எவரும் தர முடியாத ........!


suran
இலங்கையின் வட மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களை அது பெறுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் அந்தக் கட்சியே முன்னணி பெற்று, வெற்றி பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் 3 இடங்களையும், கிளிநொச்சியில் 3 இடங்களையும், முல்லைத்தீவில் 4 இடங்களையும், வவுனியாவில் 4 இடங்களையும், யாழ் மாவட்டத்தில் 14 இடங்களையும் ( மொத்தமாக 28 இடங்கள்) அந்தக் கட்சி பெற்றுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7 இடங்களை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் ஒரு இடத்தை வென்றிருக்கிறது.
ஆகவே போனஸாக இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும்.
ஆகவே மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 30 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 7 இடங்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 1 இடமும் கிடைத்துள்ளன.
ஆகவே வட மாகாண சபைக்கான ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுகிறது.
விபரம்:
யாழ்ப்பாணம்:
தமிழ் அரசுக் கட்சி --- 14 இடங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 2 இடங்கள்


மன்னார் :
தமிழ் அரசுக் கட்சி --- 3
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 1
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் --- 1
கிளிநொச்சி :
தமிழ் அரசுக் கட்சி --- 3
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 1
முல்லைத்தீவு :
தமிழ் அரசுக் கட்சி --- 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்ப-1
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
எவரும் தர முடியாத மொபைல் போன் இது?
-------------------------------------------------------------------------------------------------------
உண்மையிலேயே தமிழர்களுக்கு!
------------------------------------------------
பல மாதங்களாக எதிர்பார்த்த, புதிய ஐபோன் 5, சென்ற செப்டம்பர் 10 அன்று, கலிபோர்னியாவில் தன் தலைமை அலுவலகத்தில், ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. 
அதே நேரத்தில், ஜப்பான் மற்றும் சீனாவிலும் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. “எதிர்காலத்திற்கான சிந்தனை யோடு, இதுவரை எவரும் தர முடியாத மொபைல் போன் இது” என ஆப்பிள் நிறுவனம் இது பற்றிக் கூறியுள்ளது.

suran
ஆனால், தமிழர்களுக்கு இது உண்மையிலேயே இதுவரை எவரும் தராத போனாகத்தான் உள்ளது. போனிலேயே தமிழ் உள்ளீடு செய்திடும் செயல்பாடு தரப்பட்டுள்ளது. 
இதில் இயங்கும் ஐ.ஓ.எஸ் 7 என்னும் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தமிழ் மொழிச் செயல்பாட்டினையும் உள்ளடக்கியாதாக உள்ளது. இது தமிழுக்குப் பெருமையாகும்.
ஐ போன் 5 எஸ் மற்றும் குறைந்த விலை போனாக ஐபோன் 5சி என இரு மாடல்கள் வெளியாகி உள்ளன. ஐபோன் 5 எஸ், 16, 32 மற்றும் 64 ஜிபி என மூன்று மாடல்களில், தங்கள், வெள்ளி மற்றும் ஸ்பேஸ் கிரே வண்ணங்களில் கிடைக்கும். 
அமெரிக்காவில், இரண்டாண்டு மொபைல் சேவை நிறுவன ஒப்பந்தத்துடன் இவை 199, 299 மற்றும் 399 டாலர் கட்டணத்தில் கிடைக்கும்.

 நிறுவன ஒப்பந்தம் இல்லாமல், அமெரிக்காவில், 16 ஜிபி போன் 549 டாலர், 32 ஜிபி 649 டாலர் என விலையிடப்பட்டுள்ளது. ஐபோன் 5சி, ஒப்பந்தக் கட்டுப்பாடு இல்லாமல், 549 டாலர் என விலையிடப்பட்டுள்ளது.
 இந்த போன்களுடன் ஐ.ஓ.எஸ்.7 என்னும் புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, ஆப்பிள் நிறுவனம் வழங்குகிறது. முதன் முதலாக, தன் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. வரும் செப்டம்பர் 18 முதல் இது டவுண்லோட் செய்திடக் கிடைக்கும். ஐபோன் 4, ஐபேட் 2, ஐபேட் மினி, மற்றும் ஐபாட் டச் ஆகியவற்றில் இயங்கும்.
2007 ஆம் ஆண்டு, முதல் ஐபோன் வெளியானது. இதில் இயங்கும் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஐ.ஓ.எஸ்.7 என்ற பெயரில், புதிய வடிவத்தில், நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் தற்@பாது வெளிவருகிறது. 
தற்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஏழாவது ஜெனரேஷன் என்பதால், இதற்கு ஐ.ஓ.எஸ்.7 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் 200 புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. புதிய பயனாளர் இண்டர்பேஸ், அறிவிப்பு மையம், விரைவாக அணுக்கம் பெற கட்டுப்பாடு மையம் என இதில் பல விஷயங்கள் புதியதாக அறிமுகமாகின்றன. 
மிகப் பளிச் எனத் தெரியும் வண்ணமயமான இண்டர்பேஸ் இதற்கு சரியான மேக் அப் ஆக தோற்றம் அளிக்கிறது. ஐ வொர்க் (iWork productivity suite), ஐ லைப் (iLife), ஐமூவி (iMovie) மற்றும் ஐ போட்டோ (iPhoto) ஆகிய அப்ளிகேஷன்கள், ஐ.ஓ.எஸ்.7 உடன் இணைந்து கிடைக்கின்றன. இவை, இந்த போன்களுக்கு நல்ல விற்பனையைத் தரலாம். ஏனென்றால், இந்த அப்ளிகேஷன்கள் மூலம், போட்டோக்களையும், வீடியோக்களையும் எடிட் செய்திட முடியும். 
""இவை ஏற்கனவே மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவை ஆதலால், தற்போது இந்த போன்கள் மூலம் பயன்படுத்த மக்கள் ஆர்வப்படலாம். மேலும் வேறு எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இவை தரப்படுவதில்லை என்பதால், புதிய ஐபோன்களை, இதற்காகவே மக்கள் விரும்புவார்கள்,தனக்கென ஒரு தனித்தன்மையையும், அதனையே தனிச் சிறப்பாகவும் பண்பாகவும் ஆப்பிள் எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. அதனை மாற்றும் எந்த முயற்சிக்கும் நான் சாட்சியாகவும் இருக்க மாட்டேன், அனுமதிக்கவும் மாட்டேன்'' என்று கூறினார்.

suran
ஐபோன் 5 எஸ் மொபைல் போனின் சிறப்பம்சங்கள்:1.ப்ராசசர்: ஏறத்தாழ நூறு கோடி ட்ரான்சிஸ்டர்களுடன் கூடிய 64 பிட் ப்ராசசர் கொண்ட முதல் மொபைல் போனாக ஐபோன் 5 எஸ் வந்துள்ளது.
2. விரல் ரேகை: டச் ஐடி (“Touch ID”) என்று அழைக்கப்படும் இந்த போனில், வெகுகாலமாக எதிர்பார்த்த, விரல் ரேகை அறியும் சென்சார் வசதி தரப்பட்டுள்ளது. பயனாளர்கள், இதனைப் பயன்படுத்தி, போனை இயக்கலாம். இது தேவை இல்லை என்றால், முன்பு போல நான்கு இலக்க பாஸ்வேர்ட் வைத்துக்கொள்ளலாம். அல்லது பாஸ்வேர்ட் இல்லாமலும் பயன்படுத்தலாம்.
3. பேட்டரி: தொடர்ந்து 10 மணி நேரம் 3ஜி இயக்கம் தரக் கூடிய திறன் கூடிய பேட்டரி தரப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 250 மணி நேரம் மின்சக்தியைக் கொடுக்கும். தொடர்ந்து 10 மணி நேரம் வீடியோ பார்க்கலாம்; 40 மணி நேரம் ஆடியோ கேட்டு ரசிக்கலாம்.
4. கேமரா: இதன் ஐ சைட் (iSight) கேமரா 28 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. ஆப்பிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லென்ஸ் இயங்குகிறது. தொடர்ந்து ஒரு விநாடியில் 10 படங்களை எடுக்கும் “burstmode” கிடைக்கிறது. தானாக போகஸ் செய்திடும் வசதி, முகம் அறிந்து இயக்கும் வசதி ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இதன் வீடியோ பதிவு நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது.
5. இயக்கும் சிப்: இதில் இயங்கும் 64 பிட் ஏ7 சிப், இதற்கு முன் இருந்த ப்ராசசர்களைக் காட்டிலும் 56 மடங்கு வேகமாக இயங்கவல்லது. இதனால், ஐபோன் எஸ்5ல் உள்ள சில அப்ளிகேஷன்கள், ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் இயங்கும். இத்துடன் எம்7 (M7) என்ற பெயரில் சிப் ஒன்றையும், ஆப்பிள் இதில் தருகிறது. இது ஒரு “motion coprocessor”. இது பல அப்ளிகேஷன் புரோகிராம்களின் வேகத்தை அதிகப்படுத்துகிறது.
6. இலவச அப்ளிகேஷன்கள்: இதுவரை கட்டணம் செலுத்திப் பெற்ற Apple’s Pages, Numbers, Keynote, iPhoto, and iMovie apps அப்ளிகேஷன்கள் இதில் இலவசமாகவே இணைத்துத் தரப்படுகின்றன.
7. வடிவமைப்பு: இதன் பரிமாணங்கள்: 123.8 x58.6 x 7.6 மிமீ. எடை 112 கிராம்.
8. திரை: மல்ட்டி டச் வசதியுடன் 4 அங்குல திரை 1136 x 640 பிக்ஸெல் திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
9. சிம்: இதில் நானோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது பயன்படுத்தப்படும் மைக்ரோ சிம் கார்டுகளைப் பயன்படுத்த முடியாது.
10. மொழிகள்: இதில் தமிழ் உட்பட பல உலக மொழிகளைப் பயன்படுத்தலாம். அதே போல பல மொழிகளுக்கான அகராதிகளும் கிடைக்கின்றன.முன் கூட்டியே சொற்களைத் தரும் predictive text மற்றும் தானாகவே சொற்களைத் திருத்தும் (auto correct) வசதிகள் உள்ளன.

ஐபோன் 5 சி மொபைல் போன் சிறப்புக்கள்

1. ஐந்து வண்ணங்களில் இது கிடைக்கிறது.
2. பாலிகார்பனேட் ஷெல் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
3. சுற்றியுள்ள ஸ்டீல் ஸ்ட்ரக்சர் ஆன்டென்னாவாகச் செயல்படுகிறது.
4. ஏ6 (A6) சிப் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் காம்பஸ், ஜி.பி.எஸ்., வை-பி ஆகிய வசதிகள் உள்ளன.
5. ஐபோன் 5 எஸ் போல, இதிலும் 4 அங்குல திரை டிஸ்பிளே கிடைக்கிறது. ரெசல்யூசன் 1136 x 640 பிக்ஸெல்கள்.
6. கேமரா 8 எம்.பி. திறனுடன் இயங்குகிறது. ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ், ரெடினா டிஸ்பிளே, போட்டோ ஜியோ டேக்கிங் வசதிகள் கிடைக்கின்றன. வீடியோ நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது.
7. இதன் பரிமாணம் 124.4 x 59.2 x 8.97 மிமீ. எடை 132 கிராம்.
8. இதில் உள்ளாக அமைந்த லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டு, யு.எஸ்.பி மற்றும் பவர் அடாப்டர் வழியே அதனை சார்ஜ் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. தொடர்ந்து 3ஜி அழைப்புகளை 10 மணி நேரம் பயன்படுத்தலாம். வீடியோ 10 மணி நேரமும், ஆடியோ 40 மணி நேரமும் பயன்படுத்தலாம்.
இந்த போன் மக்கள் மனதில் பட்ஜெட் விலை போனாக இடம் பெறுமா என்பது சந்தேகமே. ஆனால், ஆண்ட்ராய்ட் போனால் சரியும் தன் மொபைல் போன் சந்தைப் பங்கினை, இந்த போன் தூக்கி நிறுத்தும் என ஆப்பிள் நிறுவனம் எண்ணுகிறது.
 இந்த இரண்டு மாடல்களில்சில வசதிகள் இல்லை. 
1. அண்மைக் கள தகவல் தொடர்பு எனக் கூறப்படும் Nearfield communications. வருங்காலத்தில் இது பெரிய அளவில் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதால், ஆப்பிள் ஏன் இதனை விட்டுவிட்டது என்று தெரியவில்லை.
2. வயர்லெஸ் சார்ஜிங் தொழில் நுட்பம். ஆப்பிள் தொடர்ந்து இது குறித்து எந்த எண்ணமும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. சாம்சங், எல்.ஜி. மற்றும் நோக்கியா நிறுவனங்கள் இதனைத் தங்களின் சில மாடல்களில் தந்து வருகின்றன. ஒருவேளை, இந்த தொழில் நுட்பம் இன்னும் சீராக வளர்ந்த பிறகு, ஆப்பிள் இதனைத் தன் மாடல் போன்களில் தர திட்டமிட்டிருக்கலாம்.
3. எச்.டி. ஸ்கிரீன்: ஹை டெபனிஷன் திரை தருவதை ஆப்பிள் இந்த மாடல்களிலும் தள்ளிப்போட்டுள்ளது. ஆப்பிள் போன் திரைகளில் காட்டப்படும் டிஸ்பிளே ரெசல்யூசன் இன்னும் பழைய பாணியிலேயே உள்ளது.
4. நம் வசப்படுத்தும் வசதி: இதில் நாமாக மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு மெமரி அதிகப்படுத்த இயலாது. நாமாக புதிய பேட்டரி ஒன்றை இணைக்க முடியாது.
மெமரி கார்ட் மற்றும் உபரி பேட்டரியினை வைத்து மொபைல் பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு உண்டு என்றால், ஆப்பிள் போன்களை மறந்துவிடுங்கள். இருப்பினும், இதன் நவீன ப்ராசசர், பல வண்ணங்களில் வடிவமைப்பு ஆகியவை இம்முறை குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்களாகக் கிடைத்துள்ளன.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
Click Here
1914 - செப்டம்பர் 22
1914ம் ஆண்டின் செப்டம்பர் 22 நவராத்திரியின் மூன்றாம் நாள்.
காலைப்பொழுதில் சென்னை நகரின் வர்த்தக நிறுவனங்கள் திறந்து வைக்கப்படும் நேரம் அது.
நடந்து வரும் முதலாவது உலக யுத்தம் பற்றிய செய்திகள் மக்களின் உதடுகளில் அரைபட்டுக் கொண்டிருந்தன.
மாலையில் கொலு பார்க்கச் செல்லும் பெண்களும் சிறுமிகளும் பட்டுப்புடவை சரசரக்க அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தனர்.
suran
 மவுண்ட் ரோட்டில் இருந்த பிரபலமான மோசஸ் அண்ட் கம்பெனி ஐரோப்பா செல்லும் மாணவர்களுக்கு தேவையான உல்லன் கோட்டுகள் மற்றும் உள்ளாடைகள் பற்றிய விளம்பரத்தை பறை சாற்றிக் கொண்டிருந்தது.
இரவு ஒன்பது மணி இருபதாம் நிமிடத்தில் சென்னை நகரம் பெரும் நடுக்கத்துக்குள்ளாகியது.முதலாம் உலகப்போரின் போது 22 - 9 - 1914ம் ஆண்டில் ஜெர்மன் யுத்தக்கப்பல் எம்டன் சென்னை துறைமுகத்தை தாக்கியது. அமைதிப்பூங்காவாக இருந்த சென்னையில் வாழ்ந்த மக்கள் பீதியடைந்தனர்.
 நாளொன்றுக்கு இருபதாயிரம் பேர் நகரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர் என்று செய்திகள் கூறின.
இவன் பெரிய எம்டண்டா என்று சர்வசாதாரணமாக ஊரை ஏமாற்றி திரியும் பேர்வழிகளை அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் அன்று முதல் புழக்கத்துக்கு வந்தது. சென்னை நகரைத் தாக்கிய கப்பலில் தியாகி செண்பகராமன் பணியாற்றி வந்தார் என்று வரலாறு கூறுகிறது. காந்தி மண்டபம் அருகில் செண்பகராமனின் நூறாவது பிறந்த நாளையொட்டி, அவருடைய நினைவாக நிறுவப்பட்ட சிலையை 1991ம் ஆண்டில் அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
ஜெர்மனியில் உள்ள எம்டன் நகர மக்கள் நன்கொடையாக அளித்த போர்க்கப்பலுக்கு எம்டன் அந்த நகரத்தின் பெயரே சூட்டப்பட்டது.
3600 டன் எடையுடைய இக்கப்பலில் 22 பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. நாகம் அழகாக இருக்கிறது என்று கூறுவது போல் இதுவும் அழகாக இருந்தது.
ஜெர்மனியின் எதிரிகளான பிரிட்டிஷார் கூட இக்கப்பலை ‘கிழக்கத்திய அன்னம்’ என்று வர்ணித்தார்கள் எம்டன் கப்பலின் தலைவன் வோன் முல்லர் சென்னை தாக்கப்பட்டது குறித்து தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். வர்த்தகக் கப்பல்களை அழிப்பதற்காக இக்கப்பல் கிழக்கத்திய கடலில் வலம் வந்தது.
எந்தவொரு எதிர்ப்பும் சிரமமும் இன்றி பிலிப்பைன்ஸ் கடல் வழியாக வங்காள விரிகுடாவில் நுழைந்த எம்டன் சென்னை கடற்கரையை நெருங்கியது.
பிரிட்டிஷ் கப்பல்கள் போன்று நான்கு புகைபோக்கிகளுடன் அது இருந்ததால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை.
நான்காவது புகைபோக்கி வோன் முல்லரின் வியூகத்தால் உருவாக்கப்பட்ட போலி புகைபோக்கியாகும். இரண்டு எண்ணெய்க் கப்பல்களை தகர்த்த பின்னர் அது வேடிக்கையாக நகரை நோக்கி சுட ஆரம்பித்தது. பழைய கலங்கரை விளக்கத்தின் மின்கலம் அருகே நின்று எம்டன் கப்பல் குண்டு வீசுவதை பார்த்த தி இந்தியன் ரிவியூ பத்திரிகையின் செய்தியாளர் டி.ஸ்காட் பீரங்கி குண்டுகளின் துகள்களும், உலோகக்குண்டுகளும், பூந்தமல்லி ஹைரோடு, சூளைமேடு, காசா மேஜர் சாலை, நுங்கம்பாக்கம் வரை சிதறிக் கிடந்ததாக அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
போர்ட் டிரஸ்ட் கட்டிடம், மெட்ராஸ் செயிலிங் கிளப்பின் போட் ஹவுஸ், புதிய நேஷனல் பேங்க் ஆப் இந்தியா கட்டிடத்தின் முகப்பு ஆகிய இடங்களில் குண்டுகளின் சிதறல்கள் கிடந்தன. வெடிக்காத சில குண்டுகளும் சிதறிக் கிடந்தன. மொத்தத்தில் மூன்று பேர் மடிந்தனர். பதின்மூன்று பேர் காயம் அடைந்தனர். மறுநாள் வெளியான செய்தித்தாள்களில் குண்டுவீச்சு பற்றிய செய்திகள் காணப்படவில்லை. ஒருவேளை பிரிட்டிஷ் அரசு செய்திகளை வெளியிடக்கூடாது என்று தடை விதித்திருக்க வேண்டும்.
இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. வதந்திகள் காட்டுத்தீயாகப் பரவத்தொடங்கின. எம்டன் கப்பல் மீண்டும் நகரைத் தாக்கக்கூடும் என்று நகரெங்கும் பேசப்பட்டது.
 மக்கள் உறக்கமின்றித் தவித்தனர். ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. ரயிலில் ஏற முடியாதவர்கள் பேருந்துகளிலும், மாட்டுவண்டிகளிலும் நகரை விட்டு வெளியேறிய வண்ணம் இருந்தனர்.
 மாநில ஆளுநர் பெண்ட்லாண்ட் இதற்கெல்லாம் கவலைப்படவில்லை. அவர் குளுகுளு ஊட்டியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

suran
எம்டன் குண்டு வீசிய மூன்றாம் நாள் அதாவது செப்டம்பர் 25 அன்று சென்னை வந்திறங்கினார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவர் அதிகாரிகளை சந்தித்தார். பின்னர் அவர் துறைமுகத்தை சுற்றிப் பார்த்தார். மத்திய மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்தார். காலை பத்தேகால் மணிக்கு அவர் தனது மாளிகைக்கு திரும்பி விட்டார்.
 ஓரிரு நாட்கள் கழித்து அவர் ஊட்டி திரும்பிவிட்டார்.
ஆனால் எம்டன் பற்றிய உண்மைச்செய்திகளுக்கு கூட காதும் மூக்கும் வைத்து அதை ஒரு அசுரனாக சித்தரிக்கும் செய்திகள் நாடெங்கும் பரவின.
கோகோஸ் தீவுகள் அருகே கடல் கேபிள்களை சீரழிக்க முயன்ற எம்டன் கப்பலை ஆஸ்திரேலிய போர்க்கப்பல் சிட்னி நேருக்கு நேர் எதிர்த்தது. கடுமையான சண்டைக்கு பின் எம்டன் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
இச்சம்பவம் நவம்பர் ஒன்பது அன்று நடந்தது.
சென்னை நகருக்கு இத்தகவல் நவம்பர் 11 அன்று கிட்டியது.
நகரம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?