போதையின் பாதை

பாகிஸ்தானில் லாகூ ர் நகரில்  இருமல் (ஸிரப்) மருந்தை உட்கொண்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மருந்தை விற்றுள்ள மருந்தகங்களில் ஒன்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதுடன், அதன் உரிமையாளர்களையும் கைதுசெய்துள்ளனர்.

ஷாஹ்த்ரா நகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை - ஞாயிற்றுக்கிழமை வரையான மஊன்று நாட்களில்  உயிரிழந்துள்ள இவர்கள் இருமல் மருந்தை  போதைக்கு உட்கொண்ட போதை அடிமையானவர்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல்  விற்கப்படுகின்ற இருமல் ஸிரப் மருந்துகளை  போதைக்காகவே  சிலர் உட்கொள்கின்றனர்.

வழக்கமாக  போதைப் பொருள் உட்கொள்பவர்கள்  இடுகாட்டையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
அவர்களில் பலர்  போதைப் பொருட்களை உட்கொண்ட இடுகாடுகளிலேயே இறந்துபோய் கிடந்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் 72 மணி நேரத்துக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பஞ்சாப் மாநில முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பல மருந்தகங்களில் தேடுதல் நடத்தி அதிகாரிகள் இந்த இருமல் மருந்து ஸிரப் கையிருப்புகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த மருந்துப் பொருட்கள் காலாவதியானதில்லையாம் .ஆனால் கலப்பு விகித மாற்றத்தினால் விடமாகியிருக்கலாம். என்று ஊடகங்கள் எழுதியுள்ளன .

சென்ற ஜனவரி மாதத்திலும் லாகூரில் இதய நோயாளிகளுக்கான மருந்துகளில் கலப்படத்துக்கு உள்ளான மருந்துகளை உட்கொண்ட 100-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

அரச மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட  மருந்துப் பொருட்களாலேயே அவர்கள் உயிரிழந்தது  குறிப்பிடத்தக்கது.
 இப்போதெல்லாம் விட த்திலும் கலப்படம்.அதனால் தற்கொலை செய்து கொள்பவர்கள் வேறு வழியைத்தான் கடைபிடிக்க வேண்டியதுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

உடற்பயிற்சி குறித்து நமக்குப் பொதுவாக சில கருத்துகள் உண்டு. உண்மையில் அவற்றில் எவையெல்லாம் சரியானவை? இதோ, நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள்...

கருத்து: நல்ல வடிவம் பெறுவதற்குச் சிறந்த வழி, ஓட்டம்.

உண்மை: ஓட்டமும், மெல்லோட்டமும் (ஜாகிங்) நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால் அவை கால் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒருவர், நீச்சல், நடை, சைக்கிளிங் என்று எந்த உடற்பயிற்சியையும் தேர்வு செய்து, அதன் மூலம், தான் சாப்பிட்டதை விட அதிக கலோரிகளை எரிக்க முடிந்தால் அது சிறந்த உடற்பயிற்சிதான்.

கருத்து: வலியில்லாத உடற்பயிற்சிகளால் பெரிதாக நன்மை இல்லை.

உண்மை: 'ஜிம்' பயிற்சியின் போது தசைகளில் வலி எடுக்காவிட்டால் அதனால் பிரயோஜன மில்லை என்று பொதுவாகப் பலரும் கருதுகிறார்கள். தீவிர உடற்ப யிற்சியின்போது சிறிது கஷ்டம் ஏற்படலாம். ஆனால் நல்ல உடற்பயிற்சிக்கு வலிதான் அடையாளம் என்பதில்லை. தசை சோர்வு அல்லது தசைநார் கிழிந்திருப்பதையும் வலி சுட்டிக்காட்டலாம்.

கருத்து: அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதே நல்லது.

உண்மை: நேரத்தை விட பயிற்சிதான் முக்கியம். பகல் வேளையில் வசதியான எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம்.

கருத்து: நான் உடம்பின் ஒரு பகுதிக்கு மட்டும் தொடர்ந்து பயிற்சி செய்தால் அதன் வலிமை அதிகரிக்கும்.

உண்மை: மனித மனதைப் போல தசைகளுக்கும் இடைவெளியுடன் கூடிய சவால் தேவை. எனவே குறிப்பிட்ட பகுதிக்கு விட்டு விட்டுப் பயிற்சி செய்வதே நல்லது.

கருத்துகள்: காலைச் சிற்றுண்டியைத் தியாகம் செய்யலாம். விரைவாக எடையைக் குறைக்க பட்டினி கிடப்பதே சிறந்த வழி.

உண்மை: தசைகளின் தினசரிப் பராமரிப்புக்கு ஊட்டச்சத்துகள் அவசியம். கலோரி குறைந்த உணவில் கவனமாக இருப்பவர்கள்தான் அதிக எடை போடுகிறார்கள். அவர்களின் உடல் ஆரோக்கியமும் குறைகிறது.

கருத்து: வயது முதிர்ந்தவர்களும், மிகவும் இளவயதினரும் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை.

உண்மை: உடற்பயிற்சி செய்யும் முதியவர்களுக்கு 'ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்' அறிகுறி குறையும். மூட்டு நிலைத்தன்மை அதிகரிக்கும். தவறி விழுந்தால் எலும்பு முறிவைத் தடுக்கும் வகையில் எலும்பு அடர்த்தி பராமரிக்கப்படும். மிக இளவயதினருக்கு, உடற்பயிற்சி அவர்களின் தன்னம்பிக் கையை அதிகரிக்கும்.

கருத்து: உடலைக் காப்பதற்கு நான் ரசித்துச் சாப்பிடும் அனைத்தையும் துறக்க வேண்டும்.

உண்மை: சரியான உணவுமுறை என்பது வாழ்நாள் 'அட்ஜஸ்ட் மெண்ட்'. பிடித்த உணவை முற்றிலுமாக நிராகரிப்பது ஆரோக்கியமான வழிமுறையல்ல. கட்டுப்பாடும், அளவும்தான் முக்கியம். முறையாகவும், மிதமாகவும் சாப்பிட்டால் எந்த உணவும், யாரையும் குண்டாக்காது. மனோவியல் ரீதியாகவும், மிகவும் கண்டிப்பான உணவு முறை, உங்களுக்கு எதிராகத்தான் அமையும்.

கருத்து: கனமான பொருட்களைத் தூக்குவது தசைகளை வலுப்படுத்தும். எனவே ஒரு பெண், பெண்மையுடன் திகழ குறைந்த எடையுள்ள பொருட்களையே தூக்க வேண்டும்.

உண்மை: கனமான பொருட்களைத் தூக்குவது ஒரு பெண்ணை, தசைகள் திரண்ட அழகி ஆக்கிவிடாது. வலுவான தசைகளை உருவாக்க பெண்களுக்கு மனோரீதியாகவே அமைப்பில்லை. மிகத் தீவிரமான பயிற்சிதான் அதைக் கொண்டுவரும்.

கருத்து: எல்லா உடற்பயிற்சிக் கருவிகளும் என் உடம்புக்கு ஏற்றவைதான்.

உண்மை: வீட்டில் வைத்து உபயோகப்படுத்தும் சில உடற்பயிற்சிக் கருவிகள் நன்றாக அமைக்கப்பட்டிருக்கவில்லை. உங்களுக்கு ஏற்கனவே உடல்ரீதியான பாதிப்புகள் இருந்தால் அவை மேலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிக் கருவியில் பயிற்சி செய்யும்முன், உடற்பயிற்சி வல்லுநரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. 
========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?