்பும் ஆசனங்கள் செய்யலாம்.

• இரவில் நீண்ட நேரம் விழித்திருத்தல், நீண்ட தூரம் பயணம் செய்த நாள், எண்ணெய் தேய்த்து குளித்த நாள் மற்றும் உடல் சோர்வு, தலைவலி, இருக்கும் போதும் ஆசனங்கள் செய்யாது சாந்தி ஆசனம் மட்டும் செய்யலாம்.

• யோகப் பயிற்சி செய்பவர்கள் உருளைக் கிழங்கு மசாலா உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

• வெறும் தரையில் யோகா பயிற்சி செய்யக் கூடாது .

• காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்த பின்பே ஆசனம் பயில வேண்டும்.

• யோகாசனம் செய்யும் முன்போ அல்லது செய்த உடனேயோ குளிப்பது ஏற்றதல்ல.

• வயிற்றில் வலி உடையவர்கள் யோகாசனம் செய்தல் கூடாது.
• தலைவலி இருக்கும் நாட்களில் ஆசனம் செய்ய வேண்டாம்.

• திறந்த வெளியில் அல்லது காற்றோட்டமான அறையில் ஆசனம் செய்தல் வேண்டும். காபி, டீ, புகையிலை, லாகிரி வஸ்துகள், மது அறவே கூடாது.

• யோகாசனம் செய்யும் போது வேறு உடற்பயிற்சி கூடாது.

• இதய நோயுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர் ஆலோசனையுடன் யோகாசனத்தைத் தேர்வு செய்து செய்தல் நன்று.

•  யோகாசனத்தைத் தினமும் அரை மணி முதல் இரண்டு மணி வரை செய்து பழகலாம்.

• யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் இரண்டு நிமிடம் அமைதியாக பத்மாசனம் (அ) சுகாசனத்தில் அமரவும். 

_


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?