‘கறை நல்லது தான்!’


suran




“... இன்னும் சொல்லப்போனால் ரூபாய் மதிப்பு சரிவதும் கூட பொருளாதாரத்திற்கு நல்லதுதான். அப்போது தான் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்ற போட்டி உணர்வு அதிகரிக்கும்.”
-நாடே பதற்றத்தில் ஆழ்ந்திருக்கிற ரூபாய் மதிப்பு சரிவை இப்படி பதற்றமே இல்லாமல் கையாளும் திறமை பாரதப் பிரதமர் மன்மோகன்சிங்கை விட்டால் வேறு யாருக்கு வாய்க்கும்?

உள்நாட்டுத் தொழில்களையெல்லாம் அழித்து, அனைத்தும் இறக்குமதி மயம்; அனைத்தும் அந்நிய மயம் என்று ஆக்கிவிட்டு, ஏற்றுமதியை அதிகரிக்க போட்டி உணர்வை உருவாக்கப் போகிறாராம்.
“சகதியில் விழுந்து புரளுங்கள்; கறையாகி விடும் என்று பயப்படுகிறீர்களா? கறை நல்லது தான், அப் போது தானே அதை நன்றாக துவைக்க வேண்டும் என்ற சிந்தனை பிறக்கும்!”“அப்புறம், நீங்கள் சகதியில் விழுந்ததற்கு நாங்களா பொறுப்பு? ரூபாய் மதிப்பு சரிவுக்கு பல உள்நாட்டு, வெளிநாட் டுக் காரணங்கள் இருக்கின்றன. நாங்களா பொறுப்பு?நிலக்கரித்துறையில் ஆவணங்கள் காணாமல் போ னதற்கு நானா பொறுப்பு? வெங்காயம் விலை உயர்ந்ததற்கு நானா பொறுப்பு?”-
ஆமாம் ஐயா, நீங்கள் பொறுப்பில்லை.
பொறுப்பில் லாதவரை பதவியில் அமர்த்தியதற்கு நாங்கள்தான் பொறுப்பு.

 பொறுப்பில்லாத உங்களைத் தூக்கி எறிவதற் கும் நாங்கள் தான் பொறுப்பு!

                                                                                                                          -சு.போ.அகத்தியலிங்கம் 
suran
suran



---------------------------------------------------------------------------------------------------------------------------------------

‘மெட்ராஸ் கபே’ திரைப்படம் இந்தி திரைப்பட வரலாற்றில் ஒரு கரும்புள்ளி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் உலகத்தின் பார்வையில் பெரும் விஸ்வரூபமாக நின்று பின்னர் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு மிகத் தீவிரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முப்பது வருடங்களாக உயரிய தியாகம் செய்து பல சாதனைகளை நிலைநாட்டி கட்டி வளர்க்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்று திட்டமிட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றது. தற்போது ஒருபடி மேலே சென்று இந்தப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மழுங்கடித்து போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்ப்பட்டு வருகின்றன. இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டிய தேவை இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
தமிழரின் போராட்டம் வீணானது என்றும் ஒன்றுபட்ட நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை என்றும் கடந்த காலத்தில் சிறீலங்கா அரசாங்கம் சித்தரித்தது. பிரபாகரன் என்ற தனி நபருக்கு மட்டுமே தனி ஈழம் தேவைப்படுவதாகவும் தமிழ் மக்கள் அது குறித்து அலட்டிக்கொள்ள வில்லையென்றும் பிரச்சாரப்படுத்தப்பட்டது. இந்தப் பிரச்சாரங்கள் பெரியளவில் வெற்றிபெறாததைத் தொடர்ந்து தற்போது புதிய உத்தி ஒன்று கையாளப்பட்டிருக்கின்றது. அதுதான் மக்களை ஆக்கிரமித்திருக்கின்ற திரைப்பட வடிவம். அந்த வடிவமே அண்மையில் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் வெளிவந்ததும் தமிழகத்தில் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளதுமான மெட்றாஸ் கபே என்ற திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படம் ஒரு இந்தித் திரைப்படமாகும். ஜோன் ஆபிரகாம் இந்தப் படத்தை இயக்கி நடிக்கிறார். 35 கோடி ரூபா செலவில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. முற்று முழுதாக இது தமிழ் மக்களின் போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள போதிலும் இது விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைக் குறிக்கும் L.T.TE என்ற பதம் இதில் குறிப்பிடப்படவில்லை. மாறாக L.T.F என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது என்று படத் தயாரிப்பாளர் கூறியிருக்கின்றார்.
suran
ஆனால், இந்தப் படம் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது முற்றுமுழுதாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. சிறீலங்கா – இந்திய அரசுகளின் கூட்டு முயற்சியாகவே இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்தத்தில் தோற்கடித்த போதிலும் மக்கள் மனங்களிலிருந்து புலிகளையும் போராட்டத்தையும் தோற்கடிக்க முடியவில்லை. இன்றுவரை தமிழக, தாயக, புலம்பெயர் தமிழ் மக்கள் புலிகளையும் போராட்டத்தையும் நேசிக்கின்றனர். தலைவர் பிரபாகரனை தமது உயிரினும் மேலாக நேசிக்கின்றனர். அவரை மதிக்கின்றனர். இப்படிப்பட்ட தமிழர்களின் வீடுகளுக்குச் சென்று பிரபாகரன் பயங்கரவாதி, புலிகள் பயங்கரமானவர்கள், இந்தியப் பிரதமரையே கொன்றவர்கள். அவர்களை இனியும் ஆதரிக்காதீர்கள் என்று சொல்ல முடியாது. அவ்வாறு சொன்னால் மக்கள் திருப்பியடிப்பார்கள்.
ஆதலால், மக்கள் மத்தியில் இயல்பாக ஊடுருவக்கூடிய ஒரேயரு கருவி திரைப்படம் தான். எனவே, திரைப்படம் மூலமாக புலி எதிர்ப்பு பிரசாரத்தை மேற்கொள்ளலாம் என்று சிறீலங்கா- இந்திய அரசுகள் சிந்தித்தன் விளைவாகவே மெட்ராஸ் கபே என்ற இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் படத்தின் இயக்குநரான ஜோன் ஆபிரகாம் என்பவர் 2 தடவைகள் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த பின்னரேயே இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கதையைப் படமாகத் தயாரித்தால் அதன் மூலமாக வெளிநாடுகளிலுள்ள புலிகளையும் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களின் கொட்டத்தையும் அடக்கலாம் என்று கனவு கண்ட மகிந்த தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த நெருக்கமானவர்கள் கூறியதற்கிணங்கவே ஜோன் ஆபிரகாம் என்பவர் மகிந்தவிடம் கொண்டுவரப்பட்டார். தனக்கு கிடைக்கின்ற பணத்துக்காக புலிகளின் தியாகங்களைக் கொச்சைப்டுத்த ஒப்புக்கொண்டார்.
சரி, தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் இந்தப் படத்தை ஏன் இந்தி மொழியில் எடுப்பதற்கு மகிந்தவும் இந்தியாவும் விரும்பின. அதற்கும் காரணம் உண்டு. அண்மையில் தமிழகம் பூராக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்களில் முழு தமிழகமும் திரண்டிருந்தது.
suran
  திரைப்பட இயக்குநர்கள், திரைப்பட நடிகர்கள் போன்ற அனைவருமே ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவானவர்கள் என்பது மகிந்தவுக்கும் இந்திய அரசுக்கும் நன்றாக தெரியும். அதையும் மீறித் தமிழகத்தில் யாரையாவது கொண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான படத்தை தயாரித்தால் தமிழகத்தில் அதனை வெளியீடு செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவேதான் இந்தி மொழியில் மெட்ராஸ் கபே தயாரிக்கப்பட்டது.

மேலும், இந்தித் திரைப்படங்கள் பெரும்பாலும் இந்தி மொழியில் மாத்திரம் தயாரிக்கப்படுவதில்லை. அது இந்தி மொழியுடன் சேர்த்து மேலும் பல மொழிகளிலும் தயாரிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக தமிழ் மொழியிலும் தயாரிக்கப்படும். அதனைவிட இந்தித் திரைப்படங்களுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு உண்டு. இதனாலேயே இந்தி மொழியிலேயே திரைப்படத்தை தயாரிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் முழுமையும் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாக அமைந்திருப்பதாக இதனைப் பார்வையிட்ட வை.கோ, சீமான் உள்ளிட்ட தமிழக உணர்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று அவர்கள் தமிழக திரையரங்குகளின் உரிமையாளர்களைக் கோரியுள்ளனர்.
இந்த திரைப்படங்களை வெளியிட்டால் போராட்டம் வெடிக்கும் என்ற எச்சரிக்கையுடன் திரையரங்கு உரிமையாளர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்களும் விடுக்கப்பட்டிருந்தன. தமிழக உணர்வாளர்கள் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாடுகளுடன் இணைந்து தாயகத்திலிருந்து யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவையும் மெட்றாஸ் கபே திரைப்படத்தைக் கண்டித்திருந்தன. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தில் வெளியிடப்படவேண்டிய மேற்படி திரைப்படம் வெளியிடப்படவில்லை.
ஆனால், ஏனைய மாநிலங்களில் வெளியீடு செய்யப்பட்டு ஒடிக்கொண்டிருக்கின்றன. அனைவரதும் எதிர்ப்புக்களைச் சம்பாதித்துள்ள இந்த திரைப்படத் தயாரிப்பானது ஒரு முட்டாள்தனமான செயற்பாடு. ஒரு இனத்தினுடைய போராட்டத்தை கொச்சைப்படுத்தி அதன் மூலம் பணம் பெற்று தாங்கள் வாழ நினைப்பவர்களை முட்டாள்கள் என்று கூறுவதை விட வேறு வழியில்லை. இந்த திரைப்படத்தை இயக்கிய ஜோன் ஆபிரகாம் என்பவர் மனிதநேயம் என்றால் என்னவென்று தெரியாதவர். ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக முற்றுமுழுதாக அவர் அறிந்திருந்தும் அந்தப் படுகொலையை அவர் நியாயப்படுத்த முனைந்திருப்பது கேவலமானது. இவருடைய கேவலமான இந்தச் செயலானது நீண்ட பாரம்பரியம் மிக்க இந்தி திரைப்பட வரலாற்றில் ஒரு கரும்புள்ளியைத் தோற்றுவித்துள்ளது.
உலகம் பூராகவுமுள்ள அன்புக்குரிய இந்தித் திரைப்பட இயக்குநர்களே,
suran

ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தை புரிந்துகொள்ளுங்கள். சிங்களவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாமென்று நாம் உங்களைக் கோரவில்லை. ஆனால், தமிழ் மக்களின் தியாகங்ளுக்கு மதிப்பளியுங்கள். தமிழ் மக்களை வேரோடு களையத் துடிக்கும் சிங்களத்தின் தமிழின விரோத செயற்பாடுகளுக்கு துணைபோகாதீர்கள். தமிழர்களுக்கும் புலிகளுக்கும் நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாதீர்கள்.
தமிழர்கள் புனிதமாகப் போராடியவர்கள். அகிம்சை வழியிலும் அற வழியிலும் போராடி நீதி கிடைக்காத காரணத்தாலேயே ஆயுத வழியில் போராடத் தள்ளப்பட்டவர்கள். ஆயினும் மனிதாபிமானம் இல்லாத மகிந்த அரசு தனது வெறித்தனமான படைகளை அனுப்பி ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களைத் துடிக்கத் துடிக்கக் கொன்று இந்தப் போராட்டத்தை அழித்தொழித்திருக்கின்றது.
எனவே, தமிழர்கள் இனிமேல் ஆயுத வழியில் போராடுவார்களோ இல்லையோ இதுவரை நடைபெற்ற போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்தாதீர்கள். முப்பது வருட காலமாக ஊண், உறக்கமின்றி, நிம்மதியின்றி, சந்தோசமின்றி, உலகில் எவராலும் செய்ய முடியாத தியாகங்களைச் செய்து, உலகமே வியக்கும் சாதனைகளை நிலைநாட்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கோ அல்லது தமிழ் மக்களின் விடுதலை வேட்கையை மழுங்கடிப்பதற்கோ யாருக்கும் உரிமை இல்லை. உள்நாட்டிலோ வெளிநாடுகளிலோ யார் இந்தக் காரியங்களைச் செய்தாலும் தமிழர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில், தமிழர்கள் தேவையற்ற ஒன்றுக்காக தியாகம் செய்யவில்லை. இல்லாத ஒன்றுக்காக அடம்பிடிக்கவில்லை. இழந்ததை மீட்கவே போராடினார்கள். ஆண்ட நிலம் வேண்டாம். குந்தி இருக்க ஒரு குடி நிலம் தாருங்கள் என்றே கேட்டார்கள்.
தமிழரின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய ஜோன் ஆபிரகாமே…
தமிழ் மக்கள் தமது நிலத்தில் தாங்கள் வாழ உரிமை கேட்டது தவறா? நீங்கள் சுகபோகமாக வாழ பணம் சம்பாதிக்க படம் தயாரிப்பதற்கு எங்கள் இறப்புகளும் வேதனைகளும் வலிகளுமா உங்களுக்கு கருப்பொருளாக கிடைத்தது. உங்களுக்கு சுகபோகத்திற்கு பணம் தேவையென்றால் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையேந்தியிருக்கலாம். நீங்கள் சாகும் வரை வாழ்வதற்கு அவர்கள் அள்ளிக்கொடுத்திருப்பார்கள். 
எதற்காக மகிந்தவிடம் பிச்சையெடுத்து தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினீர்கள்?
தமிழின உறவுகளே,
suran
மெட்ராஸ் கபே திரைப்படம் போன்ற மேற்படி செயற்பாட்டை நாம் பேச்சளவில் விட்டுவிட முடியாது. இவ்வாறான செயற்பாடுகளை நாம் அனுமதிக்கவும் முடியாது.
 ஜோன் ஆபிரகாம் போன்றவர்கள் எதிரிகளை விடக் கொடுமையானவர்கள். தமிழீழ தேசியத் தலைவர் கூறியதைப் போன்று எதிரிகளை நாம் நம்பலாம்.
 ஆனால், ஆபிரகாம் போன்ற துரோகிகளை நம்பக்கூடாது. 
இவ்வாறான திரைப்பட முயற்சிகள் இனிமேலும் நடைபெற்றால் எவ்வாறு தடுக்கலாம் என்றும் மீறி தயாரிப்பவர்களுக்கு எதிராக எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் 
என்றும் நாம் ஆராய வேண்டும்.
 இல்லாவிட்டால் நாம் முப்பது வருடங்களாக செய்த தியாகங்களுக்கு துரோகிகள் மாற்று வடிவம் கொடுத்துவிடுவார்கள். 
சிந்தியுங்கள்.
                                                                                                                                              -வீரமணி 
நன்றி: ஈழமுரசு

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிரியாவிற்கு எதிராக அமெரிக்கா ஏன் போர் தொடுக்கிறது.?

கடந்த வாரம் இரசாயன ஆயுதத்தாக்குதல் என கூறப்படும் குற்றச்சாட்டு கூற்றை அடுத்து அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் சிரியாவிற்கு எதிராகப் போரைத் தொடுக்க விரைவாக செயற்படுகின்றன. நாட்டை அடிபணிய வைப்பதற்கான ஏவுகணை தாக்குதல்கள் சில நாட்களுக்குள் தொடங்கலாம். மற்றொரு மக்கள் ஆதரவற்ற போரை மக்களை ஏற்கவைப்பதற்கு, செய்தி ஊடகத்தில் இருந்து வரும் பிரச்சார முயற்சிகள் அதிஉயர் வேகத்திற்கு திருப்பப்பட்டுவிட்டன.

நீண்ட காலத்திற்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்த கொள்கையை செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு, உடனடித் தாக்குதலுக்கான உத்தியோகபூர்வ காரணங்களாக, போலிக்காரணங்களினதும் மற்றும் ஆதாரமற்ற பொய்களின் ஒரு தொகுப்பு கொடுக்கப்படுகின்றன.
suran
இச்சமீபத்திய போருக்கான உண்மையான காரணங்களை, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின், மற்றும் முழு உலக ஏகாதிபத்திய அமைப்பின் பூகோள-அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் உள்ளடக்கத்திற்குள் தான் புரிந்து கொள்ள முடியும்.

முதலாவது: ஒரு பூகோள-அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, சிரியாவிற்கு எதிராக நீண்டகாலமாக திட்டமிடப்பட்டுள்ள போர், 1991ல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் பின்னர், தனது உலக மேலாதிக்கத்தை இராணுவ பலத்தின் மூலம் உறுதிப்படுத்த, வாஷிங்டனின் நடத்தும் பிரச்சாரத்தில் மற்றொரு நடவடிக்கை ஆகும். ஒருகாலத்தில் உலகப் பொருளாதாரத்தில் அது கொண்டிருந்த மேலாதிக்க நிலையின் நீடித்த சிதைவை எதிர்கொள்ளும் அமெரிக்கா, அதன் மேலாதிக்க நிலையை ஸ்தாபிக்க இராணுவ பலத்தை வழிவகையாகக் காண்கிறது. 1992 இன் ஆரம்பத்திலேயே பென்டகனுடைய பாதுகாப்பு திட்டமிடல் வழிகாட்டி, அமெரிக்கக் கொள்கை, அமெரிக்காவிற்கு ஒத்த முறையில் போட்டி நாடாக எந்த சக்தி வெளிப்படுவதையும் தடுக்கும் நோக்கத்தை கொண்டது எனக் கூறியது. 2002ல் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயம், அமெரிக்கா இதை அடையவதற்கு முன்கூட்டியே தாக்கும் போரை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டது.

அமெரிக்க இராணுவவாதத்தின் உலக வெடிப்புத் தன்மையின் மத்திய கூறுபாடு, மத்திய கிழக்கில் மட்டும் இல்லாமல், யூரேசிய நிலப்பகுதி முழுவதிலும் ஒரு மேலாதிக்க நிலையைப் பெறுவது என்னும் வாஷிங்டனின் உந்துதலாகும். சமீபத்திய ஆண்டுகளில் 19ம் நூற்றாண்டுக் கடைசி, மற்றும் 20ம் நூற்றாண்டு ஏகாதிபத்திய மூலோபாயவாதி சேர் ஹால்போர்ட் மக்கிண்டெருடைய (Sir Halford Mackinder) படைப்புக்கள் மீண்டும் அடிப்படை நூல்களாக வெளியுறவுத்துறை, பென்டகன் மற்றும் CIA இல் உள்ள கொள்கை வகுப்பாளர்களுக்கு தேவையான நூல்களாக ஆகிவிட்டன. ஏராளமான நூல்களிலும், கணக்கிலடங்காக உயர்கல்வி ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளிலும், மக்கிண்டெரால், ஜேர்மனியின் கிழக்கு எல்லையில் இருந்து சீனாவின் மேற்கு எல்லை வரை பரந்துள்ள “உலகத் தீவு” என அழைக்கப்படுவது, அமெரிக்காவிற்கும் அதன் மேற்கு ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் தீர்க்கமான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது என கருதப்படுகின்றது.

ஒரு சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்துவதாவது: “யூரேசிய நிலப்பகுதிகள் மேற்கின் மூலோபாய முயற்சிகளின் கவனம்செலுத்தும் முனையாக இருக்க வேண்டும்… மேற்கத்தைய சரிவின் ஆரம்ப நிகழ்ச்சிப்போக்கு நிறுத்தப்பட்டுப் பின்நோக்கி திருப்ப வேண்டும் என்றால், யூரேசியாவின் பூகோள-அரசியல் முக்கியத்துவம் குறித்த நல்ல விளக்கம் தேவை. அதற்கான போராட்டமும், அதற்கான ஒருங்கிணைந்த முயற்சி மிகவும் முக்கியமானது.” [ The World Island: Eurasian Geopolitics and the Fate of the West, by Alexandros Petersen] அனைத்து ஏகாதிபத்திய உலக மேலாதிக்க மூலோபாயங்களைப் போலவே இதிலும் அதை அடைவதற்குத் தடைகளாக உள்ளன எனக்கருதப்படும் சக்திகளுடனான போராட்டம் இன்றியமையாததாகிறது. யூரேசியாவின் மீது மேலாதிக்கம் என்பது ரஷ்யா, சீனாவுடனான மோதலாக தவிர்க்கமுடியாதபடி விரிவாக்கம் அடையும்.
suran
1990களில் இருந்து பால்கன்களில், மத்திய கிழக்கில், மத்திய ஆசியாவில் அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்பு போர்கள் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு எவரும் சவால் விடக்கூடாது எனக் கருதும் செயற்பட்டியலின் ஒரு பகுதி ஆகும். உலக மேலாதிக்கம் என்பது நூற்றுக்கணக்கான மில்லியன் உயிர்களைப் பறிக்கும் போர்களை நடத்தாமல் சாதிக்க முடியாது. ஒருவேளை அவை பூமியையே அழிப்பதாக இருந்தாலும் வாஷிங்டனை அதை நோக்கிச் செல்லும் உந்துதலில் இருந்து தடுக்கவில்லை.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு என்னும் இந்த மூலோபாயம் கிறுக்குத்தனமாக இருக்கலாம், ஆனால் அப்படித்தான் ஹிட்லரும் இருந்தார். அவருடைய பூகோள-அரசியல் நோக்கங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒப்பிட்டால் சிறிய அளவு எனத் தோன்றும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியை முன்கூட்டிக் கண்ட ட்ரொட்ஸ்கி 80 ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார்: “ஜேர்மனிக்கு இது ‘ஐரோப்பாவை ஒழுங்கமைக்கும் பிரச்சினை’ ஆக இருந்தது. ஐக்கிய அமெரிக்கா உலகை “ஒழுங்கமைக்க” வேண்டும்.

ஐரோப்பிய சக்திகளை பொறுத்தவரை, தற்போதைக்கு அவை தங்கள் சொந்த ஏகாதிபத்திய முனைவுகளை பென்டகனுடைய சிறந்த வருங்காலத்தில் பிணைத்துக் கொள்வதின் மூலம் அடைந்துவிடலாம் எனக் காண்கின்றன. அமெரிக்கப் போர்களின் கொள்ளையில் தாம் பங்கு பெறலாம் என அவை நம்புகின்றன. இந்த வழிவகையில் ஆபிரிக்காவில் பிரான்சின் போர்களைப்போல் தங்கள் சொந்த கொள்ளைச் செயல்களையும் நியாயப்படுத்துகின்றன.

இரண்டாவது: பொருளாதார ரீதியாக, உலக முதலாளித்துவம் அதன் பெருமந்த நிலைக்குப் பிந்தைய காலத்தில் ஐந்தாவது ஆண்டாக ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது. இது பொருளாதார தேக்கம், பரந்த வேலையின்மை, இடைவிடாத வாழ்க்கத்தர சரிவுகளை உருவாக்கியுள்ளது. அதிக நம்பிக்கையற்ற பொருளாதார நிலைமை, ஆழ்ந்த கடன்கள், மதிப்பிறக்கப்பட்ட நாணயங்கள், உக்கிரமான சர்வதேசப் போட்டிகள் மேலும் பொறுப்பற்ற மற்றும் வன்முறையான வெளியுறவுக் கொள்கைகளுக்கு உந்துதல் கொடுக்கின்றன.

1930களின் பெருமந்த நிலை இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தது, முதலாளித்துவ அமைப்புமுறையின் நோய்களுக்கு தீர்வாக ஏகாதிபத்திய சக்திகள் போரை காண முற்பட்டன. 2008ல் தொடங்கிய பெருமந்த நிலை, குறையும் அடையாளத்தை இன்னும் காண்பிக்கவில்லை என்பதோடு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கிறது. உலக நிதியமயமாகுதல் நிகழ்ச்சிப்போக்குடன் தொடர்புடைய சமூகத்தின் ஒரு சிறு பிரிவின் செல்வக் கொழிப்பு, பெரும் அளவில் சூறையாடுதல் மூலம் சாதிக்கப்படும் பொருளாதார ஒட்டுண்ணித்தன வடிவங்கள் அதன் இயல்பான இணைப்பை வெளியுறவுக் கொள்கையில் காண்கிறது. அது அதன் இலக்குகளை குற்றம் சார்ந்த வன்முறை மூலம் அடைய முற்படுகிறது.
suran

குறிப்பாக பாதுகாப்புக் குழுவில் ரஷ்யா மற்றும் சீனா தடுப்பதிகாரங்களைக் கொண்டுள்ளதால், அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையை ஒதுக்கித்தள்ளி ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் ஒப்புதல்கூட இல்லாமல் போருக்குத் தயாராகிறது. இவ்வகையில்தான் நாடுகளின் கழகம் (League of Nations) 1935ல் இத்தாலி  அபிசீனியா மீது படையெடுத்தபின் சரிந்து போயிற்று.

மூன்றாவது: அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் எப்போதும் இல்லாத மோசமான சமூக நெருக்கடியை முகங்கொடுக்கின்றன. இவை வளர்ந்துவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் வர்க்க அழுத்தங்களை அதிகரிக்கின்றன. அமெரிக்காவில் மக்களில் செல்வந்த 10 வீதத்தினர் கிட்டத்தட்ட நாட்டின் முக்கால் பகுதி செல்வத்தை உடமையாகக் கொண்டுள்ளனர். உயர்மட்ட 1 வீதத்தினர் அதில் பாதியை ஏகபோக உரிமையாகக் கொண்டுள்ளனர். பொறுப்பற்ற முறையில் ஊதியங்கள், வாழ்க்கைத் தரங்கள் இடையறாமல் தாக்கப்படுவதால் நகரங்கள் திவால்தன்மைக்கு தள்ளப்படுகின்றன.

ஐரோப்பாவில், ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே எழும் அழுத்தங்களால் ஐரோப்பிய ஒன்றியம் சிதைவுற்றுக் கொண்டிருக்கிறது. வேலைகள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதல்கள் கிரேக்கத்தின் சமூக பேரழிவு மூலம் சித்தரிக்கப்படுகின்றது. பிரதான ஐரோப்பிய சக்திகளுக்கிடையே எவ்வளவிற்கு கசப்பான, அடக்க முடியாத மோதல்கள் இருக்கின்றனவோ அந்தளவிற்கு அவை இன்னும் அதிகமாக வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு திரும்புகின்றன. அது ஒன்றுதான் அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளும் ஒரே கொள்கையாகும்.

ஏகாதிபத்திய சக்திகள் பெருகிய முறையில், தங்கள் மக்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்படுவதில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் வழிமுறையாக போரை காண்கின்றன. தற்போதைய போரின் நேரம், தெளிவாக எட்வார்ட் ஸ்னோவ்டேன் ஏராளமான, சட்டவிரோத ஒற்றாடல்கள் உளவுத்துறை அமைப்புக்களால் அமெரிக்கா மற்றும் முக்கிய ஐரோப்பிய சக்திகளுடைய மக்களுக்கு எதிராக செய்யப்பட்டது வெளிப்படுத்தப்பட்டதால் தூண்டிவிடப்பட்ட அரசியல் நெருக்கடியுடன் தொடர்புபட்டது. ஏகாதிபத்திய இராணுவ வாதம், அத்துடன் பயனற்ற ஆனால் அழிவு தரும் போர் வழிவகைகளும் சமூக அழுத்தங்களை வெளிநோக்கி தள்ளிவிடும் அடிப்படை வழிவகையாக ஆளும் உயரடுக்கால் பார்க்கப்படுகிறது.

ஆனால் இருபதாம் நூற்றாண்டு ஆளும் வர்க்கங்கள் தங்களை முதலாளித்துவத்தின்  திவாலில் இருந்து தப்பிக்கொள்ள இராணுவ வாதம் என்னும் சூதாட்ட மேசையில் வெற்றியைத்தான் நம்பியிருந்தன என்பதைக் கற்பிக்கிறது. ஆனால் இது பின்னர் வரலாறு அவர்களுக்கே எதிரானதாக போனதையும், அவர்கள் சில மோசமான பந்தயங்களை கட்டியிருந்தனர் என்பதையும் காட்டுகிறது.


ஈராக், ஆப்கானிஸ்தானிய போர்களைப் போன்றே, சிரியப் போரும் பெருமளவிலான இறப்புக்களையும் இடர்களையும் உருவாக்குவதுடன், உலகப் பொருளாதார, அரசியல் நெருக்கடியைத் தீவிரமாக்கி மனிதகுலத்தை பேரழிவிற்கு அருகே இட்டுச்செல்லும்.

மற்றொரு சிறிய நாட்டிற்கு எதிராகப்போரைத் தொடக்குதல் என்பது, அமெரிக்க, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் திவால்தன்மையை மட்டும் இல்லாமல் சுரண்டல், கொள்ளை அடித்தல் இவற்றைத் தளமாக கொண்டுள்ள முழு உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் திவால் தன்மையையும் காட்டுகிறது. முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் குருதி கொட்டும் முட்டுச் சந்தில் இருந்து வெளியேற ஒரே வழி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் உலக சோசலிசப் புரட்சி வெற்றி அடைவதுதான்.
By David North and Alex Lantier
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------suran
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?