மடத்தலைவர்கள்.

அடுத்த காங்க்கிரசுக கட்சியி ன் முறைகேடு வெளியெ வந்துள்ளது.இம்முறை வெளிக்கொண்டு வந்தது  விக்கிலீக்ஸ் .
விக்கிலீக்ஸ் இணையதளம் அவ்வப்போது முக்கிய தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விடும்.
இதனை வைத்தே  உலக அரசியலி ல் சூடு கிளம்பி சம்பந்தப்பட்டவரை சுற்ற வைத்து விடும்.விக்கி லீக்ஸ் செய்திகளில் அமெரிக்காவுக்கு அடுத்து செய்திகள் சூடாக வருவது இந்தியாவாகத்தான் இருக்கும் .
இப்போ து  மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீ வ் குறித்து ஒரு தகவலை விக்கி லீக்ஸ் வெளியிட்டிருக்கிறது.
அதாவது ராஜிவ் பிரதமராகும் முன்பு கடந்த 1970 ம் ஆண்டில் ராஜிவ் விமான ஓட்டியாக இருந்தார். இந்நேரத்தில் இவர் சுவீடன் நாட்டு வர்த்தகத்தில் தொடர்பில் இருந்தார். இவர் தன்னை ஒரு தொழில் முனைவோராக காட்டிக்கொண்டார். அப்போது சோனியா ஒரு மாடல் என்பதும் பலருக்கு நினைவிருக்கலாம்.
 இந்த வழியில்" சாப்- ஸ்கேனியா "நிறுவனத்திடமிருந்து இந்தியாவுக்கு போர் ரக விமானங்கள் வாங்கப்படுவதற்கு ராஜிவ்காந்தி நிறுவனம்தான்  தரகர்.
 இது அமெரிக்க தூதரக ஆவணத்தில் இருந்ததாக கூறி ஆதாரங்களுடன் செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
ஆனால் என்ன காரணத்தாலோ  இடையிலேயே ஒப்பந்தம் முறிந்து விட்டது. விமானங்கள் வாங்கப்படவில்லை.

 ராஜிவ்காந்தி  மீது ஏற்கனவே போபர்ஸ் ஆயுதபேர ஊழல் இருந்தது .அத்துடன் போபால் விசவாயு குற்றவாளி,இந்தியன் கார்பைடு உரிமையாளரை விசாரணைக்கு வர விடாமல் ர்ஹனி விமானத்தில் பாதுகாப்பாக தப்பிக்க வைத்ததிலும் ராஜீவ் கைகள் உள்ளது.மாருதி கார் தொழிற்சாலை அமைப்பதிலும் அவர் முறைகேடுகள் செய்துள்ளார் .இந்திய அரசு தவறான முறையில் ராஜீவுக்கு சலுககைகளை வழங்கியது. 
தற்போது இந்த சுவீடன்  விமான  தரகு  குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது அவருக்கு பிரதமர் இந்திரா காந்தி மகன் என்பதற்காகவே வழங்கப்பட்டுள்ளது
 இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் சோனியா குடும்பத்தினருக்கு இடையே உள்ள தொடர்பபை இச் செய்தி  உறுதியா க்கியுள்ளது .
------------------------------------------------------------------------------------------------------------------------------------
தற்கொலை செய்து கொண்ட  மடத்தலைவர்கள்.
------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பீதர் நகரின் புறநகர் பகுதியில் சுமார் 6 ஏக்கரில் பழமையான ஜவளிதாபுமந்திர மடத்தைச் சேர்ந்த மூன்று துறவிகள் தீயில் எரிந்து மரணமாகியுள்ளனர்.
கடந்த ஜனவரி 2 ஆம் தேதி அம்மடத்தில் இளைய மடாதிபதியாக இருந்த மாருதிசுவாமி திடீரென காணாமல் போய்விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மாருதிசுவாமி காணாமல் போனதால் மடத்திற்கு எதிராக பல விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தது.
இது மடாதிபதி கணே ச ருக்கு மிகுந்த கவலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
 இந்நிலையில், பிப்ரவரி 28ம் தேதி இரவு மடத்தின் கர்பக்குடியில் மர்மமான முறையில் மடாதிபதியும் இறந்து கிடந்தார்.
அவர் அருகில் இரண்டு கடிதங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், ''மற்றவர்கள் குறைகளை போக்கும் மடாதிபதிகளுக்கும் குறைகள் உள்ளது. மனவேதனை காரணமாக சிவபாதம் சேருகிறேன். அனைவர் வாழ்விலும் அமைதி நிலைக்கட்டும்'' என்று எழுதப்பட்டிருந்தது. மடாதிபதியின் மரணம் குறித்து பீதர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் மடத்தின் வளாகத்தில் விறகுகள் அடுக்கி வைத்துள்ள அறையில் இருந்து புகை வெளியேறியதை மடத்தில் தங்கியிருந்த பக்தர்கள் பார்த்தனர். விரைந்து வந்து பார்த்தபோது மடத்தின் இளைய மடாதிபதிகளான மண்ணூர் கிராமத்தை சேர்ந்த ஈராரெட்டிசுவாமிகள் (45), நாகூர் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதசுவாமிகள் (24), ஜவுளிகிராமத்தைச் சேர்ந்த பிரணவ்சுவாமி (16) ஆகியோர் தீயில் எரிந்து கொண்டிருந்தனர்.
அவர்களை காப்பாற்ற முயற்சித்தபோதும், பலன் கிடைக்கவில்லை. மூவரும் இறந்தனர்.
அடையாளம் காணமுடியாத அளவுக்கு மாறிப்போயிருந்தன அவர்கள் உடல்கள்.
இளையமடாதிபதிகள் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படும் கடிதத்தில், கடந்த பிப்ரவரி 28ம் தேதி தலைமை மடாதிபதி ஜீவசமாதியாகியதால், மன வேதனையில் இம்முடிவுக்கு வந்ததாக கூறியுள்ளனர்.
இம்மடத்தில் சில மாதங்களாக பெரும் குழப்பம் நீடிக்கிறது. போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசாரின் மெத்தனமே இதற்கு காரணம் என்று ஜவுளி கிராமத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
மடத்திற்கு சொந்தமான நிலத்தில் பிரச்னை நிலவுவதால் சாமியார்கள் தீயில் பாய்ந்து உயிரை விட்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்துள்ளார்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?