இடுகைகள்

டிசம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாம்சங் -மோட்டோரோலா

படம்
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்வெளியிட்ட, "கேலக்ஸி' வரிசை  ஸ்மார்ட் போன்களின் விற்பனை,இப்போது  ஒரு கோடியை தாண்டியுள்ளது. இந்நிறுவனம், கடந்த, 2010ம் ஆண்டு ஜூன் மாதம், முதன் முதலாக, "கேலக்ஸி' வரிசையில் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, "கேலக்ஸி எஸ்', "கேலக்ஸி எஸ் 2' மற்றும் "எஸ் 3', "கேலக்ஸி நோட்', "கேலக்ஸி நோட் 2', "கேலக்ஸி ஒய்' உட்பட, 13 வகையான ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிறுவனத்தின் அலைபேசி சாதனங்கள் விற்பனையில், "கேலக்ஸி' பிரிவின் பங்களிப்பு, 50 சதவீதமாக உள்ளது. 2012 ஜனவரி முதல், ஜூன் வரையிலான அரையாண்டில்இந்தியாவில்   10.24 கோடி அலைபேசி சாதனங்கள் விற்பனையாகி உள்ளன.  ஸ்மார்ட் போன்வகைகள்  விற்பனை 55 லட்சம்ஆகும் .  சாம்சங் 41.6%,  நோக்கியா 19.2 %,ரிம் 12.1% ஆக விற்பனை விகிதம் உள்ளது . இப்படி அலை பேசிகள் விற்பனை இருக்கும் போது இந்த அலைபேசி துறையில் முதலிலேயே கால் பதித்த  மோட் டரொலோ  நிறுவனமோ தனது சென்னை தயாரிப்பை கட்டுபடியாகாமல் மூடுகிறது . ம

இதுவும் வாழ்த்துதாங்க

படம்
ஆண்டின் கடைசியில் இருக்கிறோம் . ஒவ்வொரு ஆண்டும் மிக நல்லதாக நாட்டுக்கும்,தனிப்பட்ட முறையிலும் அமைய எண்ணுகிறோம்-விரும்புகிறொம்.ஆனால் அப்படி அமைவது போல் தெரியவில்லை.நாட்டை ஆள்வோர் எடுக்கும் ஒ வ்வொரு முடிவும் நாட்டை மட்டுமல்ல நமது தனிப்பட்ட வாழ்வையும் செல்லும் திசையை முடிவு செய்கிறது. அதுவும் உலகமயமாக்கல் வந்து சேர்ந்த பின் வெளிநாட்டினர் எடுக்கும் முடிவு கூட நமது பாதையை தீர்மானிக்க ஆரம்பித்து விட்டது. இயற்கை மட்டுமே அனைத்தையும் திசை மாற்றும் மாபெரும் சக்தி என்பதை நாம் ஆழிப்பேரலை -நிலநடுக்கம்-எல்நினோ போன்றவைகளின் தாக்கங்களுக்குப்பின் உணர்ந்திருக்கிறோம். இயற்கை,-ஆட்சியாளர்கள்-,அவர்களை வழிநடத்தும் அமெரிக்கா -இவர்கள் மூவரும்தான் இன்றைய இந்திய மக்களின் தலைவிதியை முடிவு செய்யும் மும்மூர்த்திகள் இவர்கள் கரூணை இந்த 2013 புத்தாண்டில் கிடைக்க வேண்டும் . உங்களுக்கு கிடைக்கும் .  வரும் 2013 ஆங்கிலப்புத்தாண்டு உங்களுக்கு நல்லதாக அமைய வாழ்த்துக்கள்! ----------------------------------------------------------------------------------------------------------------------------- முக நூலில் இருந

கமலின் விஸ்வரூபம் 3 மணி நேரத்தில் 300 கோடி ரூபாய்கள் -

படம்
நண்பர் நாகராஜன் ரவி முகனூலில் வெளியிட்ட தகவல். உண்மையில் இன்றுவரை கமலுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்றவர்கள் இப்போது உண்மை நிலை அறிந்து மனதில் பிரமிப்பு அடைந்திருப்பார்கள். இத்துடன் உலக நாயகன் கமல்ஹாசன் ஓய்ந்தான் என்று மனதில்  எண்ணியவர்களூக்கு இது ஒரு சோகம் தரும் செய்திதான். 300 Crores in 3 Hours - Content suitable for ALL - Viswaroopam Strategy from a MBA point of view............கமலஹாசன் என்னும் தமிழ்ச்சினிமாவின் முரட்டு பக்தன் பாகம் - 2 300 கோடி ரூபாய்கள் - 3 மணி நேரத்தில் - அதுவும் இது ஏர்டெல் டிஷ் வசூல் மட்டும்தான்.  இன்னமும் சண்,டிஷ் டி .வி,ரிலயன்ஸ் ,டாடா ஸ்கை ,விடியோகான் இருக்கிறது.  என்னா காமெடி என்பவர்களுக்கு இப்போது புரிந்திருக்கு இதன் சூத்திரம். ஆம் இது தான் உலக சினிமாக்களின் முதன் ஃபார்முலா - None other by - நம்ம வசூல்ராஜாவின் சாதனை. நேற்று ஏர்டெல் மட்டும் அறிவித்திர ுந்தது 30 லட்சம் பேர் முன் பதிவு என்று முப்பது லட்சம் X 1000 ரூபாயை பெருக்கினால் 300 கோடி ரூபாய்கள் இது ஒரு டி டி ஹெச் தான் இது மாதிரி இன்னும் 6 ஜாம்பவான்களின் புக்கிங்கை சேர்த்து க

கையாலாகாத்தன்மை

படம்
டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. டெல்லி மாணவி கற்பழிப்புக்காக நடந்த போராட்டம்,அதிர்வலைகள்,பிரதர்,கு டியரசுத்தலைவர் வரையிலானவர் அறிக்கைகள் சற்று அதிகமாகவே இந்தியாவை குலுக்கி விட்டது.இதற்கான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் தாக்குதலில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டது அநியாயம் என்றாலும்,அவர் தானாகவே செத்துப்போனதாக திசை திருப்பியது அதிலும் அநியாயம். இந்த போராட்டங்கள் இதுவரை இது பொன்ற கற்பழிப்புகள் இந்தியாவிலேயே நடைப்பெற்றது கிடையாது. இதுதான் முதல் அக்கிரமம்  அதனால் மக்கள் கொதித்து எழுந்தது போல் ஒரு பிம்பத்தை உண்டாக்கி விட்டது. இது போன்ற சம்பவங்களில் தன்னிச்சையாக முதலிலேயே பெண்ணுரிமை இயக்கங்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பவைகள் இது போன்று போராட்டங்களை வழி நடத்திருந்தால் இந்த சமபவங்களே நடந்திருக்காது.   வாச்சாத்தியில் அரசு ஏவலர்களே  கிராமத்தையே சூறையாடி-அதில் உள்ள சிறுமிகள் வரை பெண் என்று இருந்தாலே கற்பழித்து ஒரு பெண் ஆளும் போதே களங்க்கப்படுத்தினார்களே அப்போது இது போன்றது குட அல்ல சிறு அளவிலான முணுமுணுப்பு கூட எழாதது இன்னமும் வேதனையையும் ஆச்சரியத்தையும

அயோத்தி

படம்
1949 ஆம் ஆண்டு அயோத்தியில் ஒரு மசூதியில் நடைபெற்ற ஒரு சம்பவம், அதனால் ஏற்பட்ட பதற்றம் மற்றும் வன்முறையால் இதுவரை ஆயிரக்கணக்கான உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ளன.  அதன் பின்னர் பொறுப்பேற்ற ஐந்து பிரதம மந்திரிகளுக்கும் இந்த விவகாரம் தீராத தலைவலியை உண்டாக்கியது.  சராயு நதி, நேபாள நாட்டின் எல்லையோரம் வழியாக வட  இந்தியாவில் நுழைந்து கங்கையுடன் சங்கமித்து அயோத்தி நகரம் வழியாக பாய்ந்து செல்கிறது. 1949ல் அயோத்தி  நகரம் கோயில்கள், ஆசிரமங்கள் மற்றும் மடங்கள் நிறைந்த ஒரு நகராக அறியப்படுகிறது. பண்டைக் காலம் முதல் இந்நகரம், ராமரின் பிறந்த ஊராக கூறப்பட்டு வருகிறது. "அயோத்தி" என்பதற்கு "எவராலும் வெல்ல முடியாத" என்று சமஸ்கிருதத்தில் பொருள் கொள்ளப்படுகிறது. இந்நகரில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் வசித்து வந்தாலும், நெற்றியில் பட்டை  தீட்டிக்கொண்டு, நீண்ட தாடியுடனும், பெரிய அங்கியுடனும் சுற்றி வரும் சாதுக்களால் இன்று இருப்பது போலவே அன்றும் நிறைந்து காணப்பட்டது.  1930ல் நாற்பது வயது மதிக்கத்தக்க அபிராமதாஸ் என்கிற ஒரு சமயகுரு பீகாரில் இருந்து அயோத்திக்கு வந்திருந்தார். இவ

மெக்சிகோவின் இன்றைய கதி...

படம்
மெக்சிகோ நகரில் உள்ள ஓட்டலுக்கு மெக்சிகோ விமானநிலையத்திலிருந்து டாக் சியில் என்னை ஏற்றிச்சென்ற ஓட்டுநர் ஒரு கணினி பகுத்தாய்நர் ஆவார். என்னை விமான நிலையத்திலிருந்து ஓட்டலுக்குக் கொண்டு செல்வதற்கு இடையிலான 30 கிலோ மீட்டர் தூரத்தில் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தின் அவலநிலை குறித்தும் சரளமான ஆங்கிலத்தில் அவர் என்னிடம் தெரிவித்துவிட்டார்.  உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து அவர் என்னிடம் தெரிந்து கொள்ள விரும்பினார். ஏனெனில், தானும் தன்னைப்போன்றவர்களும் மெக்சிகோவில் படும் துன்பங்கள் குறித்து அப்போதுதான் தன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடி யும் என்று அவர் நினைத்தார். வேலையில் லாத் திண்டாட்டம் குறித்தும், தனக்கு ஒரு சரியான வேலை கிடைக்காதது குறித்தும் அவர் என்னிடம் முறையிட்டார்.  தன் குழந் தைகளுக்கும் இதுவே கதி என்று அவர் கூறி னார். அமெரிக்காவையும் அதன் கொள்கை களையும் சமூகத்தில் நிலவும் லஞ்ச ஊழல் களையும் அவர் சாடினார். அதன்பின் மெக்சி கோவில் நான் தங்கியிருந்த ஒரு வார காலத் திலும் எனக்கு இதுபோன்று எண்ணற்ற அனுபவங்கள் ஏற்பட்டன. பெரும் மால

தண்ணீர் வர்த்தகம்

படம்
நாட்டை கண்ணீரில் தள்ளிவிடும்.... “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்படப் போகும் விளைவுகள்” கட்டுரையில் கார்ல் மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார்: “வரலாற்றின் முதலாளித்துவ கால கட்டம் புதிய உலகத்திற்குரிய பொருளாயுத அடித்தளத்தைப் படைத்துருவாக்க வேண்டுமெனில்:ஒரு புறத்தில் மனிதகுலத்தின் பரஸ்பர சார்பு நிலை மீது தோற்றுவிக்கப்பட்ட சர்வவியாபகமான ஒட்டுறவையும் அந்த ஒட்டுறவுக்கான வழிவகைகளையும் உருவாக்க வேண்டும்; மறுபுறத்தில் மனிதனின் உற்பத்தி ஆற்றல்களை வளப்படுத்துவதும்பொருள்வகை உற்பத்தியை இயற்கை காரணத்துவங்களை (Natural Agencies) விஞ்ஞான பூர்வமான மேலாண்மையாக உருமாற்றப்படுவதையும் வளர்த்துச் செல்ல வேண்டும். மண்ணியல் புரட்சிகள் பூமியின் மேல் பரப்பைப் படைத்துருவாக்கியிருப்பது போன்று அதே வழிகளில் முதலாளித்துவத் தொழில்துறையும் வாணிகமும் புதிய உலகத்துக்கான இந்தப் பொருளாயத நிலைமைகளைப் படைக்கின்றன.” மார்க்ஸின் கூற்றை உண்மையாக்கும் விதமாக உலகமயமாக்கல் தற்போது உலகை கிராமமாக சுருக்கி, மனிதகுலத்தை நாடுகளில் எல்லை கடந்த “சர்வவியாபகமான ஒட்டுறவு உடைய வர்த்தக” சமூக மாக மாற்றியுள்ளது. அதேபோல இயற்

சிவப்பு மழை

படம்
இலங்கையில் அண்மைக்காலமாக பல இடங்களில் பெய்ததாகக் கூறப்படும் சிவப்பு மழையின் துளிகளில் அல்கா வகை உயிரினங்கள் காணப்பட்டதாக அது குறித்து ஆராய்ந்த இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து நிறுவனத்தின் தலைமை இயக்குனரான டாக்டர் அனில் சமரநாயக்கா "அவை அல்காக்களின் வகையை சேர்ந்ததாக தாம் அனுமானிக்கின்ற போதிலும் குறிப்பாக அவை எந்த வகையான அல்காக்கள் என்பதை தம்மால் கண்டறிய முடியாது இருப்பதாக கூறுகிறார். அந்த ஒரு கல உயிர் அங்கிகள்[பாக்டீரியாக்கள்] மிகவும் கடினமான சூழ்நிலையில் கூட உயிவாழ்வனவாக இருப்பதுதடன் பெருக்கமடையும் தன்மையையும் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். இவை குறித்த தமது அனுமானங்களை உறுதி செய்ய அவற்றை டி என் ஏ மற்றும் ஆர் என் ஏ சோதனைகளை செய்ய வேண்டியுள்ளதாகவும் டாக்டர் சமரநாயக்கா கூறினார். இது குறித்து ஏற்கனவே கேரளாவில் பெய்த சிவப்பு மழையை ஆராய்ந்த பிரிட்டனின் கார்டிவ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சிகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இருந்தபோதிலும், அவை

பேய்கள் நடமாடுகின்றன,

படம்
                                                                                                                                         -அருந்ததிராய் ‘அன்தில்லா’ என்பது இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான வளமனையாகும். இதுவரையில் இவ்வளவு பெருந் தொகையைச் செலவிட்டு வேறு எவரும் இதுபோன்ற வீட்டைக் கட்டவில்லை. 27 அடுக்கு மாடிகள் கொண்ட இம்மாளிகையில், மூன்று சிறிய விமானதளங்கள், ஒன்பது மின் தூக்கிகள், தொங்குத் தோட்டங்கள், நடன அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஆறு தளங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் முதலானவை உள்ளன. 600 வேலைக்காரர்கள் இருக்கின்றனர். 27 அடுக்குகளின் உயரத்திற்கும் இரும்புச் சட்டகங்கள் மீது புல்வெளி அமைக்கப் பட்டுள்ளது. 120 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 விழுக்காடு மதிப்பு அளவிற்கான சொத்து இப்படி 100 பெரும் கோடீசு வரர்களிடம் இருக்கிறது. இவ்வளவு பெரிய மாளிகையில் அம்பானி குடும்பம் வாழவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது எவர்க்கும் உறுதியாகத் தெரியவில்லை. ஆயினும் அந்த மாளிகைக்கு வாஸ்து சரியில

கசப்பான உண்மை.

படம்
இந்தியாவில் எத்தனையோ பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன. நடந்து கொண்டுமிரு க்கின்றன.நடக்கவுமுள்ளது.ஆனால்  டெல்லி மாணவி பலாத்காரம் மட்டும் இப்படி கடும் விளைவுகளை எற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் 13 வயது சிறுமி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டு கொடுரமாக கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்.அதை இந்த ஊடகங்களோ இளைய தமிழ் சமுதாயமோ கண்டு கொள்ளவில்லை. கற்பழிப்பில் கூட பாரபட்சமா?  சொல்லப்போனால் தூத்துக்குடி கற்பழிப்பு நிகழ்வு மிகக்கொடுமை.13 வயது சிறுமி பள்ளிக்கு செல்லும் போது பட்டபகலில் பலாத்காரம்,கொலை செய்யப்பட்டுள்ளாள். இப்போ து டெல்லி மாணவியை மத்திய அரசு சிங்க்கப்பூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்புகிறதாம்.உடன் அவரின் பெற்றோர்களும் அரசு செலவில் சென்று சிகிச்சை பெற உள்ளனர். ஆபாச போராட்டம்  ஆனால் இவர்களின் நீதி கேட்டு போராட்டத்தில் கற்களால் தலையில் தாக்கப்பட்டு இறந்த காவலர் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது. டெல்லி காவலர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை அவர் குடும்பத்திற்கு கொடுத்துள்ளனராம். இவர்  கூட தாக்குதலில் இறக்கவில்லை.மாரடைப்பால் இறந்து போனார் என்று ஆம் ஆத்மி கேஜ்ரிவா