"செருப்பு"விலை குறையும். பட்ஜெட்..,

இந்திய வரும் நிதியாண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை மக்களவையில் இன்று நிதியமைச்சர் ப.சி.தாக்கல் செய்துள்ளார்.
இந்த தாகளில் மக்கள் நலன்,விவசாயிகள் நலன் ஒன்றுமே இல்லை.வரை ஏய்ப்பு செய்வோர்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மத்திய வரவு செலவு திட்டத்தால் "செருப்பு"விலை மட்டுமே குறையும்.
2013-2014 நிதி ஆண்டின் மொத்த திட்ட மதிப்பீடு 6. 80 லட்சம் கோடியில் திட்டச்செலவு 5. 53 லட்சம் கோடியாக இருக்கும் என அறிவித்துள்ளார்.
மறைமுக வரி மூலம் 4 ஆயிரத்து 700 கோடியும் , நேரடி வரியாக 13 ஆயிரத்து 300 கோடி எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 செருப்பு வரி குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சொகுசு கார்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது.
 பாதுகாப்பு துறை மற்றும் தாழ்த்தப்பட்டோர் உதவித் தொகைகளுக்கு  கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுங்க மற்றும் கலால் வரியில் பெரியஅளவில் மாற்றம் எதுவுமில்லை. வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வரும் ஆண்களுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்திற்கும், பெண்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 விவசாயிகள் கடன் , தொழிலாளர் நலன் குறித்தும் , மாநில வாரியாக புதிய வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப் படவில்லை.
தரைவிரிப்புகள்,செருப்பு விலை மட்டும் குறைகிறது.
ரூ 2 ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள மொபைல் போன்களுக்கு வரியை 1 சதவீதத்தில் இருந்து 6 சதமாக உயர்த்தியுள்ளார். உயிர்காக்கும் மருந்து வகைகளுக்கு வரிச்சலுகை எதுவும் வழங்கப்படவில்லை.
 சிகரெட்டுக்கு வரியை 18 சதமாக உயர்த்தியுள்ளார். இறக்குமதியாகும் செட்ஆப் பாக்ஸ் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமான வரம்பு  2 லட்சம்அப்படியே  நீடிக்கிறது. ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை பெறுவோருக்கு வரியில் ரூ. 2 ஆயிரம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ஒரு கோடி பெறுவோருக்கு கூடுதலாக 10 சதவீத வரிஉயர்த்தப்பட்டுள்ளது.
  தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்த 7 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நேரடி மானிய திட்டத்தின் மூலம் 11 லட்சம் பேர் பயன் அடைவதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
வழக்கம் போல் அம்பானி வகையறாக்களுக்கு சலுகை தரப்பட்டுள்ளது.அதற்காகவே  வரி ஏய்ப்போருக்கு  மன்னிப்பு வழங்கும் ஒரு புதிய திட்டம்  அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
 ஆயுர்வேத மருந்துகள் விலை குறைக்கப்படுகிறது. மார்பிள் கல்லுக்கு வரி உயர்த்தப்பட்  டுள்ள து.இதனால் புதிதாக வீடு கட்டும் மக்கள்  கடுமையாக பாதிக்கப்படுவர்.
ஆனால் கஞ்சிக்கு இல்லாமல் துன்பப்படுவோர் நிறைந்த திரைப்படத்துறைக்கு சேவை வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 100 கோடிகள் அளவு வசூல் செய்து கொண்டிருக்கும் திரைத்துறையை சார்ந்த  வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் திரைப்படத்துறையினர் துயர் துடைக்கப்படும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?