இடுகைகள்

நவம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சில சோதனைகள்...,

படம்
விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக இப்போது யாசர் அராபத் தின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது. இதேபோல் வேறு சில தலைவர்களின் உடல்கள் வேவ்வேறு காரணங்களுக்காக கல்லறைகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அதில் சிலவற்றை இங்கு காண்போம். சே குவேரா அர்ஜென்டினாவில் பிறந்த கியுப நாட்டுப் புரட்சியாளரான சேகுவேரா 1967ஆம் ஆண்டு போலிவியாவில் பிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் உடல் எங்கே புதைக்கப்பட்டது என்பது தொடர்பாக பல ஆண்டுகள் ரகசியம் காக்கப்பட்டது.  சே சுடப்பட்டதில் தொடர்புடைய ஒரு பொலிவிய இராணுவ ஜெனரல் 1995ஆம் ஆண்டில் சேகுவேராவின் உடல் ஒரு விமான நிலையத்தின் ஒடு பாதை அருகே புதைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கப் பிறகு அவரின் உடல் எடுக்கப்பட்டு கியுபாவுக்கு கொடுக்கப்பட்டது. சேகுவேராவுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகத்தில் அவ்வுடல் தற்போது பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தோண்டி எடுக்கப்பட்டது சேவின் உடலா என்பது குறித்து இன்னமும் சந்தேகம் இருக்கிறது. ஆலிவர் கிராம்வெல் இங்கிலாந்தில் முடியாட்

கசப்பா? கசாப்பா?

படம்
-- ----------------------------------------------------------------------------------------------------------------------------------- கருணாநிதி மறைத்து வைத்திருந்த பூனை இப்போது வெளியே வந்து விட்டது. சஸ்பென்ஸ் அப்படி இப்படி என்றும் ,அந்நிய சில்லறை வர்த்தகம் இங்குள்ள வணிகர்களுக்கு ஆப்பு வைத்து விடும் என்றும் முதலில் பேசிய தமிழக முதறின்ஞர்  வரிசையாக வந்த டெல்லி தூதுவர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் பேரம் படிந்து விட்டதால் டெல்லி சுல்தான்களிடம் பணிந்து விட்டார். முலாயம்,மாயாவதி ,லாலு வரிசையில் இணைந்துவிட்டார். இதுவரை சில்லறை வணிகத்தில் அன்னியர் புகில் என்ன நீதி என்று போர் முரசு கொட்டியவர் கடைசியில் '2-ஜி' புல் தடுக்கி சோனியா காலில் போய் விழுந்து விட்டது மிக கேவலமான அரசியல் தந்திரம். இதற்கு அவர் சொல்லும் ஆட்சி மாற்றம் ,பாஜக வந்துவிடும் என்பதெல்லாம் கதைக்குதவா காரணங்கள். இப்படி தேச விரோத செயல்களையும்,லட்சக் கோடிக் கணக்கில் அரசுப் பணத்தை கொள்ளை கொள்ளும் -பணமுதலை களுக்கான இந்த காங்கிரசு அரசு கவிழ்வதால் மக்களுக்கு நல்லதுதானே .இந்தியாவுக்கும

போதையின் பாதை

படம்
பாகிஸ்தானில் லாகூ ர் நகரில்  இருமல் (ஸிரப்) மருந்தை உட்கொண்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மருந்தை விற்றுள்ள மருந்தகங்களில் ஒன்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதுடன், அதன் உரிமையாளர்களையும் கைதுசெய்துள்ளனர். ஷாஹ்த்ரா நகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை - ஞாயிற்றுக்கிழமை வரையான மஊன்று நாட்களில்  உயிரிழந்துள்ள இவர்கள் இருமல் மருந்தை  போதைக்கு உட்கொண்ட போதை அடிமையானவர்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல்  விற்கப்படுகின்ற இருமல் ஸிரப் மருந்துகளை  போதைக்காகவே  சிலர் உட்கொள்கின்றனர். வழக்கமாக  போதைப் பொருள் உட்கொள்பவர்கள்  இடுகாட்டையே பயன்படுத்தி வந்துள்ளனர். அவர்களில் பலர்   போதைப் பொருட்களை உட்கொண்ட  இடுகாடுகளிலேயே இறந்துபோய் கிடந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பில் 72 மணி நேரத்துக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பஞ்சாப் மாநில முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பல மருந்தகங்களில் தேடுதல் நடத்தி அதிக

விலைவாசியை கட்டுப்படுத்த

படம்
இப்போது இந்தியாவை பொறுத்தவரை மாதாமாதம் பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை இன்ப அதிர்ச்சிக்கு தள்ளிவிடுகிறார்கள். இந்தவிலை உயர்வுக்கு வெளி சந்தை கச்சா எண்ணை விலை உயர்வு மட்டும் காரணாமாக அமையவில்லை இங்குள்ள பெட்ரோலிய தொழிற்சாலை உரிமையாளர்கள் பணம் சம்பாதிக்கும் வெறியும் ,அதற்கு நம் ஆட்சியாளர்கள் துணை போவதாலேயே இப்படி விலை உயர்வை இந்திய மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது. பெட்ரோலில் இப்படி மக்கள் துண்பப்படுவதை வழி இல்லையா? என்றால் இருக்கிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் பெட்ரோ லை குறைவாக செலவிட்டு பெற்றோல் சிக்கனத்தை உருவாக்கலாம்.  ஆனால் அதை செய்ய நம் ஆட்சியாளர்களுக்கு மனமில்லை. காரணம் அதானால் மக்களுக்கு மட்டுமானால் நன்மை விளையலாம். கட்சிக்கு படி அளக்கும் அம்பானிகளுக்கு லாபம் இல்லாமல் பொய் விடுமே. மக்களா?அம்பானிகளா?என்றால் நம் மன்மோகன் சிங் வகையறாக்களின் கட்சி முள் அம்பானிகள் பக்கமே சாய்கிறது. சரி .இனி பெட்ரோல் விலை குறைக்க உதவும் எத்தனால் பற்றி பார்ப்போம். பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் இறக்குமதி செலவு குறையும் சர்க்கரை ஆலைகள் மற்றும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய்  கிடைக்கும்.எ

சாதாரண மனிதர் கட்சி

படம்
 அரவிந்த் கேஜ்ரிவால் தனது புதுக் கட்சியை சொல்லிவிட்டார்.இது மக்களுக்கான வித்தியாசமான கட்சி என்றுள்ளார். இதுவரை வந்த கட்சிகள் முழுக்க அப்படித்தான் வந்து அரசியல் குட்டையில் நீக்கமற கலந்துள்ளன. இறைவனுடன் ,மக்களுடன் கூ ட்டணி என்று அலைந்தவர்கள் இன்று தங்கள் கட்சி ச.ம.உ ,க்களை யாரும் கவர்ந்திழுத்துவிடக் கூ டாது என்று பயத்துடன் உள்ள நிலைதான் உள்ளது.பார்ப்போம் சா.ம.கட்சி யின் தனித்துவத்தை. சாதாரண மனிதர் கட்சி - என்ற பொருள்படும் " ஆம் ஆத்மி பார்ட்டி ” என்ற பெயரைச்  அறிவித்தார் அரவிந்த் கேஜ்ரிவால்.  புதுதில்லியில் கட்சியின் முதல் கூட்டம் அதிகாரபூர்வமாக இன்று கூடி இந்தக் கூட்டத்தில் அவர் இந்தப் பெயரை அறிவித்தார்.   மாலை 5 மணி அளவில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால். அப் போது, இந்தப் பெயரை அதிகாரபூர்வமாக ஊடகங்களிடம் அறிவிப்பார் என்று தெரிகிறது . இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் போது, தேசியக் கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் 300க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர். தேசிய கவுன்சில் தற்போது 30 பேர் கொண்ட செய

நமக்கு வாய்த்த அடிமைகள் மிக திறமைசாலிகள்

படம்
- - ------------------- கிரீன் டீ ,பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால் நல்லதுதானே . காங்கிரசு எண்ணியபடியே மக்களவையில் கூ ட்ட ம் நடந்து மன்மோகன் மற்றும் சோனியா ,அமெரிக்கா மனதில் இனிப்பை கொட்டியுள்ளது. மாயாவதியும்,முலாயமும் தாங்கள் கலந்து கொண்ட விருந்துக்கு செஞ்சோற்று க்கடனை  அடைத்துள்ளனர்.கர்ணன் அதற்காக தனது உயிரைத்தான் கொடுத்தான் .இவர்கள் இருவரும் நாட்டு மக்களின் எதிர் காலத்தை பலி கொடுத்துள்ளனர். மக்களவையை அந்நிய முதலீட்டை விட்டு கவனமாக மாற்றி அழைத்து  கூக்குரலிட்டு தங்கள் நோக்கத்தை நிறைவேற்றி யுள்ளனர் . என்ன இன்னும் அடுத்த பிரச்னைவரை சி.பி.ஐ. பயம் இல்லாமல் மாயாவதியும்,முலாயமும்,லாலுவும் இருக்கலாம். இவர்களுக்கு கைவந்த இந்தக் கலை நம்ம கலைஞருக்கு மட்டும் கைகொடுக்கவில்லை. அவரையும் குடும்பத்தையும் ஜெ போல் பழி வாங்க 2ஜி யை வைத்து ஒரு விளையாட்டையே நடத்தி திகாரில் மகள் கனி மொழியை வைத்து அழகு பார்த்து விட்டது.  கருணாநிதியோ இன்னமும் காங்கிரசுக்கு அடிவர

தாடா வுக்கு தடா

படம்
சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரேவின் மரணத்தை அடுத்து மறுநாள் மும்பையில் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை  மூடப்பட்ட து தொடர்பாக  எதிர்ப்பு தெரிவித்து முகநூலில் கருத்து பதிவு செய்ததா ல் கைது  செய்யப்பட்டு வழக்கை எதிர்நோக்கியுள்ள சகின் தாடா என்ற பெண் இது குறித்து  மனதளவில்  அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் . இவரின் பதிவை ஆதரித்து விருப்பம்[ "லைக்"] போட்ட இன்னொரு பெண் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் இந்தியாவில் இணைய தள சுதந்திரம் குறித்த விவாதத்தை கி ளப்பியுள்ளது. கைது நடவடக்கைகளை பிரஸ் கவுன்சில் ,மற்றும் பலரால் கண்டிக்கப்பட்டு ள்ளது. இதற்கு முன்னர் தமிழகத்தைச் சேர்ந்த பின்னணிப் பாடகர் சின்மயி க்கு எதிராக கருத்து தெரிவித்த சிலரும், மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒருவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் வெள்ளை

சிகப்பா இருப்பவன்

படம்
"மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள்"  என்று 6ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.  இது சிகப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப் போல்தான். 9ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் நாடார்களைப் பற்றி கூறப்பட்டுள்ள சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை.  இன்னமும்  போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது   புதிதாக ஒரு கதை  கிளம்பியுள்ளது. 6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நியூ ஹெல்த்திவே' என்ற பெயரில் உள்ள பாடத்தில் ஹெல்த், ஹைஜீன், பிசியாலஜி, பாதுகாப்பு, பாலியல் கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  இதில்தான் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறிவிடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இது அசைவம்

உலக குத்து

படம்
இன்று உலகை கலக்கிக் கொண்டிருக்கும் சை[psy]குத்துப்பாட்டு  பார்த்து விட்டு ஆட முடிந்தால் ஆடிக்கொள்ளுங்கள் 

மூளை ?

படம்
மு க்கிய கண்டுபிடிப்பு கோமா நிலை எனப்படும் நடைபிண நிலையிலும் மனித மூளை சிந்தித்து செயற்படும் திறனுடன் இருப்பதாகவும், தான் இருக்கும் சூழலை அதனால் உணரமுடியும் என்றும், தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அது நினைவில் பதிந்துகொள்கிறது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் வெஜிடேடிவ் ஸ்டேட் என்றழைக்கப்படும் ஒரு நிலை இருக்கிறது. அதாவது ஒரு மனிதரின் மூளைச்செயற்பாடுகள் முற்றாக செயலிழந்த ஒரு நிலை. அவருக்கு தன்னைப்பற்றியோ தனது சூழல் பற்றியோ எந்த பிரக்ஞையும் இல்லாத ஒரு நிலை.  அவரால் மற்றவர்களிடம் பேசவோ மற்றவர்கள் பேசுவதை கேட்டுப் புரிந்துகொள்ளவோ முடியாத ஒரு நிலை. அவரது உடல் உறுப்புக்களை அவரால் இயக்கமுடியாத நிலை. சில நேரங்களில் அவரது கண்கள் திறந்திருந்தாலும் அவரால் பார்த்து புரிந்துகொள்ளமுடியாத நிலை. தமிழில் சொல்வதானால், நடைபிணம் போன்றதொரு நிலை. அதாவது உடலில் உயிர் இருக்கிறது என்பதைத்தவிர வேறு எந்த உணர்வும், உடற்செயற்பாடும் இல

நவம்பர் மாதம்

படம்
முக்கிய நிகழ்வுகள் ================= 1-11-1954 - பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்திய யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.  1-11-2000 - சட்டிஸ்கர் மாநிலம் (26-வது) உருவாக்கப்பட்டது.  1-11-1956 - ஆந்திர பிரதேசம் உருவாக்கப்பட்டது.  3-11-1957 - ரஷ்யா விண்வெளிக்கு ஒரு நாயை அனுப்பியது.  6-11-1860 - அமெரிக்காவின் 16-வது குடியரசுத் தலைவராக ஆபிரகாம் லிங்கன் தேர்வு செய்யப்பட்டார்.   7-11- 1917             ரஷ்ய புரட்சி .சோவியத் பிறந்தது.  19-11-1994 - ஐஸ்வர்யா ராய் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  22-11-1963 - அமெரிக்க அதிபர் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.  26-11-1949 - இந்திய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது.   ______________________________________________________________________________________________   முக்கிய தினங்கள் ================ 6.போர் மற்றும் ஆயுதப்  போராட்டத்துக்கு எதிரான நாள் 7. ரஷ்ய புரட்சி தினம் 9.சட்ட உதவி தினம் 10.அமைதிக்கு விஞ்ஞானம் தினம் 12.உலக நிமோனியா தினம் 14.உலக சர்க்கரை வியாதி  விழிப்புணர்வு