காவல்துறை -மின் துறை



 மின்சாரம் இல்லாதது மக்களை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது .வடிவேலு கிணறு காணவில்லை கதையாகிவிட்டது.
மிசாரம் அதிக உற்பத்திக்கு வழி இருந்தும் அது கருணாநிதி போட்ட திட்டங்கள் என்பதால் அதை கண்டு கொள்ளாமல் ,அதிக விலைக்கு மின்சாரத்தை வெளியில் இருந்தும் வாங்காமல் ,மத்திய அரசிடம் அதிகம் மின்சாரம் கேட்டு வாங்காமல்  இருக்க பிடிவாத குணம் படைத்த ஜெயலலிதா வாழ் மட்டுமே இருக்க முடியும்.

மக்கள் பற்றி அவருக்கு கவலை இல்லை.அவர்களுக்கு மறதி அதிகம்.அது போக இரட்டை இலை ,எம்ஜிஆர் இருந்தால் போதும் என்றும் எண்ணுகிறார்.
இதே மக்கள்தான் முன்பு 40க்கு 0 வை முன்பு தந்தார்கள் என்பதை மறந்து விட்டார்.
அப்போது இரட்டை இலையும்,எம்ஜிஆரு ம் கைகொடுக்கவில்லை என்பதை ஜெ நினைவில் கொள்ள வேண்டும்.
அதற்குள் பிரதமர் கனவில் மிதப்பது தவறு.
உண்டான முதல்வரை தக்கவைக்கப் பாருங்கள் .
இனி இன்றைய கதைக்கு வருவோம் :
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறையை கண்டித்து ஆர்பாட்டம், உண்ணாவிரதம், கஞ்சித்தொட்டி திறப்பு போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது. 
  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் , நம்பியூர் மக்கள் ஒருபடி மேலே போய்  காணாமல் போன மின்சாரத்தை கண்டுபிடித்து தருமாறு, கோபி டி.எஸ்.பி.,யிடம், மனு அளித்துள்ளனர்.


மனுவில் நம்பியூர் மக்கள் கூறிஇருப்பதாவது: 
"நம்பியூர், அம்பேத்கர் நகர், வெள்ளாளபாளையம், ரங்கம்பாளையம், சூரியபாளையம், குப்பிபாளையம், கெடாரை உள்பட, 140க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சில வாரங்களாக, 14 மணி நேரம் மின்சாரத்தை காணவில்லை. இரவு நேரத்திலும் மின்சாரம் அடிக்கடி காணாமல் போவதால், எங்களை கொசுக்கள் நிம்மதியாக தூங்க விடுவதில்லை. நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. மின்சாரத்தை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்."
இவ்வாறு அவர்கள் மனு கொடுத்துள்ளனர்.
நீங்களும் உங்கள் பகுதி காவல்துறையினரிடம் மனு கொடுத்து பாருங்களேன் .
இனி காவல்துறை -மின் துறையினர் பாடு என்று போயிடலாம்.
ஆனால் இன்னமும் நேரு தம்பி ராமஜெயம் கொலையில் ஒன்றையும் கண்டுபிடிக்காத காவல்துறையினர் மின்சாரத்தை மட்டும் கண்டு பிடித்துவிடுவார்களாக்கும் ?
_______________________________________________________________________________________________




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?