" ஏப்ரல் மாதம் "

@ முக்கிய தினங்கள்

1/4  முட்டாள்கள் தினம்[?]



2/4 அறிவுக் குறைபாடு விழிப்புணர்வு தினம்

7/4 உலகப் பொது சுகாதார நாள்

9/4 உலக அன்னையர் தினம்

14/4 தீயணைப்பு தினம்

18/4 பிறப்புரிமை தினம்

22/4
பூமி தினம்

23/4 உலகப் புத்தக தினம்

25/4 மலேரியா விழிப்புணர்வு தினம்



@ முக்கிய நிகழ்வுகள்

------------------------------------

5-4-2010 -  டிஸ்கவரியில்  விண்வெளியில் உலா வந்தனர்.

12-4-1961 - ரஷ்ய விண்வெளி வீரரான யூரி காகரின் ராக்கெட்டில் முதல்முதலாக பூமியைச் சுற்றி வலம் வந்தார்.

13-4-1919 - அமிர்தசரசில், ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்தது.

14-4-1912 - இங்கிலாந்திலிருந்து (ஏப்ரல் 10-ஆம் நாள்) புறப்பட்ட
டைட்டானிக் கப்பல் நள்ளிரவில்பனிப் பாறையில் மோதி, உடைந்து கடலுக்குள் மூழ்கியது.

15-4-1853 - இந்திய ரயில்வேயின் ஆரம்பம்

19-4-1975 - இந்தியா வின் "ஆர்யபட்டா' செயற்கைக்கோள் தனது விண்வெளிப் பயணத்தை துவக்கியது.

24-4-1990 - மத்திய அரசு உடனடியாக காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் ஆணையிட்டது.

27-4-1918 - இந்தியாவில் முதல் தொழிலாளர் சங்கத்தை சென்னையில் திரு.வி.க.வும் வாடியாவும் தொடங்கினார்கள்.

@ பிறந்த தினங்கள்

1-4-1937 - ஹமீத் அன்சாரி - குடியரசு துணைத் தலைவர்


2-4-1840 - எமிலி ஜோலா - பிரெஞ்சு நாவலாசிரியர்

4-4-1017 - ஸ்ரீராமானுஜர் - இந்துமத சீர்திருத்தவாதி

5-4-1908 - ஜெகஜீவன்ராம் - முன்னாள் மத்திய அமைச்சர்

6-4-1909 - டாக்டர் அழகப்ப செட்டியார் - வள்ளல், கல்வியாளர், தொழில் அதிபர்

7-4-1920 - ரவிசங்கர் - பாரத ரத்னா விருது பெற்ற சிதார் இசைக் கலைஞர்

7-4-1954 - ஜாக்கி சான் - புகழ்பெற்ற ஹாங்காங் நடிகர்

10-4-1894 - ஜி.டி.பிர்லா, தொழிலதிபர்
13-4-1930 -
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், திரைப்படப் பாடலாசிரியர்

14-4-1891 - டாக்டர் அம்பேத்கர் - இந்திய அரசு சட்டங்களைத் தொகுத்தவர்

16-4-1867 - வில்பர் ரைட் - ஆகாய விமானம் கண்டுபிடித்த சகோதரர்களில் ஒருவர்

17-4-1757 - தீரன் சின்னமலை - சுதந்திரப் போராட்ட வீரர்

16-4-1889 -
சார்லி சாப்ளின் - பிரபல ஆங்கில நகைச்சுவை நடிகர்
  20-4-1889 - அடால்ஃப் ஹிட்லர் - ஜெர்மனி நாட்டு சர்வாதிகாரி


21-4-1926 - ராணி எலிசபெத் - இங்கிலாந்து அரசி

23-4-1564 - வில்லியம் ஷேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்


25-4-1874 - மார்க்கோனி - ரேடியோ கண்டுபிடித்தவர்

25-4-1912 - டாக்டர் மு.வரதராசனார் - பிரபல தமிழறிஞர்

28-4-1937 - சதாம் ஹுசைன் - ஈராக்கின் முன்னாள் அதிபர்

29-4-1891 -
பாரதிதாசன் - புரட்சிக் கவிஞர்

@ நினைவு தினங்கள்

3-4-1680 - சத்ரபதி சிவாஜி - மராட்டிய மன்னர்

4-4-1968 - மார்ட்டின் லூதர் கிங் - தென்னாப்ரிக்க அரசியல் தலைவர்

5-4-1957 - டாக்டர் அழகப்ப செட்டியார்

8-4-1973 - பிக்காஸோ - பிரபல ஓவியர்

10-4-1995 - மொரார்ஜி தேசாய் - முன்னாள் பாரதப் பிரதமர்

12-4-1962 - எஸ்.விஸ்வேஸ்வரய்யா - பிரபல கன்னட விஞ்ஞானி

15-4-1990 - எஸ்.பாலசந்தர் - பிரபல வீணைக் கலைஞர், திரைப்பட இயக்குநர்

17-4-1790 - பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் - இடி, மின்னல்களில் மின்சாரம் உள்ளது என்று கண்டுபிடித்தவர்

17-4-1975 - டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், முன்னாள் குடியரசுத் தலைவர்

18-4-1955 -
ஐன்ஸ்டீன் - பிரபஞ்ச ஆராய்ச்சியாளர்

19-4-1882 -
சார்லஸ் டார்வின் - மனிதனின் தோற்றம் பற்றி ஆராய்ந்தவர்

21-4-1964 - பாரதிதாசன்



23-4-1992 -
சத்யஜித் ரே - வங்கத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்


26-4-1920 -
சீ னிவாச ராமானுஜன், கணிதமேதை

28-4-1942 -
உ.வே.சாமிநாத ஐயர் - தமிழறிஞர்
 


----------------------------------------------------------------------------------------------------------------------------------
சமூகத் தளங்கள் வளர் ச்சி   

2013 ஜுன் மாத வாக்கில் இந்தியாவின் பெருநகரங்களில், சமூக ஊடகங்களில் பங்கு பெற்று இயங்குபவர்கள் 6 கோடியே 60 லட்சம் பேர்களாக  இருப்பார்கள்.
இணையத் தளம்  மற்றும் செல்பேசி ஒரு ங்கமைப்பினர்  எடுத்த ஓர் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. 
 சென்ற  கடைசியில் இவர்கள்  எண்ணிக்கை 6.2 கோடிகள் .
நகரங்களில் வாழ்பவர்களில் இணையம்  பயன்படுத்துபவர்களில் 74 சதவீதம் பேர், சமுக வலைத்தளங்களில் தொடர்ந்து இயங்கி தங்கள் இணைய பயன்பாட்டினை மேற்கொண்டு ள்ளனர்.
 அனைவரும் வாங்கக் கூடிய வகையில் -விலையில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஸ்மார்ட் செல்பேசிகள் கிடைப்பது இந்த பயன்பாடுகளின் எண்ணிக்கை உயர காரணங்களில் ஒன்றாகும்.
 இவற்றை வாங்குபவர்களுக்கென இணைய இணைப்பு திட்டங்கள் பலவற்றை மொபைல் சேவை நிறுவனங்கள் தந்து வருகின்றன.முதல் இடத்தில் மின்னஞ்சல்  பயன்பாடும் இரண்டாம் இடத்தில்  சமுக வலைத்தளங்களில்  பயன்பாடும்   உள்ளன . 
சமூக இணைய தளங்களில் முதல் இடம் பெறுவது பேஸ்புக். பெருநகரங்களில் இணையத்தைப் பயன்படுத்துவோரில் 97 சதவீதம் பேர்  பேஸ்புக்கில் இணைந்துள்ளனர். இதனை அடுத்து இடம் பெற்றுள்ளவை கூகுள் ப்ளஸ் , லிங்க்டு இன் ஆகியவை ஆகும்.
 பெண்கள் மற்றும் 25 வயதுக்கு மேற்பட்டோர் அதிகம் பயன்படுத்தும் சமூக தளங்கள் என்று கணக்கிட்டதில் முதல் இடத்தினை லிங்க்டு இன் தான் இருக்கிறது.
  அதிக நேரம் பயன்படுத்தப்படும் தளம்  என்றால்  பேஸ்புக் முதல் இடம் பெற்றுள்ளது. இந்திய இணைய உபயோகிப்பாளர்  ஒருவர்  சராசரியாக வார நாட்களில் நாளொன்றுக்கு 29 மணிகள் 6 நிமிடங்கள் இணையத்தினைப் பயன்படுத்துவதாக தெரிகிறது.
 வார இறுதி நாட்களில் இது 28.8 நிமிடங்களாக உள்ளது  என்பதும் இந்த கணக்கெடுப்பில் தெரிகிறது.
நீங்கள் எப்படி?


 மேலே உள்ள படத்தை அல்லது ஓவியத்தை நனறாக பார்த்துக்கொள்ளுங்கள்.இதை வரைந்தவர் மிகவும் உலகப் புகழ் பெற்றவர் [என்று தன்னை நினைத்துக்கொள்ளுபவர்.]
இந்த படம்  [ஓவியம் என்று சொல்லாவிட்டால் கோபித்துக்கொள்ளுவார். ]ஓவியம் உங்கள் மனதில் என்னவிதமான சிந்தனைகளைத் தூண்டி விடுகிறது.
என்பதை சில நிமிடங்கள் இதையே பார்த்து மனதை ஒருமுகப்படுத்தி சிந்தியுங்கள்.
உங்கள் எதிர் கால வளமைக்கு வழி காட்டும்   உங்கள் மனதில் இந்த ஓவியம் தூண்டி விடும் .உங்கள் வாழ்வு வளமாக அமைய தேவையான சக்தியை உங்களுக்கு கொடுக்கும் திறன் இந்த ஓவியத்துக்கு உண்டாம்.
இந்த ஓவியம் பார்த்து சிந்தித்தவர்கள் பலர் இன்று நல்ல நிலையில் உயர்ந்துள்ளனராம் வாழ்க்கையில் .
உங்கள் வாழ்வும் வளம் பெற இந்த ஓவியம் உதவட்டும்.உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி ஓவியத்தை பார்த்து அதனுடன் ஒன்றி உங்கள் மனக்கதவை திறந்து வையுங்கள் வாழ்வு வளமாகட்டும் .
உங்கள் எண்ணங்களை தெரியப்படுத்த,உங்கள் வாழ்வில் இப்படம் எற்படுத்திய மாற்றத்தை எங்களுடன் பகிர இதை சொடுக்கவும் -எ ழுதவும் 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?