2013 -சில பர,பர செய்திகள்..

--------------------------------------------

suran'தியேட்டரில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னரே, சந்தாதாரர்களின் டி.டி.ஹெச்-சில் படம் ஒளிபரப்பப்படும்!’ - 'விஸ்வரூபம்’ திரைப்பட விவகாரத்துக்கு கமல் திரி கிள்ள, திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, பணப் பஞ்சாயத்து என்று அதகளம் ஆரம்பம். இடையில் எதிர்பாராமல் புகுந்தது மதம். விசேஷத் திரையிடலில் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து உள்துறைச் செயலாளரிடம் மனு கொடுக்க, 'விஸ்வரூபம்’ வெளியீட்டுக்கு விழுந்தது தற்காலிகத் தடை. 'என் படைப்புச் சுதந்திரத்துக்கு பங்கம் வந்தால், நாட்டை விட்டே வெளியேறுவேன்!’ என்று அந்த வினோதமான சூழலை கமல் வெகு கவனமாகக் கையாண்டார். 'விஸ்வரூபம் வெளியாகும் 524 திரையரங்குகளில் பாதுகாப்புக்கு என நியமிக்க 56,440 போலீஸ் நம்மிடம் இல்லை’ என்று 'விஸ்வரூபம்’ தொடர்பான நீண்ட விளக்கத்தில் குறிப்பிட்டார் முதல்வர் ஜெயலலிதா.
தேசியக் கவனத்தை ஈர்த்த விவகாரம், ஏகப்பட்ட பஞ்சாயத்துப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 'ஏழு காட்சிகள்’ நீக்கப்பட்டு வெளியானது. சர்ச்சை கொடுத்த ஓப்பனிங் ப்ளஸ் கமலின் ஆக்ஷன் அவதாரம் படத்துக்கு 'விஸ்வரூப’ வெற்றி கொடுத்தது!
 
'2007-ல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை ஏன் அரசிதழில் வெளியிடவில்லை?’ என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கண்டிக்க, உடனடியாக அரசிதழில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியிடப்பட, 'என் 30 ஆண்டுகாலப் பொதுவாழ்வில் இதைத்தான் மிகப் பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்’ என்று பூரித்தார் ஜெயலலிதா. காவிரிப் பாசன விவசாயச் சங்கங்கள், ஜெயலலிதாவுக்கு 'பொன்னியின் செல்வி’ விருது வழங்கின. தீர்ப்பு, அரசிதழில் இடம்பிடித்ததில் தி.மு.க-வின் பங்கு குறித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டார் !
 
 
 
! 'கடந்த 10 ஆண்டுகளில், விவசாயத் தொழிலைக் கைவிட்டு நகரத்தை நோக்கி நகர்ந்துவிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை, சுமார் ஒன்பது லட்சம்’ என்றது தமிழக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. அன்று, ஒரு தேங்காய் விற்று ஒரு லிட்டர் டீசல் வாங்கலாம். இன்று, டீசல் விலை 50 ரூபாய். ஆனால், தேங்காய் விலையோ 5 ரூபாய். கட்டுப்படியாகாத உற்பத்திச் செலவு, ஆட்கள் பற்றாக்குறை... போன்ற பல காரணங்கள், விவசாயிகளை 'டவுன்’ பஸ் ஏறவைத்துவிட்டது! ஏர் உழைப்பாளர்களின் கோரிக்கைகள், 'பார்’ நடத்தும் அரசாங்கத்தின் செவிகளை எட்டுவதாக இல்லை!
 
ஆசிட் விற்பனை தொடர்பான விழிப்பு உணர்வு ஏற்படுத்த, வினோதினியின் உயிரைப் பலிகொடுக்க வேண்டியதாயிற்று. தன் காதலை ஏற்றுக்கொள்ளாத வினோதினி மீது, 2012 நவம்பரில் ஆசிட் வீசினான் சுரேஷ்குமார். முகம் முழுக்க வெந்து, கண் பார்வையைப் பறிகொடுத்த வினோதினி, மூளை நரம்பு பாதிக்கப்பட்டு, நான்கு மாத சிகிச்சைக்குப் பின் பரிதாபமாக இறந்தார். சுரேஷ்குமாருக்கு, காரைக்கால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மகளின் மரணம் அளித்த நிம்மதியற்ற வாழ்க்கைச் சூழல் காரணமாக, வினோதினியின் தாய் சரஸ்வதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்!
 
 
பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன், இலங்கை ராணுவ முகாமின் மணல் மூட்டைகளுக்கு மத்தியில் பிஸ்கட் சாப்பிடும் படத்தையும், பிறகு அவன் கொல்லப்பட்டுக்கிடக்கும் காட்சிகளை யும் வெளியிட்டது சானல் 4. அந்தப் படங்கள் தமிழ கத்தைக் கொதிகலனாக்கின. குறிப்பாக, தமிழகக் கல்லூரி மாணவர்கள், ஐ.நா.சபையில் தாக்கல்செய்யப்பட இருக்கும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்து அதை காங்கிரசு எற்க மறுத்ததால்  தி.மு.க-மத்திய அமைச்சர்கள் அனைவரும் அமைச்சரவையில் இருந்து விலகினார்கள்!
 
2012 அக்டோபரில், சென்னையில் தரைதட்டிய பிரதீபா காவேரி கப்பலில் இருந்து தப்பும்போது மரணமடைந்தார் மெரைன் இன்ஜினீயர் நிரஞ்சன். ஒரே மகனை இழந்து பரிதவித்து நின்ற நிரஞ்சனின் பெற்றோர் கோதண்டபாணி-பாரதி தம்பதியை, மகனின் படிப்புக்கு வாங்கிய கடன் சுமையும் அழுத்தியது. துயரம் தாளாமல் தங்களின் 28-வது திருமண நாளில் தற்கொலை செய்துகொண்டார்கள். பிரதீபா காவேரிக் கப்பல் நிர்வாகம் வழங்கிய இடைக்கால நஷ்டஈட்டுத் தொகையை நீதிமன்றம் சட்டபூர்வ வாரிசுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால், பணி அலட்சியத்தால் நஷ்டஈடு உரியவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்காததால், இரண்டு உயிர்கள் பறிபோயின!
 
துயரப் பெருங்கடலில் மிதக்கிறார்கள் தமிழகத் தில் வசிக்கும் 'இந்திய’ மீனவர்கள்! நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், கைது, வலை-படகுகள் பறிமுதல்... என அட்டூழியத்தின் உச்சத்துக்குச் சென்றன சிங்களக் கடற்படையின் வரம்புமீறல்கள். '1974-ல் கச்சத்தீவைத் தாரைவார்த்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் செல்லாது’ என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய, 'அந்த ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது. அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை கிடையாது’ என தன் பங்குக்கு அதிர்ச்சி அளித்தது மத்திய அரசு!
 
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டம், இரண்டு முழு ஆண்டுகளைப் பூர்த்திசெய்தது. இடிந்தகரை போராட்டப் பந்தலில் உறுதியுடன் அமர்ந்திருந்த மக்களின் உறுதியைக் குலைக்க, மணல் ஆலை அதிபர்கள் மீனவர்களைப் பிளவுபடுத்தும் காரியங்களை மேற்கொள்ள, சமீபமாக இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து 8 பேர் பலியானார்கள்.

 
சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் சட்டப் போராட்டம் 15 ஆண்டுகாலமாகத் தொடர்கிறது. மார்ச் மாதம், அந்த ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேற, உடனடியாக ஆலையை மூடச் சொல்லி தமிழக அரசு உத்தரவிட்டதோடு, ஆலையின் மின்சார இணைப்பையும் துண்டித்தது. ஆனால், பின்னர் உச்ச நீதிமன்றம், 'ஆலை இயங்கலாம்’ என்று இறுதித் தீர்ப்பு அளித்தது. அசுர பலமிக்க பன்னாட்டு ஆலையைக் கட்டுப்படுத்தும் சக்தி, மக்களின் போராட்டங்களுக்கோ, மாநில அரசுகளுக்கோகூட இல்லை பன்னாட்டு நிறுவனங்கள் கொட்டும் கோடிக்கணக்கான .பணத்துக்கு மட்டுமே உள்ளது  என்பதை மீண்டும் உணர்த்தியது நாசகார ஸ்டெர்லைட்!
 

தந்திச் சேவை, தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. 160 ஆண்டுகளாக கடைக்கோடி இந்தியனிடமும் தகவலைக் கொண்டுசேர்த்த தந்தி சேவைக்கு, சமீபமாக மக்களிடையே வரவேற்பு குறைந்தது. வருடத்துக்கு 75 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் தந்தி சேவைக்கு, 100 கோடி ரூபாய் செலவழித்து வந்தது பி.எஸ்.என்.எல். நிறுவனம். தந்திக்கு 'தந்தி’யடித்த ஜூலை 15-ம் தேதி அன்று, தமிழகத்தில் 1,500-க்கும் மேற்பட் டோர் தங்கள் உறவினர், நண்பர்களுக்கு 'இறுதித் தந்தி’ அனுப்பி வரலாற்றுப் பெருமை ஈட்டும் காகிதத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள்!
 
சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரை உருவாக்கிய அண்ணாமலை அரசர், 1928-ம் ஆண்டு கல்வி நிலையங்களையும், 20 லட்ச ரூபா யையும் ஊராட்சி அமைப்பிடம் கொடுத்துவிட்டு, தன் வாரிசுகளை இணைவேந்தர்களாக நியமிக்கும் அதிகாரத்தையும் விட்டுச் சென்றார். ஆனால், அவருடைய வாரிசுகள் ஆட்குறைப்பு, ஊதியக்குறைப்பு எனக் கடும் நடவடிக்கைகள் எடுக்க, கடந்த ஓர் ஆண்டாக ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் சிறப்புச் சட்டம் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்கியது !

நள்ளிரவில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று, எழும்பூர் சாலையோரத்தில் தூங்கிய 13 வயது முனிராஜைக் கொன்று, 10 வயது சிறுமி சுபாவைப் படுகாயப்படுத்தினார் ஷாஜி. மோகன் பிரீவரீஸ் நிறுவன உரிமையாளர் புருஷோத்தமனின் மகனான ஷாஜி, 20 நாட்கள் தலைமறைவுக்குப் பிறகு, ரகசியமாக வந்து ஜாமீன் பெற்றுவிடலாம் என்று பாங்காக்கில் இருந்து கொச்சிக்கு வர, அங்கேயே அவரைக் கைது செய்தது போலீஸ்.
 
நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தமிழகம் உள்பட தென்னிந்தியாவின் பெருமளவு மின்தேவையைப் பூர்த்திசெய்கிறது. இதன் 6.44 சதவிகிதப் பங்குகள் ஏற்கெனவே விற்கப்பட்ட நிலையில் மேலும் இதன் 5 சதவிகிதப் பங்குகளை பொதுமக்களுக்கு விற்று 460 கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசுக்கு, செபி பரிந்துரைத்தது.
 
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் முறைகேடாகச் செயல்பட்ட கிரானைட் குவாரிகளை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா பூட்டி சீல் வைத்தார். பி.ஆர்.பழனிச்சாமி கைது செய்யப்பட்ட நிலையில், மதுரையில் இருந்து அன்சுல் மிஸ்ரா திடீரென மாற்றப்பட்டார். கிரானைட் மோசடி தொடர்பாக பதிவான 74 வழக்குகளில், 44, பி.ஆர்.பி. நிறுவனத்தின் மீது பாய்ந்தன. தங்கள் நிறுவனத்தைச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பி.ஆர்.பி., உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது!

 
இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரிலும் பா.ஜ.க-வின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்திலும் மற்றும் சில இந்து அமைப்புகளின் பிரமுகர்களும் கொடூரமாகக் கொல்லப்பட, 'அரசும் போலீஸாரும், இந்து அமைப்பினரின் பாதுகாப்பு விஷயத்தில் மெத்தனம் காட்டுவதாக’ பா.ஜ.க. குற்றம்சாட்டியது. ஆடிட்டர் ரமேஷைக் கொலைசெய்தது 'போலீஸ்’ பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுக்கர் சித்திக் ஆகிய தீவிரவாதிகள்தான் என்று போலீஸ் அறிவித்தது. அந்த நால்வரில் அபுபக்கர் தவிர மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர்!
 
'தலைமை தாங்கும் நேரம் வந்து விட்டதாக சுவரொட்டியில் போடப்பட்டதால் நடிகர் விஜய் ’ தலைவா ’ படம் வெளியாகும் தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என்று வந்த மிரட்டலால், திரையரங்க உரிமையாளர்கள் மிரள, 'தலைவா’ தமிழகத்தில் வெளியாகவில்லை. அரசும் திரையரங்கினரை மிரட்டியதால் கமல் விசுவரூபத்தில் எதிர்த்து போராடியது போல் விஜய்செய்யாமல் , கொடநாட்டுக்குச் சென்று ஜெயலலிதாவைச் சந்திக்கக் காத்திருந்தும்,அடிமைத்தனமான அறிக்கைகள் விட்டும் ஜெயலலிதா  பாராமுகம்தான். இதற்கிடையில் படத்தின் திருட்டு டி.வி.டி. அமோகமாக விற்க, படத்தயாரிப்பாளர் அழுது மாரடைப்பில் மருத்துவமனையில் சேர்க்கப்பட , ஒருவழியாக, படத் தலைப்பில் 'Time to lead’ என்ற வாசகம் நீக்கப்பட்டு, வெளியானது. விஜயின் தைரியமற்ற செயல்பாடுகளால் வெறுப்புற்ற ரசிகர்களும் மக்களும் படத்தை கணடுகொள்ளாமல் போக படம் சுருண்டுவிட்டது.கடைசி வரை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆட்களைக்காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டது  ஏன் என்று இன்றுவரை தெரியவில்லை.!
 
கழிவு நீர் குடி நீரில் கலப்பது இன்று சர்வசாதாரணம். ஆனால், இந்த வருடம் கச்சா எண்ணெய் கலந்தது திகீர் களேபரம். வட சென்னை தண்டையார்பேட்டை பகுதி நிலத்தடி நீரில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கலந்தது. 'பாதிக்கப்பட்ட வீடுகளில் நிலத்தடி நீரில் கலந்துள்ள கச்சா எண்ணெயை அகற்ற வேண்டும். அதுவரை பாதுகாக்கப்பட்ட குடிநீரை அவர்களுக்கு எண்ணெய் நிறுவனமே வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். ஆனாலும் தரமான குடிநீர் கிடைக்காமல் அவதியில் இருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்!

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட சரத்குமார் தலைமையிலான அணி ஓர் ஒப்பந்தம் போட்டுவிட, விஷால் தலைமையிலான இளம் நடிகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மோதல் பின்ன ணியுடன் அரங்கேறிய சங்கத்தின் 60-வது பொதுக் குழுவில், நீலநிற ஜீன்ஸ், வெள்ளைச் சட்டை அணிந்துவந்த விஷால், ஆர்யா, ஜீவா, 'ஜெயம்’ ரவி... உள்ளிட்ட அதிருப்தி கோஷ்டியினர், காரசாரமாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். 'சங்கத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. இளைஞர்கள் பொறுப்புக்கு வரவேண்டும்’ என்று பூசி மெழுகினார் சரத்குமார்!
 
கல்லூரி வளாகத்துக்குள்ளேயே கொலைவாளினை எடுத்த மூன்று கல்லூரி மாணவர்களால் அதிர்ந்தது தமிழகம். தூத்துக்குடி மாவட்டம் இன்ஃபன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ்குமாரை, அதே கல்லூரி மாணவர்கள் டேனிஸ், பிச்சைக்கண்ணு, பிரபாகரன் ஆகியோர் துள்ளத்துடிக்க வெட்டிக் கொன்றனர். சக மாணவிகளைக் கிண்டலடித்த அந்த மூவரையும் முதல்வர் சுரேஷ்குமார் சஸ்பெண்ட் செய்திருக்கிறார். அந்தக் கோபமே, கொலை செய்யத் தூண்டியது என்கிறது காவல் துறைக் குறிப்பு!
 
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் கலந்துகொண்ட 6.6 லட்சம் பேரில் 27,092 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 'தேர்வு வாரியத்தின் அணுகுமுறை எதேச்சதிகாரமாக இருக்கிறது. கடந்த ஜூலையில் நடந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு வினாத்தாளில் கணியன் பூங்குன்றனாரை 'கனியன்பூதுகுன்றனார்’ என்றும், இளங்கோவடிகளை 'இளதுகோவடிகள்’ என்றும் குறிப்பிட்டது உள்ளிட்ட 47 அச்சுப்பிழைகள். ஆகவே, அந்தத் தேர்வு முடிவை நிறுத்திவைக்க வேண்டும்’ என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, 'இதுபோன்ற எழுத்துப்பிழைகளுக்கு அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்’ எனக் கடுமையாகக் கண்டித்தார்!
 
1913-ல் 'ராஜா ஹரிச்சந்திரா’வை, தாதா சாஹேப் பால்கே வெளியிட்டதில் தொடங்கும் இந்திய சினிமாவின் வரலாறுக்கு இது 100-வது ஆண்டு. 'சினிமா-100’ கொண்டாட்டத்தை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையுடன் இணைந்து அரங்கேற்றியது தமிழக அரசு. ஆனால், முன்னாள் முதல்வரும், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையுமான கருணாநிதியின் படைப்புகள் விழாவில் புறக்கணிக்கப்பட்டது .முதல் கமல் ஹாசன் ,ரஜினி போன்றவர்களு க்கு உரிய மரியாதை அளிக்கப்படாதது வரை ஏகப்பட்ட முறைகேடுகள் . மக்களின் வரிப்பணம்  10 கோடி செலவில் ஜெயலலிதாவின்  புகழ்பாடும் நிகழ்ச்சியாகவே முடிந்தது 'சினிமா-100’ விழா!

 
தென்தமிழகக் கடற்கரையோர செந்நிற மணலில் இருந்து கனிமங்களைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவு பெற்ற வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம், 'சட்டவிரோதமாகச் செயல்பட்டு, 96,120 கோடி ரூபாய் மதிப்பிலான இயற்கை வளத்தைக் கொள்ளையடித்திருக்கிறது’ என்று புகார் கிளம்ப, மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமார், வைகுண்டராஜனின் நிறுவனங்களைச் சோதனையிட உத்தரவிட்டார். ஆனால், சோதனை நடத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள் ஆஷிஸ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்! வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான சோதனைக்குப் பிறகு மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது!
 
'அரசு வேலைவாய்ப்புகளில் அதிக இடஒதுக்கீடு’ உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைளை வலியுறுத்தி விழித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சென்னையில் போராடினார்கள். கடைசி நிமிடத்தில் முடிவெடுத்து திடீர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டவர்களை மொத்தமாகப் பிடித்துச் சென்று புறநகர்ப் பகுதிகளிலும் சுடுகாடுகளிலும் இறக்கிவிட்டு வந்தது போலீஸ். திசை புரியாமல் பசியில் சுருண்டு விழுந்தவர்கள் முன்னிலும் தீவிரமாகப் போராடினார்கள். காவல் துறையின் அராஜகத்தை உயர் நீதிமன்றம், 'மனித உரிமை மீறல்’ எனக் கண்டித்தது.!
 
'அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று ஒழித்தது இலங்கை. அங்கு நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொண்டால் அதற்கான விளைவை மத்திய அரசு சந்திக்க வேண்டிவரும்!’ என்று கருணாநிதி எச்சரித்தார். 'இந்தியாவில் இருந்து யாருமே கலந்துகொள்ளக் கூடாது’ என்று தமிழகச் சட்ட சபையும் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவில் இருந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், அந்த மாநாட்டில் கலந்துகொள்ள, 'அரசியல் நெருக்கடியால் மன்மோகன் சிங் வரவில்லை!’ என்பது இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் கிண்டல்!
மதுரையில் அத்வானியின் பயண வழியில் பைப் வெடிகுண்டு வெடிக்க முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த 'போலீஸ்’ பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அபுபக்கர் சித்திக் ஆகியோர் இந்து அமைப்புகளின் பிரமுகர்கள் கொலைகளில் சேர்க்கப்பட்டார்கள். முதலில் 'போலீஸ்’ பக்ருதீன் பிடிபட, ஆந்திராவின் புத்தூரில் பதுங்கியிருந்த மற்ற தீவிரவாதிகளைப்  பிடிக்கச் சென்றபோது இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தீவிரவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பதிலடியாகத் தாக்கிய போலீஸார், அவர்களைக் கைது செய்ததோடு 17 கிலோ வெடி மருந்துகளையும் கைப்பற்றினர்!
 
தமிழக சட்டமன்றத்தில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராகத் தீர்மானம் இயற்றிக்கொண்டே, ஈழத் தமிழர்களின் தியாகங்களைப் போற்ற தஞ்சையில் நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்தது தமிழக அரசு. முற்றத்துக்கு முன் இருக்கும் பூங்காவும் சுற்றுச்சுவரும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது என்று புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன.  !கருணாநிதியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த நெடுமாறன்,சீமான் போன்றோர் இந்த இடிப்புக்கு காரணமான ஜெயலலிதாவை கண்டு கொள்ளாமல் நெடுஞ்சாலைத் துறையையும்,மத்திய அரசையும் மட்டுமே கண்டித்து அறிக்கைகள் விட்டது இந்த ஆண்டின் சிறந்த சிரிப்பு.
Photo: At the Chennai International Film Festival Inaugural Function:

Kamal Haasan, in his trademark, candid way, urged the film industry to take the responsibility of censoring films as those on the Censor Board were not qualified enough to do so. “They like cinema … they like to watch films ... there are Censor Board officials who sometimes tell young film-makers ‘you could make your film shorter.’ It’s ridiculous,” he said in an open stage interaction with actor Suhasini Maniratnam, who asked questions on behalf of many film personalities.
நன்றி:விகடன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Photo: A girl read in front of her class at Mir Ali Ahmad Girls School. Parwan Province, Afghanistan. 

The New York Times picks 80 of the best images of 2013. 

A captivating and emotional slideshow — from the violence to the serene — surveying the year: http://nyti.ms/1fNyWdU

Sergey Ponomarev for The New York Times
மீண்டும் அபாயச் சங்கு!
-----------------------------------------------------------                        


"அரசு செலவுகள் அதிகரித்து வருகின்றன.
அதனை குறைத்திட தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மானியத்திற்காக ஒதுக்கப்படும் 2.6 சதவிகித நிதியை 1 .4 சதவிகிதமாக குறைக்க வேண்டும். அதாவது ஒட்டுமொத்த மானியத்தில் 1.2 சதவிகிதத்தை குறைக்க வேண்டும் "
ன்று மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா அபாய சங்கை ஊதியிருக்கிறார்.
2013-14 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ஏற்பட்ட பற்றாக்குறை 5லட்சத்து 20 ஆயிரத்து 925 கோடி. ஆனால் அதே ஆண்டில் கார்ப்பரேட் மற்றும் பெருமுதலாளிகள் அரசிற்கு செலுத்த வேண்டிய தொகையில் வசூலிக்காமல் விட்ட தொகை மட்டும் 5 லட்சத்து 73 ஆயிரத்து 630 கோடி ஆகும். இதனை ஒழுங்காக வசூலித்திருந் தாலே பற்றாக்குறை பட்ஜெட்டை தவிர்த்திருக்க லாம். அதனை செய்வதற்கு மாறாக கல்வி, சுகாதாரம், பொதுவினியோகம், போக்குவரத் திற்கான உள்கட்டமைப்பு உள்ளிட்ட அரசின் அத்தியாவசியக் கடமைகளில் இருந்து மத்தியஅரசு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை விலக்கிக் கொண்டு வருகிறது. மறுபுறம் அரசு தனியார் கூட்டு அல்லது முற்றிலும் தனியார் என கார்ப்பரேட்களின் நிரந்தரக் கொள்ளைக்கு இத்துறைகளில் வழிவகை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. உளவுபார்த்த விவகாரம் : பாஜக இரட்டை வேடம்
கபில் சிபல் குற்றச்சாட்டு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

குஜராத்தில் உளவுபார்த்த வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என்ற சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் இவ்விவகாரத்தல் பா,.ஜ க இரட்டை வேடம் கடைப்பிடிக்கிறது என்றார்.கபில் சிபல் தனது வலைத்தள பக்கத்தில் வெள்ளியன்று எழுதியுள்ள பதிலில், குஜராத்தில் கோத்ரா நிகழ்விற்கு பின்னர் நடந்த வன்முறைகுறித்து விசாரணை நடந்தது.

ஆனால் அதற்கான அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.நானாவதி கமிஷனை மோடி நியமித்தார். தன்மீது எந்த குற்றமும் இல்லை என்பதற்காக அந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கோத் ராவுக்கு பிந்தைய வன்முறை குறித்து 4 மாதத்தில் அறிக்கை தரப்பட வேண்டும், ஆனால் 11ஆண்டுகள் ஆகியும் அந்த விசாரணை அறிக்கை தரப்படவில்லை.தற்போது உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இவ்விவகாரத்திலும் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதிலும் எந்த தீர்வும் கிடைக்கப்போவது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.கடந்த 2009ம்ஆண்டு இளம்பெண்ணை வேவு பார்த்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த வேவு வேலை குஜராத் முதல்வர் மோடி ஆதரவுடன் நடைபெற்றதாக கூறப்படுகிறது.இது குறித்து விசாரணை செய்வ தற்கு, மத்திய அமைச்சரவை ஒரு கமிஷனை அமைக்க வியாழனன்று முடிவு செய்தது.

இமாசலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கையும் பா.ஜ.க உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு உள்ளது. முந்தைய பா.ஜக.அரசின் போது இந்த உளவு வேலை நடைபெற்றதாக கூறப்படுகிறது.இதனையும் விசாரணை செய்வதற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான கமிஷன் விசாரணை செய்கிறது.

இந்தியாவில் இருக்கும் பொதுத்துறை வங்கி களில் பெருமுதலாளிகள் ரூ 5லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர் என சிபிஐ தெரிவித்திருக்கிறது. ஆனால் அவர்களை விரட்டி வசூலிக்கவோ, அவர்களின் பெயரை வெளியிடவோ ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்க்கட்சியான பாஜகவும் தயாராக இல்லை. ஆனால் சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வரும் மானியத்தை வெட்டுவதில் மட்டும் அலுவாலியா துவங்கி பாஜகவின் பொருளாதாரப் புலிகள் வரை ஒரே குறியாக இருந்து வருகின்றனர்.ஏற்கனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு, உணவு, உரம் உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தின் அளவை பாதியாக வெட்டிச் சுருக்கியிருக்கிறது. மேலும் டீசல், பெட்ரோல், எரிவாயு உருளை ஆகியவற்றிற்கு தற்போது வழங்கி வரும் மானியத்தையும் முழுமையாகக் கைவிடும் திட்டமும் துவங்கி விட்டது.இந்நிலையில்தான் மானியங்கள் கொடுப்பதால் இந்தியா வளர்ச்சிப் பாதையை எட்ட முடிய வில்லை என அலுவாலியா வகையறாக்கள் கூறி வருகின்றனர். குஜராத் கொடூரம்: மோடி திடீர் ‘சோகம்’
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற வன்செயல்கள் தம்மை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியதாக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி திடீர் ஞானோதயம் வந்தது போல கூறியுள்ளார்.

குஜராத்தில் சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக மோடிஅரசின் ஆதரவுடன் இந்துத் துவா கும்பல் நடத்திய கொலை வெறித் தாக்குதல் குறித்து இதுவரை மன்னிப்போ குறைந்தபட்ச வருத்தமோ மோடி தெரிவித்த தில்லை. ஆனால் தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில், குஜராத் தில் 2002ம் ஆண்டு நடந்த மனிதன்மையற்றச் செயல்களை பார்த்தபோது வருத்தம், சோகம், ஆற்றாமை, வலி, வேதனை, கண்ணீர் என தமக்கேற் பட்ட உணர்ச்சியைச் சொல்ல வார்த்தைகளேயில்லை என்று தற்போது உருகி வழிந்துள்ளார் அவர்.

இதைத் தனிமைப்பட்ட முறையில் தாம் அனுபவித்ததாக தமது இணை யத்தில் அவர் கூறியுள்ளார்.2ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து இது வரை அவர் வருத்தம் கூட தெரி வித்ததில்லை. இதுபோன்ற சம்பவம் இனிமேல் தமது வாழ்க்கையில் ஒரு போதும் நடைபெறக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.குஜராத் நீதிமன்றத்தில் தமக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு விடுதலை உணர்ச்சியையும் அமைதியையும் அளித்தாக அவர் கூறியுள்ளார்.

இந்தத் தீர்ப்பு தமக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி அல்ல என்றும் தமது நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் கிடைத்த வெற்றி என்று கூறிய அவர், இனிமேலாவது அவதூறுகளைக் கூறி இழிவுபடுத்தாதிருக்கட்டும் என்று கூறினார்.
 சாதாரண மக்கள் பயன்பெற்றால் அதற்கு பெயர் மானியம்.
அ  தை  பெருமுதலாளிகள், கார்ப்பரேட் கம்பெனிகள் வரி விளக்கு மானியங்கள் பெற்றால் அது பொருளாதார , ஊக்குவிப்புத் திட்டம், மீட்புத்திட்டமாம். இதுதான் மாண்டேக் சிங் அலுவாலியாவின் பொன்மொழி.
மக்களுக்கான மானியங்களை வெட்டுவதிலும் ,மக்களை சிக்கனமாக வாழவும் கூறிவரும் அலுவாலியா பெரும் பணமுதலைகளுக்கு கோடிக்கணக்கில் வரிச்சலுகை அளிக்கவும் கூறுகிறார்.
அம்பானி 2000 கோடியில் பிரமாண்டமான மாளிகை கட்டியதை இவர கண்டிக்க வில்லை.அதைவிட கொடுமை தனது அலுவலக கழிப்பறையை 23 லட்சத்தில் மராமத்துப்பண்னியவர் தான் இந்த சிக்கனம் பேசும் வாலியா.
இந்த மாண்டேக் சிங் அலுவாலியா,மன்மோகன் சிங்,ப.சிதம்பரம் கூட்டணியின் பொருளாதார சீர்திருத்தம் தான் இந்தியாவை பின்னோக்கி தள்ளியுள்ளது.பொருளாதார சீரழிவுக்கு கொண்டு சென்றுள்ளது.ரூபாயின் மதிப்பை டாலருக்கு எதிராக 63 ரூபாயாக்கியுள்ளது .Mutant bicycles: this Chicago resident attached spikes to his wheels and mittens to the handles to prep for winter’s ice and snow in 1948. http://ti.me/JwPhIN

(Photo: Wallace Kirkland—Time & Life Pictures/Getty Images)

இப்படி சாமானியர்களின் நலனை புறக்கணித்து கார்ப் பரேட்களுக்கு காவடி தூக்குவதில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே உறுதியாக இருந்து வருகின்றன.2013 ம் ஆண்டு ஐ.நாவின் கணக்குப்படி உலக அளவில் உள்ள 187 நாடுகளில், இந்தியா மனித மேம்பாட்டுக் குறியீட்டில் 136வது இடத் தில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு, எடைக்குறைவான குழந்தைகள் உள்ள நாடுகளின் பட்டியலிலும் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. இதில் இந்தியா வளர்ச்சி பெற வேண்டும் என்றால் இருக்கும் மானியத்தையும் பறிக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இந்தியாவின் வளர்ச்சி என்பது யாருடைய வளர்ச்சி என்பது தான் இங்கு கேள்வி ? கார்ப்பரேட் மற்றும் பெரும் முதலாளிகளின் வளர்ச்சி மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி என ரொம்ப நாள் மக்களை ஏமாற்ற முடியாது.

=========================================================================

செய்தியாளர் :- தி.மு.க. தலைமையிட மான அண்ணா அறிவாலயம் இருக்கும் இடத்தில் சென்னை மாநகராட்சிக்கு தர வேண்டிய இடத்தைத் தரவில்லை சென்னை மாநகராட்சி யில் இன்றும் பேசப்பட்டு, தி.மு. கழக अगले जन्म मोहे बिटिया न कीजो ......ये कहने पर मजबूर ना कीजिए एक बेटी को.....आपकी औलाद हैं वो, आपका प्यार पाना उसका हक़ हैं..कब तक उसकी किस्मत का रोना रोकर ...या अपनी बदकिस्मति की दास्तान सुना कर बेटियों का हक  मारेंगे....... 
समाज और कानून के बदलने का इंतजार मत कीजिए, आप तो बस ...एक बेटी के लिए अपनी सोच और अपना नज़रिया बदलिए ...फिर देखिए कैसे नहीं मिलता एक मासूम को ममता का हक.உறுப் பினர்கள் வெளி நடப்பு செய்திருக்கிறார்களே?

பதில் :- இந்தப் பிரச்சினை பல முறை பேசப்பட்டு விரிவான விளக்கம் தரப்பட்டாகி விட்டது. வேண்டுமென்றால் மீண்டும் ஒரு முறை மாநகராட்சி அங்கே வந்து அளந்து பார்த்து நடவடிக்கை எடுக்கலாம். நாங்கள் ஒன்றும் தவறான முறையில் தி.மு.க. சார்பாக அந்த இடத்தை எடுத்துக் கொள்ளவில்லை. இது என்ன கொடநாடா? கொடநாடு அல்ல இது; அண்ணா அறிவாலயம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
न्यूज24 पर देखिये लाइव... दिल्ली के मुख्यमंत्री पद की शपथ ले रहे हैं केजरीवाल..

LIVE: Arvind Kejriwal takes oath as Delhi Chief Minister
http://indiatoday.intoday.in/story/arvind-kejriwal-aap-cm-delhi-ramlila-maidan/1/333326.html
ஆம் ஆத்மி பதவியேற்பு.
அன்புத் தம்பி டி ராஜேந்தர் அவர்கள் கழகத்தில் இணைந்தார்...!

அன்புத் தம்பி, டி ராஜேந்தர் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து, கழகத்தின் வளர்ச்சிக்கான பிரச்சாரப் பணியிலே தீவிரமாக ஈடுபட்டு, பின்னர்
ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால், கழகத்திலிருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அது குறித்து நானும் அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தேன். தம்பி ராஜேந்தரும் விளக்கமளித்திருந்தார். இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சாரப் பகுதியை மேலும் வலிமைப்படுத்தும் எண்ணத்தோடு, என்அன்பு அழைப்பினையேற்று, என் விருப்பப்படி மீண்டும் கழகத்தில் அவர் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். நம்முடைய கழக உடன்பிறப்புகளும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
லட்சிய[மே ] திமுக.?





தமிழ் வழிக் கல்வியின் தலையிலும் கைவைப்பதா?

2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்தபோது, அனைத்துப் பள்ளிகளிலும், தமிழை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க தமிழ்நாடு தமிழ் கற்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தி, நிறைவேற்றியதோடு; இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பட்டப் படிப்புகளில் தமிழை ஒரு பாடப் பிரிவாகப் படிக்காமலேயே பட்டங்களைப் பெற முடியும் என இருந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில் இளங்கலைப் பட்டப்படிப்பில் தமிழைக் கட்டாயமாக ஒரு பாடமாக எடுத்து அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஆணையும் பிறப்பித்து நடைமுறைப்படுத்தி வந்தது. மேலும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2009-2010ஆம் கல்வி ஆண்டு வரையில், பொறியியல் பட்டப்படிப்புக்கான பல்கலைக்கழக வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப் பட்டு; விடைகளும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட வேண்டுமென்றிருந்த நிலையை மாற்றி, 2010-2011ஆம் ஆண்டு முதல் ஆங்கிலம் அல்லது தமிழில் வினாத்தாள் வழங்கவும், விடைகளை ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதும் முறையை அறிமுகப்படுத்தவும் பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரைகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டன. குறிப்பாக இந்தத் திட்டம், 12ஆம் வகுப்பினை தமிழ் வழியில் படித்து பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நல்ல பயனை அளிப்பதாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2010-2011ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பத்தி 114இல், """"அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரிகளில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பு பயிலும் வசதி, வரும் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்"" என்று அறிவிக்கப்பட்டு, அவ்வாறே ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஜூன் மாதத்தில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்ற சிறப்பு வாய்ந்த தருணத்தில், அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகங்களில் கட்டுமானவியல், இயந்திர வியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக; தாய்மொழியில் கற்க - தமிழ்மொழி மூலமாகக் கற்க வகை செய்யப்பட்டு, அந்த ஆண்டில் மட்டும் அதாவது தமிழ் வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட முதலாம் ஆண்டிலேயே, இந்தப் பொறியியல் பாடப்பிரிவுகளில் 2010-2011இல் 1,378 மாணவர்கள் தமிழ் வழிப் பொறியியல் வகுப்புகளில் சேர்ந்தனர். படிப்படியாக இப்போது தமிழ்வழிப் பொறியியல் வகுப்புகளில் சுமார் 4,000 மாணவ, மாணவியர் படித்து வருகிறார்கள். தமிழ்வழிப் பொறியியல் வகுப்புகளைத் தொடங்கியதோடு, நின்றுவிடாமல் கழக ஆட்சிக் காலத்திலேயே தமிழ் வழியில் பொறியியல் படிப்பு முடித்தவுடன் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 20 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அரசாணை அப்போதே வெளியிடப்பட்டது. ஆனால் 2011ஆம் ஆண்டு முதல், அதாவது தி.மு.கழக ஆட்சிக்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்தத் தமிழ் வழிப் பொறியியல் வகுப்பு களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. கழக ஆட்சிக் காலத்தில் முதல் முறையாக தமிழ்வழி பொறி யியல் படிப்புகளில், சேர்ந்த மாணவர்கள் 1,378 பேர் இப்போது இறுதியாண்டு பொறியியல் பட்டப் படிப்பை நிறைவு செய்யவுள்ளனர். பல்கலைக்கழகக் கல்லூரிகளில் தனியார் நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் தமிழ் வழியில் பயின்ற இந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படாதது மட்டுமல்லாமல், அவர்கள் அலட்சியப் படுத்தப்படுகின்றனர் என்ற புகார் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் எழுந்துள்ளது. அதன் காரண மாக அந்த மாணவர்கள் கொதித்துப் போயுள்ளனர். தனியார் நிறுவனங்கள் ஆங்கில வழியில் படித்த மாணவர்களையே தேர்வு செய்ய முன் வருகிறார்கள்.
தற்போது எழுந்துள்ள இந்த நிலை குறித்து, தமிழ்வழியில் பொறியியல் படிக்கும் மாணவர்கள், "பொறியியல் கல்லூரிகளில் தனியார் நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளில் ஆங்கில வழி மாணவர்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர். இந்தப் பாகுபாடு குறித்து, தனியார் நிறுவனங்களிடம் கேட்டால், எங்கள் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் ஆகையால், ஆங்கில வழியில் படித்தவர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று கூறுகின்றனர். எங்களுக்கு திறமை இருந்தும், நாங்கள் புறக்கணிக் கப்படுகிறோம். மத்திய அரசு நிறுவனமான ""பவர் க்ரிட்"" கூட, தனியார் நிறுவனம் பின்பற்றி வரும் அணுகுமுறையையே பின்பற்றி, தமிழ்வழியில் பொறியியல் படிப்பு முடித்தவர்களை பின்னுக்குத் தள்ளி விடுகின்றனர். தமிழ்வழியில் பொறியியல் படித்த மாணவர்களுக்காக வேலை வாய்ப்பில் அரசால்  நிர்ணயிக்கப்பட்ட 20 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்திட வேண்டிய அ.தி.மு.க. அரசும் இதில் தலையிடாமல் அமைதி காத்து வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகமும், தனியார் நிறுவனங்களின் தேர்வு முறையில் தலையிட முடியாது என்று கைவிரித்து விட்டனர்"" என்றெல்லாம் குமுறுகின்றனர்.
மேலும் அந்த மாணவர்கள், "தமிழ் வழியில் பொறியியல் படித்தவுடன் தமிழக அரசு உடனடியாக எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். அல்லது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எங்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு தன்னுடைய நிலையை எங்களுக்கு விளக்கிட வேண்டும். இல்லையென்றால், நாங்கள் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு விடுவோம். முதல் முறையாக தமிழ் வழியில் பொறியியல் பட்டப் படிப்பை நிறைவு செய்து வெளியே வரும் எங்களுக்கு வேலை வாய்ப்பு  உருவாக்கப்பட்டால்தான், தொடர்ந்து மாணவர்கள் தமிழ்வழிப் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதை ஊக்குவிப்பதாக இருக்கும். இல்லா விட்டால் பொறியியல் பட்டப்படிப்பில் தமிழ் வழிக் கல்வி என்பது வெறும் கனவாகிவிடும்"" என்றெல் லாம் தங்களுடைய வேதனையை வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசு இந்த அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமா என்பது கேள்விக்குறிதான்! ஏனென்றால் இந்த ஆட்சியினருக்கு தமிழ், செம்மொழி, தமிழ் வழிக் கல்வி, சமச்சீர் கல்வி-என்ற பொருளும், அழகும் நிறைந்த வார்த்தைகள் எல்லாம் அவர்களுக்கு """"ஒவ்வாமை"" இனத்தைச் சேர்ந்தவையாகும். 
""கடந்த கல்வி ஆண்டில், 320 அரசுப் பள்ளிகளில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் தலா இரண்டு ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. 640 பிரிவுகள் தொடங்கப்பட்டு அதில் 22,400 மாணவர்கள் படித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டு முதல் தேவைப் படும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு 1.5 இலட்சம் மாணவ - மாணவியர் பயன் பெறுவர்"" என்று அ.தி.மு.க. அரசின் பள்ளிக் கல்வி அமைச்சர் 10-5-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின்போது அறிவித்தார். தமிழ் பயிற்று மொழி பற்றிய நீண்ட நெடிய திராவிட இயக்க வரலாற்றின் அரிச்சுவடியைக் கூடத் தெரிந்து கொள்ளாமலேயே, அ.தி.மு.க.வின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்த அறிவிப்பினைச் செய்தார். ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றால்தான் அறிவு மேம்படும் என்பது ஒருவித மனநிலையே தவிர, அதில் எள்ளளவும் உண்மை இல்லை. தாய் மொழியில் கல்வி பயில்வதுதான் சுயசிந்தனை செழுமை அடைவதற்கு வாய்ப்பாகும். பிறமொழியில் கல்வி கற்பது என்பது சுயசிந்தனைக்கு பெரும் தடையாக அமைந்துவிடும். தாய்மொழியில் கல்வி பயில்வதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் அண்ணல் காந்தி அடிகள், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட சமுதாய அக்கறை கொண்ட தலைவர்கள் அனைவரும், கல்வி இயல் மேதைகளும், சிந்தனையாளர்களும் வலியுறுத்தி இருக்கின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் ஆங்கிலம் வழக்குமொழியாகக்கூட இல்லை. ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற பல நாடுகளில் அந்த நாட்டு மொழிகள்தான் ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் விளங்குகின்றன.
வணிக நோக்கில் நடைபெறும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக அறிவிப்பது ஏற்கத்தக்க நடைமுறை ஆகாது. சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு, பாடத் திட்டத்தைப் பொறுத்தவரை தனியார் பள்ளிகளும், அரசுப் பள்ளிகளும் சமநிலையிலேயே உள்ளன. எனவே அரசுப் பள்ளிகளை மேம்பாடுடைய கல்வி மையங்களாக மாற்றிட, சிறந்த தனியார் பள்ளிகளைப் போல, அரசுப் பள்ளிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, வளர்த்து, தரமான கல்வி வழங்குவது ஒன்றே நல்ல ஏற்பாடாக இருந்திட முடியும். மேலும் பொறியியல் பட்டப் படிப்புகளிலும் தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் அறிமுகம் செய்யப் பட்டதே என்று காழ்ப்புணர்ச்சியோடு ஒதுக்கி விடாமல் தொடர்ந்து தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிப்பது ஒன்றே எதிர்காலத்தில் சிறந்த சமுதாயம் உருவாவதற்கான அடிப்படையை ஏற்படுத்தும்.
ஆங்கில வழிக் கல்வி என்பது ஆங்கில மோகமாக மாறி, அதுவே படிப்படியாக கல்வியை தனியார் மயமாக்குவதற்கான கதவுகளைத் தாராள மாகத் திறந்து விடும் பிற்போக்கு நடவடிக்கையாக ஆகிவிடும். தி.மு.கழக அரசு தமிழ்ப் பயிற்று மொழி தொடர்பாக மேற்கொண்டு வந்த அரிய முயற்சிகளை மேலும் முன்னெடுத்துச் செல்லாமல், அந்த முயற்சி கள் அனைத்தையும் குழி தோண்டிப் புதைக்கும் வகையில் அ.தி.மு.க. அரசின் அமைச்சர் பேரவை யிலே அறிவிப்பை வெளியிட்டார். தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்துச் செயல்படுத்த வேண்டும்; மத்திய அரசு நடத்தும் வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் அனைத்தையும் தமிழிலும் நடத்திட வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழ் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற முற்போக்குக் கொள்கைகள் வலிவு பெற்று வரும் இந்தக் கால கட்டத்தில் திடீரென்று அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி என்பதும், தமிழ்வழிப் பொறியியல் பட்டப்படிப்பு மாணவர்களை உதாசீனப்படுத்துவது என்பதும் தூங்குகின்ற புலியை வீண் வம்புக்கு இழுக்க இடறி விடுவதைப் போன்றதாகும்.
ஆங்கிலம் ஒரு மொழி என்பதற்கு அப்பால், ஆங்கிலமே அறிவுக்கு ஒரே வழி என்ற போக்கு அ.தி.மு.க. அரசால் உருவாக்கப்படுவது கண்டு தாய்மொழிப் பற்றாளர்கள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்திருக்கிறார்கள். பள்ளிக் கல்வி ஆயினும், உயர் நிலைக் கல்வி ஆயினும் தாய்மொழியில் கற்பிப்பதை எந்த அளவுக்கு நீட்டித்தாலும், அது ஒரு சமுதாயத்திற்கு மிகுந்த நன்மைகளையே ஏற் படுத்தும். பயிற்று மொழி குறித்து எப்படிப்பட்ட அணுகுமுறை சரியானதாகவும், பொருத்தமான தாகவும், அறிவியல் பூர்வமானதாகவும் இருக்கும் என்பது பற்றி உலகெங்கிலும் ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
பெரும்பாலான ஆய்வு முடிவுகள் தாய்மொழி வழிக் கல்வியே தலை சிறந்தது என்றே எடுத்துக் காட்டியிருக்கின்றன. 1951இல் வடிவமைக்கப்பட்ட ஐ.நா. மன்றத்தின் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) தாய்மொழி வழிக் கல்வியையே வலியுறுத்தியிருக்கின்றது. இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் அமைக்கப்பட்ட அனைத்து கல்விக் குழுக்களும் தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என நிரூபித்திருக்கின்றன.
தமிழகத்தின் முக்கியமான இந்தப் பிரச்சினை குறித்து வாயைத் திறந்தால், எங்கே முதலமைச் சரின் கோபத்திற்கு ஆளாகிட நேரிடுமோ என்று, தமிழகத்திலே தமிழுக்காகத் தாங்கள்தான் பிறவியெடுத்திருக்கிறோம் என்பதைப்போல எண்ணிக் கொண்டு செயல்படும் சில அரசியல் வாதிகள் தங்கள் வாயைத் திறக்காமல் இருப்பதைப் பார்க்கும்போது வேதனையாகத்தான் உள்ளது.
இதையெல்லாம் திரைபோட்டு மறைத்து திசை திருப்பிடும் நோக்கத்தோடுதான், முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாடு செல்வதற்கு முன்பு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கட்டிடத்திற்கு தலைமைச் செயலகத்தில் இருந்தவாறே அடிக்கல் நாட்டிய செய்தியும், பத்து இலட்சம் ரூபாய்  திப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடத்தை முதலமைச்சர் திறந்து வைத்திருக்கிறார் என்ற செய்தியும் ஏடுகளுக்கு தமிழக அரசின் செய்தித் துறையினரால் மூன்று நாட்களுக்குப் பிறகு தரப்பட்டுள்ளது. இதிலிருந்தே இந்தச் செய்திக்கு அ.தி.மு.க. அரசின் செய்தித் துறை எந்த அளவிற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கும், திருக்குறளுக்கும் முக்கியத்துவம் அளித் துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்தச் செய்தியைப் பார்ப்பவர்கள், இந்த ஆட்சியில் வள்ளுவர்கோட்டம் எந்த அளவிற்கு புறக்கணிக் கப்பட்டு, அங்கே சமூக விரோத நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என்பதையும்,
கன்னியாகுமரி யில் வைக்கப்பட்டுள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை இந்த ஆட்சியினரால் எப்படியெல்லாம் பராமரிப்பின்றி இருந்தது என்பதையும், கழக ஆட்சியில் திறக்கப்பட்ட "செம்மொழிப் பூங்கா", "தொல்காப்பியப் பூங்கா", "பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம்",  "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்" போன்றவை எந்த அளவுக்குச் சீரழிக்கப்பட்டு வருகின்றன என்பதையும் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்! தி.மு. கழக ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் "திருவள்ளுவர் படிப்பகம்" என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 680 ஊராட்சி களிலும் கொண்டுவரப்பட்ட அத்தனை நூலகங் களின் கதி என்ன? "அம்மா" ஆட்சியில் "திருவள்ளுவர்" பெயரில் நூலகம் இருக்கலாமா? தமிழ் வழி பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் ஆயிரக்கணக்கான மாணவமாணவியர்க்கு, அரசு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை அனுசரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர அ.தி.மு.க. அரசு முன் வரவேண்டும்; தமிழ் வழிப் பொறியியல் பட்டப்படிப்பு, தி.மு. கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக எப்போதும் போல "காழ்ப்புணர்ச்சி யோடு"", அந்த மாணவர்களுக்கு உடனடியாக அரசு வேலை வாய்ப்பு அளிக்க முன்வராவிட்டால் அந்த மாணவர்கள் அறிவித்தவாறு, அவர்கள் அனைவரையும் போராட்டக்காரர்களாக மாற்றிய பழிக்கு அரசு ஆளாக நேரிடும் என்பதை அரசு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

/#/ குஜராத்தில் 2002 இல் நடைபெற்ற குஜராத் கலவரம் அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த வேதனையையும், மன வருத்தத்தையும் கொடுக்கிறது – அன்று முதல் இன்று வரை குஜராத் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி /#/
http://www.narendramodi.in/satyameva-jayate-truth-alone-triumphs/    

அதான் நம்மூருல பொம்பளப் புள்ளைய கெடுத்தவங்க, பஞ்சாயத்துல வந்து, மன்னிப்பு கேட்டு, கோயிலுக்கு ஒன்னேகால் ரூவா காணிக்கை போடுவாங்கல்லா.. அந்தக் கதைதான்…



The pyramid of Kukulkan is part of the remains of Chichén Itzá, one of the great cities of the Mayan civilization, located in the modern Mexican state of Yucatán. Chichén Itzá is one of the Official New7Wonders of the World. Learn more about the work of New7Wonders: http://www.n7w.com/

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?