இந்தியாவை முழுக வைக்கும் கடன் ,



இந்தியாவிற்கு "ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி" வெளிநாட்டு கடன் உள்ளது. 

இது குறுகிய கால வெளிநாட்டுக்கடன்கள்.

இதை இன்னும் 9 மாதங்களில் திருப்பிச்செலுத்த வேண்டியது அவசியம்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா இன்னும் ஓராண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டிய குறுகிய காலக்கடன்கள் பெருகி இருப்பது பெரும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இன்னும் 9 மாதங்களில், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சுமார் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடிகுறுகிய காலக்கடன்களை வெளிநாடுகளுக்கு இந்தியா திரும்பச் செலுத்த வேண்டி உள்ளது.
இந்த குறுகிய காலக் கடன்கள் 6 ஆண்டுகளில் 3 மடங்காக உயர்ந்துள்ளது. உலகப் பொருளாதாரம் சரியத் தொடங்கிய காலக்கட்டத்தில், 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் இது ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 200 கோடி மட்டுமே இருந்தது.
இந்தக் காலகட்டத்தில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை கடன்களால் சரி கட்டப்பட்டுள்ளது.

இன்னும் ஓராண்டுக்குள் இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டிய குறுகிய காலக்கடன்களின் அளவு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி என்பது தற்போது நமது கையில் இருக்கிற மொத்த அன்னியச் செலாவணியில் 60 சதவீதம் ஆகும்.

இந்த 60 சதவீதம் என்பது, 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 17 சதவீதமாகவே இருந்தது. 2008-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் திருப்பிச் செலுத்தும் சக்தி குறைந்து கொண்டே வருவதை இது காட்டுகிறது.வெளிநாட்டுக்கடன்கள் இந்த அளவுக்கு பெருகி இருப்பதற்கு 2004-ம் ஆண்டுக்கு பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய பெருமளவு கடன்களும் காரணம்.

ஆனால் இந்த நிபந்தனைகளை அமெரிக்க ரிசர்வ் வங்கி கடினமானதாக்கி விட்டால், தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடன்களை எப்படி திருப்பிச் செலுத்தும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
"ஏற்கனவே வரும் மார்ச் மாதத்துக்குள் இந்தியா ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி குறுகிய கால கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில், நாட்டின் தற்போதைய நடப்பு கணக்கு 4.7 சதவீதம் சரிக்கட்டுவதற்கு மேலும் ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது."
இன்னமும் நமது மத்திய அரசு சுவிஸ் வங்கியில் குவிக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் பணத்தை பறிமுதல் செய்து மீட்டு வரும் நடவடிக்கைகளை எடுக்க மறுத்துவருகிறது.காரணம் அப்பட்டியலில் பல அரசியல்வாதிகள்தான் முக்கிய இடம் பெறுகிறார்கள்.அதை மீட்டாலே லட்சம் கோடிகள் கணக்கை தாண்டி விடும்.
கடனை அடைப்பதுடன்,புதிய திட்டங்களையும் நிறைவேற்றலாம்.
வங்கிகளில் பல பகாசுர தொழிலதிபர்கள் வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் ஆட்டையை போட்ட நிலுவையும் பல லட்சம் கோடிகள் வரும்.அவைகளை திரும்ப செலுத்த கட்டாயப்படுத்தினால் கூட வெளி கடனை செலுத்தி விடலாம்.
பொருளாதாரப் புலிகள் மன்மோகன் சிங்,ப.சிதம்பரம் நிர்வாகத்தில் அவர்கள் இதுவரை செய்த சீர்திருத்தங்களில் [?] நாட்டின் வெளிநாட்டு கடன் உயர்ந்ததுதான் மிச்சம்.பன்னாட்டு நிறுவனங்களை புகுந்து விளையாட விட்டதில்,பங்குகளை வாங்க ஊக்குவித்ததில் வந்த பக்க அல்லது பின் விளைவுதான் இன்றைய இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி.இதனால் உண்டாகியதுதான் இந்தியாவின் மரியாதை வீழ்ச்சி.இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் மன்மோகன் -ப.சி.?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
“ஜனநாயக”  உளவாளி
                                                                                                                                        - ஆர்.பத்ரி,
உலகின் உயர்ந்த ஜனநாயகத்திற்கு சொந்தம் கொண்டாடும் அமெரிக்காவின் முகத்திரை கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க உளவு நிறுவனமான நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி (சூளுஹ) யின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னொடென் அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டிற்காக அமெரிக்க அரசங்கம் அவரை கைது செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அவரோ உலகின் பல நாடுகளுக்கும் தஞ்சம் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் இருந்து வெளியேறிய அவர் முதலில் ஹாங்காங்கிலும், பிறகு ரஷ்யாவில் விமான நிலையத்தின் பயணிகள் ஓய்விடத்திலும் (கூசயளேவை ஹசநய) தங்கி, தனக்கான அடைக்கலம் தரும் நாட்டை தேடிக் கொண்டிருக்கிறார்.ஈக்வடார் நாடு ஸ்னோடெனுக்கு அடைக்கலம் அளிக்கத் தயார் என முதலில் அறிவித்து, பின் அமெரிக்காவின் நிர்பந்தத்தின் காரணமாக நாங்கள் இது குறித்து ஆலோசிக்க சற்று கால அவகாசம் தேவை என அறிவித்துள்ளது. விக்கிலீக்ஸ் இணையதளத்தின் உரிமையாளரான மைக்கேல் ஜூலியன் அசாஞ்சே ஏற்கனவே ஈக்வடார் நாட்டின் உதவியோடு பிரிட்டனில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். எட்வர்ட் ஸ்னோடெனுக்கு அடைக்கலம் அளிக்கப்போகும் நாடு எது எனவும், ரஷ்ய விமான நிலையத்திலிருந்து எந்த நாட்டிற்கு செல்லும் விமானத்தில் அவர் ஏறப்போகிறார் என்பதையும், ஊடகங்களும், உலகமும் பரபரப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் அவர் அப்படி என்னதான் செய்தார் என்பதையும், ஜனநாயகத்தின் பாதுகாவலன் (!) அமெரிக்காவின் உண்மையான முகத்தையும் நாம் சற்றே கவனிப்போம்.
(NSA எனப்படும் நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி எனும் தனியார் உளவு அமைப்பு, அமெரிக்க அரசாங்கத்திற்கு தேவைப்படும் அனைத்து உளவு ரகசியங்களையும் சேகரித்து தருவதற்காக 2001 அம் ஆண்டில் சீனியர் புஷ் நிர்வாகத்தில் இருந்த போது அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். அந்நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவில் ஓர் ஊழியராக பணியாற்றியவர் தான் இந்த எட்வர்ட் ஸ்னோடென். அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய உத்தரவின் மூலமும், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான உளவு மற்றும் கண்காணிப்பிற்கான நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் படியும் பல்வேறு உளவு ரகசியங்களை சேகரித்து வருகிறது இந்த நேஷனல் செக்யூரிடி ஏஜென்சி எனும் உளவு அமைப்பு.
முதலில் சர்வதேச அளவிலான உளவி ரகசியங்களை மட்டுமே கண்காணித்து வந்த இதன் பணி நாளடைவில் அந்நாட்டில் உள்ள மக்களின் ரகசியங்களையும் சேகரிக்கத் துவங்கிய போது தான் அரசாங்கத்தோடு முரண்பட்டு சொந்த நாட்டு மக்களையே கண்காணிப்பதா என கேள்வி கேட்டார் எட்வர்ட் ஸ்னோடென். அமெரிக்க ஜனநாயகத்தில் தான் ஒருவர் கேள்வி கேட்டால் ஆபத்தாயிற்றே.
 இனியும் அமெரிக்காவில் தங்கியிருந்தால் தனது உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற நிலையில் தான் சொந்த மக்களுக்கு துரோகமிழைக்கும் வேலையை தூக்கிப் போட்டு விட்டு வெளியேறியுள்ளா ஸ்னோடென்.
பிரிசம் (PRISM) எனும் உளவு திட்டம்
அமெரிக்காவிற்கு வெளிநாட்டு தீவிரவாதிகள் மூலம் வரும் ஆபத்துக்களை கண்காணிப்பதற்காகவும், முன்னெச்சரிக்கையோடு தடுப்பதற்காகவும் என்ற பெயரில் பிரிசம் எனும் உளவு பார்க்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் இயங்கி வரும் தொலைபேசி நிறுவனங்கள் மற்றும் கணிணி நிறுவனங்களின் விபரங்கள் ரகசியமாக கண்காணிக்கப்படுகின்றன.
அமெரிக்காவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான “வெரிஜோன்” எனும் நிறுவன சந்தாதாரர்களின் அனைத்து தொலைபேசி விபரங்களும் முழுமையாக பெறப்படுகின்றன. சந்தாதாரர்களின் தொலைபேசி எண், முகவரி , யாருடன் பேசினார்கள் என்ற விபரம் என அனைத்து இந்நிறுவனம் மூலம் பெறப்படுகிறது.
வெளிநாட்டு அழைப்புகள் மட்டுமின்றி பல அமெரிக்கர்களின் உள்நாட்டு அழைப்புகள் கூட கண்காணிக்கப்படுகின்றன. வரும் ஜூலை 19 வரை நாள்தோறும் அனைத்து விபரங்களையும் அந்நிறுவனம் நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சியிடம் வழங்க வேண்டும் என ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் “எதேச்சதிகாரம்”
அமெரிக்க அரசின் ஆசீர்வாதத்தோடு நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய உளவு விபரங்களை முதலில் எட்வர்ட் ஸ்னோடெனும், பின்பு ஊடகங்களும் வெளிப்படுத்திய சூழலில் அந்நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது தங்கள் கோபத்தையும், ஆதங்கங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.. ஆனால் அமெரிக்க அரசோ நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
. அமெரிக்க உளவுத் துறை இயக்குநர் “ஜேம்ஸ் கிளாப்பர்”, நாடாளுமன்ற உளவு விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் தலைவர் “மைக் ரோஜர்ஸ் “மற்றும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆகியோர் மிகவும் அலட்சியமான முறையில் ஒருமித்த குரலில் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்து உரையாற்றி வருகிறார்கள்.. இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா.. ஜூனியர் புஷ் ஆட்சி காலத்தில் அமெரிக்க செனட்டராக பாரக் ஒபாமா இருந்தபோது இத்தகைய உளவு வேலைகளை ஆட்சேபித்து “பாதுகாப்பு என்ற பெயரால் மக்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக” கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் பாவம் அவர் அமர்ந்திருக்கிற வெள்ளை மாளிகையின் அதிபர் நாற்காலி, மக்களையும் வரலாற்றையும் மறந்து போக வைத்திருக்கிறது.
பிரிட்டனிலும்
இதே “பிரிசம்” எனும் உளவு திட்டம் பிரிட்டன் நாட்டின் பாதுகாப்பு நிறுவனமான GCHQ நிறுவனத்தோடும் இணைக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், கடந்த ஜூன் 2010 முதல் இத்தகைய ரகசிய உளவு செய்திகள் அந்நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஓயாமல் ஜனநாயகம் பேசிக் கொண்டும், சோசலிச நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு ஜனநாயகம் மீறப்படுகின்றன என ஆதங்கப்பட்டும், இதர நாடுகளில் பஞ்சாயத்து செய்து கொண்டும் இருக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் உண்மையான முக விலாசம் இதுதான். மற்ற நாடுகளில் நடந்தால் மனித உரிமை மீறல் எனவும் தங்கள் நாடுகளுக்குள் என்றால் “பாதுகாப்பிற்காக” எனவும் இரட்டை நாக்கில் பேசும் இந்த அரசுகள்.

- ஆர்.பத்ரி, 'நீலகிரி மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)']
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
---

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?