உலகம்.சில படங்களில்

இவர்கள் இப்படி கட்டி பிடித்து அழுவதற்கு டெல்லி சம்பவம் போல் ஏதேனுமா?என்று யோசிக்க வேண்டாம் .
suran
ஸ்பெயினை சார்ந்த இவருக்கு அந்த நாட்டு அரசு லாட்டரி குலுக்களில் 2.5பில்லியன்
[ டாலரில் 3.5பில்லியன் ]மொத்தமாக பரிசு கிடைத்துள்ளது.அதை நினைத்துதான் இந்த ஆனந்த அழுகை.
___________________________________________________________________________________________
சிலி -அர்ஜன்டினா நாடுகளில் உள்ள பனிமலையில் உள்ள எரிமலை ஏறி குழம்பை கக்க ஆரம்பித்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெத்தலகேமில் ஏசு பிறந்ததாக சொல்லப்படும் இடத்தில் கிறிஸ்துமசை முன்னிட்டு வணங்கும் மூதாட்டி.
suran
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
டெல்லி கற்பழிப்பு சம் பவ எதிர்ப்பு போராட்டத்தில் காவலருடமன்  மோதும் பெண்.



 
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
-ஆப்கன் .காவலர்கள் தீவிரவாதிகள் மோதலில் கொழுத்தப்பட்ட கடைகள்.

கும்பமேளாவுக்கு  கஞ்சாவுடன் காத்திருக்கும் சாமியார்?

கும்பமேளா சாமியார்கள் இடம் ஒதுக்கீடு முறைகேடுகளுக்கு எதிரான சாமிகளி ன் போராட்டம்.
சல்மான் கான் நடித்த தபாங்க்- 2 அதிக அளவான 2500 திரையரங்குகளில் திரையிடப்பட்டு முதல் நாளில் மட்டும் ரூபாய் 21.10 கோடிகளை சம்பாதித்துள்ளதாம்.

 -------------------------------------------------------------------------------------------------------------------------------

பாம்பு முட்டை 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது அலுமாரியில் பக்கத்தில் இருந்து கிடைத்த முட்டைகளை விளையாட்டுக்காக சேர்த்து வைத்துள்ளான்.
அப்படி சேர்த்து வைத்த முட்டைகள் குஞ்சு பொரித்து பாம்பு குட்டிகள் வெளி வந்தததால் அவனது குடும்பத்தினர் பெரும் அச்சமடைந்துவிட்டனர்.

இருந்தாலும் அந்தப் பாப்புக் குட்டிகளிடம் கடிபடாமல் அந்தச் சிறுவன் உயிர்தப்பியதே பெரும்வாய்ப்பு  என்று கூறப்படுகிறது.

கைலி கும்மிங் என்ற அந்த 3 வயதான சிறுவன் குயின்ஸ்லாண்டின் டவுன்ஸ்வீலில் உள்ள தனது வீட்டுக்கு அருகில் ஒரு இடத்தில் இருந்து இந்த பாம்பு முட்டைகளை எடுத்து வந்து பல நாட்களுக்கு முன்னதாக அவற்றை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில்  போட்டு வைத்திருக்கிறான்.
முட்டைத்  தோலும் குட்டிகளும் 
 அந்த டப்பாவை திறந்து பார்த்த  அவனது தாயார் அதில் மிக கொடிய விடமுடைய ஈஸ்டர்ன் பிரவுண் இனத்தை சேர்ந்த 7 சிறிய பம்புக்குட்டிகளை பார்த்து அதிர்ந்து போய்விட்டார் .

மிகவும் விஷத்தன்மை கொண்ட அந்தப் பாம்புகள் தற்போது காட்டில் விடப்பட்டுள்ளன.

அந்த பாம்புகளை காட்டில் விட்ட வடக்கு குயின்ஸ்லாண்ட் வனவிலங்கு பராமரிப்பு அமைப்பைச் சேர்ந்த டிரிஸ் பிரண்டகஸ், அவையெல்லாம் 12-15 சென்டிமீட்டர் நீளமானவை ஆனால் மிகச்சிறிய குட்டிகள்என்று கூறியுள்ளார்.

''அவற்றின் விஷப்பல் மிகச்சில மில்லிமீட்டர் நீளமானதுதான். அது சிறியதாக இருக்கும் போது அதனால் மனிதத் தோலில் கடித்து உள்ளே நுழைய முடியாது. ஆனால் பெரிய பாம்பின் அளவுக்கு சிறிய பாம்பின் பல்லும் கடுமையான விடம் கொண்டதுதான்'' என்று அவர்  கூறியுள்ளார்.

அங்குள்ள பாம்புகளை பொறுத்தவரை இன்லண்ட் தாய்பான் என்னும் பாம்புக்கு அடுத்தபடியாக இந்த வகை பாம்புகள்தான் மிக கடுமையான விடம் கொண்ட பாம்பு இனமாகும்.
சிறுவனின் தாய் தற்செயலாக பார்த்து சுதாரிக்காவிட்டால் குடும்பத்துடன் பாம்பு விடத்துக்கு இரையாகியிருக்க வேண்டியதுதான்.
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?