மெக்சிகோவின் இன்றைய கதி...


suran


மெக்சிகோ நகரில் உள்ள ஓட்டலுக்கு மெக்சிகோ விமானநிலையத்திலிருந்து டாக் சியில் என்னை ஏற்றிச்சென்ற ஓட்டுநர் ஒரு கணினி பகுத்தாய்நர் ஆவார். என்னை விமான நிலையத்திலிருந்து ஓட்டலுக்குக் கொண்டு செல்வதற்கு இடையிலான 30 கிலோ மீட்டர் தூரத்தில் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தின் அவலநிலை குறித்தும் சரளமான ஆங்கிலத்தில் அவர் என்னிடம் தெரிவித்துவிட்டார். 
உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து அவர் என்னிடம் தெரிந்து கொள்ள விரும்பினார். ஏனெனில், தானும் தன்னைப்போன்றவர்களும் மெக்சிகோவில் படும் துன்பங்கள் குறித்து அப்போதுதான் தன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடி யும் என்று அவர் நினைத்தார். வேலையில் லாத் திண்டாட்டம் குறித்தும், தனக்கு ஒரு சரியான வேலை கிடைக்காதது குறித்தும் அவர் என்னிடம் முறையிட்டார். 
தன் குழந் தைகளுக்கும் இதுவே கதி என்று அவர் கூறி னார். அமெரிக்காவையும் அதன் கொள்கை களையும் சமூகத்தில் நிலவும் லஞ்ச ஊழல் களையும் அவர் சாடினார். அதன்பின் மெக்சி கோவில் நான் தங்கியிருந்த ஒரு வார காலத் திலும் எனக்கு இதுபோன்று எண்ணற்ற அனுபவங்கள் ஏற்பட்டன.

பெரும் மால்கள்
suran

டாக்சி பல வர்த்தக நிறுவனங்களையும், மக்கள் குடியிருப்புப் பகுதிகளையும் கடந்து சென்றது. ஆயினும் சிறிய கடைகள் எதை யும் என்னால் பார்க்க முடியவில்லை. மிகப் பெரிய மால்கள், ஆட்டோமொபைல் டீலர்கள், பெட்ரோல் நிலையங்கள், ரெஸ்டாரண்டுகள், மருந்துக்கடைகள், கார் ரிப்பேர் கடைகள் இருந்தன. குடியிருப்பு காலனிகளிலாவது சிறிய கடைகள் இருக்குமா என்று தெரிய வில்லை. 
 1980 மத்திய வாக்கில் இந்தியத் தூதரகத்தில் வேலைக்குச் சேர்ந்த என் நண் பர் ஒருவர், என்னிடம் கூறியபோது, தான் வேலைக்குச் சேர்ந்த சமயத்தில் எங்கு பார்த் தாலும் பழக் கடைகள் இருந்ததாகவும், மாலையில் ஒருவர் தனக்கு வேண்டிய பழங் களை வாங்கிச் சாப்பிட முடியும் என்றும், ஆனால் இப்போது அத்தகைய கடைகளை எங்கேயுமே பார்க்க முடிய வில்லை என்றும் கூறினார். இந்தியப் பெருநகரங்களின் கதியும் எதிர்காலத்தில் இதுதானோ என்று நான் அஞ்சினேன்.

சிறிய கடைகள் இல்லாதது என்னை மிகவும் வியக்க வைத்ததெனில், மிகவும் ஆழ மான முறையில் ஏற்பட்டுள்ள வேலையில் லாத் திண்டாட்டம்தான் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மெக்சிகோவும் 1994 இலிருந்தே நாஃப்டா எனப்படும் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஓர் அங்கமாக இருந்து, அந்நிய முதலீட்டை இறக்கிய நாடாகும். அமெரிக்காவிலிருந்து பல தொழிற்சாலைகள் வட மெக்சிகோ விற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்துதான் அமெ ரிக்கா மற்றும் கனடிய சந்தைகளுக்குப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன. மெக்சிகோ நகரம் கார்களின் வருகையால் பரபரப்பாகி யது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில், தனி நபர் வருமானத்தில், நம்மைவிட பத்து மடங்கு அதிகமான அளவில் இருந்தது. 
suran
 ஒன் றன் மீது ஒன்றாக மேம்பாலங்கள் நிறைய கட் டப்பட்ட போதிலும் போக்குவரத்து நெருக்கடி யும் மிகுந்திருந்தது. அதிகாலை நேரத்தில் 25 நிமிடங்களில் கடக்கும் தூரத்தை, பகல் நேரங்களில் கடக்க வேண்டுமானால், இரண்டிலிருந்து மூன்று மணி நேரமாகும். நிலப்பரப்பின் பெரும்பகுதி தண்ணீருக்கு மேலே இருந்ததால், வானுயர் கட்டடங் களைக் கட்டவேண்டுமானால் மிகவும் செலவு செய்து அஸ்திவாரங்களை அமைக்க வேண்டியிருந்ததால், நிறைய கட்டடங்கள் ஒன்று அல்லது இரண்டு மாடிக் கட்டடங் களாகவே கட்டப்பட்டன. எனவே நகரத்தின் பரப்பளவு விரிவானதாக மாறியது.

மெக்சிகோ நகரத்திற்கு 1980களின் மத் தியவாக்கில் சென்றவர்கள் நிறைய சிறிய ஸ்டோர்கள் இருந்ததை நினைவு கூர்கிறார் கள். ஆனால் இப்போது உலகின் மிகப்பெரிய பணக்காரரான கார்லோஸ் ஸ்லிம் என்ப வருக்குச் சொந்தமான சன்பார்ன் தொடர் ஸ்டோர்கள்தான் அங்கே காணப்படுகின் றன. 
suranசன்பார்ன் ஸ்டோர்களில் முதல் தளத் தில் உணவுவிடுதி, ஒரு பொருள் அன் பளிப்பு கடை, ஒரு மருந்துக்கடை இருக் கின்றன. மற்ற கடைகள் தரைத் தளத்தில் இருக்கின்றன. நான் ஒரு இளைஞனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, குடியி ருப்புப் பகுதிகளின் முனைகளில் இத்தகைய ஸ்டோர்கள் இருந்ததைத்தான் பார்த்த தில்லை என்று கூறினார்.

நான் தங்கியிருந்த ஓட்டலின் சன்னலி லிருந்து பார்த்தபோது பெரிய பெரிய மால் களைத்தான் பார்க்க முடிந்ததே தவிர, என் னால் சிறிய ஸ்டோர்கள் எதையும் பார்க்க முடியவில்லை. அமெரிக்காவில் காணப்படு வதைப் போலவே சியர்ஸ், வால்மார்ட், மெக் டொனால்டுகள்தான் எந்தப் பக்கம் பார்த் தாலும் காணப்பட்டன. குடியிருப்புப் பகுதி களிலும் சிறிய ஸ்டோர்கள் எதையும் என் னால் பார்க்க முடியவில்லை. அங்கும் வட அமெரிக்காவின் செவன் லெவன்ஸ் என்னும் நிறுவனத்தின் கடைகள்தான் காணப்பட் டன. 
suran
 ஏழைகள் வாங்குவதற்காக அங்குள்ள நடைபாதைகள் மற்றும் சந்தைகளின் அருகே சிறு சிறு கடைகள் இருந்ததைப் பார்த்தேன். மால்களில் பணிபுரியும் தொழி லாளர்கள் நடைபாதைகளில் உள்ள இக் கடைகளுக்கு வந்து உணவுப் பொருள்களை வாங்கி உண்பதையும் பார்த்தேன். ஏனெனில் மால்களில் உள்ள விலைகள் அவர்களின் சம்பளத்திற்குள் வாங்கி உண்ணக்கூடிய அளவிற்கு இல்லாத நிலை.

கிராமக் குடியரசு

அடுத்த நாள், மொலிலோஸ் என்னுமிடத் தில் இருந்த தால்னேபாண்ட்லா என்னும் கிராமத்தைப் பார்ப்பதற்காகச் சென்றிருந் தேன். இது ஒரு புரட்சிகர கிராமமாகும். என்னை விருந்தோம்பி உபசரித்த அல் வாரோ என்பவர் ஒரு பொருளாதாரப் பட்ட தாரியாவார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து குடியேறிவிட்டார்.

அங்கிருந்த விவசாயிகளுடன் இணைந்து 4000 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த அம் மலைக்கிராமத்தில் பழவகைகளைப் பயிர் செய்துவந்தார்.
இக்கிராமம் லஞ்சஊழல் அரசியல் கட்சி களை நிராகரித்துவிட்டது. கிராமவாசிகள் தங்கள் சொந்தத் தலைவரைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஓர் அரசியல் கட்சியின் பிரமுகரான அந்நகராட்சியின் தலைவரை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. அல்வாரோவும் மற்றும் சிலரையும் பயங்கர வாதிகள் என்று பிரகடனம் செய்து, அரசாங் கம் அவர்களைக் கைது செய்திட துருப்புக் களை அனுப்பி வைத்தது. எனவே அவர்கள் தலைமறைவாகச் செல்ல வேண்டிய தாயிற்று. மெக்சிகோ நகரம் முழுவதும் எதிர்ப் புக் கிளர்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக பல்கலைக் கழகங்களில் இவை நடந்தன. 
பின்னர் அரசாங்கம் அவர்கள் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகளைக் கைவிட்டு, ஓர் ஒப்பந்தத்திற்கு வந்தது. இங்குள்ள நிலம் முழுவதும் இங்குள்ளவர்களுக்கே சொந்தம் என்றும், வெளியாள் எவருக்கும் இவற்றை விற்க முடியாது என்றும் ஒப்பந்தம் செய்யப் பட்டது. இந்தியாவைச் சேர்ந்த பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு பேராசிரியர் தங்கள் கிராமத்திற்கு வந்திருக்கிறார் என்று கேள் விப்பட்டதும், கிராமத் தலைவர்கள் எனக்கு கிராமத்தில் விளைந்த பொருள்களைக் கொண்டு விருந்து படைத்து நன்கு உபசரித் தனர். 
அவர்களது உணவு வகைகளும் மிக வும் சுவையாக இருந்தது. அல்வாரோ, காந் திஜி குறித்தும் அவருடைய அஹிம்சை தத் துவம் குறித்தும் ஒரு நவீன சமுதாயத்தில் அதை எப்படிப் பிரயோகிக்க முடியும் என் றும் என்னிடம் கேட்டார்.
கொள்ளைக்கும்பலின் ஆட்சி

அமெரிக்காவிலிருந்து முதலீடுகள் வந்து கொட்டப்படும் வட மெக்சிகோவில், கொள் ளைக் கும்பலின் ஆட்சியே நடைபெறு கிறது. சட்டமின்மையும் ஒழுங்கின்மையும் அங்கே தலைவிரித்தாடுகிறது. அரசாங்கம் என்ற ஒன்று அங்கு இருப்பதாகவே தெரிய வில்லை. வேலையில்லா இளைஞர்கள் கொள்ளைக் கும்பலில் இணைந்து கொண் டிருக்கிறார்கள். போதைப்பொருள்கள் கடத் தல், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் புலம் பெயர்ந்து செல்லுதல் இளைஞர்கள் மத்தியில் காணப்படுகிறது.
 இவ்வாறு புலம் பெயர்ந்து செல்லுதலும் வேலைவாய்ப்பின் மையை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இவ்வாறு புலம் பெயர்ந்து சென்றவர்கள் அனுப்பி வைத்திடும் பணமும், பெட்ரோலியம் ஏற்றுமதி மற்றும் சுற் றுலாத்துறையும்தான் மெக்சிகோ பொருளாதா ரத்தை ஓரளவிற்குக் கட்டுக்குள் வைத்திருக் கிறது. பொருளாதார நெருக்கடி ஆழமாகாமல் ஓரளவிற்குத் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

மெக்சிகோவின் பிரச்சனைகள் தீர்க்கப் படுவதற்குப் பதிலாக, அது அமெரிக்காவிற்கு மிகவும் அருகில் இருப்பது, அதனுடனான சுதந்திர வர்த்தகம், அங்கிருந்து வரும் முத லீடுகள் ஆழமான வேலையில்லாத் திண் டாட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. பாரம் பரியமாக இருந்து வந்த விவசாயத்தை வீழ்ச் சியடையச் செய்துவிட்டது. மெட்ரோ நகரங் களில் இருந்த சில்லரை வர்த்தகர்களுக்கு முடிவு கட்டிவிட்டது. 
மெக்சிகோவில் இன்று நான் பார்த்த காட்சி, இந்தியாவிற்கும் வர வெகு காலமாகாது.
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மெக்சிகோவைவிட நம் நாட்டில் நெருக்கடி நிலைமை மேலும் மோசமானதாக இருக்கும். ஏனெனில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து சென்றிட அண்டை நாடாக அமெரிக்கா இங்கே இல்லை.
 பெட்ரோல் உற்பத்தியோ அல்லது சுற்றுலாத்துறையோ மெக்சிகோ வில் இருப்பதுபோல் இங்கு கிடையாது. எனவே நிலைமைகள் இங்கே மெக்சி கோவைவிட மிகவும் மோசமானதாக அமைந் திடும்.
                                                                                                                                                                                          -அருண் குமார்
                                                                                                      சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர்
                                                                                             
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ,                                                         தில்லி

தமிழில்: ச.வீரமணி

 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?