நாயகன் மோடி?

.2013-ம் ஆண்டிற்கான 'டைம்ஸ்' இதழின் சிறந்த நபரை தேர்வு செய்ய டைம்ஸ் இதழ் ஆன்லைனில் நடத்திய வாக்கெடுப்பில் பதிவான ஓட்டுகளின் அடிப்படையில் டைம்ஸ் இதழ் சர்வதேசத் தலைவர்கள், தொழில் முனைவோர், பிரபலமானவர்கள் என 42 பேரை இறுதியாகப் பட்டியலிட்டுள்ளது.
இந்த 42 பேரில், 2013-ஆம் ஆண்டிற்கான சிறந்த நபர் யார் என்பதை அடுத்த மாதம் அறிவிக்க இருக்கிறது.
இந்தப் பட்டியலில், ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப் சாஹி, அமேசான் சி.இ.ஓ. ஜெஃப் பெசோஸ் மற்றும் அமெரிக்க ராணுவ ரக்சியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்நோடன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டிற்கான நபராக டைம்ஸ் பத்திரிகை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை தேர்வு செய்தது .
குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது. பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே இந்தியர் மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி குறித்து ஆன்லைனில் ஓட்டளிக்கும் இடத்தில் " சர்ச்சைக்குரிய இந்து தேசியவாதி, குஜராத் மாநிலத்தின் முதல்வர், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சியை பதவியிழக்கச் செய்யும் வேட்பாளராக கருதப்படுபவர்" என டைம்ஸ் இதழ் அறிமுகப்படுத்தியுள்ளது.
, இதுவரை மோடிக்கு 25% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிகிறது. 25% வாக்குகளுடன் மோடி முதலிடத்தில் உள்ளார்.
முன்பு  கொலையாளி  ராஜ பக்ஷே  டைம் பத்திரிகை சிறந்த நபர் பட்டியலில் இடம் பெற பல லட்சங்களையும் -அரசு அலுவலர்களையும் பயன் படுத்தியது 
பல்வெறு நாடுகளில் இருந்து பல்வேறு பெயர்களில் வாக்களிக்க வைத்தது 
இப்போது நினைவுக்கு வருகிறது.
ஒருவேளை மோடி கூட்டமும் அதே தொழில் நுட்பத்தை கடை பிடிக்கிறதோ?
 இந்தியாவில் உள்ள ஊடகங்களில் மோடியை தூக்கி பிடித்து எழுதி மோடிக்கு பரபரப்பான விளம்பரத்தை தேடிய பாஜக தற்போது உலக அளவில் அவரை பிரபலப் படுத்தும் முயற்சியாக இது இருக்கலாம்.

==========================================================================

சிற்றுந்துகளில் வரையப்பட்டது பசுமை அடையாளம்தான் இரட்டை இலை சின்னம் இல்லை.அதை அது நினைவு படுத்தவும் இல்லை என்று தமிழக அதிமுக அரசு நீதிமன்றத்தில் பதில் கொடுத்துள்ளது.


எம்ஜியார் சமாதியில் முன்பு வைக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் இரட்டை இலை அல்ல பறக்கும் குதிரையின் இறகுகள் அதன் நடுவில் இருப்பது காம்பு அல்ல.குதிரையின் வால் என்று நீதிமன்றத்தில் சொல்லியவர் இப்போது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தலைமை பொறுப்பில் இருக்கிறார்.இப்போது பசுமை சின்னத்தை பற்றி விளக்கியவர் என்ன பொறுப்புக்கு போ கப்போ கிறாரொ?

பசுமை சின்னம் வரையும் போது அந்த பசுமைக்கு காரணமான உதய சூரியனை எப்போது வரைவீர்கள்?
பொங்கல் வாழ்த்துக்களில் கரும்பு மற்றும் பசுமை சின்னங்களின் பின்னால் சூரியன் இருப்பதை வரைத்திருப்பார்களே .அதானால்தான் கேட்டேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
படித்துறைப் பாண்டியும் பழ.நெடுமாறனும்..!

அந்த நகைச்சுவைக் காட்சியை தொலைக்காட்சிகள் எப்பொழுது ஒளிபரப்பினாலும் அதனைப் பார்த்து ரசித்துச் சிரிக்காதவர்களே இருக்க முடியாது!
தேநீர்க் கடை முன்பு நடிகர் வடிவேலு தமது கோஷ்டிப் பரிவாரங்களுடன் போய் நிற்பார். கோஷ்டியில் ஒருவர் போய் டீக்கடைக்காரரிடம் "அண்ணனுக்கு ஒரு டீ போடு!" என்பார். டீக்கடைக்காரர் "டோக்கன் வாங்கு" என்பார். அவர் உடனே, "அண்ணே டோக்கன் வாங்கணுமாம்ணே" என்று வடிவேலுவிடம் வந்து சொல்வார். உடனே வடிவேலு, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, "இந்தப் படித்துறை பாண்டிக்கிட்டயே டோக்கன் கேக்குறியா? நீ இந்த ஊர்லயே இருக்க முடியாதுடா.. டேய்"
என்று கத்திக்கொண்டே டீக்கடையை அடித்து நொறுக்கிவிட்டு, "எங்ககிட்டயவே..." என்று கத்திக்கொண்டே தனது கோஷ்டிப் பரிவாரங்களுடன் ஓடி ஒரு மறைவில் இருந்துகொண்டு, தன் கோஷ்டி ஆளிடம், "டேய்... அந்தக் கடைக்காரன் கடையை இழுத்து மூடிவிட்டு ஓடுறானான்னு பார். அவன் ஓடிட்டா அவன் நமக்கு அடிமை, ஓடாவிட்டால் நாம் அவனுக்கு அடிமை" என்று மூச்சிரைக்கச் சொல்வார். கோஷ்டியிலிருந்து ஒருவர் எட்டிப் பார்க்கையில், டீக்கடைக்காரர் கடையை இழுத்து மூடிவிட்டு தனது வேட்டியால் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஓட்டம் பிடிப்பார். இதனைப் பார்த்தவுடன் கோஷ்டியில் ஒருவர், "அண்ணே ஓடுறாண்ணே!" என்று சொல்வார். அப்போது வடிவேலு மிக உற்சாகமாக, "அப்ப இன்னையிலருந்து நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்டா" என்று பெரிய ரவுடி போல 'ஃபிலிம்' காட்டுவார்.
படித்துறைப் பாண்டியைப் போல அய்யா நெடுமாறன் தனது படை பரிவாரங்களுடன் தமிழகத்தில் அரசியல் செய்து வருகிறார். நெடுமாறன் வகையறாக்கள் இவ்வளவு காலமும் வீராவேசமாகப் பேசினார்கள். கருணாநிதியை ரவுண்டு கட்டினார்கள். வா... வந்து பார்... என்கிற அளவில் பிளந்து கட்டினார்கள். தமிழர் துரோகி என்றார்கள், தமிழர்களுக்கு எதிரி என்றார்கள், தமிழகத்திலிருந்தே விரட்ட வேண்டும் என்றார்கள். உச்சகட்டமாக தெலுங்கர் என்றுகூறி மார் தட்டினார்கள். புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்கு வந்தால்தான் எல்லாம் மாறும் என்று 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2011 சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தார்கள். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்கள். இன்னும் கூடுதலாகப் போய் ஜெயலலிதாவை 'ஈழத் தாய்' என்றார்கள். உண்மையான புரட்சித் தலைவி அம்மாதான் என்றார்கள். அதிமுகவினரைவிடக் கூடுதலாக ஜெயலலிதாவை 'அம்மா அம்மா' என்று ஊர் ஊராய் தொகுதி தொகுதியாய் கூவினார்கள். ஈழவிடுதலையை வாங்கித் தருபவர் என்று அடையாளப்படுத்தினார்கள். அம்மா வந்தால் தமிழகத்தில் ஈழவிடுதலைக்கான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றார்கள். ஏன்... அம்மாவே தலைமை தாங்கி ஈழப் போரை நடத்துவார் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள்.
அம்மா ஆட்சிக்கு வந்தார்; இனப்படுகொலை செய்த இராஜபக்சேவைத் தண்டிக்கவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றினார். தீர்மானத்தை வரவேற்று பழ.நெடுமாறன் ஆகா.. ஓகோ.. என வானுக்கும் மண்ணுக்கும் குதித்து அறிக்கை வெளியிட்டார். எதிலும் இரண்டடி தாவி ஓடநினைக்கும் அண்ணன் சீமான், அதே அம்மாவைப் பாராட்டி சென்னை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டினார். அது மட்டுமல்லாது அம்மாவைப் பாராட்டி வேலூரிலிருந்து சென்னை வரை நடை பயணம் வேறு. அம்மாவே நாணி வெட்கப்படுமளவுக்கு புகழாரப் பொதுக்கூட்டங்கள்.
இந்தக் காட்சிகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கின. கடந்த இரண்டாண்டுகளாகவே தமிழகத்தில் மாவீரர் நாள் பொதுக்கூட்டங்களை நடத்த ஈழத்தாய் மறுத்து வருகிறார். மேதகு பிரபாகரன் அவர்களின் படங்களை அச்சிட்டு ஒட்டப்படும் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு வருகின்றன. எந்த இடத்திலும் மாவீரர் நாள் விழாவுக்கோ, மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் கூட்டங்களுக்கோ தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுவரும் நெருக்கடிகள் தொடர்கின்றன. இந்நிலையில்தான் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. ஆனால் நெடுமாறன் வகையறாக்களோ இத்தகைய எந்தப் போராட்டத்திலும் பங்கேற்கவில்லை.
வெற்றி அல்லது வீரச்சாவு என முழங்கி 15 நாட்களாக உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்ட தோழர் தியாகு அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் களத்தில் குதித்தபோதுகூட, அவருக்கு வாழ்த்துச் சொல்லக்கூட நேரமில்லாமல் நெடுமாறன் தஞ்சை விளாரில் தங்கி முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
தமிழர்களின் உணர்வுகளை மதித்து காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாளே - அதாவது நவம்பர் 13 அதிகாலை - முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவர்களையும், பூங்காவையும் தமிழகக் காவல்துறை இடித்துத் தள்ளியது. அங்கிருந்த நெடுமாறன் உள்ளிட்ட 83 பேரை, பணி செய்ய விடாமல் தடுத்தாகச் சொல்லி வேனில் அள்ளிக்கொண்டுபோய் ஒரு திருமணத்தில் அடைத்தார்கள். எப்படியும் மாலை 5 மணிக்கு மேல் விட்டுவிடுவார்கள் என்று நினைத்திருந்தவர்களின் நினைப்பில் ஜெயலலிதா மண்ணைப் போட்டார். இரவோடு இரவாக 83 பேரையும் திருச்சி சிறைக்குள் திணித்தார்கள்.
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்தும், நெடுமாறன் உள்ளிட்ட 83பேர் கைதைக் கண்டித்தும் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவுக் கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் அறிக்கை வெளியிட்டன. 'டெசோ' சார்பில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கே சென்று பார்வையிட்டு, தமிழக அரசைக் கண்டித்ததோடு, இடிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசே கட்டித் தரவேண்டும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
9 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் பிணையில் வெளிவந்த அய்யா நெடுமாறனை, 'வாராது வந்த மாமணி', 'தமிழ்த் தேசியப் போராளி' ம.நடராசன் சிறைவாயிலிலேயே ஆரத்தழுவி வரவேற்றார். பின்பு செய்தியாளர்களிடம் நெடுமாறன், மிகுந்த கோபத்துடனும், முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டும், அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார். (இந்த இடத்தில் உங்களுக்கு வடிவேலு ஞாபகம் வந்தால் நாம் பொறுப்பல்ல)
"முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்த அதிகாரிகள் தன்னிச்சையாக எடுத்த முடிவாகத்தான் இருக்க முடியும். அவர்கள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் முதல்வரைத் தவறாக நினைப்பார்கள்" என்று 'வீராவேசமாகப்' பேசினார். முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்தது தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரியாது என்றும், அதிகாரிகள் தன்னிச்சையாகவே இடித்தார்கள் என்றும் நெடுமாறன் கூறுவதன் மூலம் நிகழ்ந்த தவறுகளுக்கு ஜெயலலிதா காரணமல்ல என்று மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறாராம்.
தமிழகத்தை ஆட்சி செய்பவருக்கு தமிழகத்தின் எந்த மூலையில் எது நடந்தாலும் தெரிந்திருக்க வேண்டும்தானே. "அமைச்சரே மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்று வெளியில் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் ஆட்சி நடத்தும் அந்தக்கால அரசியா ஜெயலலிதா? என்ன சொல்ல வருகிறார் நெடுமாறன்? ஒன்றுமே தெரியாமல் ஜெயலலிதா ஆட்சிபுரிகிறாரா? அல்லது ஜெயலலிதாவைக் காப்பாற்ற நினைக்கிறாரா? சரி, ஜெயலலிதாவிற்குத் தெரியாமல் இடித்தார்கள் என்றால், அய்யா சிறைக்குப் போனது கூடவா அம்மாவுக்குத் தெரியாது. நீதிமன்றத்தில் பிணை கேட்டதுகூடவா தெரியாது? முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பின்போது, அரசு அனுமதி வழங்காததால் அய்யா நீதிமன்றத்திற்குப் போனாரே, இதுகூடவா அம்மாவுக்குத் தெரியாது? கொளத்தூர் மணி அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததுகூடவா தெரியாது? இவையும் அதிகாரிகளே தன்னிச்சையாக எடுத்த முடிவுதானா? மாவீரன் நெடுமாறன் இப்படி அந்தர் பல்டி அடித்துப் பேசும் அரசியல்தான் என்ன!
சரி, நெடுமாறன்தான் இப்படி என்றால், வீழ்ந்துவிடாத வீரத்துக்கும், மண்டியிடாத மானத்துக்கும் சொந்தக்காரரான சீமான், நெடுமாறன் கைதையொட்டி முள்ளிவாய்க்கால் முற்றத்திலேயே செய்தியாளர்களிடம் பேசும்போது "இந்நிகழ்வுக்கு மத்திய உளவுத்துறைதான் காரணமாக இருக்க முடியும். மத்திய அரசால்தான் தமிழக அதிகாரிகள் தமிழர்களுக்கு எதிராக நடக்கிறார்கள். இப்போக்கை தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்" என்றார். நெடுமாறன் எப்படிப் பேசினாரோ அதையே சீமானும் தமிழக அரசுக்கும் முள்ளிவாய்க்கால் இடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று சொல்கிறார்.
இவ்வளவு கடுமையாகவும், தமிழினத்திற்கு விரோதமாகவும் நடந்துகொள்ளும் ஜெயலலிதாவைப் பார்த்து, ஜெயலலிதா செய்வது மக்கள் விரோதம் என்று சொல்லக்கூடத் துணிச்சல் இல்லாதவர்களாக இந்த 23ஆம் புலிகேசிகள் தமிழகத்தில் வலம் வருகிறார்கள். இதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? ஒன்றுமில்லை. அடிப்படையில் கலைஞர் கருணாநிதி எதிர்ப்புதான். தமிழீழ விடுதலையோ, தமிழர் ஒற்றுமையோ, தமிழின விடுதலையோ, தமிழ்த் தேசிய அரசியலோ.. இந்த நெடுமாறன் வகையறாக்களுக்கு முக்கியமல்ல; கருணாநிதி எதிர்ப்புதான் முக்கியம் என்பதை முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்குப் பின்னான இவர்களின் அரசியல் நமக்கு உணர்த்துகிறது. கலைஞர் கருணாநிதி சாதாரணமாகத் தட்டினாலே அய்யோ இரத்தம்... என்று கூப்பாடு போட்டவர்கள், ஜெயலலிதா உலக்கையை வைத்து இவ்வளவு மோசமாக அடித்தும் தலையில் வருவது தக்காளி சட்னிதான் என்று சிரித்துக்கொண்டே துடைத்துக்கொண்டு வருகிறார்கள்.
இப்போது முதலில் சொன்ன வடிவேலுவின் காமெடிக் காட்சியை நினைத்துப் பார்த்தால், நெடுமாறனின் அரசியல் கண்டு நீங்களே விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.
பாவம்... நெடுமாறன் வகையறாக்களுக்கு 'பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்...' என்ன செய்வது?  இந்த இலட்சணத்தில் தமிழீழத்தை மீட்கப் போகிறார்களாம்... தமிழ்த் தேசியத்தை அடையப் போகிறார்களாம்!
இவர்களது அரசியல் கண்டு ஜெயலலிதாவின் மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் சொல்கிறது - "எவ்வளவு அடிச்சாலும் நெடுமாறன் தாங்குறாரே... இவர் ரொம்ப நல்லவரு..."
 
                                                                                                                                   - வன்னிஅரசு,
   
100 வயதான ரிப்பன் மாளிகை.

இந்தியாவின் முதல் மாநகராட்சி யான "மெட்ராஸ் மாநகராட்சி "என்ற,  சென்னை மாநகராட்சி 1688-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
 அப்போது மாநகராட்சி அலுவலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை டவுன் ஹாலில் செயல்பட்டது.
பிறகு டவுன் ஹாலை அரசு எடுத்துக் கொண்டதால், 1730களில் ஜார்ஜ் டவுன் எர்ர பாலு செட்டித் தெருவுக்கு மாநகராட்சி அலுவலகம் மாற்றப்பட்டது.
அந்த அலுவலகம் போதவில்லை. எனவே 1909- ம் ஆண்டு டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டு, நான்கு ஆண்டுகள் பார்த்துப்பார்த்து, இன்றைய மாநகராட்சி தலைமை அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
 இன்று 100 வயதை நிறைவு செய்யும் சென்னை ரிப்பன் மாளிகை. படம்: வி.கணேசன்
இந்தோ- சராசனிக் பாணியில், ரூ. 7.5 லட்சம் செலவில் , 132 அடி கொண்ட மைய கோபுரத்துடன், 252 அடி நீளம், 126 அடி அகலத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இக்கட்டிடத்துக்கு உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீரமைப்புகளை செய்த லார்ட் ரிப்பனின் பெயர் சூட்டப்பட்டு, 1913- ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி திறக்கப்பட்டது.
 வெள்ளை அடித்ததுபோல், எப்போதும் வெள்ளை வெள்ளேரென்று இருக்கும் , இன்றைய நவீன சென்னையின் பழம் பெருமையை தாங்கி நிற்கும் ரிப்பன் மாளிகை, இன்று நூறு வயதை நிறைவு செய்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?